search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புல்வாமா"

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர்.



    இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் சந்தீப் வீர மரணம் அடைந்தார். மேலும் ஒருவர் இறந்துள்ளார் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் காயமடைந்தார். #JammuKashmir #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

    இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலியானார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir #MilitantsAttack
    தெற்கு காஷ்மீரில் உள்ள ரெஷிபோரா பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். #JammuKashmir #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம், ரெஷிபோரா பகுதியில் வசித்து வந்தவர் மோஷின் வானி. இன்று தன்து வீட்டின் அருகே மோஷின் வானி நின்று கொண்டிருந்தார். அப்போது, துப்பாக்கிகளுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MilitantsAttack
    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பிற்பகல் ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Pulwama #Armymanshotdead
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் தெற்கில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லீனா கிராமத்தில் வசித்து வருபவர் மொகமது யூசுப் நாயக். இவரது மகன் ஆஷிக் உசைன். ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், இன்று மதியம் ஆஷிக் உசைனை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    தகவலறிந்து ராணுவமும், மாநில போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் ஆஷிக் உசைன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



    அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Pulwama #Armymanshotdead
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் மூன்றாவது நாளாக இன்றும் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். #Pakistanfires #RajouriLoC #IndianArmy
    ஜம்மு:

    நமது நாட்டின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு பெற்று பயங்கரவாதிகள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் மத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஜம்மு பகுதிக்குட்பட்ட ரஜோரி மாவட்டம்,  நவ்ஷேரா செக்டர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது கடந்த சனிக்கிழமை மாலை சுமார் நான்கரை மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி தந்தனர்.

    இதே பகுதியில் நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஜோரி மாவட்டம்,  நவ்ஷேரா செக்டர் பகுதியில் இன்றும் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் எல்லைகோட்டுப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.  #Pakistanfires #RajouriLoC #IndianArmy 
    தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட புல்வாமா மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

    எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க ராணுவம் பதிலடி கொடுக்கும் என அரசும் கூறியுள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத சக்திகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



    இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #PulwamaEncounter
    ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #PulwamaAttack #Rajinikanth
    சென்னை:

    காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினரின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் குவிந்து வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். போதும்... நடந்தவரை போதும்... இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. பலியான வீரர்களின் குடும்பத்தினருக்காக என் இதயம் கலங்குகிறது. உலகை விட்டுப்பிரிந்த தைரியமான அந்த இதயங்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய தலைவர் எம்.கே.பைஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  #PulwamaAttack #Rajinikanth
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக சுடத் தொடங்கினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #PulwamaEncounter
    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகரில் உள்ள குல்ஷன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினரும் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.



    இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார் என பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. #PulwamaEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறப்பு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் ராஜ்போரா பகுதியில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பணியில் இருந்த போலீசார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சமீர் அகமது மிர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார். சக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனை  கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.  
     
    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #MilitantsAttack
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் உள்ள அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #PulwamaEncounter
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படைவீரர் ஒருவர் பலியானார். #Pulwama #MilitantsSAttack #CRPFcamp
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காகபோரா பகுதியில் சிஆர்பிஎப் முகாம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்த சிஆர்பிஎப் முகாமுக்குள் இன்று மாலை நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். தங்களிடம் இருந்த கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் படைவீரர் ஒருவர் பலியானார். மேலும், இரு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #Pulwama #MilitantsSAttack #CRPFcamp
    ×