search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹசில்வுட்"

    உலகக்கோப்பைக்கான நேரத்தை ஆஷஸ் தொடர் பயிற்சிக்காக பயன்படுத்த விரும்புகிறேன் என்று ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட். பந்தை ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவரான இவருக்கு உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜைல் ரிச்சர்ட்சன் காயத்தால் விலகியபோது, இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.

    கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் விளையாடிய ஹிசில்வுட், இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், உலகக்கோப்பை நடைபெறும் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேிதி வரையிலான நாட்களை ஆஷஸ் தொடருக்கு பயன்படுத்த இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. உலகக்கோப்பை நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். கடந்த முறை சொந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் எனக்கு உள்ளது. சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்.



    உலகக்கோப்பை நடக்கும்பொழுது நான் டிவி-யில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதுதான் சற்று வருத்தத்தை கொடுக்கிறது. தொடரில் பாதியில் யாராவது ஒருவருக்கு காயம் அடைந்தால், வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

    உலகக்கோப்பை இடம்பெறாத நிலையில், மேலும் சில நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஆஷஸ் தொடருக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்’’ என்றார்.
    ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லாமல் இளம் வீரர்கள் ஆசிரியர் இல்லாத மாணவர்கள் போன்று தவித்து வருகிறார்கள் என்று ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றுள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். அவர்களை வழி நடத்த மூத்த வீரர்களான ஸ்மித், வார்னர் இல்லாமல் போய்விட்டனர்.

    ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர்கள் ஆசிரியர் இல்லாத மாணவர்கள் போன்று தவிக்கிறார்கள் என்ற ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘முதல் முறையாக முதல் 6 முன்னணி பேட்ஸ்மேன்கள் சீனியர் வீரர்கள் இல்லாமல் களம் இறங்கும்போது, பயிற்சியாளரிடம் மட்டுமே இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.



    ஒவ்வொரு முறையும் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது சதம் அடிக்கும் நிலையில் இருப்பார். அதனால்  வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி ஏற்படாது. ஆறு புதுமுகங்கள் இருக்கும்போது இரண்டு முன்னணி வீரர்கள் அணியில் இருந்து கற்றுக்கொடுப்பது அவசியம்.

    அனைத்து விஷயங்களையும் பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியாது. சீனியர் வீரர்களுடன் ஆடுகளத்தில் இணைந்து விளையாடும்போது, அவர்களிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள முடியும்’’ என்றார்.
    முதுகுவலி காரணமாக இலங்கை தொடரில் இருந்து ஹசில்வுட் விலகியுள்ளார். ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 24-ந்தேதி பிரிஸ்பேனில் (பகல்-இரவு ஆட்டம்) தொடங்குகிறது.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் விலகியுள்ளார். முதுகுவலி காரணமாக அவதிப்பட்ட ஹசில்வுட்டுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில் காயத்தின் தன்மை அதிகமாகியிருப்பது தெரிய வந்தது.


    ரிச்சர்ட்சன்

    அவருக்குப்பதில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் விராட் கோலியை மிகவும் அருமையான வகையில் பந்து வீசி வீழ்த்தியவர் ரிச்சர்ட்சன். இதனால் டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
    சிட்னியில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்னில் ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 28 ரன்னுடனும், கம்மின்ஸ் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    மழையால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. அதன்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 25 ரன்னிலேயே ஷமி பந்தில் க்ளீன் போல்டானார். ஹேண்ட்ஸ்காம்ப் 37 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த நாதன் லயன் ரன்ஏதும் எடுக்காமல் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.



    கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலியா 300 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் அத்துடன் முடிவிற்கு வந்தது. ஸ்டார்க் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது. .இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர். குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இந்தியாவை விட ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது.
    பெர்த்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112 ரன்னிற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுக்களை இழந்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது.

    43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸதிரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

    287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. லோகேஷ் ராகுல் முதல் பந்தை சந்திக்க ஸ்டார்க் பந்து வீச்சை தொடங்கினார். ஆட்டத்தின் 4-வது பந்திலேயே லோகேஷ் ராகுல் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த புஜாரா 4 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது. ஆனால் நாதன் லயன் பந்தில் விராட் கோலி (17), முரளி விஜய் (20) அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் இந்தியா 55 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.


    ரகானே விக்கெட்டை சாய்த்த சந்தோசத்தில் ஹசில்வுட்

    5-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 43 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 98 ரன்னாக இருக்கும்போது ரகானே 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரகானே அவுட்டானதும் இந்தியாவின் இன்னிங்ஸ் ஓரளவு முடிவிற்கு வந்ததாக கருதப்படுகிறது.

    6-வது விக்கெட்டுக்கு விஹாரி உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. தற்போது வரை இந்தியா 41 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 24 ரன்னுடனும், ரிஷப் பந்த் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


    டிம் பெய்னின் மகிழ்ச்சியும், விராட் கோலியின் சோகமும்

    இந்தியாவின் வெற்றிக்கு 175 ரன்கள் தேவை. கைவசம் ஐந்து விக்கெட்டுக்கள் உள்ளன. கடைசி நாளில் 175 ரன்கள் என்பது மிகக்கடினம். மேலும், தற்போது களத்தில் இருக்கும் ஜோடி பிரிந்தால், இந்தியாவின் இன்னிங்சை உடனடியாக முடிவிற்கு வர வாய்ப்புள்ளது.
    இந்தியாவிற்கு எதிராக நாளை தொடங்கும் பெர்த் டெஸ்டிற்கான ஆஸ்திரேலியா ஆடும் லெவன் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது.

    உலகின் அதிவேக ஆடுகளத்தைக் கொண்ட பெர்த் மைதானம். இங்குள்ள ஆடுகளத்தில் பந்துகள் அதிக அளவில் பவுன்சராகவும், வேகமாகவும் செல்லும். இதனால் பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் திணறுவார்கள். தற்போது பெர்த்தில் வெளியிடத்தில் வைத்து தயார் செய்யப்பட்ட ஆடுகளத்தை பயன்படுத்த இருக்கிறார்கள். முதன்முறையாக இந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

    பொதுவாக பெர்த் ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் இருக்காது. இதனால் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். ஸ்விங் பெரிய அளவில் இருக்காது. ஆனால் தற்போது ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. நாளைய ஆட்டத்திற்கு ஆடுகளம் ஒப்படைக்கப்படும்போது புற்கள் பெரிய அளவில் வெட்டப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் ஆடுகளம் எப்படி செயலாற்ற போகிறது என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பவுன்ஸ், வேகத்துடன் ஸ்விங் இருக்கும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியா ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோருடன் வேகப்பந்து ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியானது.



    இந்நிலையில் அடிலெய்டில் விளையாடிய அதே 11 பேர்தான் பெர்த்தில் களம் இறங்குவார்கள். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெர்த் டெஸ்டில் விளையாடும் ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஆரோன் பிஞ்ச், 3. உஸ்மான் கவாஜா, 4. ஷான் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 7. டிம் பெய்ன், 8. ஹசில்வுட், 9. பேட் கம்மின்ஸ், 10. நாதன் லயன், 11. மிட்செல் ஸ்டார்க்.
    ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் 255 பந்துகளை சந்தித்து 107 ரன்கள் எடுத்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார்கள். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இந்தியா 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மார்ஷ் 60 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் இருந்த நிலையில் 167 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கேப்டன் டிம் பெய்ன் உடன் டெய்ல் எண்டர்ஸ் என அழைக்கப்படும் கடைநிலை பேட்ஸ்மேன்களான பந்து வீச்சாளர்கள் களம் இறங்கிய தொடங்கினார்கள்.

    முதலாவதாக பேட் கம்மின்ஸ் களம் இறங்கினார். இவர் மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பெய்ன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பெய்ன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 136 ரன்கள் தேவைப்பட்டது.


    கம்மின்ஸ் பந்தை பவுண்டரிக்கு விளாசிய காட்சி

    இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்டுக்கள் மட்டுமே தேவை என்பதால் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்தனர். 8-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் இணைந்த ஸ்டார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ஸ்டார்க் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் சேர்த்தார். ஸ்டார்க் ஆட்டமிழக்கும்போது 95 ரன்கள் தேவைப்பட்டது.

    அந்த நேரத்தில் 9-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். ஏற்கனவே இந்திய பந்து வீச்சாளர்களுக்கு டெய்ல் எண்டர்ஸ் கடும் சவாலாக விளங்கி வரும் நிலையில், கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தது. இக்கட்டான நிலையில் கம்மின்ஸை வெளியேற்றினார் பும்ரா. அப்போதுதான் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. இருந்தாலும் இந்தியாவின் நெருக்கடி குறையவில்லை.

    கடைசி விக்கெட்டுக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது. நாதன் லாயன் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். ஹசில்வுட் திறமையான வகையில் சமாளிக்க, நாதன் லயன் இலக்கை நோக்கி ரன்களை விரட்ட தொடங்கினார்.


    ஹசில்வுட் ஆட்டமிழந்து சோகமாக திரும்பு காட்சி

    ஒரு கட்டத்தில் இஷாந்த சர்மா பந்தில் நாதன் லயன் எல்பிடபிள்யூ ஆக, நடுவர் நோ-பால் என்றதால், இந்திய வீரர்கள் விரக்தியடைந்தனர். ஸ்கோர் 54-ல் இருந்து 44, 34 என குறைந்து கொண்டே வந்தது. இதனால் ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    இறுதியில் அஸ்வின் பந்தில் ஹசில்வுட் 43 பந்துகளை சந்தித்து 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா 291 ரன்னில் ஆல்அவுட் ஆகி, 31 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    2-வது இன்னிங்சில் அஸ்வின் (5), இஷாந்த் சர்மா (0), முகமது ஷமி (0), பும்ரா (0) ஆகியோர் 44 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஆஸ்திரேலியாவின் டெய்ல் எண்டர்ஸ் 255 பந்துகளை சந்தித்து 107 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்ததோடு, நெருக்கடியும் அளித்துவிட்டனர்.
    ஸ்மித், வார்னர் இல்லாவிடிலும், பந்து வீச்சில் அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக ரகானே தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளைமறுநாள் (6-ந்தேதி) அடிலெய்டில் தொடங்குகிறது. சிறந்த பேட்ஸ்மேன்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா பலவீனமாக காணப்படுகிறது. இந்த முறை இந்தியா தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலியாவை பலவீனமடைந்த அணி என்று கூறிவிட முடியாது என்று இந்திய அணியின் துணைக்கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘எந்த அணியும் அதன் சொந்த மண்ணில் விளையாடும்போது, அவர்கள் சிறந்த அணியாகத்தான் திகழ்வார்கள் என்று உணர்கிறேன். ஆஸ்திரேலியா இன்னும் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்.

    நாங்கள் எப்போதுமே எதிரணியை எளிதாக எடுத்துக் கொண்டு விளையாடுவதில்லை. அவர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோரை இழந்திருக்கிறார்கள். என்றாலும், ஆஸ்திரேலியா அணி பலவீனமானது என்று நான் கருதவில்லை.



    அவர்களுடைய பந்து வீச்சு யூனிட்டை பார்த்தீர்கள் என்றால், மிகவும் அசுர பலம் கொண்டது. இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும் என்றால், பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே, ஆஸ்திரேலியா இன்னும் தொடரை கைப்பற்றுவதற்கு வாய்ப்புள்ள அணியாகவே கருதுகிறேன்.

    ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டால், சிறந்ததாக உணர்வீர்கள். இது அணிகளாக ஒன்று சேர்ந்து விளையாடும் போட்டி. ஒவ்வொருவரும் அணிக்காக பேட்டிங்கில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். முக்கியமான விஷயம், நீண்ட பார்ட்னர்ஷிப். இது ஆஸ்திரேலியா மண்ணில் மிகப்பெரிய உதவியாக இருக்கும்’’ என்றார்.
    ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகிய மும்மூர்த்திகளால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம் என்று ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது தொடரை 0-2 என இழந்தாலும் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சதங்களுடன் 692 ரன்கள் குவித்தார். சராசரி 86.50 ஆகும்.

    அதிலிருந்து தற்போது வரை விராட் கோலி நம்பமுடியாத வகையில் விளையாடி வருகிறார். ஏராளமான சாதனைகளை உடைத்தெறிந்துள்ளார். தற்போதும் விராட் கோலி சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் விராட் கோலியை எங்களுடைய மும்மூர்த்திகள் கட்டுப்படுத்துவார்கள் என்று ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் ஆன டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறுகையில் ‘‘எங்களுடைய பந்து வீச்சாளர்கள் விராட் கோலியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரை சந்தித்த வரையில், அவர்கள் எவ்வளவு கடின பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். விராட் கோலிக்கு போதுமான அளவு நெருக்கடி கொடுக்க இவர்களால முடியும். எல்லோருமே இந்த உலகத்தில் மனிதர்கள்தானே.

    விராட் கோலி சிறந்த வீரர் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை முதன்முதலாக பெங்களூருவில் பார்த்தேன். மிகவும் சிறப்பான வீரர். ஆனால், அவர் வீழ்த்தும் அளவிற்கான பந்து வீச்சாளர்களை நாங்கள் பெற்றுள்ளோம். மூன்று பேரும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சு குழு. மிகவும் சிறப்பான போட்டியாக இருக்கப்போகிறது. நாங்கள் இந்தியாவை வீழ்த்தி போட்டியில் முன்னணி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    முதல்தர போட்டியில் நான்கு முக்கிய பந்து வீச்சாளர்களுடன் நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ் அணி களம் இறங்குகிறது. #SheffieldShield #Starc
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களாக திகழ்பவர்கள் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயன். இவர்கள் சர்ச்சைக்குரிய கேப்டவுன் டெஸ்டிற்குப் பிறகு இணைந்து விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரை ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் நியூ சவுத் வேல்ஸ் ப்ளூ அணிக்காக விளையாடுகிறார்கள்.



    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரெயொரு போட்டி கொண்ட டி20-யிலும், இந்தியாவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இவர்கள் நான்கு பேரும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 16-ந்தேதி தொடங்கும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில் முதல்தர போட்டியில் விளையாடுகிறார்கள்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஹசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் துணைக் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். #PAKvAUS
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டனாக டேவிட் வார்னரும் இருந்தனர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டின்போது இருவரும் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார்கள்.

    இந்த புகாரை விசாரித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் தலா ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் கேப்டனாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டார். ஆனால் துணைக் கேப்டன் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை.


    டிம் பெய்ன்

    ஆஸ்திரேலியா அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டன் பதவிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் மற்றும் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஃபிட் ஆக இருந்தால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் யாரும் தொட முடியாத அளவிற்கு அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை பிடித்தது.

    உள்ளூர் தொடர் முடிந்து தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்தது. அப்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மூன்று நாடுகளுக்கு எதிராக தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் தென்ஆப்பிரிக்காவில் 1-2 எனவும், இங்கிலாந்தில் 1-4 எனவும் தொடரை இழந்தது. இன்னும் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமே பாக்கி உள்ளது. இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க இந்தியா விரும்புகிறது. இரண்டு தொடர்களை இழந்தாலும் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திலேயே நீடிக்கிறது.

    ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களில் குறைபாடுகளை நீக்காவிடில் அது சாத்தியமற்றது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க விரும்புகிறது. ஆனால், இந்தியா பேட்டிங் குறைபாடுகளை முதலில் கழைய வேண்டும்.



    தலைசிறந்த வீரர்களான ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் கேள்விக்குறியே. ஆனால், பந்து வீச்சில் இன்னும் அதிக வலுவாகவே உள்ளது.

    மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் நன்றாக உடற்தகுதியுடன் இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலான நேரமாக இருக்கும். இங்கிலாந்தில் காற்றில் பந்து மூவ் மற்றும் சீம் அவர்களுக்கு வழக்கமான பிரச்சனையை உண்டு பண்ணியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா பவுன்ட்ஸ் முக்கிய பிரச்சினையாக இருக்கும்’’ என்றார்.
    ×