search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன்"

    விவசாயிகள் வருமானம், கடன் ஆகியவை குறித்து மத்திய அரசு இந்த ஆண்டு ஆய்வு நடத்த உள்ளது. #Agriculture #farmers #CentralGovernment
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. விவசாயிகளின் வருமானம், 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும் கூறியுள்ளது.



    இந்நிலையில், விவசாயிகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதுபற்றி மத்திய வேளாண்துறை இணை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், பாராளுமன்ற மக்களவையில் எழுத்துமூலம் கூறியதாவது:-

    தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, இந்த ஆண்டு 77-வது சுற்று ஆய்வு நடத்த உள்ளது. அப்போது, விவசாய குடும்பங்களின் நிலை பற்றியும் ஆய்வு நடத்தப்படும்.

    விவசாய குடும்பங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிய விரிவான மதிப்பீடு அளிப்பதே இதன் நோக்கம். அதாவது, விவசாயிகளின் வருமானம், செலவு, கடன் ஆகியவை பற்றி இதில் கணக்கு எடுக்கப்படும்.

    இதற்கு முன்பு, 2012-2013-ம் சாகுபடி ஆண்டில்தான் இதுபோன்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு இத்தகைய ஆய்வு நடத்தப்படாததால், விவசாயிகளின் வருமான அதிகரிப்பு பற்றிய தகவல் இல்லை.

    புதிய சூழ்நிலை, தேவை, நிதி ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய சோதனை நடத்தும் முடிவு எடுக்கப்படுகிறது.

    குடும்பங்களின் நுகர்வோர் செலவு, வேலைவாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை ஆகியவை பற்றி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படுகிறது.

    இவ்வாறு கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார். #Agriculture #farmers #CentralGovernment

    பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விவகாரத்தில் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 6,049 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் வாராக்கடன் தேங்கி கிடக்கிறது. இந்த கடன் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி எழுத்து மூலம் நேற்று பதிலளித்தார். அந்த பதிலில், ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், வங்கி அதிகாரிகள் தங்கள் கடமை தவறியதன் மூலம் வாராக்கடன் உயர்வுக்கு காரணமாக இருந்ததாக கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 6,049 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த தவறின் அடிப்படையில் மேற்படி அதிகாரிகளுக்கு குறைந்த அபராதம் முதல் பெரிய அளவிலான அபராதம் வரை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அருண் ஜெட்லி, வாராக்கடன் தொகை அடிப்படையில் அவர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை முதல் சி.பி.ஐ.யில் புகார் வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் பணி நீக்கம், கட்டாய ஓய்வு மற்றும் பதவி இறக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley
    வீட்டு கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் (அ)இறப்பு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும்.
    வீட்டு கடன் பெறுவதன் மூலம் சொந்த வீடு வாங்குவதுதான் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வழக்கமாக உள்ளது. அவ்வாறு பெறப்படும் கடனை மாத தவணைகளாக திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 10 முதல் 25 வருடங்களாக இருக்கும் நிலையில் அந்த நீண்ட கால அவகாசத்தில் கடன் பெற்றவருக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு அல்லது இறப்பு ஆகிய காரணங்களால் கடனை திருப்பி செலுத்துவது தடைபடலாம். அதன் காரணமாக அவர் குடும்பத்தினர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு என்று நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    உதவும் காப்பீட்டு திட்டங்கள்

    அவர்களது கருத்துப்படி, கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் அல்லது இறப்பு ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    கடன் மறு சீரமைப்பு

    வீட்டு கடனை முற்றிலும் செலுத்தாத நிலையில் கடன்தாரருக்கு இறப்பு நேரிடும் பட்சத்தில் கடனுக்கான இணை விண்ணப்பதாரர் அல்லது அவரது சட்ட ரீதியான வாரிசு ஆகியோர் கடனை திருப்பி செலுத்தவேண்டும். அதுபோன்ற தருணங்களில் கடன் அளித்த நிதி நிறுவனம் அல்லது வங்கி ஆகியவற்றை அவர்கள் அணுகினால் விதிமுறைகளின்படி கடனை மறுகட்டமைப்பு செய்தோ அல்லது இ.எம்.ஐ செலுத்துவதற்கான கால அவகாச நீட்டிப்பு அளித்தோ உதவிகள் செய்ய வாய்ப்புகள் உண்டு.

    கூடுதல் தொகை காப்பீடு

    பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் வீட்டு கடன் வழங்குவதற்கு முன்னர் போதுமான தொகைக்கு காப்பீடு செய்யும்படி வலியுறுத்துகின்றன. அத்தகைய நிலையில் வீட்டு கடனுக்கு ‘டெர்ம் காப்பீடு’ செய்யும் முன்னர் காப்பீட்டு தொகை, பெறப்பட்ட கடன் தொகையை விட அதிகமாக இருந்தால்தான் கடன் பெற்றவரது வாரிசுகளுக்கு சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

    வங்கிகள் அளிக்கும் சலுகைகள்

    காப்பீடு மூலம் கிடைத்த தொகை போதுமானதாக இல்லை என்ற நிலையில் கடனுக்கான சொத்தை விற்பதன் மூலம் நிலுவை தொகையை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் திரும்ப பெறும் சூழல் ஏற்படலாம். ஆனால், வீட்டு கடனை பொறுத்தவரை வங்கிகள் உடனடியாக சொத்துக்களை விற்பனை செய்யும் வழிமுறைகளை மேற்கொள்வதில்லை.

    கடன் பெற்றவர்கள் அல்லது அவர்களது வாரிசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடன் மறு சீரமைப்பு அல்லது இ.எம்.ஐ செலுத்த கூடுதல் கால அவகாசம் போன்ற சலுகைகளை வழங்க முன் வருகின்றன.

    கடனோடு இணைந்த காப்பீடு

    வீட்டு கடன் தணைகளை செலுத்தும்போது வரக்கூடிய எதிர்பாராத சங்கடங்களை சமாளிக்க காப்பீடு அவசியம் என்ற நிலையில் வீட்டு கடன் அளிக்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்கு உதவும் விதமாக ‘பில்ட் இன்’ காப்பீடு திட்டங்களை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    என்னதான் தங்கநகைக் கடன் மற்ற கடன்களைவிடக் கவர்ச்சியாக இருந்தாலும், இக்கடன் வாங்கும் முன் நீங்கள் சில விஷயங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
    தங்கநகைக் கடன், பொதுவாக அனைவரும் அறிந்த ஒன்று. எளிதாகப் பெறக்கூடியதும் கூட.

    கடன் பெறுவோர் மட்டுமின்றி, தங்கநகைக் கடன் கொடுப்போரும் இதை மிகவும் பாதுகாப்பான கடன் முறையாகக் கருதுகின்றனர். தனிநபர் கடன் மற்றும் வீட்டுக் கடன் போல இல்லாமல் தங்கநகைக் கடன் மிகவும் உத்தரவாதம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

    கடன் தருபவர்கள் தங்கள் பணம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கலாம். காரணம், கடன் பெற்றவரின் நகை அவர்கள் கையில் உள்ளது.

    எனவே எளிதில், உடனடியாகக் கடன் பெற விரும்புவோர், தங்களிடம் உள்ள நகை, தங்க நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகளை வங்கியில் அல்லது தங்கநகைக் கடன் நிறுவனத்தில் கொடுத்து கடன் பெறலாம். பெற்ற கடன் தொகையைத் திருப்பிக் கொடுத்தவுடன் நகையை திருப்பித் தந்துவிடுவர்.

    தங்கநகைக் கடனில் உள்ள மிகப் பெரிய அனுகூலம், கடன் வாங்குவதற்கான செயல்முறை மிகவும் எளிது என்பதும், இது குறைந்த காலத்துக்காகப் பெறப்படும் கடன் என்பதும் ஆகும்.

    தங்கநகைக் கடன் பெற ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவரிடம் தங்கம் சொந்தமாக இருக்க வேண்டும்.

    நம்மிடம் தங்கநகை இருக்கிறது, பணம் அவசர, அவசியத் தேவையாக இருக்கிறது என்றால், தங்க நகைக் கடன் விரும்பத்தக்கதது.

    காரணம், இதற்கான வட்டி விகிதம் இதற்கு இணையான கடன்களின் வட்டி விகிதத்தைவிட மிகக் குறைவு. அதுபோக கடனின் கால அளவு மிகவும் நெகிழ்வானது. அதாவது, சில நாட்களில் இருந்து ஓராண்டு வரை.

    தங்கநகைக் கடனுக்கு எந்த வங்கிக் கட்டணமும் கிடையாது. தவிர, இதற்கு மிகக் குறைந்த அளவிலான ஆவணங்கள்தான் தேவைப்படும்.

    ஆனால், என்னதான் தங்கநகைக் கடன் மற்ற கடன்களைவிடக் கவர்ச்சியாக இருந்தாலும், இக்கடன் வாங்கும் முன் நீங்கள் சில விஷயங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

    அவை பற்றி...

    ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அடகு வைத்த தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். இந்த சதவீதம், வங்கிகள், நிதி நிறுவனங்களைப் பொறுத்து மாறலாம்.

    பெரும்பாலும் தங்கநகைக் கடன் வழங்குபவர்கள் இதற்கு செயல்முறைக் கட்டணம் வசூலிக்கமாட்டார்கள். ஆனால், மதிப்பீட்டுக் கட்டணம் உண்டு. இந்தக் கட்டணம் அதிகமாக இருந்தால் நீங்கள் வேறு நிறுவனங்களை நாடலாம்.

    மற்ற ‘செக்யூரிட்டி’ இல்லாத மற்றும் பலவகை ‘செக்யூரிட்டி’ உள்ள கடன்களைவிட தங்கநகைக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நீங்கள் கடன் பெறும் நிறுவனத்தைப் பொறுத்து அதற்கு உண்டான வட்டியை ஒரு மாதம் அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை செலுத்திக் கொள்ளலாம். இறுதியில் கடன் கால அளவு முடிவுக்கு வரும்போது அசலை திருப்பிச்செலுத்த வேண்டும். கடனுக்கு விண்ணப்பித்த உடன் மிக விரைவில் உங்களுக்குப் பணம் கிடைக்கும்.

    தங்கத்தின் மூலம் கடன் வாங்குவதற்கு முன்னால் ஒன்றுக்குப் பத்து இடத்தில் விசாரியுங்கள். நீங்கள் அடகு வைக்கப்போகும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் தங்கத்தின் தரத்தையும் அறிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

    தங்கநகையை வைத்துக் கடன் பெறுவோர், தவறாமல் வட்டி செலுத்தி, உரிய காலத்தில் அதை மீட்டுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நகை ‘மூழ்கிப் போகும்’ நிலை ஏற்படலாம். 
    தருமபுரியில் வாலிபரிடம் நகை கடை அதிபர் ஒருவர் ரூ.17 லட்சம் கடனுக்கு வாங்கிவிட்டு மனைவியுடன் தலைமறைவாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி சூடாமணி தெருவைச் சேர்ந்தவர்குமார் (வயது 46). இவரது மனைவி நீலா. கடைவீதி பகுதியில் குமார் சொந்தமாக நகை கடை வைத்து நடத்தி வந்தார்.

    இவர் தருமபுரியை அடுத்த பழையதருமபுரி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் வேலவன் என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகை கடையில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய ரூ.17 லட்சம் கடனாக வாங்கினார்.

    கடன் வாங்கி 2 மாதங்களில் திருப்பி தருவதாக கூறிய குமார் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். வேலவன் பலமுறை குமாரிடம் சென்று கேட்டபோது, பணம் தராமல் இழுத்தடித்து வந்தார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் பணத்தை திருப்பி தருமாறு வேலவன் கேட்டார். அப்போது அவரும், அவரது மனைவியும் வேலவனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் திருப்பி அனுப்பினர்.

    இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசாரிடம் வேலன் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரியவந்தது.

    இதனால் விரக்தியடைந்த அவர் ரூ.17 லட்சம் பணத்தை குமாரிடம் இருந்து மீட்டு தருமாறு தருமபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் வேலவன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஜீவாபாண்டியன் விசாரித்து குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்க உத்தரவு விட்டார். நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வேலவனிடம் பணம் மோசடி செய்த குமார் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்தார்.

    மேலும் கணவன்- மனைவி 2 பேரையும் விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வர குமார் வீட்டிற்கு போலீசார் சென்றனர்.

    அங்கு குமாரும், அவரது மனைவி நீலாவும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. பணம் மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவன்- மனைவி 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
    நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ.1,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி முதல் வருகிற 20-ந் தேதி வரை 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ‘வளமான ஊரக வளர்ச்சியைக்காண, கூட்டுறவு அமைப்புகளின் வாயிலாக அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நல்லாட்சி’ என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. இதையொட்டி கூட்டுறவு வார விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.கணேஷ், சாந்தி ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பில் 357 பயனாளிகளுக்கு சுயஉதவிக் குழு கடன், டாப்செட்கோ மகளிர் மற்றும் ஆடவர் சுய உதவிக்குழு கடன், மத்திய கால கறவை மாட்டுக் கடன் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் 146 மையங்கள் மூலம் நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.32 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. நகர கூட்டுறவு வங்கிகள் சார்பில் ரூ.10 கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. நீலகிரியில் 82 கூட்டுறவு சேவை மையங்களும், 3 அம்மா மருந்தகங்களும் இயங்கி வருகிறது. 3 அம்மா மருந்தகம் மற்றும் கூட்டுறவு மருந்தகம் சார்பில், 15 சதவீத தள்ளுபடி விலையில் மருந்து, மாத்திரைகள் ரூ.95 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    கூட்டுறவு சங்கத்தின் மூலம் 237 முழு நேர ரேஷன் கடைகள், 95 பகுதி நேர ரேஷன் கடைகள், 14 நடமாடும் ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகின்றது. மத்திய அரசின் வணிக வங்கிகள் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு துரிதமாக கடன் வழங்கவில்லை என்பதால், மத்திய அரசு வழங்கிய தூய்மை பாரத திட்டத்தின் நிதி ரூ.2½ கோடி கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ.1,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கிராமப்பகுதிகளில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்ட மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை சம்பந்தப்பட்டவர்கள் வங்கிகளில் செலுத்தாமல் உள்ளனர். இந்த கடனை வசூலிக்க மகளிர் திட்ட அதிகாரிகள் உடன் இணைந்து செயல்பட இருக்கின்றனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் இயற்கை விவசாயமாக மாற்ற 150 கூட்டுறவு சங்கங்கள் மூலம் முதல் கட்டமாக 25 சதவீத இயற்கையான இடுபொருட்கள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சிறந்த கூட்டுறவு வங்கிகளான மத்திய கூட்டுறவு வங்கி, குன்னூர் நகர கூட்டுறவு வங்கி மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    இதில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் லோகநாதன், துணை பதிவாளர்கள் நீலா, துரைசாமி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஆல்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக கலெக்டர் வேகமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். மஞ்சூர் பரமூலா, ஓணிக்கண்டி ஆகிய 2 இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகளை தொடங்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் நான் கலெக்டரிடம் மனு கொடுத்தேன். இந்த மனு கலெக்டர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு பல நாட்களாகியும் ரேஷன் கடைகளை திறக்க அதிகாரிகள் கலெக்டருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் செயல்படுகின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார். முன்னதாக கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    செந்துறை அருகே கடன்தொகை செலுத்தாததால் டிராக்டர் பறிமுதல் செய்த டிரைவரை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது செய்யபட்டார்.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள கோசுகுறிச்சியை சேர்ந்தவர் பக்கீர்அகமது (வயது 23). விவசாயி. இவர், கம்பத்தை சேர்ந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கி இருந்தார். இதற்காக, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை நிதிநிறுவனத்துக்கு செலுத்தி வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 4 மாதங்களாக அவர் கடன்தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிதிநிறுவனத்தினர் 4 பேர், டிராக்டரை பறிமுதல் செய்வதற்காக நேற்று முன்தினம் கோசுகுறிச்சிக்கு வந்தனர். அப்போது பக்கீர்அகமது, அவருடைய தம்பி மீரான் (21) ஆகியோருக்கும், நிதிநிறுவன ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதற்கிடையே நிதிநிறுவன ஊழியர்களுடன் வந்திருந்த டிரைவர் சரவணன் என்பவர், அங்கு நின்று கொண்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பக்கீர்அகமது, தான் வைத்திருந்த அரிவாளால் சரவணனை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து பக்கீர்அகமதுவை கைது செய்தார். இதற்கிடையே நிதிநிறுவன ஊழியர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் மீரான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
    தனிநபர் கடனையும் தங்க நகை கடனையும் ஒப்பிட்டால் எதைப் பெறுவது எளிதானது, அதிக அனுகூலம் மிக்கது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
    நிதி நெருக்கடியின்போது, திடீர் பொருளாதார நெருக்கடியின்போது நமக்கு உடனே நினைவில் வருபவை, கடன்கள். அதிலும் தனிநபர் கடன், தங்க நகை கடன் போன்றவை உடனடியாகக் கைகொடுப்பவை.

    தனிநபர் கடனையும் தங்க நகை கடனையும் ஒப்பிட்டால் எதைப் பெறுவது எளிதானது, அதிக அனுகூலம் மிக்கது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்...

    தனிநபர் கடன், தங்க நகை கடன் இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவிலான வட்டி விகிதம்தான். தங்க கடன் பொதுவாக 9.6 முதல் 24 சதவீதம் இடையிலான வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது. தனிநபர் கடன் 10.99 முதல் அதிகபட்சம் 18 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

    தங்க கடன் அதிகபட்சம் 1.5 கோடி ரூபாய் வரை அளிக்கப்படும் நிலையில், தனிநபர் கடன் 40 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. உடனடியாகப் பணம் தேவைப்படும்போது தங்க கடனே எளிமையாகக் கிடைக்கும். தங்க கடனை 1000 ரூபாய் முதல் பெற முடியும். ஆனால் தனிநபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது 5000 ரூபாயை கடனாகப் பெற வேண்டும்.

    தங்க கடன் வாங்கும்போது அடமானம் வைக்கும் தங்க நகையே உத்தரவாதம் என்பதால் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவை பெரியதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் இதுவும் குறிப்பிட்ட அளவிலான தொகை வரை கடன் பெறும்போது மட்டுமே ஆகும். அதிக மதிப்புடைய கடன் பெறும்போது கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

    மறுபக்கம், தனிநபர் கடனுக்குக் கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதம் மற்றும் கடனைச் செலுத்தும் கால அளவு மாறும். கடன் பெற முயலும்போது குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் விண்ணப்பம் ரத்தாக வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால், வட்டி விகிதம் உயரும். குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளபோது வங்கிகளிடம் வட்டி விகிதம் போன்றவை தொடர்பாக எந்தப் பேரமும் செய்ய முடியாது.

    தங்க நகை கடனுக்கு அடையாளம் மற்றும் முகவரிச் சான்றை சமர்ப்பித்தால் போதும். உடனே கடன் கிடைக்கும். இதுவே தனிநபர் கடன் என்றால் முகவரி மற்றும் அடையாளச் சான்று, வருமான சான்றிதழ், வங்கி அறிக்கை போன்றவைச் சமர்ப்பிக்க வேண்டும். தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதை திருப்பிச் செலுத்த பல்வேறு வகையில் வளைந்து இடம் கொடுப்பார்கள். வட்டி விகிதம், மாதம் போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கும். இது போன்றவை தனிநபர் கடன் வாங்கும் போது கிடைக்காது.

    தங்க நகை கடனை ஓராண்டு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவே தனிநபர் கடனை 5 வருடங்களுக்குச் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றாற்போல வட்டி விகிதம் உயரும். தங்களது வருவாய் மற்றும் மாத தவணை செலுத்துக்கூடிய திறனைப் பொறுத்து கடனைப் பெறலாம்.

    தங்க நகை அடமான கடன் பெறும்போது தங்கத்தை நேரடியாக வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பைக் கணக்கிட்ட பிறகே கடன் பெற முடியும். எனவே, நீங்கள் விரும்பும் வங்கி நிறுவனத்தின் கிளை உங்கள் அருகில் இல்லை என்றால் சிரமம் ஏற்படும்.

    ஆனால் இன்றைக்கு, வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலம் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து வங்கி அலுவலர்களை வீட்டுக்கு வரவைத்து கடனைப் பெற முடியும்.

    இவையெல்லாம், தனிநபர் கடன், தங்க நகை கடன் குறித்த ஒப்பீட்டு விவரங்கள். இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் கடனைப் பெற விரும்பு பவர்கள்தான்.

    கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள, தங்கம் வைத்துள்ளவர்கள் சில மணி நேரங்களில் கடன் வேண்டும் என்றால் தங்க நகை கடனை தேர்வு செய்யலாம். அதுவே கிரெடிட் ஸ்கோர் அதிகமாக வைத்திருப்பதுடன், கடனைச் செலுத்துவதற்கான கால அளவு 3 வருடத்துக்கும் அதிகமாக வேண்டும் என்பவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
    கர்நாடக மாநிலத்தில் ரூ.500 கடனுக்காக நண்பரின் மனைவியை கடத்தி சென்று திருமணம் செய்த சம்பவம் குறித்து கணவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். #DebtIssues #WomenAbducted
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் கோகாக் அருகில் உள்ள முராகிபாவி கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் கொன்னாவர். இவரது மனைவி பார்வதி.

    பசவராஜின் நண்பர் ரமேஷ் ஷாகாபூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் பார்வதியும் அதே ஓட்டலில் வேலை பார்த்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் ரமேஷிடம் பார்வதி ரூ.500 கடன் வாங்கி இருந்தார். 2 மாதங்கள் ஆகியும் கடனை அவர் திருப்பித்தரவில்லை. இதனால் ரமேஷ் பார்வதியின் மனதை மாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். கணவரிடம் சேர்ந்து வாழவிடாமல் தடுத்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பசவராஜ் இதுபற்றி போலீசில் புகார் செய்ய வந்தார். அவர் தனது மனைவியை நண்பர் ரூ.500 கடனுக்காக கடத்திச் சென்றதாக போலீசாரிடம் கூறினார். இவரது விசித்திரமான புகாரால் போலீசார் ஆச்சரியம் அடைந்தனர்.

    ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராததால் பசவராஜ் அங்குள்ள துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்தனர். ஆனாலும் அவரது புகாரை போலீசார் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் பசவராஜ் போலீஸ் மீது நம்பிக்கை இழந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். #DebtIssues #WomenAbducted
    வங்கியில் வீட்டு கடன் பெற்று கட்டப்பட்ட அல்லது வாங்கப்பட்ட வீடு அல்லது பிளாட் ஆகியவற்றை நிதி நெருக்கடி காரணமாக விற்பனை செய்ய வேண்டிய சூழலில் எவ்விதமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
    வங்கியில் வீட்டு கடன் பெற்று கட்டப்பட்ட அல்லது வாங்கப்பட்ட வீடு அல்லது பிளாட் ஆகியவற்றை நிதி நெருக்கடி காரணமாக விற்பனை செய்ய வேண்டிய சூழலில் எவ்விதமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

    வீடு விற்பவர் பொறுப்பு

    வீட்டை விற்க விரும்புபவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனைத்து தகவல்களையும் தெரிவித்து, கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றின் நிலுவை, வங்கியில் அளிக்கப்பட்டுள்ள வீட்டுக்கான ஆவணங்கள் குறித்த பட்டியல், நிலுவை கடன் தொகை செலுத்தப்படும் பட்சத்தில் வீட்டுக்கான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களும் கடன் பெற்றவருக்கு அளிக்க வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்ற தகவல்கள் அடங்கிய கடிதத்தை வங்கியிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    வீடு வாங்குபவர் பொறுப்பு

    அவ்வாறு வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்கள் மற்றும் தன்னிடமுள்ள வீடு தொடர்புடைய அனைத்து பத்திரங்களின் நகல்களையும் வீட்டை வாங்குபவரிடம் வழங்க வேண்டும். வீட்டை வாங்குபவர் மேற்கண்ட ஆவணங்கள் மீது சட்ட ரீதியான ஆலோசனை பெற்று வீட்டின் உரிமையாளருக்கு முன்பணம் கொடுக்கலாம்.

    ஒப்பந்தம் பதிவு

    பின்னர், வீட்டை விற்பவர் மற்றும் வாங்குபவர் இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, சார்-பதிவாளர் அலுவலகத்தில் அதை முறைப்படி பதிவு செய்யவேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கால அளவுக்குள் வீட்டுக்கான முழு தொகையையும் பெற்று, வங்கிக்கு நிலுவையாக உள்ள தொகையை செலுத்தி விட்டு, கணக்கு முடிக்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    வீடு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வங்கியிடமிருந்து பெற்று, அவற்றை வீட்டை வாங்குபவருக்கு கொடுத்து, அவரிடம் இருந்து அதற்குரிய ரசீது ஒன்றையும் பெற்றுக்கொள்வது அவசியம். அதன் பின்னர், வீட்டை விற்பவர், வாங்குபவருக்கு கிரயப் பத்திரம் எழுதி கொடுத்து சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    வீடு வாங்குபவரது வங்கி கடன்

    வீடு வாங்குபவரும் வங்கியில் கடன் பெற வேண்டும் என்ற நிலையில், அதே வங்கியில் பெறுவதன் மூலம், நடைமுறை சிக்கல்கள் மற்றும் கால தாமதங்கள் தவிர்க்கப்படும். அவ்வாறு இல்லாமல் வேறு வங்கியில் வீட்டு கடன் பெறும் நிலையில் கீழ்க்கண்ட வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

    வங்கி நடைமுறைகள்


    வீட்டை வாங்குபவர் அவரிடம் அளிக்கப்பட்ட முந்தைய வங்கியின் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், புதியதாக கடன் அளிக்கும் வங்கி கேட்கும் ஆதாரங்கள் மற்றும் அதன் கடன் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    அவற்றின் அடிப்படையில் கடன் தரக்கூடிய வங்கி உரிய பரிசீலனைக்கு பின்னர் கடன் அளிப்பதற்கு ஒப்புதல் வழங்கும். சம்பந்தப்பட்ட ஆவணங்களின் மீது முன்பே ஒரு வங்கியால் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், புதிய வங்கியின் நடைமுறைகள் விரைவில் முடிவடைய வாய்ப்பு உண்டு.

    பத்திரம் பதிவு

    அதன் பின்னர், வீட்டு கடன் தொகையை புதிய வங்கி, முந்தைய வங்கிக்கு நேரிடையாக அளிக்கும். அதன் அடிப்படையில், வீடு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் புதிய வங்கிக்கு, முந்தைய வங்கியால் அளிக்கப்பட்டு விடும்.

    பின்னர், வீட்டு கடன் அளிக்கும் வங்கி அசல் மற்றும் வட்டி போக மீதம் தொகை இருக்கும் நிலையில் அதை வீட்டை விற்பவருக்கு கொடுத்துவிடும். நிறைவாக, வீட்டை வாங்குபவர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் விற்பனை பத்திரத்தை வழக்கப்படி பதிவு செய்து கொள்ளலாம். 
    நடப்பு நிதியாண்டில் மகளிர் சுய உதவி குழுக்கள் தொழில் தொடங்க ரூ.225 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கடல் உவர் ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்கள் தொழில் தொடங்கிட கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த சமுதாய வள அமைப்பாளர்களுடனான ஆலோசனை கருத்தரங்கம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:- அரசு மகளிர் நலனை பாதுகாத்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஊரகப்பகுதிகளில் உள்ள மகளிர் சுயமாக தொழில் செய்து சமுதாயத்தில் நம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு நடப்பு நிதியாண்டில் இணைப்பு கடனுதவி திட்டங்களின் வாயிலாக மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி மதிப்பில் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    மாவட்டத்தில் தற்போது மொத்தம் 6 ஆயிரத்து 892 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 86 ஆயிரம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தகைய மகளிர் சுயஉதவிக்குழுவினர் சிறிய அளவில் மீன்பிடி சார்ந்த தொழில், காய்கறி தோட்டம், தையல்கடை அமைத்தல், பனையோலை சார்ந்த வீட்டு உபயோகப்பொருள் தயாரித்தல் போன்ற பல்வேறு சிறுதொழில் செய்து வருமானம் ஈட்டுகின்றனர். எனவே வங்கியாளர்கள் தகுதியான பயனாளிகளுக்கு, அரசு அறிவித்த திட்டம் 100 சதவீதம் முழுமையாக சென்று சேர்ந்திடும் வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கரன், மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் மதியழகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் குணசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் பிரான்சிஸ், ராமநாதபுரம் பாண்டியன் கிராம வங்கி மேலாளர் குசலவன் உள்பட அரசு அலுவலர்கள், வங்கிகளை சார்ந்த பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு சமுதாய வளஅமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 
    இலங்கை நாட்டுக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார். #SriLanka #IndrajitCoomaraswamy #China
    கொலும்பு:

    இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் இந்திரஜித் குமாரசாமி அந்நாட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இலங்கைக்கு சீனா ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கடனுக்கு சுமார் சீன வங்கி சுமார் 5.25 சதவிகிதம் வட்டி விதித்துள்ளதாகவும், கடனை திருப்பி செலுத்த 8 ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் தெரிவித்த இந்திரஜித் குமாரசாமி, அதில் 3 ஆண்டுகள் சலுகை காலமாக சீனா அளித்துள்ளாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இலங்கைக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #SriLanka #IndrajitCoomaraswamy  #China
    ×