search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்"

    கேரள மாநிலத்தில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த மகனை கள்ளகாதலனுடன் சேர்ந்து சூடு வைத்த தாயை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் இடிக்கி மாவட்டம் அங்கமாலியை சேர்ந்தவர் குரியா கோஸ். இவரது மனைவி அசாமோல் (வயது 30). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்துவேறுபாட்டால் கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். மகன் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவ அதிகாரியாக உள்ளவர் ராதாகிருஷ்ணன் (33). இவருக்கும் அசாமோலுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனையடுத்து எர்ணாகுளம் காக்கநாட்டில் உள்ள டாக்டர் வீட்டில் வேலைக்காரி போல் சேர்ந்தார்.

    தாயுடன் சென்று சிறுவனை டாக்டர் ராதாகிருஷ்ணன் கொடுமைபடுத்த தொடங்கினார். சிறுவனின் மர்ம உறுப்பில் சூடு வைப்பது, கிள்ளி துன்புறுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டார். உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதால் இதனை தாய் கண்டு கொள்ளவில்லை. மர்ம உறுப்பில் சூடு வைக்கும்போது சிறுவன் அலறி சத்தம்போடுவான். அக்கம் பக்கத்தினர் கேட்டால் சிறுவனுக்கு சற்று மனநலம் சரியில்லை என்று கூறி தாயும், டாக்டரும் கூறி சமாளித்து விடுவார்கள்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் சிறுவனின் மர்ம உறுப்பில் டாக்டர் சூடு வைத்தார். வலி தாங்க முடியாமல் சிறுவன் வெளியே தப்பி ஓடி வந்து அங்குள்ள பொதுமக்களிடம் இது குறித்து கூறி கதறி அழுதான்.

    அக்கம் பக்கத்தினர் இது குறித்து திருக்காகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுவனை மீட்ட போலீசார் எர்ணாகுளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து தெரியவந்ததும் கள்ளக்காதல் ஜோடி தலைமறைவானது. திருக்காகரை உதவி கமி‌ஷனர் சம்சின் சிறுவனை துன்புறுத்திய அசாமோல் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் மைசூரில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து மைசூர் சென்று போலீசார் அசாமோல் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனை கைது செய்து கேரள அழைத்து வந்தனர். இன்று எர்ணாகுளம் கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர். #tamilnews
    திருவனந்தபுரம் அருகே தாய், மகளை கற்பழித்த சம்பவம் குறித்து மர்ம கும்பலை போலீசார் தீவிரமா தேடி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 40 வயது தாயும், 18 வயது மகளும் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு வேறு யாரும் துணை கிடையாது என்பதால் அந்த வீட்டில் தனியாக காலம் தள்ளி வந்தனர். மேலும் தாயும், மகளும் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அதிகமாக வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாலிபர் ஒருவர் அவர்களின் வீட்டிற்கு இரவு நேரத்தில் அடிக்கடி சென்று வந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து அந்த வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போது அந்த வாலிபர் தாயையும், மகளையும் பாலியல் கொடுமை செய்தது தெரிய வந்தது.

    உடனே பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து அந்த வாலிபரை பிடித்து தாக்கினார்கள். ஆனால் அவர், பொதுமக்கள்பிடியில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி ஆற்றிங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று பாதிக்கப்பட்ட தாய்-மகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் அவர்கள் பலமுறை கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தனியாக தாயும், மகளும் இருப்பதை நோட்டமிட்டு அந்த வாலிபரை போல மேலும் சிலர் அவர்களை கற்பழித்தது தெரிய வந்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #molestation
    சென்னையில் கடத்தப்பட்ட சிறுவனை புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக தாய், மகளை போலீசார் கைது செய்தனர். #BoyRescue
    சென்னை:

    புளியந்தோப்பு போகிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி துர்காதேவி. இந்த தம்பதிக்கு அஜய் (வயது 3) என்ற மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். அஜய் அருகில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் படித்து வருகிறான். அஜயை வழக்கமாக பிரகாஷ் பள்ளியில் விட்டு விட்டு பின்னர் அழைத்து வருவார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுவதற்கு சற்று முன்கூட்டியே ஆசிரியை மேனகாவிடம் 2 பெண்கள் சென்று தங்களை அஜய் உறவினர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். மேலும் தங்களுடன் சிறுவனை அனுப்பி வைக்குமாறு கேட்டனர். உடனே ஆசிரியை மேனகா, துர்காதேவிக்கு போன் செய்து விசாரித்தார். தனது கணவர் சார்பில் யாரேனும் வந்திருப்பார்கள் என நம்பி அஜயை அவர்களுடன் அனுப்பி வைக்குமாறு துர்காதேவி கூறினார்.

    பள்ளியை விட்டு அஜய் வீட்டுக்கு வராததால் அங்கு சென்று அவனுடைய பெற்றோர் விசாரித்தனர். அப்போது தான் அஜய் கடத்தப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மாலை 6 மணிக்கு புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கண்காணிப்பு கேமராவில் அஜயை 2 பெண்கள் தூக்கி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    சிறுவனை பெண்கள் கடத்தி சென்ற போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.

    இது குறித்து அஜய் பெற்றோரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், அந்த பெண்களில் ஒருவர் தங்களுக்கு தெரிந்தவர் என்றும், 2013-ம் ஆண்டு வீடு கட்டும் போது கட்டுமான பணியில் அந்த பெண் ஈடுபட்டார் என்றும் தெரிவித்தனர்.

    அதை வைத்து அந்த பெண்ணின் முகவரியை போலீசார் கண்டறிந்தனர். மேலும் பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். விசாரணையில் வீட்டின் அருகே நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஆட்டோவில் சிறுவன் அஜய் இருப்பது தெரியவந்தது. உடனே சிறுவனை போலீசார் மீட்டனர்.

    இது குறித்து போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    சிறுவனை கடத்திய பெண் வியாசர்பாடி கணேசபுரம் பகுதியை சேர்ந்த குட்டியம்மா (38) ஆவார். அவருடன் வந்தவர் ஓட்டேரியில் வசிக்கும் அவரது மகள் ஐஸ்வர்யா (20). ஓட்டேரியில் வசிக்கும் ஒரு பெண் தனது மகளுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்து எடுக்க விரும்புவதாகவும், அதற்கு பணம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் குட்டியம்மாவிடம் கூறியுள்ளார். இதனால் குழந்தையை கடத்தி அந்த பெண்ணிடம் கொடுத்தால் தனக்கு பணம் கிடைக்கும் என்றும், அதை வைத்து தனது மகளுக்கு சீர்வரிசை செய்யலாம் என்றும் குட்டியம்மா முடிவு செய்து அஜயை கடத்தி உள்ளார்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    இதையடுத்து குழந்தை கடத்தலில் ஈடுபட்ட குட்டியம்மா, ஐஸ்வர்யாவை போலீசார் கைது செய்தனர். 6 மணிக்கு சிறுவனின் பெற்றோர் புகார் கொடுத்தனர். நள்ளிரவு 1 மணிக்கு சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்தப்பட்ட சிறுவனை புகார் தெரிவித்த 7 மணி நேரத்தில் மீட்ட இன்ஸ்பெக்டர் ரவி காலில் விழுந்து துர்காதேவி நன்றி தெரிவித்தார். #BoyRescue

    பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி மாணவி தனது தாயுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #swineflu
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மனைவி நூர்ஜகான் (வயது 48). இவருக்கு கடந்த 13-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் சரியாகவில்லை.

    தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அவருக்கு அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.

    இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் நூர்ஜகானுக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் வந்தது. அதில் நூர்ஜகானுக்கு பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி நகராட்சி அதிகாரிகள், நூர்ஜகான் வீட்டிற்கு சென்று, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும்படி அறிவுரைகள் கூறினர். இதையடுத்து அவர், புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனிடையே நூர்ஜகானின் மகள் பாத்திமாவிற்கும் காய்ச்சல் ஏற்பட்டது. சோதனையில் அவருக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாத்திமா திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நூர்ஜகானுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், நூர்ஜகானை சோதனை செய்த மதுரை தனியார் மருத்துவமனையில் அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். ஆனால் நாங்கள் நூர்ஜகானுக்கு அனைத்து சோதனைகளையும் எடுத்த பிறகுதான், அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என்பதை கூறமுடியும்.

    இதேபோல நூர்ஜகானின் மகள் பாத்திமாவிற்கும் அனைத்து சோதனைகளையும் எடுத்த பிறகுதான் என்ன காய்ச்சல் உள்ளது எனக்கூற முடியும். சோதனையில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் இருவரையும் தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தாய்-மகள் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #swineflu
    பொதுவாக மாமியாருக்கும், மருமகளுக்கும் சுமூகமான உறவு இருக்காது. இருவரும் கருத்து வேறுபாடுகளுடன்தான் இருப்பார்கள். இத்தகைய கால கட்டத்தில் மருமகளுக்கு மாமியார் சிறுநீரகம் கொடுத்து உயிர் அளித்த சம்பவம் நடந்துள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரை சேர்ந்தவர் சோனிகா (32). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.

    டெல்லியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டன. எனவே, சிறுநீரக மாற்று ஆபரேசன் அல்லது டயாலிசிஸ் செய்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

    நீண்டநாள் டயாலிசிஸ் செய்ய முடியாது. சிறுநீரக மாற்று ஆபரேசன் தான் ஒரே வழி என டாக்டர்கள் கூறிவிட்டனர். எனவே சோனிகாவின் தாயாரை தொடர்புகொண்டு சிறுநீரகம் தானம் வழங்கும்படி கேட்டனர்.

    அதற்கு தாயார் மறுத்து விட்டார். பின்னர் அவரது தந்தை மற்றும் சகோதரர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களும் சிறுநீரகம் தர மறுத்துவிட்டனர்.

    ஆனால் சோனிகாவின் மாமியார் கனிதேவி (60) தனது மருமகளுக்கு சிறுநீரக தானம் வழங்கமுன்வந்தார். சோனிகாவை தனது மகளாக பார்க்கிறேன் என்றார். பல பரிசோதனைகளுக்கு பிறகு கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    தற்போது சோனிகா உடல் நலத்துடன் இருக்கிறார். தனக்கு சிறுநீரகம் கொடுத்து உயிர்காத்த மாமியாரை தாயாக பார்க்கிறேன்’’ என்றார்.
    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். டாக்டர்களை கண்டித்து உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிரோஷ்குமார். இவரது மனைவி அனுசியா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 2-ந்தேதி பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை அனுசியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.

    இதனையடுத்து மருத்துவர்கள், குழந்தை இறந்து பிறந்ததாகவும், அனுசியாவிற்கு ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதால் கர்ப்ப பையை அகற்ற வேண்டும் எனவும், அதை அகற்றினால் தான் அனுசியா உயிர் பிழைப்பார் எனவும் உறவினர்களிடம் கூறியதாக தெரிகிறது. பின்னர் அனுசியாவின் கர்ப்பபையை டாக்டர்கள் அகற்றினர். தொடர்ந்து உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்டோர் அனுசியாவிற்கு ரத்தமும் கொடுத்தனர். இந்நிலையில் அனுசியாவும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் அனுசியாவும், குழந்தையும் இறந்ததாகவும், மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், இங்கு சிகிச்சைக்கு வரும் பலர் இறக்கின்றனர் எனக்கூறி அனுசியாவின் உறவினர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட அனுசியாவின் உறவினர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    திருமணம் நடக்காததால் தாயுடன் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோபி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    கோபி அருகே உள்ள தாளக்கொம்பு புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவரது மகன் குணசேகரன் (40). விவசாயி. இவர்கள் நேற்று இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்க சென்றனர். இன்று காலை வீடு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் சத்தம் இல்லை.

    எனவே வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தனர். அப்போது லட்சுமியும், குணசேகரனும் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.

    இதையடுத்து பிணங்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி கோபி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது குணசேகரனுக்கு திருமணம் ஆகாததால் தாயும், மகனும் விரக்தியில் இருந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    மூலகுளத்தில் வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை மூலகுளம் மோதிலால் நகரை சேர்ந்தவர் ஆண்டனி ஜோசப். இவர் தனியார் பள்ளி ஒன்றில் கிளாக்காக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் ஜான்சி (வயது17). இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததையடுத்து அதே பகுதியில் பேன்சி கடை நடத்தி வரும் அவரது பாட்டிக்கு ஜான்சி உதவியாக இருந்து வந்தார். அதேவேளையில் ஜான்சி வீட்டு வேலை ஏதுவும் செய்வதில்லை என கூறப்படுகிறது.

    இதனை ஜான்சியின் தாய் பாக்யாபேட்ரிக் கண்டித்து வந்தார். அதுபோல நேற்று முன்தினம் மாலை வீட்டுவேலை எதுவும் செய்யாமல் ஜான்சி தூங்கினார். இதனை பாக்யா பேட்ரிக் கண்டித்து இதுபோல் படிக்காமல் தூங்கியதால்தான் தேர்வில் தோல்வி அடைந்ததாக ஜான்சியை திட்டினார்.

    இதனால் மனமுடைந்த ஜான்சி தற்கொலை கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை ஜான்சி பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் ஜான்சி சாப்பிட வராததால் சந்தேகம் அடைந்த பாக்யாபேட்ரிக் வந்து பார்த்த போது மின்விசிறி கொக்கியில் ஜான்சி துப்பட்டாவால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    தேனி அருகே சொத்து பிரச்சினையில் மகன் தாயை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    தேனி அருகே சின்னமனூர், ஓடைப்பட்டி நந்தகோபாலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி சின்னத்தாய் (வயது 63). கன்னிமார் கோவில் பகுதியில் உள்ள தோட்டத்தை சின்னத்தாய் மற்றும் அவரது பேரன் பெயருக்கு பட்டா எழுதப்பட்டது.

    ஆனால் அவரது மகன் விஜயன் சொத்து முழுவதையும் தனக்கு தர வேண்டும் என பிரச்சினை செய்து வந்தார். சம்பவத்தன்று விஜயன் தாய் என்று கூட பாராமல் சின்னத்தாயை தாக்கி காயம் ஏற்படுத்தினார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    டெல்லியில் 7 மாத பெண் குழந்தையை பெற்ற தாயே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியில் அதிதி கான் என்ற பெண்ணின் 7 மாத பெண் குழந்தை சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தை இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    முதற்கட்ட விசாரணையில் தனது மகள் நீர்த்தொட்டியில் விழுந்து கிடந்ததாகவும், அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவர் மற்றும் அவரது நண்பருக்கு தகவல் அளித்து பிறகு மருத்துவமனைக்கு கொண்டுவந்ததாகவும் தாய் அதிதி கான் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    ஆனால், குழந்தையின் உடற்கூறாய்வில், கழுத்து நெறிக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிதி கானிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், குழந்தையை பெற்ற தாயே கொன்ற கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    தனது குழந்தை பிறந்த பிறகு அடுக்கடுக்காக குடும்பத்துக்கு பிரச்சனைகள் வருவதாகவும், பிரச்சனைகளுக்கு குழந்தையே காரணம் என கருதியதாலும் குழந்தையை கொன்றதாக அதிதி கான் வாக்குமூலம் அளித்துள்ளார். 7 மாத பெண் குழந்தையை தாயே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
    வந்தவாசியில் மின்சாரம் தாக்கி தாய், பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சுமதி (32). இவர்களது ஒரே மகன் மணிகண்டன் (16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்கள், கறவை மாடுகளையும் பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில், கார்த்திக் வேலை நிமித்தமாக நேற்று வெளியூர் சென்றிருந்தார். வீட்டு அருகே அத்திப்பாக்கம் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த தங்களது கறவை மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக நேற்றிரவு 7 மணியளவில் தாய் சுமதி, மணிகண்டன் சென்றனர்.

    அப்போது, வயல் வரப்பில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் இருவரும் மிதித்தனர். இதில் மின்சாரம் தாக்கியதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இரவு நேரம் என்பதால் 2 பேரும் பலியான தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை.

    இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர், சுமதியும், அவருடைய மகனும் மின்சாரம் தாக்கி இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கிராம மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டு உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    தகவலறிந்ததும், வந்தவாசி வடக்கு இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே, மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள், விவசாயிகள் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    டி.எஸ்.பி. பொற்செழியன் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதன்காரணமாக, ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    தரங்கம்பாடி அருகே அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கிராமம் மேலபள்ளக்கொல்லையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிவசங்கரி (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இருவருடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சிவசங்கரி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த செம்பனார்கோவில் இன்ஸபெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவசங்கரிக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., தேன்மொழி தனி விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ×