search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயர்லாந்து"

    3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் அயர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காள தேசம்.
    டுப்ளின்:

    வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் வங்காள தேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டுப்ளினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து, வங்காளதேசம் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 130 ரன்னில் அவுட்டானார். அவருக்கு கேப்டன் போர்ட்டர்பீல்டு 
    நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது.

    வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத் 5 விக்கெட்டும், மொகமது சல்புதின் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. தமிம் இக்பால் 57 ரன்னும், லித்தான் தாஸ் 76 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 50 ரன்னும் எடுத்தனர்.

    நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    மூன்று நாடுகள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது வங்காள தேசம்.

    டுப்ளின்:

    வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் வங்காள தேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டுப்ளினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ஹோப் 87 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 62 ரன்னும் எடுத்தனர்.

    வங்காள தேசம் சார்பில் மு‌ஷடாபிசுர் ரகுமான் 4 விக்கெட்டும், மொர்டசா 3 விக்கெட்டும், சகிப் அல்-ஹசன், மிராஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. முஷ்பிகுர் ரகீம் 63 ரன்னும், சவுமியா சர்கார் 54 ரன்னும், முகமது மிதுன் 43 ரன்னும் எடுத்தனர்.

    இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்திடம் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவியது. கடந்த 7-ம் தேதி நடந்த ஆட்டத்தில் அந்த அணி 8 விக்கெட்டில் வீழ்த்தியது.

    நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம்- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி 17-ம் தேதி நடக்கிறது. இதில் வங்காள தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    டேராடூனில் நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 118 ரன்கள் தேவைப்படுகிறது. #AFGvIRE
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது. முர்டாக் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் யாமின் அகமத்சாய், முகமது நபி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் மற்றும் வக்கார் சலாம்கெய்ல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஹஷ்மத்துல்லா ஷஹிதி 61 ரன்னிலும், அஸ்கர் ஆப்கான் 67 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகமத் ஷா 98 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அயர்லாந்து தரப்பில் ஸ்டூவர்ட் தாம்சன் 3 விக்கெட்டும், ஆண்டி மெக்பிரின், ஜேம்ஸ் கேமரூன் டவ், ஜார்ஜ் டாக்ரெலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் ஆண்ட்ரு பால்பிர்னி 82 ரன்னிலும், கெவின் ஓ பிரையன் 52 ரன்னிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பின்வரிசை ஆட்டக்காரர்கள் ஓரளவு தாக்குப் பிடிக்க அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 288 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 5 விக்கெட்டும், யாமின் அஹமத் சாய் 3 விக்கெட்டும், வகார் சலாம்கெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.

    இரு நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்னும் 118 ரன்கள் தேவை என்பதால் எளிதில் வெற்றி பெறும் என தெரிகிறது. #AFGvIRE
    டேராடூனில் நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரகமத் ஷாவின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்துள்ளது. #AFGvIRE
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் சிக்கிய அயர்லாந்து விக்கெட்டுக்களை மளமளவென இழந்தது. ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் விளையாடிய டாக்ரெல், முர்டாக் ஜோடி சிறப்பாக விளையாடியது. முதல் இன்னிங்சில் அயர்லாந்து அணி 172 ரன்னில் சுருண்டது. முர்டாக் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் யாமின் அகமத்சாய், முகமது நபி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் மற்றும் வக்கார் சலாம்கெய்ல் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், இசனுல்லா ஜனாத்
    இறங்கினர்.

    ஜனாத் 7 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரகமத் ஷா நிதானமாக விளையாடினார். ஷசாத் 40 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய ஹஷ்மத்துல்லா ஷஹிதியும் பொறுப்புடன் ஆடினார், இருவரும் அரை சதமடித்தனர். ஷஹிதி 61 ரன்னிலும், அஸ்கர் ஆப்கான் 67 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகமத் ஷா 98 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அயர்லாந்து தரப்பில் ஸ்டூவர்ட் தாம்சன் 3 விக்கெட்டும், ஆண்டி மெக்பிரின், ஜேம்ஸ் கேமரூன் டவ், ஜார்ஜ் டாக்ரெலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. #AFGvIRE
    டேராடூனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து. #AFGvIRE
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3வது போட்டியில் அயர்லாந்தும், 4வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இன்று 5-வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அணி கேப்டன் அஷ்கர் ஆப்கன் பொறுப்புடன் ஆடி 82  ரன்னில் காயமடைந்து வெளியேறினார். அவருக்கு அடுத்தபடியாக, மொகமது நபி 40 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்தது.
     
    அதன்பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரரான பால் ஸ்டிரிங் 70 ரன்னும், 3-வதாக இறங்கிய ஆன்டி பால்பிரைனி 68 ரன்கள் அடித்தனர். ஆட்டத்தின் கடைசியில் கெவின் ஓ பிரையன் 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார்.

    அயர்லாந்து 47.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டி தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. #AFGvIRE 
    அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், குல்பதின் நயீப்பின் பேட்டிங், பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #AFGvIRE #GulbadinNaib
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் 2- 0 என கைப்பற்றியது. 

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று டேராடூனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அரை சதமடித்த அவர் 89 ரன்னில் அவுட்டானார். மற்றொரு வீரர் ஜார்ஜ் டாக்ரெல் 37 ரன்னில் வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், அயர்லாந்து அணி 49.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் தவ்லத் சட்ரான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், குல்பதின் நயீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. மொகமது ஷசாத் 43 ரன்னிலும், ஹஸ்ரத்துல்லா ஷாஷை 25 ரன்னிலும், ரஹ்மத் ஷா 22 ரன்னிலும், குல்புதின் நயீப் 46 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 41.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. #AFGvIRE #GulbadinNaib
    அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. #AFGvIRE #HazratullahZazai #RashidKhan
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.   

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது  டி20 போட்டி இன்று டேராடூனில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அயர்லாந்து அணி பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் விக்கெட்டாக உஸ்மான் கனி 73 ரன்கள் எடுத்து வெளியேறினார்.



    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ரத்துல்லா சரவெடியாக வெடித்தார். அவர் 62 பந்துகளில் 16 சிக்சர், 11 பவுண்டரி என அடித்து 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான பால் ஸ்டிர்லிங் 50 பந்தில் 91 ரன் எடுத்து அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதைத்தொடர்ந்து 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 4 ஓவரில் 25 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். #AFGvIRE #HazratullahZazai #RashidKhan
    அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ஹஸ்ரத்துல்லா அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தான் 278 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது. #AFGvIRE #HazratullahZazai
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.   

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று டேராடூனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அயர்லாந்து அணி பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

    முதல் விக்கெட்டாக உஸ்மான் கனி 73 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 236 ஆக இருந்தது.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ரத்துல்லா சரவெடியாக வெடித்தார். அவர் 62 பந்துகளில் 16 சிக்சர், 11 பவுண்டரி என அடித்து 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது. #AFGvIRE #HazratullahZazai
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா அணி அயர்லாந்து அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Australia #Ireland
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிலேக் கோவர்ஸ் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அயர்லாந்து வீரர் ஷானோ டொனொக் 14வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 34வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் டிம் பிராண்ட் அபாரமாக ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி அயர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் டிமோதி பிராண்ட் பெற்றார். #HockeyWorldCup2018  #Australia #Ireland
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. #WomenWorldT20
    புரோவிடென்ஸ்:

    10 அணிகள் இடையிலான பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் புரோவிடென்சில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜவேரியா கான் 52 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு இருந்த பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அயர்லாந்து அணி தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்து இருக்கிறது.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்துடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. அலிசா ஹீலி 53 ரன்னும், ராச்சல் ஹெய்ன்ஸ் 29 ரன்னும் விளாசினர். அடுத்து களம் புகுந்த நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் 120 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. எனவே ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 48 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மெகன் ஸ்கட் 3 விக்கெட்டும், சோபி மொயின்ஸ், டெலிசா கிம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்று, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அதே சமயம் 2-வது தோல்வியை சந்தித்த நியூசிலாந்துக்கு அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது. இந்த போட்டியில் தாமதமாக பந்து வீசிய புகாரில் சிக்கியதால் நியூசிலாந்து அணி வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதமும், கேப்டனுக்கு 20 சதவீதமும் அபராதமாக ஐ.சி.சி. நடுவர் ரிச்சர்ட்சன் விதித்துள்ளார்.

    புரோவிடென்சில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே நியூசிலாந்து, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் ஆயத்தமாக உள்ளனர். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #WomenWorldT20
    மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியின் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. #WomenWorldT20
    கயானா:

    மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 34 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    3-வது ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை நாளை (வியாழக்கிழமை) எதிர்கொள்கிறது.

    பலவீனமான அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. கேப்டன் கவூர் 2 ஆட்டத்தில் 117 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தார். பந்துவீச்சில் பூனம் யாதவ், ஹேமலதா தலா 5 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

    அயர்லாந்து அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது. ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்க்க அந்த அணி கடுமையாக போராடும். நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இன்று நடைபெறும் ‘ஏ’ பிரிவு ஆட்டங்களில் இலங்கை- வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. #WomenWorldT20
    அயர்லாந்து நாட்டின் அதிபராக மிக்கேல் ஹிக்கின்ஸ் 2-வது முறையாக தேர்வு பெற்று இருக்கிறார். #Ireland #President #MichaelDHiggins
    டப்ளின்:

    அயர்லாந்து நாட்டில் கடந்த 26-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ் மீண்டும் போட்டியிட்டார். சுயேச்சையாக போட்டியிட்ட அவரை எதிர்த்து பீட்டர் கேசி, சியான் கலாகெர் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில் அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ் 55.8 சதவீத ஓட்டுகள் வாங்கி அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக அதிபராக தேர்வு பெற்று இருக்கிறார். 1966-ம் ஆண்டுக்கு பின்னர் அங்கு அதிபர் ஒருவர் தொடர்ந்து 2-வது முறை போட்டியிட்டது இதுவே முதல் முறை.

    அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் தொழில் அதிபரான பீட்டர் கேசி 23.25 சதவீத ஓட்டுகளையும், சியான் கலாகெர் 6.41 சதவீத ஓட்டுகளையும் பெற்றனர்.

    அயர்லாந்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் சரி, பிந்தைய கருத்துக்கணிப்பிலும் சரி, அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ்தான் முன்னிலை பெற்றிருந்தார். அதன்படியே தேர்தலிலும் கூடுதல் ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

    அவரை அயர்லாந்தில் உள்ள முக்கியமான 3 கட்சிகளும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

    அயர்லாந்தில் அதிபர் பதவிக்காலம் 7 ஆண்டுகள் ஆகும். அந்த நாட்டின் சட்டப்படி ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபர் ஆக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  #Ireland #President #MichaelDHiggins
    ×