search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாமியர்"

    இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்றுவரும் நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அபுஜா:

    மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களை மீறிய வகையில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க ‘ஹிஸ்பா’ எனப்படும் போலீஸ் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

    முதல்முறை கைதானவர்கள் என்பதால் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. மீண்டும் இதுபோல் செய்து பிடிபட்டால் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவீர்கள் என ‘ஹிஸ்பா’ போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இத்தகைய நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே. பிற மதத்தினரை ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களின்படி ‘ஹிஸ்பா’ போலீசார் தண்டிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்டரிய மன்ச் சார்பில் டெல்லியில் 19-ம் தேதி இப்தார் விருந்து அளிக்கப்படவுள்ளது. #RSSMuslimwingIftar #MuslimRastriyaManchIftar #Iftar
    புதுடெல்லி:

    குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு இரு மதத்தினருக்கு இடையிலான கலவரமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இஸ்லாமியர்களின் எதிரி அல்ல என்னும் பிரசாரத்தை பரப்புரை செய்யவும், இரு மதத்தினரிடையே நல்ல புரிதலையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காகவும் முஸ்லிம் ராஷ்டரிய மன்ச் என்னும் துணை அமைப்பை அந்நாள் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சுதர்சனம் ஏற்படுத்தினார்.

    சுமார் 2 ஆயிரம் இஸ்லாமிய குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாகவும், தலாக் என்னும் விவாகரத்து செய்யப்பட்ட சுமார் ஆயிரம் இஸ்லாமிய விதவை பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தந்து வருவதாகவும், ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்குவதாகவும் இந்த முஸ்லிம் ராஷ்டரிய மன்ச் அமைப்பினர் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பற்றி ஒருபிரிவு மக்களிடையே உள்ள கருத்து வேறுப்பாட்டை களையும் வகையில் முஸ்லிம் ராஷ்ரரிய மன்ச் சார்பில் டெல்லியில் 19-ம் தேதி இப்தார் விருந்து நடத்தப்படவுள்ளதாக இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் அப்சல் தெரிவித்துள்ளார்.

    முஸ்லிம் மதகுருக்கள் மற்றும் ஆர்,எஸ்.எஸ். தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த இப்தார் விருந்தில் பங்கேற்க வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும், பிறநாடுகளின் தூதர்களுக்கும் அழைப்பு அனுப்பப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #RSSMuslimwingIftar  #MuslimRastriyaManchIftar #Iftar  
    ×