search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105991"

    தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். மகனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரத்தை தொடங்கினார். #LSPolls #TheniConstituency #OPS
    அலங்காநல்லூர்:

    தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலமேடு அருகே உள்ள வலையபட்டி மஞ்சமலை சுவாமி கோவிலில் ஓ.பி.எஸ். சாமி கும்பிட்டார்.

    தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் திறந்த வேனில் பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மகனுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் தகுதியான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொண்டு வெற்றி பெறச் செய்வார்கள். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம்.

    ராஜகண்ணப்பன் ஒரு கட்சியில் இருப்பதும், பதவி கிடைக்காவிடில் விலகுவதும் வாடிக்கை. அ.தி.மு.க.வில் எந்தவித உட்கட்சி பூசலும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #TheniConstituency #OPS

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம் கருமந்துறை விநாயகர் கோவிலில் நாளை மறுநாள் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். #LSPolls #EdappadiPalaniswami
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி விட்டன.

    அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். தொண்டர்களும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து நாளை மறுநாள் (22-ந் தேதி) பிரசாரத்தை தொடங்குகிறார். வழக்கமாக எந்த தேர்தல் தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை வெற்றி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்குவார். வழக்கம் போல இந்த பாராளுமன்ற தேர்தலுக்கும் அங்கிருந்தே பிரசாரத்தை தொடங்குகிறார்.

    அதற்காக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் எடப்பாடி பழனிசாமி கருமந்துறைக்கு செல்கிறார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம் பாளையத்தில் பேசுகிறார்.

    பின்னர் வாழப்பாடியிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாலையில் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வரும் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் தர்மபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சூறாவாளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்ட மன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். #LSPolls #EdappadiPalaniswami

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை 26 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார். #LSPolls #Vaiko
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி தமிழகத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை 26 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். தினமும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரை அவர் பிரசாரம் செய்கிறார்.

    அவர் பிரசாரம் செய்யும் ஊர்-இடங்கள் வருமாறு:-

    மார்ச் 22-ந்தேதி: (வெள்ளி)- தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி, திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், தூத்துக்குடி (பொதுக்கூட்டம்), குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம் (பொதுக்கூட்டம்)

    23-ந்தேதி (சனி) - கோவில்பட்டி (தூத்துக்குடி தொகுதி) சாத்தூர், வெம்பக்கோட்டை, (விருதுநகர் தொகுதி) ராஜபாளையம் (பொதுக்கூட்டம்) (தென்காசி தொகுதி)

    24-ந்தேதி (ஞாயிறு)- மாலை 4 மணி முதல் பேசுகின்ற இடங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் (தென்காசி தொகுதி), கல்லுபட்டி, திருமங்கலம் (விருதுநகர் தொகுதி), உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரிய குளம் (தேனி தொகுதி)

    25-ந்தேதி (திங்கள்) - திருச்சி பாராளுமன்றத் தொகுதி, புதுக்கோட்டை, குளத்தூர், கீரனூர், ஸ்ரீரங்கம், திருச்சி.

    26-ந்தேதி (செவ்வாய்) - வேலூர், அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதிகள்.

    சென்னையில் 27-ந்தேதி (புதன்) - வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை பாராளுமன்றத் தொகுதிகள்.

    28-ந்தேதி (வியாழன்) - விழுப்புரம், கள்ளக்குறிச்சி பாராளுமன்றத் தொகுதிகள்.

    29-ந்தேதி (வெள்ளி) - பெரம்பலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள், அரியலூர், குன்னம், பெரம்பலூர், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், டோல்கேட்.

    30 மற்றும் 31-ந்தேதி அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி (சனி, ஞாயிறு, திங்கள்) - ஈரோடு பாராளுமன்றத் தொகுதி.

    ஏப்ரல் 2-ந்தேதி (செவ்வாய்) - ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதிகள், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், திருப்போரூர்.

    3-ந்தேதி (புதன்) - புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள்.

    4-ந்தேதி (வியாழன்) - நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம்.

    5-ந்தேதி (வெள்ளி)- தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி, தஞ்சாவூர், ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி.

    6-ந்தேதி (சனி) - ராமநாதபுரம், சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிகள், மானாமதுரை, பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் பேசுகின்ற இடங்கள்- பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி.



    7-ந்தேதி (ஞாயிறு) - மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை.

    8-ந்தேதி (திங்கள் )- தேனி பாராளுமன்றத் தொகுதி உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம்.

    9 மற்றும் 10-ந்தேதி - ஈரோடு பாராளுமன்றத் தொகுதி.

    11-ந்தேதி (புதன்) - திருப்பூர், பொள்ளாச்சி, கோவை பாராளுமன்றத் தொகுதிகள்.

    12-ந்தேதி (வியாழன்) - நீலகிரி பாராளுமன்றத் தொகுதி சத்தியமங்கலம், அன்னூர், அவினாசி, பவானி சாகர், மேட்டுப்பாளையம்.

    13-ந்தேதி (வெள்ளி) - திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வத்தலக்குண்டு.

    14-ந்தேதி (சனி) - தென்காசி பாராளுமன்றத் தொகுதி, கரிவலம், சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி.

    15-ந்தேதி (ஞாயிறு) - திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை.

    16-ந்தேதி - ஈரோடு. #LSPolls #Vaiko

    மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவை ஆதரித்து பிரசாரம் செய்வதாக எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்தார். SumalathaAmbareesh #MandyaConstituency #SNKrishna
    பெங்களூரு :

    நடிகர் அம்பரீஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவர் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, மந்திரியாக இருந்தவர். மத்திய மந்திரியாகவும் பணியாற்றியவர். அவரது மனைவி நடிகை சுமலதா, மண்டியா தொகுதியில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டார்.

    ஆனால் கூட்டணியில் மாண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால் சுமலதாவுக்கு டிக்கெட் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இதையடுத்து மாண்டியா தொகுதியில் சுமலதா சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

    சுமலதாவுக்கு காங்கிரஸ் அதிருப்தி ஓட்டுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு பா.ஜனதாவில் சேர்ந்து போட்டியிட அழைப்பு வந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள இல்லத்தில் நடிகை சுமலதா நேரில் சந்தித்து பேசினார். சுமார் அரைமணி நேரம் அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பேசிய சுமலதா, “நான் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். மாண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரது பலம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும் தேர்தல் களத்தில் குதித்துள்ளேன். அம்பரீசின் ரசிகர்கள் தான் எனக்கு ஆதரவு. நீங்கள் மாண்டியா தொகுதியில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும்” என்றார்.

    அதற்கு பதிலளித்து பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, “நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக என்னால் இயன்ற பங்கை அளிக்க முயற்சி செய்கிறேன். மாண்டியாவுக்கு வந்து உங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். எனது ஆதரவாளர்களும் உங்களுக்கு ஆதரவு திரட்டுவார்கள். மாண்டியா மாவட்டம், ஜனதா தளம்(எஸ்) மயமாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் அங்கு களம் காண்கிறீர்கள். வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். அம்பரீஷ் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மனது வைத்தால், தேர்தல் முடிவை மாற்ற முடியும்” என்றார். SumalathaAmbareesh #MandyaConstituency #SNKrishna
    தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார். #RahulGandhi #LSPolls #DMKCongressAlliance
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை தி.மு.க-காங்கிரஸ் இணைந்து சந்திக்கிறது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

    தமிழகத்தின் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டது.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடக்கிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்.

    இதற்காக அவர், இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்பு மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் செல்கிறார்.

    நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் மாலை 3 மணிக்கு தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடக்கிறது.  

    இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார்.



    தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த மேடையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதுதவிர கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளனர்.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் என்பதால் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். #RahulGandhi #LSPolls #DMKCongressAlliance
    நாகர்கோவிலில் நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். #RahulGandhi #MKStalin
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு நாள் குறித்து விட்டது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி இந்தியாவின் தென்கோடி முனையான நாகர்கோவில் நகரில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறது.

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    நாகர்கோவில் நகரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி நாளை காலை சென்னை வருகிறார். அங்கு ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த கூட்டம் முடிந்ததும், விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் புறப்படுகிறார்.

    நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கல்லூரி மைதானத்தில் ராகுல்காந்தியின் ஹெலிகாப்டர் வந்திறங்க தளம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை பகல் 2 மணிக்கு வந்து சேரும் ராகுல்காந்தி அங்கிருந்து நேராக விழா மேடைக்கு செல்கிறார்.

    தொடர்ந்து கட்சியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், கட்சியின் அகில இந்திய மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    காங்கிரஸ் நடத்தும் இந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.

    இதனால் நாகர்கோவிலில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரசுடன் அணி சேர்ந்துள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலினும், கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.



    இதுபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்கள்.

    நாகர்கோவிலில் ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டமே தமிழகத்தில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியின் முதல் பிரசார கூட்டமாக அமைகிறது. இதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அவரவர் கட்சி தலைவர்களை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் நாகர்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்காட் கல்லூரி மைதானத்தை சுற்றிலும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    கூட்டணி தலைவர்கள் அமரும் மேடை வித்தியாசமாக திறந்தவெளி மேடையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேடையில் அமரும் தலைவர்களை தொண்டர்கள் மேடையின் 3 புறத்தில் இருந்தும் பார்க்கலாம். இதற்கான ஏற்பாடுகளை கூட்ட ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.

    கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் அமர தனித்தனி இட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உயர் பாதுகாப்பு பிரிவில் இருப்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஸ்காட் கல்லூரி மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    நேற்று முதல் மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். 2 ஆயிரம் போலீசாரும் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #RahulGandhi #MKStalin
     
    தேர்தல் பிரசாரத்தின் போது சபரிமலை அய்யப்பனின் பெயரால் மத பிரசாரம் செய்யக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. #ElectionCommission #SabarimalaCampaign
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த ஆளும் இடதுசாரி முன்னணி அரசு மும்முரமாக இருந்த நிலையில், அதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

    இந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பெரும் மோதலும் வெடித்தது. சபரிமலை பிரச்சினையை முன்வைத்து ஒவ்வொரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.



    இந்த பிரச்சினை தற்போது அடங்கி இருக்கும் நிலையில், சபரிமலை விவகாரத்தை நாடாளுமன்ற தேர்தலில் பயன் படுத்த மாநில கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    ஆனால் இதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டிவிடுவது அல்லது மதத்தின் பெயரால் ஓட்டு சேகரிப்பது போன்றவை தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். குறிப்பாக சபரிமலை அய்யப்பனின் பெயரால் மத பிரசாரம் மேற்கொள்வது தெளிவான விதிமீறல் ஆகும். எனவே இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு தீகா ராம் மீனா கூறினார். #ElectionCommission #SabarimalaCampaign
    சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது இரவு ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்ததாக டிடிவி தினகரன் மீது 4 போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #TTVDinakaran
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என்ற பெயரில் கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.

    20-ந் தேதி சேலம் மாநகர பகுதியான சூரமங்கலம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

    தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் அருகே இரவு 11 மணிக்கு மேல் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்தார்.

    இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் அ.தி.மு.க. நிர்வாகி ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் டி.டி.வி. தினகரன், மாவட்ட செயலாளர்கள் வெங்கடாசலம், எஸ்.கே. செல்வம் உள்பட 7 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், 11 மணிக்கு மேல் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்து அதிகாரிகள் உத்தரவை மீறுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல 23-ந்தேதி கெங்கவல்லி, மல்லியகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார்.

    அப்போது மல்லியகரை கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், மல்லியகரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், இரவு 10 மணிக்கு மேல் விதிமுறையை மீறி ஒலிபெருக்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாகவும், அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கெங்கவல்லி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரவு 11 மணிக்கு மேல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ததால் நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல தம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், இரவு 12.45 மணியளவில் தம்மம்பட்டி பகுதியில் சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததுடன், கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் அதிக சத்தம் ஏற்படுத்தியதால், டி.டி.வி. தினகரன் மற்றும் அவருடைய கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன் பேரில் டி.டி.வி. தினகரன் உள்பட பலர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல், அதிகாரி உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #TTVDinakaran
    பாராளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி நாளை தொடங்கி 5 நாட்களுக்குள் 10 மாநிலங்களில் அதிரடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். #ParliamentElection #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் மோடி, அமித்ஷா இருவரும் வியூகங்களை வகுத்து கடந்த மாதமே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர். மத்திய மந்திரிகளும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சூறாவளி பிரசாரத்தை தொடங்க உள்ளார். முதல் கட்டமாக 10 மாநிலங்களுக்கு செல்லும் வகையில் அவரது பிரசார பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கி 5 நாட்களுக்குள் பிரதமர் மோடி 10 மாநிலங்களிலும் அதிரடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல் நாளான நாளை (8-ந்தேதி) அவர் சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு பிரதமர் மோடி நாளைதான் முதன் முதலாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார். அம்மாநிலத்தில் ராய்கர் நகரில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேச உள்ளார்.

    சத்தீஸ்கர் மாநில பிரசாரத்தை முடித்துவிட்டு மோடி மேற்கு வங்காளம் செல்கிறார். அங்கு  ஜல்பைபுரி நகரில் நடக்கும் கூட்டத்தில் மோடி பேசுகிறார். கடந்த வாரமும் பிரதமர் மோடி மேற்கு வங்காளத்துக்கு சென்று பிரசாரம் செய்திருந்தார்.

    அவர் தவிர பா.ஜனதா மூத்த தலைவர்கள் அம்மாநிலத்துக்கு அடுத்தடுத்து சென்றபடி இருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை வலியுறுத்தி பிரதமர் மோடியும், பா.ஜனதா மூத்த தலைவர்களும் அங்கு பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இது மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.



    மம்தாவை மேலும் எரிச்சல்படுத்தும் வகையில் நாளை பிரதமர் மோடி மீண்டும் அம்மாநிலத்தை குறி வைத்து செல்கிறார். அங்கு பிரசாரம் முடிந்ததும் மோடி அசாம் மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு பிரசாரம் செய்துவிட்டு இரவில் அசாம் மாநிலத்தில் தங்குகிறார்.

    9-ந்தேதி (சனிக்கிழமை) காலை அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரம்மபுத்திரா நதி மீது புதிதாக கட்டப்பட இருக்கும் பாலத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    இது தவிர எய்ம்ஸ் மருத்துவமனை, வடகிழக்கு மாநிலங்களை தேசிய திட்டத்துக்குள் இணைக்கும் புதிய சமையல் கியாஸ் இணைப்புத் திட்டத்துக்கும் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

    அசாம் மாநில நிகழ்ச்சிகள் முடிந்ததும் பிரதமர் மோடி அருணாசல பிரதேசத்துக்கு செல்கிறார். அங்கு புதிய பசுமை திட்ட விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிறகு அங்கு நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் பேசுகிறார்.

    இதைத் தொடர்ந்து திரிபுரா மாநிலத்துக்கு சென்று அங்கு பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார். அங்கு பிரசாரம் செய்து முடிந்ததும் அன்றிரவே டெல்லி திரும்புகிறார்.

    மூன்றாவது நாள் அதாவது 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். திருப்பூரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    திருப்பூரில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் திட்டப் பணியின் நிறைவு பகுதியான வண்ணாரப்பேட்டை வரையிலான ரெயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார். 10-ந்தேதி திருப்பூர் வரும் மோடியை வரவேற்க தமிழக பா.ஜனதா தலைவர்கள் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

    10-ந்தேதி திருப்பூர் கூட்டத்தில் பேசி முடித்த பிறகு பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் செல்கிறார். அங்கு ஹப்பள்ளி நகரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதன் பிறகு ஆந்திராவில் குண்டூரில் நடக்கும் கூட்டத்தில் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

    ஆந்திரா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு அன்றிரவே டெல்லி திரும்பும் மோடி அதற்கு அடுத்த நாள் அதாவது 11-ந்தேதி (திங்கட்கிழமை) உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு மதுராவில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

    மதுராவில் “அட்சயபாத்திரம் அறக்கட்டளை” அமைப்பு சார்பில் நாடு முழுவதும் தினமும் 18 லட்சம் சிறுவர்-சிறுமியருக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மதிய உணவு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அப்போது சில குழந்தைகளுக்கும் மோடி தன் கைப்பட மதிய உணவு பரிமாறுவார் என்று தெரிய வந்துள்ளது.

    மதுரா நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு உத்தரபிரதேசத்தில் நடக்கும் வேறு சில நிகழ்ச்சிகளிலும் மோடி கலந்து கொள்ள உள்ளார். அவருடன் உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். மோடியின் வருகையால் உத்தரபிரதேச பா.ஜனதாவில் புத்துணர்ச்சி உருவாகும் என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    11-ந்தேதி உத்தரபிரதேசத்தில் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு டெல்லி திரும்பும் பிரதமர் மோடி 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அரியானா மாநிலத்துக்கு செல்ல உள்ளார். அங்கு நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

    அன்றைய தினம் அரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்திர மாவட்டத்தில் பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து கிராம பஞ்சாயத்து பெண் தலைவிகள் அதில் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பெண் பஞ்சாயத்து தலைவிகள் மத்தியில் பேசுகிறார். அந்த கூட்டம் முடிந்ததும் அவர் டெல்லி திரும்புகிறார்.

    பிப்ரவரி 3-வது வாரத்தில் இருந்து பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் மேலும் விறுவிறுப்பு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #PMModi
    பாராளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பிரியங்கா பிரசாரம் செய்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறினார். #Parliamentelection #PriyankaGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் தேர்தல் தேதி அட்டவணை மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

    இதற்கு இன்னும் 40 நாட்களே அவகாசம் உள்ளதால் தேர்தல் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கி உள்ளன.

    தேசிய அளவிலும், மாநில அளவிலும் கூட்டணியை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் பா.ஜனதாவும், காங்கிரசும் மும்முரமாக உள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து ஆதரவு திரட்டும் வியூகத்தையும் இரு கட்சிகளும் மேற்கொண்டுள்ளன.

    காங்கிரசை பொறுத்தவரை ராகுல்காந்தி மெகா கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வர இயலவில்லை. அதுபோல பிரசார பணிகளையும் கவர்ச்சிகரமாக அவரால் செய்ய முடியவில்லை.

    இதையடுத்து ராகுலின் சகோதரி பிரியங்கா தீவிர அரசியலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார்.

    பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டலத்தில் உள்ள 40 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 40 தொகுதிகளிலும் காங்கிரசை வலிமைப்படுத்தி வெற்றி தேடித்தர வேண்டும் என்று அவருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இந்த மண்டலத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் அந்த 40 தொகுதிகளும் பிரியங்காவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பிரியங்காவின் அரசியல் பணி எந்த அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு மட்டும் கவனம் செலுத்துவாரா? அல்லது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவாரா? என்ற கேள்விக்குறி நீடித்தது.

    தற்போது காங்கிரஸ் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பிரியங்கா இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்வார் என்று தெரிய வந்துள்ளது. பிரியங்கா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதுமே அவர் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நிறைய மாநிலங்களில் இருந்து அழைப்புகள் சென்ற வண்ணம் உள்ளன.

    முசாபர்பூர், ஜோத்பூர் உள்பட பல்வேறு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் பிரியங்கா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளனர். ஆனால் பிரியங்கா எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

    என்றாலும் பிரியங்கா நாடு முழுவதும் பிரசாரம் செய்வது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்களாக இருப்பவர்கள் தேசிய பிரசார குழுவில் உறுப்பினராக தானாகவே தேர்வாகி விடுவார்கள். அவர்கள் தேவைக்கு ஏற்ப நாடு முழுவதும் சென்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வார்கள்.



    பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் மூத்த தலைவர்களை அழைத்து பிரசாரம் செய்ய வைப்பது உண்டு. அந்த வகையில் பிரியங்காவை எந்தெந்த தொகுதிகளில் அழைக்கிறார்களோ அங்கெல்லாம் அவர் சென்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வார்.

    காங்கிரஸ் தலைவராக இருப்பவர்கள் அல்லது பிரதமராக இருப்பவர்கள் நாடு முழுவதும் தன்னிச்சையாக சென்று பிரசாரம் செய்வது என்பது இயலாது. எனவே ராகுலுக்கு உதவும் வகையில் பிரியங்காவின் பிரசாரம் அமையும்.

    நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பிரியங்கா பிரசாரம் செய்வார். அதோடு அவர் உத்தரபிரதேசத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 40 தொகுதிகளையும் சேர்த்து கவனித்துக் கொள்வார். பிரியங்காவின் பிரசாரத்தால் மற்ற மாநிலங்களில் ராகுல் திறம்பட பிரசாரத்தை மேற்கொள்ள வாய்ப்பு உருவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பிரியங்காவை பிரசாரத்துக்கு அழைக்க கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. இப்போதே பெரும்பாலான மாநில தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு பிரியங்காவை தங்கள் தொகுதிக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தியபடி உள்ளனர்.

    பிரியங்கா தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருக்கிறார். குடும்ப பயணமாக சென்றுள்ள அவர் நாளை மறுநாள் டெல்லி திரும்புகிறார். அதன் பிறகு அவரது அரசியல் அதிரடிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா உத்தரபிரதேச மாநிலம் செல்ல உள்ளார். அங்கு நடக்க உள்ள கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார். அதன் பிறகு பிரியங்கா எங்கெங்கு செல்வார் என்பது தெரியவரும்.

    பிரியங்காவின் அரசியல் வருகையை பிரமாண்டமாக தொடங்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்னும் 2 வாரங்களில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழுவான காரிய கமிட்டி கூட உள்ளது. நாளை தொடங்கும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கூடும்.

    காங்கிரஸ் காரிய கமிட்டியில் பிரியங்காவும் கலந்து கொள்வார். அங்கு அவரை வரவேற்று மூத்த தலைவர்கள் பேசுவார்கள். பிரியங்கா இந்த கூட்டத்தில் பேச உள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுலுக்கு அடுத்தபடி 2-வது இடத்தில் பிரியங்கா அமர வைக்கப்படுவார் என்று தெரிகிறது. அப்போது பிரியங்கா நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்யும் திட்டம் வகுக்கப்படும்.

    எனவே விரைவில் நடைபெற உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் பிரியங்காவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Parliamentelection #PriyankaGandhi

    வருகிற 27-ந்தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்க திட்டமிட்டுள்ளார். #PMModi #MaduraiAIIMS
    மதுரை:

    மதுரை அருகே தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலஆர்ஜிதம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் திட்டங்களை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் தென்னக ரெயில்வேயின் பல்வேறு திட்டப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மதுரை-சென்னை இடையிலான அதிநவீன தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.

    மோடி பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் நடத்துவதா? அல்லது மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்தலாமா? என்பது குறித்தும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகின்றன.

    பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் இடம் இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து மதுரை ரிங் ரோடு மண்டேலா நகரில் பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்கும் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக தனியாருக்கு சொந்தமான 120 ஏக்கர் பரப்பளவிலான இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த இடத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திடல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் மோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். எனவே மதுரை உள்ளிட்ட 10 பாராளுமன்ற தொகுதிகள் அடங்கிய பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க பா.ஜனதா நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.



    மேலும் மாநாட்டு மைதானத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மாநில பா.ஜனதா செயலாளரும், பிரதமரின் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளருமான சீனிவாசன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு பரிசாக தந்து விட்டு பிரதமர் மோடி மக்களை சந்திக்கிறார்.

    அரசியல் களத்தில் மதுரை மிகவும் ராசியான ஊர் என்பதால் அன்றைய தினம் நடைபெறும் பா.ஜனதா மாநாட்டில் பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் மதுரையில் இருந்தே தொடங்குகிறார்.

    மதுரை உள்ளிட்ட 10 பாராளுமன்ற தொகுதிகள் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #MaduraiAIIMS
    பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரைவிட உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பா.ஜனதா சார்பில் 4 மாநிலத்தில் அதிக இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். #PMModi #BJP #YogiAdityanath
    லக்னோ:

    5 மாநில சட்டசபை தேர்தல் நேற்று முடிவடைந்தது. சத்தீஷ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாகவும், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடந்தது. ஓட்டு எண்ணிக்கை 11-ந்தேதி நடக்கிறது.

    இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கவும் அந்த கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

    பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரைவிட உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பா.ஜனதா சார்பில் 4 மாநிலத்தில் அதிக இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.



    யோகி ஆதித்யநாத் 74 பொதுக்கூட்டங்களில் பேசி உள்ளார். ராஜஸ்தானில் அதிகபட்சமாக 26 இடங்களில் பிரசாரம் செய்தார். மத்திய பிரதேசம்- 17, தெலுங்கானா -8, சத்தீஷ்கர்-23-ல் பிரசாரம் செய்தார்.

    பிரதமர் மோடி 31 இடங்களிலும் (மத்திய பிரதேசம்-10, ராஜஸ்தான்-12, தெலுங்கானா -5 சத்தீஷ்கர்-4) அமித்ஷா 56 இடங்களிலும் (மத்திய பிரதேசம்- 23, ராஜஸ்தான் -15, தெலுங்கானா -10, சத்தீஷ்கர்-8). இடங்களில் பிரசாரம் செய்தனர்.அமித்ஷா கூடுதலாக மிசோரம் மாநிலத்தில் 2 இடங்களில் பேசினார்.

    பா.ஜனதாவில் பிரசார பணியில் யோகி ஆதித்யநாத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. அவர் தனது பிரசாரத்தில் இந்துத்வா கொள்கை மற்றும் ராமர் கோவிலுக்கு முக்கியத்துவம் அளித்தார். #PMModi #BJP #YogiAdityanath
    ×