search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.கே.சுரேஷ்"

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 படம் பாசமலர் பாணியில் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகிறதாம்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காரைக்குடி செல்லவிருக்கிறது.

    பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகும் இந்த படத்திற்காக காரைக்குடியில் பிரம்மாண்ட திருவிழா செட் அமைக்கப்படுகிறது. அங்கு முக்கிய காட்சிகளை படமாக்க பாண்டிராஜ் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேலும், தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். கடைக்குட்டி சிங்கம் படம் அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவான நிலையில், எஸ்.கே.16 பாசமலர் பாணியில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகுவதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் இருக்கும் என்கிறார்கள்.



    பாரதிராஜா சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், வேலராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

    டூலெட் படத்தை இயக்கிய செழியன் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரில்லர் கதையில் ஆர்.கே.சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.
    ஒளிப்பதிவாளர் செழியன் டூலெட் படத்தின் மூலம் தன்னை ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுக்களை பெற்ற இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களே கிடைத்தது.

    இந்த நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலையில் செழியன் தற்போது ஈடுபட்டுள்ளார். த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இருவருமே இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றனர்.



    கொலை பின்னணியில் இருக்கும் மர்மத்தை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது.

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படம் பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகுவதாக பாண்டிராஜ் கூறியுள்ளார். #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

    படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    உங்கள் தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, மாமா, மச்சான், 
    அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பையன், மாமன் பொண்ணு, இந்த சொந்தங்களை மொத்தமாக திரையில் காண 
    இன்று துவக்கம் என்று குறிப்பிட்டு, இந்த படம் பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகுவதாக குறிப்பிட்டுள்ளார்.


    இந்த படத்தில் கதாநாயகிகளாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா 
    ராஜேஷ் நடிக்கின்றனர். யோகி பாபு, சூரி காமெடி வேடத்திலும், ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா
    உள்ளிட்டோரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். #SK16 #Sivakarthikeyan #AnuEmmanuel #AishwaryaRajesh #Bharathiraja #Samuthirakani 

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இதில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.

    சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகிகளாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது. யோகி பாபு, சூரி காமெடி வேடத்திலும், ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி முக்கிய கதபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

    டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளை மேற்கொள்கின்றனர். #SK16 #Sivakarthikeyan #AnuEmmanuel #AishwaryaRajesh #Bharathiraja #Samuthirakani 

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தில் மேலும் 4 பிரபலங்கள் இணைந்துள்ளனர். #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இதில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்.கே.16 படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐஸ்வர்யா, சிவகார்த்திகேயனின் தங்கையாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர யோகி பாபு, சூரி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா மற்றும் சமுத்திரக்கனியும் படக்குழுவில் இணைந்துள்ளனர். பாரதிராஜா சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.


    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷாவும், படத்தொகுப்பாளராக ஆண்டனி எல்.ரூபனும், கலை இயக்குநராக வீர சமரும் ஒப்பந்தமாகி உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. #SK16 #Sivakarthikeyan #Bharathiraja #Samuthirakani #NiravShah #AntonyLRuben

    விஷாலுக்கு நெருக்கமான நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், உதயா தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விலகியிருப்பதால், விஷாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. #ProducersCouncil #Vishal #RKSuresh
    திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் உள்ளார். சங்கத்தில் செயற்குழு உறுப்பினர்களாக இருந்து வந்த நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், உதயா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஆர்.கே.சுரேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    விஷால் தேர்தலில் நிற்கும் போதே சிறு படங்களுக்கு நன்மை செய்யவே தேர்தலில் போட்டியிடுவதாக வாக்குறுதி கொடுத்தார். வெற்றி பெற்ற பின்னரும் அதையே கூறி வந்தார். ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் ரிலீஸ் சிக்கல் நிலவுகிறது. படங்கள் வெளியிடுவதில் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை.

    அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. எனவே சிறுபட தயாரிப்பாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளோம். விஷாலால் அவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.



    எல்லோரிடமும் பிரச்சினையில் ஈடுபடுகிறார். அவரது செயல்பாடுகள் சரியில்லை. எனக்கும் விஷாலுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. இன்னும் நண்பர்கள் தான்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விஷாலுக்கு நெருக்கமான ஆர்கே.சுரேசும், உதயாவும் விஷால் மீது குறை கூறி சங்கத்தில் இருந்து விலகி இருப்பது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ProducersCouncil #Vishal #RKSuresh #Udhaya

    விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் - ரோகிணி நடிப்பில் வெளியாகி இருக்கும் `டிராபிக் ராமசாமி' படத்தின் விமர்சனம். #TrafficRamasamy #SAChandrasekar
    டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை விஜய் சேதுபதி படிக்க, அது திரையில் படமாக நகர்கிறது. கதையில் டிராபிக் ராமசாமியாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மனைவி ரோகிணி மற்றும் தனது குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்கள், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார் டிராபிக் ராமசாமி. 

    தனது கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்கும் டிராபிக் ராமசாமி முதலில் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கிறார். ஆனால், அவர் அளிக்கும் புகார்களுக்கு காவல் நிலையத்தில் மதிப்பில்லாமல் போக, தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தை நாடுகிறார். 



    தொடக்கத்தில் சிறிய சிறிய பிரச்சனைகளை கையில் எடுக்கும் டிராபிக் ராமசாமி அதில் வெற்றியும் காண்கிறார். இந்த நிலையில், நகர்ப் புறத்தில் மீன்பாடி வண்டிகளால் நிறைய உயிரிழப்பு ஏற்படுவதாக உணர்கிறார். மீன்பாடி வண்டிகளை ஓட்டக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், அதை எப்படி ஓட்டலாம் என்று கோபப்படும் டிராபிக் ராமசாமி, இதுகுறித்து ஒரு கணக்கெடுப்பும் நடத்துகிறார். அதில் நிறைய பேர் உயிரிழந்துள்ளதும் தெரிய வருகிறது. 

    இந்த நிலையில், டிராபிக் ராமசாமிக்கும், ரவுடியான ஆர்.கே.சுரேஷுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. பொதுநலனுக்கா போராடும் டிராபிக் ராமசாமியையும் போலீசார் தாக்குவதால், அவர் மீது ஆர்.கே.சுரேஷுக்கு பரிதாபம் ஏற்படுகிறது. இதையடுத்து ராமசாமிக்கு அவர் சிறிய சிறய உதவிகளையும் செய்ய முன்வருகிறார். 

    இதில் மீன்பாடி வழக்கில் தொடர்புடையதாக சம்பந்தப்பட்ட அமைச்சர், மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்கிறார். இதேபோல் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் டிராபிக் ராமசாமி வழக்கு போடுகிறார்.



    இந்த நிலையில், டிராபிக் ராமசாமியை கொல்ல பலரும் சதி செய்கின்றனர். அவர்களிடமிருந்து டிராபிக் ராமசாமியை ஆர்.கே.சுரேஷ் காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் ஆர்கே.சுரேஷயும் கொல்ல சதி நடக்கிறது. 

    கடைசியில், டிராபிக் ராமசாமியின் வழக்குகளுக்கு நீதி கிடைத்ததா? கொலைகாரர்களிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் தப்பித்தாரா? டிராபிக் ராமசாமியின் பயணம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டிராபிக் ராமசாமியாக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் திரையில், டிராபிக் ராமசாமியையே நினைவுபடுத்துகிறார். அவரது நடையிலும், உடையிலும், ஒவ்வொரு அசைவிலும் டிராபிக் ராமசாமி தெரிகிறார். குறிப்பாக இந்த வயதிலும் சந்திரசேகர் தன்னை வருத்திக் கொண்டே நடித்திருக்கிறார். 



    டிராபிக் ராமசாமியின் மனைவியாக நடித்துள்ள ரோகிணி, காவலராக பிரகாஷ்ராஜ், ரவுடி கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ், வழக்கறிஞராக லிவிங்ஸ்டன் என பலரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். நீதிபதியாக அம்பிகா கலகலக்க வைத்திருக்கிறார். மற்றபடி இமான் அண்ணாச்சி, குஷ்பு, சீமான், மனோபாலா, மதன் பாப் என அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு வலுசேர்த்திருக்கின்றன. விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர். டிராபிக் ராமசாமியின் பேத்தியாக நடித்திருக்கும் குழந்தையும் ரசிக்க வைத்திருக்கிறது.

    டிராபிக் ராமசாமியின் முழு வாழ்க்கையை அப்படியே படமாக எடுக்கவில்லை. மாறாக அவரது வாழ்க்கையில் நடந்த, அவர் சந்தித்த பிரச்சனைகளில் சிலவற்றை, குடும்பம், பாசம், போராட்டம், சமூக நலன் என மாசாலா கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்கி. அதுமட்டுமில்லாமல், இந்த காலத்து இளைஞர்கள், கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்டால் தான், நாடு திருந்தும், முன்னேறும் என்பதையும் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். 

    பாலமுரளி பாலு பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. குகன் எஸ்.பழனியின் ஒளிப்பதிவில் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `டிராபிக் ராமசாமி' உத்வேகம். #TrafficRamasamy #SAChandrasekar
    கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா நடிப்பில் உருவாகி இருக்கும் `காளி' படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Kaali #VijayAntony
    விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் காளி. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. 

    கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி 4 வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம்.நாதள் ஒளிப்பதிவு செய்துள்ளார். #Kaali #VijayAntony

    கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காளி' படத்தின் விமர்சனம். #Kaali #KaaliReview #VijayAntony
    அமெரிக்காவில் மருத்துவரான விஜய் ஆண்டனி, அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் ஒரு அம்மா-மகன், ஒரு மாடு, ஒரு பாம்பு வருகிறது. 

    மருத்துவத்தை சேவையாக செய்ய வேண்டும் என்ற குணமுடைய விஜய் ஆண்டனி, அதையே தனது மருத்துவமனையில் புணிபுரிபவர்களுக்கும் போதிக்கிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு கிட்னி செயழிலந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தனது அம்மாவைக் காப்பாற்ற தனது கிட்னி ஒன்றை கொடுக்கப்போவதாக விஜய் ஆண்டனி அவரது அப்பாவிடம் கூறுகிறார். 



    ஆனால் விஜய் ஆண்டனியின் கிட்னி அவரது அம்மாவுக்கு பொருந்தாது என்றும், அவரை ஆசிரமம் ஒன்றில் இருந்து தத்து எடுத்து வந்ததாக விஜய் ஆண்டனியின் அப்பா கூறுகிறார். இதையடுத்து தனது கனவில் வருவது யார்? தன்னை பெற்ற அம்மாவா? அவர் தற்போது எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதை அறிய தான் இந்தியாவுக்கு போய் வருவதாக தனது வளர்ப்பு பெற்றோரிடம் கூறிவிட்டுச் செல்கிறார். 

    இந்தியா வரும் விஜய் ஆண்டனி தனது அம்மா இறந்துவிட்டதை தெரிந்து கொள்கிறார். பின்னர் தனது தந்தை யார் என்பதை தேடி செல்கிறார். அவருக்கு துணையாக யோகி பாபு வருகிறார். அவரது அப்பாவை தேடிச் சென்ற அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இலவச சிகிச்சை செய்வதாகக் கூறி அனைவரது ரத்தத்தையும் எடுத்து, அவர்களது டி.என்.ஏவை, தனது டி.என்.ஏவுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். 



    இதில் அந்த ஊர்த் தலைவரான மதுசூதனன் தான் தனது தந்தையாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. பின்னர் அவரது கதையை கேட்கிறார். மேலும் வேல ராமமூர்த்தி பற்றிய கதையையும் கேட்கிறார். இந்த நிலையில், அதே ஊரில் சித்த மருத்துவராக வரும் அஞ்சலிக்கு, விஜய் ஆண்டனி மீது காதல் வருகிறது. 

    கடைசியில் விஜய் ஆண்டனி தனது அப்பாவை கண்டுபிடித்தாரா? விஜய் ஆண்டனியின் அம்மா யார்? விஜய் ஆண்டனியின் கனவு முழுமை அடைந்ததா? விஜய் ஆண்டனி - அஞ்சலி இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    4 வித்தியாசமான கெட்-அப்களில் வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பு எப்போதும் போல ரசிக்கும்படியாகவே இருக்கிறது. 4 பரிணாமங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சித்தா மருத்துவராக அஞ்சலியின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக ரசிக்கும்படி வந்திருக்கிறது. சுனைனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதாவும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 

    காமெடி காட்சிகளில் யோகி பாபு ஸ்கோர் செய்திருக்கிறார். மதுசூதனன், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் கொடுத்த கதாபாத்தை மெருகேற்றியிருக்கின்றனர். 

    ஒரு கனவு, அதில் வருவது யார் என்பதை அறிய இந்தியா வரும் விஜய் ஆண்டனி, அவரது அப்பாவை தேடுகிறார். அதனை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. படத்தின் கதை, கேட்க வித்தியாசமாக இருந்தாலும், அதனை திரையில் சரியாக காட்டவில்லையோ என்று யோசிக்க வைத்துவிட்டார் கிருத்திகா. 



    4 கெட்-அப்புகளில் விஜய் ஆண்டனி, 4 கதாநாயகிகள் என படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். அவரது முதல் படத்தில் இருந்த ஈர்ப்பு இதில் இல்லை என்பது வருத்தமே.

    பின்னணி இசை, பாடல்களில் விஜய் ஆண்டனி மிரட்டியிருக்கிறார். குறிப்பாக அரும்பே பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமையாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `காளி' ஏமாற்றம். #Kaali #KaaliReview #VijayAntony

    முதலில் கறுப்பு தாடி, முடியுடன் வலம் வந்த அஜித், தற்போது வெள்ளை முடி தாடியுடன் வலம் வருகிறார். இந்த நிலையில், அவர் விஸ்வாசம் படத்தில் இரண்டு கெட்அப்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Viswasam #AjithKumar
    சமீபகாலமாக அஜித் தனது படங்களில் தனது கறுப்பு-வெள்ளை கலந்த இயற்கையான முடியுடன் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் வெள்ளை முடியுடன் நடித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    அடுத்து, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சிவா இயக்குகிறார். இதில் கறுப்பு முடியுடன் இளமையாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. முன்பு கறுப்பு முடியுடன் அவர் நிற்கும் படங்கள் வெளியாகின. விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்காகத்தான் டை அடித்து போஸ் கொடுத்தார் என்று கூறப்பட்டது.

    இப்போது, ஐதராபாத்தில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. நயன்தாராவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இங்கு படக்குழுவினருடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதில், அஜித் வெள்ளை முடி வெள்ளை தாடியுடன் காணப்படுகிறார். எனவே, அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாதோ என்று வருத்தத்துடன் உள்ளனர்.



    இந்த நிலையில், இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இளைஞராகவும் வயதான தோற்றத்திலும் வருகிறார். முதலில் வயதான தோற்றத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு இளமை தோற்றத்துக்கு அஜித் மாறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் தோன்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar

    விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித்தை சந்தித்தது குறித்து இசைமைப்பாளர் இமான் டுவிட்டர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #Viswasam #AjithKumar
    விஸ்வாசம் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கியதில் இருந்தே அடுத்தடுத்து பல தகவல்கள் வந்த வண்ணமாக உள்ளன. படக்குழுவினர் அனைவருமே அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

    அந்த வகையில், விஸ்வாசம் படக்குழுவில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ்திலக், மெர்சல் படத்தில் நடித்த குருவி பாட்டி உள்ளிட்ட பலரும் படக்குழுவில் இணைந்துள்ளனர். மேலும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    அதேபோல் இசையமைப்பாளர் இமான், நடன இயக்குநர் அசோக் ராஜா, ஒளிப்பதிவாளர் விஜய் தீபக் உள்ளிட்ட பலரும் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



    இதில் இமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது பாடல் காட்சி உருவாக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேநேரத்தில் எளிமையான மனிதரான அஜித், எனது இசைக்கு ஆனந்தமாக நடனமாடுவதை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இவ்வாறு கூறியுள்ளார். 

    சிவா இயக்கும் இந்த படத்தை சத்யோஜாதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

    ×