என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 105841
நீங்கள் தேடியது "ஏ.ஆர்.ரஹ்மான்"
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பேச்சாளரும், நடிகருமான முனைவர் ஞானசம்பந்தம் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் ஜோடியாக நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முனைவர் ஞானசம்பந்தம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஷாருக்கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee
‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் ரிலீசை முன்னிட்டு இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் அந்தமை உருவாக்கியிருக்கிறார். #AvengersEndGame #ARRahman
உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மார்வெல் சீரியசில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் அந்தமமை உருவாக்குகிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகிறது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது, என் குடும்பம் மற்றும் என்னை சுற்றியே பல மார்வெல் ரசிகர்கள் இருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றை கொடுக்க அதிக அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். #AvengersEndGame #ARRahman #MarvelIndia
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
தற்போது இதன் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள். அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.
.@SunTV buys the satellite rights of #Thalapathy63#Thalapathy63WithSunTV
— Sun TV (@SunTV) March 19, 2019
இந்நிலையில், தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை சன் டிவி நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதிபடுத்தி உள்ளது.
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு வடசென்னையில் நடந்து வரும் நிலையில், விஜய், நயன்தாராவை காண ரசிகர்கள் இரவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Thalapathy63 #Vijay #Nayanthara
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் ஜோடியாக நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ரசிகர்கள் பெருமளவில் கூடுகிறார்கள்.
காட்டாங்கொளத்தூரில் படப்பிடிப்பை முடித்து புறப்படும்போது காரில் தன்னை பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு கார் கண்ணாடியை இறக்கி பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று விஜய் அறிவுரை கூறிய வீடியோ வைரலானது. பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யை பார்க்க மாணவ-மாணவிகள், ரசிகர்கள் ஏராளமானோர் கூடினார்கள்.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் தடுப்பு வேலி சரிந்து ரசிகர்கள் கீழே விழப்போனார்கள். விஜய் மற்றும் அவரது உதவியாளர்கள் அந்த வேலியை தாங்கிப்பிடித்து ரசிகர்கள் கீழே விழாதபடி தடுத்தனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டார்கள். அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார். அதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் தலைவா என்று கோஷம் போட்டனர். இந்த வீடியோவும் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தில் அரசியல் இருக்காது என்றும், படம் ஜாலியாக இருக்கும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். #Thalapathy63 #Vijay #Nayanthara
நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
விஜய் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. மெர்சல், சர்கார் படங்களில் இடம்பெற்ற வசனங்கள், காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. விஜய் நடித்த கத்தி, மெர்சல், சர்கார் படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் மீடியா முன்பு விஜய் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
சென்னையில் இருக்கும் வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ், சமீபத்தில் நடிகர் விஜய்யை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படம் பற்றி அவர் விஜய்யிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜய், இந்தபடம் “வண்ணமயமான, கொண்டாட்டமான படமாக இருக்கும். எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும். கடைசி சில படங்கள் கொஞ்சம் சீரியசாக இருந்தது.படத்தின் இறுதிக்காட்சியில் மீடியா முன்னாடி பேசறது எனக்கே போர் அடிச்சிடுச்சு” என்று பதில் அளித்துள்ளார்.
இந்த ட்விட் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரல் ஆனது. விஜய் ரசிகர்கள் அதிக அளவில் பகிர தொடங்கினார்கள். ஆனால் ராகேஷ் இந்த டுவிட்டைப் பகிர்ந்த சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.
படக்குழு அவரை அணுகி நீக்கச் சொல்லியிருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் அவரது டுவிட் பலரால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee
ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மாம்' படத்தின் சீன ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. #MOM #Sridevi
இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது 300-வது திரைப்படமான `மாம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.
இந்த படத்தில் தனது மகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து பழிவாங்கும் தாயாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். இந்தியா மட்டுமின்றி, போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் இந்த படம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது. வருகிற மார்ச் 22-ஆம் தேதி `மாம்' படம் சீனாவில் வெளியாக இருக்கிறது.
இது குறித்து தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கனவருமான போனி கபூர் கூறும்போது, "மாம் படம் ரிலீஸான எல்லா நாடுகளிலும், தாய்மார்களுக்கும், பார்வையாளர்களுக்கும் படத்துடன் ஒரு பிணைப்பை உண்டாக்கியது. இது தான் ஸ்ரீதேவியின் கடைசி படம் என்பதால், இந்த அழகிய கதையை முடிந்தவரை அதிகமான மக்களுக்கு கொண்டு செல்ல, மற்றொரு மிகப்பெரிய நாட்டிற்கும் எடுத்து செல்வதில் பெருமைப்படுகிறோம்" என்கிறார்.
ரவி உதயவார் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ரஹ்மானுக்கு கிடைத்தது. #MOM #Sridevi
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகும் அறிவியல் சார்ந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar
`மிஸ்டர்.லோக்கல்' படத்தில் பிசியாக நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது எஸ்.கே.14 படக்குழுவில் மீண்டும் இணைந்திருக்கிறார்.
ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ரவிக்குமார், ரகுலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் இதில் விவசாயியாக நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.
Back to the sets of #SK14 👍😊@Ravikumar_Dir@Rakulpreet@24AMSTUDIOSpic.twitter.com/w6YEN2thXH
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 18, 2019
ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.' என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம், இதுதான். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், அரக்குவேலி ஆகிய இடங்களில் நடக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar #RakulPreetSingh
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் அறிமுக பாடலில் விஜய்யுடன் 100 குழந்தைகள் நடனமாடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பென்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலை படக்குழு படமாக்கியுள்ளது.
படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்படி, குழந்தைகளிடத்திலும் விஜய்க்கு செல்வாக்கு இருப்பதால், சுமார் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை விஜய்யின் அறிமுக பாடலில் ஆட வைக்க அட்லி முடிவு செய்தாராம். மேலும் அந்த பாடல் சிறப்பாக வந்திருப்பதாகவும், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு, குழந்தைகளுடன் விஜய் சிறிது நேரத்தை செலவிட்டதாகவும், அவர்களுடன் செல்ஃபி எடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், கதிர், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
இளையராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் விஷாலுக்கு நெருக்கமான நடிகர்கள் நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள், என்று நடிகர் பார்த்திபன் பரபரப்பாக தெரிவித்துள்ளார். #Parthiban #Vishal #TFPC
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக இருந்தவர் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் சங்கத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார்.
ஆனால் நிகழ்ச்சிக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த அவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. புறக்கணித்ததற்கான காரணம் குறித்து பார்த்திபன் கூறியதாவது:-
நான் இளையராஜாவின் தீவிர பக்தன் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ரஹ்மானிடம் தான் முதன்முறையாக ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார்.
‘பலூன் பறக்க காற்று எப்படி காரணமோ அதை போல தான் தமிழர்களுக்கு இளையராஜா இசையும்’ என்று நிகழ்ச்சிக்கான ஸ்கிரிப்ட் எழுதி வைத்து இருந்தேன்.
ஆனால் திடீர் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான சரவணன் எனக்கு போனில் ‘நடிகர் ரமணா ஸ்கிரிப்ட் தயார் செய்து எடுத்து வருவார். நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியானது.
நிகழ்ச்சி நடந்த அன்று காலை வரை நிகழ்ச்சி தொகுப்பாளரை முடிவு செய்யவில்லை. நான் நந்தாவிடம் சொன்னபிறகு என்னையே தொகுப்பாளரை நியமிக்க சொன்னார்.
நான் ஒரு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரை அவசரம் அவசரமாக ஏற்பாடு செய்தபிறகு நந்தா ‘வேண்டாம். நானே சொல்லிவிட்டேன்’ என்று திடீர் என்று கூறினார்.
நந்தாவிடம் இதை முன்பே சொல்லி இருக்கலாமே என்று கேட்டேன். அவர் மழுப்பினார். இதன்மூலம் நான் நிகழ்ச்சியில் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.
அந்த நிகழ்ச்சியில் மேடை ஒருங்கிணைப்பு ஏனோ தானோ என்று இருந்தது. இளையராஜாவை மேடையில் அமரவைத்து அவமானப்படுத்தினார்கள். எனவே அன்று இரவே நான் இந்த நிகழ்ச்சியின் இயக்குனராக இருக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டேன்.
டிரம்ஸ் சிவமணி ஒப்புக்கொண்டு இருந்த ஒரு நிகழ்ச்சியை கேன்சல் செய்ய சொல்லி இந்த விழாவில் கலந்துகொள்ள கேட்டேன். ஆர்க்கெஸ்ட்ராவுக்கு பதிலாக மற்ற இசை அமைப்பாளர்களை வைத்து இளையராஜாவின் பாடலை இசைக்க திட்டமிட்டேன். இந்த இரண்டையுமே அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் என்ன நினைத்தார்களோ அதை மட்டுமே செய்தார்கள்.
விஷாலுக்காக களத்தில் இறங்கி பணிபுரிவது நந்தாவும், ரமணாவும் தான். விஷாலின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்கள் தான் நடத்துகிறார்கள். விஷால் ஒரு வார்த்தை அவர்களிடம் ‘நிகழ்ச்சியை நீங்கள் நடத்துங்கள். கிரியேட்டிவ் விஷயங்களை பார்த்திபனிடம் விட்டு விடுங்கள்’ என்று கூறி இருக்கலாம். அதை சொல்லவில்லை என்பது எனக்கு வருத்தம்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு என்னை ஓரமாக உட்கார வைத்தார்கள்.
இப்படி மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால் எது நடந்தாலும் இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்தேன்.
இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இளையராஜாவிடம் 3-ந்தேதி நிகழ்ச்சி நிரல் பற்றி ஆலோசிக்கும்போது என் பெயரை சொல்லும்போது ரமணா அவர் வேண்டாம் என்று கூறி இருக்கிறார். அப்போது அந்த சந்திப்பில் விஷாலும் உடன் இருந்து இருக்கிறார். இதை கேள்விபட்ட உடனே ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்துவிட்டேன்.
இப்போதும் விஷாலுக்கு ஆதரவு தருகிறேன். ஆனால் எனக்கு நேர்ந்த அவமானங்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ரஹ்மானிடம் நான் இந்த நிகழ்ச்சியின் டைரக்டர் என்றுதான் சம்மதிக்க வைத்தேன். அதனால் தான் என் ராஜினாமா விஷயத்தை சொல்லாமல் ரஹ்மானை கலந்துகொள்ள வீட்டிற்கு சென்று வழி அனுப்பி வைத்தேன்.
விஷாலை நான் ஆதரிப்பதற்கு இதுவே ஒரு உதாரணம். விஷால் நந்தாவையும் ரமணாவையும் முழுமையாக நம்புவது தவறு இல்லை. ஆனால் விஷாலை போல எல்லோரையும் அவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதே என் கோரிக்கை’.
இவ்வாறு அவர் கூறினார். #Parthiban #Ilayaraja75 #ARRahman #TFPC #Vishal #Nanda #Ramana
அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், படத்தில் அவரது பெயர் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63 #Vijay
சர்கார்’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு விஜய் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது படப்பிடிப்பு முடித்து விட்டு கிளம்பும்போது விஜய் காரிலிருந்து கீழே இறங்கி ரசிகர்களை நோக்கி கையசைக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியை எப்படி படமாக்கியுள்ளனர். அப்போது யோகி பாபு பேசும் வசனம் என்ன என்பது பற்றி இணையத்தில் செய்தியாக வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து இந்த படத்தைத் தயாரித்துவரும் ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில், “ரசிகர்களுக்குப் பெரிய வேண்டுகோள். ‘தளபதி 63’ தொடர்பாக எந்தவொரு தகவலையும் பகிர வேண்டாம். உங்களை மகிழ்விக்க படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
2019 தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். எனவே, அவருடைய உடற்கட்டு, அதற்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
தளபதி 63 படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக இந்த படத்திற்காக மெனக்கிடவிருப்பதாகவும், அட்லியின் ரசிப்புத் தன்மையையும் பாராட்டினார். #Thalapathy63 #ARRahman
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது,
இந்த மாதிரியான ஒரு கதைக்கு ஹாலிவுட்டில் நான் இசையமைத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல்முறை. இயக்குநர் அட்லி, பேலே, லெகான் உள்ளிட்ட படங்களின் ரசிகர். அவரது இசை உணர்வு சிறப்பானது. நான் இசையமைத்த அனைத்து ஆல்பத்தையும் கேட்டிருக்கிறார். அதில் இருந்து இந்த மாதிரி பண்ணுங்களேன் சார், என்று கேட்பார். இது போல் கேட்கும் இயக்குநர்களை எனக்கு பிடிக்கும்.
இவ்வாறு இசையுடன் ஒன்றிணைந்து, ரசித்து செய்யும் போது திரையில் அது சிறப்பாக வந்திருப்பதை உணர முடியும். ஏதோ பாட்டு வாங்கிவிட்டோம் என்று அடுத்த கட்டத்திற்கு செல்லாமல், ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்வார் அட்லி.
இவ்வாறு கூறியிருக்கிறார். #Thalapathy63 #Vijay63 #ARRahman #Atlee #Nayanthara
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் `இந்தியன் 2' படத்திற்கு இசையமைக்காதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டதற்கு, அவர் விளக்கம் அளித்துள்ளார். #Indian2 #KamalHaasan #ARRahman
‘இந்தியன்’ படத்துக்கு இசை அமைப்பாளராகப் பணிபுரிந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியன் 2-ம் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியாதது குறித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டனர்.
இந்த நிலையில், ‘இந்தியன் 2’ படத்தில் பணிபுரியாதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-
‘இந்தியன் 2’வில் நான் பணியாற்ற வேண்டும் என்று கமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். டைரக்டர் சொல்லவேண்டும் என்று கூறினேன். ஷங்கர் எப்போதுமே புதிய விஷயங்களை தேடிச் செல்வார். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால் போர் அடித்துவிடும் இல்லையா? ஏற்கனெவே ‘அந்நியன்’, ‘நண்பன்’ ஆகிய படங்களைப் போல இது ஒரு சிறிய பிரேக். அவ்வளவுதான்’. இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் மூலம் ஷங்கர், கமல்ஹாசனுடன் முதல்முறையாக அனிருத் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Indian2 #KamalHaasan #ARRahman #Shankar #Anirudh
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X