search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினகரன்"

    டி.டி.வி. தினகரன் தற்போது அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அவர் ஏற்கனவே அம்மாவால் வெளியேற்றப்பட்டவர் என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ministerudayakumar #dinakaran

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சிலைமான் பகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்கனவே அம்மா பேரவை சார்பில் அரசின் சாதனைகளை விளக்கி இளைஞர்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியை நடத்தி வருகிறோம். இது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியிலும் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடந்தது. இதில் பெண்களும் அரசின் சாதனைகளை விளக்கி கூறுவதற்காக சைக்கிள் பேரணியில் பங்கேற்கிறோம் என்று ஆர்வம் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் வருகிற 24-ந் தேதி 2,500 பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி உள்ளிட்ட 15 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சைக்கிள் பேரணியில் பங்கேற்கும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ரிங்ரோடு வேலம்மாள் திருமண மண்டபத்தில் நாளை (13-ந் தேதி) பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

    இதில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, வளர்மதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்.

    அரசின் சாதனைகளை எடுத்துக்கூறும் இந்த சைக்கிள் பேரணி ஜெயலலிதா பேரவை சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.

    ஒரு தனி நபரால் இதை செய்ய முடியாது. அனைவரின் கூட்டு முயற்சியோடு இதை நடத்தி வருகிறோம்.

    இந்த சைக்கிள் பேரணிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், தேவையற்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து ஒருங்கிணைப்பாளர்- துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தைைமையின் கீழ் செயல் பட்டு வருகிறோம்.

    டி.டி.வி. தினகரன் தற்போது அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அவர் ஏற்கனவே அம்மாவால் வெளியேற்றப்பட்டவர்.

    1.10 கோடி உறுப்பினர்கள் கொண்ட அ.தி.மு.க. வில் தங்களது உறுப்பி னர் அட்டைகளை புதுப்பித்தவர்கள் தான் உறுப்பினர் என்ற தகுதியை பெறுவார்கள். தினகரன் போன்றவர்கள் உறுப்பினர் படிவத்தை புதுப்பிக்கும் தகுதி இல்லாதவர்கள்.

    அவர் அ.தி.மு.க.வில் உறுப்பினராவது என்பது முடிந்து போன ஒன்று. ஆனால் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தவும், தொண்டர்களிடம் சலசலப்பை உருவாக்கவும் தினகரன் போன்றவர்கள் அவ்வப்போது அவதூறு செய்து வருகிறார்கள். அது எடுபடாது.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்பது ஒரு அங்கீகாரம் இல்லாத இயக்கம். தினகரன் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, தனக்கு பதவியை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம் தான் அ.ம.மு.க. இதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் வழங்கவில்லை.

    தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாகத்தான் இன்னும் இருக்கிறார். கருத்து தெரிவிக்கும் அமைச்சர்கள் மீது அவர் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். அதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வழிகாட்டுதலில் அ.தி.மு.க. தெளிவான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

    கற்பை இழந்த பெண் கண்ணகியை அடையாளம் காட்ட முடியாதது போல தினகரன் அ.தி.மு.க.வில் சேரும் தகுதியை இழந்து விட்டார்.


    தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் நாங்கள் தான் தோளில் தூக்கிச் சுமந்தோம். அந்த குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக, நிலையாக பயணித்து வருகிறோம்.

    அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு யுக்திகளை செய்து வருகிறார்கள். தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தினகரன் செய்து வரும் சூழ்ச்சிகள் தமிழகத்தின் சாபக்கேடு.

    தி.மு.க.வில் ஒதுக்கி வைத்துள்ள அழகிரியுடன், தினகரன் கள்ள கூட்டணி வைத்துள்ளார்.

    திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் அ.தி.மு.க. வின் தோல்வி பயத்தால் தள்ளி வைக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை அ.தி.மு.க.வினர் தினமும் சந்தித்து வருகிறார்கள். நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

    எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பேட்டியின் போது சரவணன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன், மாரிச்சாமி உள்ளிட்ட பலர் இருந்தனர். #ministerudayakumar #dinakaran

    துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் குறித்து தினகரன் கூறும் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். #ADMK #TTVDhinakaran #OPanneerselvam
    ஈரோடு:

    ஈரோடு அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது ஓ. பன்னீர் செல்வம் தன்னை சந்தித்தாக டி.டி.வி. தினகரன் கூறியிருப்பது தொடர்பாக அமைச்சர் கருப்பணனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது:-

    தினகரன் கூறி வரும் கருத்து பற்றி கவலை இல்லை. அதற்கு கருத்து கூறவும் விரும்பவில்லை. ஒவ் வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறிவருகின்றனர்.

    கமல்ஹாசன் ஒரு கருத்து கூறுகிறார். தினகரன் ஒரு கருத்து கூறுகிறார். ஆனால் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். அவரகளது ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று கேட்டதற்கு, ‘‘இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’’ என்றார்.

    மழை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வருவாய்துறை ஊழியர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் விழிப்புடன் செயல்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    எனவே பொதுமக்கள் மழை குறித்து அச்சப்படத் தேவையில்லை.ஆற்றில் சாயக்கழிவு நீரை கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 76 சாயப்பட்டறை ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

    மேலும் இதுகுறித்து புகார் வந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி .ராமலிங்கம் , கே.எஸ்.தென்னரசு உள்பட பலர் அருகில் இருந்தனர். #ADMK #TTVDhinakaran #OPanneerselvam
    தினகரனை ரகசியமாக சந்தித்ததால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வினர் இனிமேல் மதிக்க மாட்டார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #OPanneerselvam #TTVDhinakaran #ADMK #ThangaTamilSelvan

    சென்னை:

    டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டி.டி. வி.தினகரனை பார்த்ததில் தவறு கிடையாது. ஆனால் யாரிடமும் சொல்லாமல் வந்து பார்த்ததுதான் தவறு என்கிறோம்.

    ஏனென்றால் டி.டி.வி. தினகரன் எங்களோடு கலந்து பேசிய பிறகுதான் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க சென்றார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தன்னோடு இருந்த கே.பி. முனுசாமி, மைத்ரேயன், பி.எச். பாண்டியன் ஆகியோரிடம் கூட சொல்லாமல் ரகசியமாக வந்து சந்தித்து விட்டு சென்றுள்ளார்.

    அதுமட்டுமல்ல இந்த விசயத்தை இதுவரையிலும் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இது தெரியாமல் கே.பி.முனுசாமி நேற்று மதியம் வரை தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்க மாட்டார். அது கட்டுக்கதை என்று அப்பாவித்தனமாக கூறி வந்தார். அவரது முகத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் கரியை பூசி விட்டார்.


    ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை மத்திய அரசுக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    அவரை நம்பிய மத்திய மந்திரிகளுக்கும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். இனிமேல் யாரும் ஓ.பன்னீர்செல்வத்தை மதிக்கமாட்டார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தோடு தர்மயுத்தம் நடத்துவதாக வெளியில் பேசிக் கொண்டு உள்ளுக்குள் ரகசியமாக வந்து சந்தித்து பேசுவதால் அவரது இரட்டை வேடத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே டி.டி.வி.தினகரன் இந்த விசயத்தை வெளிப்படுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #TTVDhinakaran #ADMK #ThangaTamilSelvan

    டி.டி.வி.தினகரனிடம் இருந்து இழுக்க 4 எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #TTVDhinakaran #ThangaTamilselvan

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருதாச்சலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 4 பேருக்கு சபாநாயகர் நோட்டுஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதற்கான காரணம் பற்றி தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    டி.டி.வி.தினகரனுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவது ஆளும் கட்சியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார்.

    அதன்பிறகும் கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் இருப்பது இவர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. 4 பேரும் தினகரனை விட்டு பிரியமாட்டார்கள் என்பதால் இவர்களை பயமுறுத்தி எடப்பாடி பழனிசாமி பக்கம் இழுப்பதற்காகவே நோட்டீஸ் அனுப்ப போவதாக மிரட்டுகிறார்.


    தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் இரு பக்கமும் ‘பேலன்ஸ்’ செய்வதால் அவர்களை கொறடா கண்டு கொள்ளவில்லை.

    இந்த 4 எம்.எல்.ஏ.க்களும் அப்படி என்ன தவறு செய்து விட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த விசயத்தில் சர்வாதிகாரமாக எடுக்கும் முடிவுகள் சபாநாயகருக்கு கெட்ட பெயரைதான் ஏற்படுத்தும்.

    ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்னும் தீர்ப்பு வராததால் விடை தெரியாமல் தவிக்கிறோம். இப்போது இந்த வரிசையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்களா? என்று நினைக்கிறபோது சினிமாவில் வரும் வசனம் போல் மறுபடியும் முதுலில் இருந்தா? என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TTVDhinakaran #ThangaTamilselvan

    தற்போது நடைபெறும் ஆட்சியை கட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி. தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளனர் என்று அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டித்து பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.

    கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    காலம் முழுவதும் கருணாநிதியை எதிரியாக கொண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது தான் அ.தி.மு.க. ஆகும். அதன் வழியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தற்போது சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனர்.

    ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்துகொண்டு இருந்தபோது, அவர் எப்படியும் சிறைக்கு சென்றுவிடுவார், நாம் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேசியுள்ளனர். இதற்கான ஆதாரம் ஜெயலலிதாவின் கையில் கிடைத்ததை அடுத்து, அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களை கட்சியை விட்டே ஒதுக்கி வைத்தார்.

    கருணாநிதி ஆட்சியில், 1996-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் லண்டனில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சொத்து வாங்கினார். அதுகுறித்து வழக்கில் ஜெயலலிதாவும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து டி.டி.வி.தினகரன் கருணாநிதியை சந்தித்து, இந்த வழக்கில் இருந்து என்னை மட்டும் விடுவித்துவிட்டு, வழக்கை வேகமாக முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

    இதையடுத்து கருணாநிதிதான் அந்த வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரனை விடுவித்து, ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். இதனால் கருணாநிதியை விட டி.டி.வி.தினகரன் தான் ஜெயலலிதாவுக்கு துரோகி ஆனார்.

    தற்போது அவர் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து, இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார். அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.வுடன், டி.டி.வி.தினகரன் உடன்படிக்கை போட்டு உள்ளார். இதனால் அவர் பக்கம் சென்றவர்கள் இந்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

    ஜெயலலிதாவுக்கு இந்த நிலை ஏற்பட காரணம் முழுவதும் டி.டி.வி.தினகரன் தான். அவர் எங்களை பார்த்து ஊழல்வாதி என்கிறார். ஊழலின் தலைவரே டி.டி.வி.தினகரன் தான்.



    கட்சியில் 98 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். டி.டி.வி.தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு, தேர்தலை சந்தித்து இருந்தால் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்று வைத்து கொள்ளலாம். தற்போது நடைபெறும் ஆட்சியை கட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி. தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterThangamani
    அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் கனவு பலிக்காது என்று பெரம்பூரில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார். #GokulaIndira #ADMK
    அம்பத்தூர்:

    வடசென்னை தெற்கு மாவட்டம் திருவிக நகர் தொகுதி 70-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஜெயஸ்ரீமகேஷ் தலைமையில் மாவட்ட பொருளாளர் பெரம்பூர் ஆர்.மகேஷ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, பகுதி செயலாளர் இரா.வீரமணி முன்னிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பெரம்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தார்மீக உரிமை அ.தி.மு.க.விற்கு மட்டுமே உண்டு.

    முதல்-அமைச்சர் பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் ஸ்டாலின் முதல்வர் மடியில் கனம் இல்லாததால் தான் ஊழல் தடுப்பு பிரிவை ஸ்டாலின் புகார் குறித்து முழுமையாக விசாரிக்க சொல்கிறார். அண்ணா சொன்னது போல் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் அ.தி.மு.க.வினர் எவ்வளவு பொய் வழக்கு போட்டாலும் சட்டபடி சந்திப்போம்.

    அம்மா அவர்கள் உயிரை கொடுத்து ஏற்படுத்தி விட்டுசென்ற ஆட்சியை கழகத்தை அழிக்க தினகரன் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். அம்மாவின் கழகத்தை அழிக்க நினைக்கும் டி.டி.வி.தினகரன் கனவு ஒரு காலமும் பலிக்காது. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். என்ற இரு துருவங்களை கொண்டு வெற்றி மேல் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் டி.ஜி.வெங்கடஷ்பாபு எம்.பி., தலைமை கழக பேச்சாளர்கள் கோவிந்தசாமி, பி.எம்.மூர்த்தி எம்.குமார், நிர்வாகிகள் ரவிந்திரஜெயின், புண்ணியகோட்டி, எஸ்.எஸ்.கோபால், புரசை சீனிவாசன், மைதிலி, வி.எம்.ஜி.முகுந்தன், இளைய கிருஷ்னன், எம்.பி.பரமகுரு, பி.ஜீவா, பே.சு.நவமனியன், வி.சி.ஜெகன், சுப்புரு, பி.எம்.ரமேஷ்குமார், சு.அறிவழகன், அப்துல்வ ஹாப், நிரஞ்சன், ஆர்.ஹரேஷ்.

    புருசோத்தமன், ஆர்.யுவராஜ், ஆவின் சேகர், அருணா, பாக்கியலட்சுமி, லட்சுமிபாய், அந்தோணியம்மாள், பக்தா, எடைகுமார், பாகுலேயன், அமுல், நூர்ஜஹான், ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை பகுதி இணை செயலாளர் எம்.ரபி நன்றி கூறினார்.

    கூட்டத்தில் தினகரன் அணியில் இருந்து விலகி 70 வது வட்ட நிர்வாகி நீலகண்டன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். #GokulaIndira #ADMK

    முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தினகரன் துணை போகிறார் என்று அமைச்சர் காமராஜ் பேசினார். #ministerkamaraj #mkstalin #dinakaran

    திருவாரூர்:

    திருவாரூரில் அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110 -வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க நகர செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.

    ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட் ட பொருளாளர் பன்னீர் செல்வம், அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலாஜி, ரெயில் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ், நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    அ.தி.மு.க அரசு மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது, பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்று முழக்கமிட்டார். அதனை நனவாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். சத்துணவு தந்து குழந்தைகளின் பசியை போக்கினார். அடுத்து முதல்வராக வந்த ஜெயலலிதா விலையில்லா அரிசியை வழங்கி மக்களின் பசியை போக்கினார்.

    இப்படி எண்ணற்ற திட்டங்களை தந்த அ.தி.மு.க மட்டுமே அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் முழு தகுதியை பெற்றுள்ளது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வர் பதவிக்கு வந்து விடலாம் என தி.மு.க . தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டார். இதற்காக பல தவறான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவருடைய முயற்சிக்கு டி.டி.வி. தினகரன் துணையிருந்து வருகிறார்.


    தி.மு.க. நினைப்பதை நடத்தி காட்டுவதற்கு தினகரன் தொடர்ந்து துணை போகிறார். தி.மு.க .எத்தனை துரோகிகளை அழைத்துக் கொண்டு வந்தாலும் அ.தி.மு.க.வை ஒருகாலும் வெல்ல முடியாது. தமிழகத்தில் இன்னும் மூன்றாண்டுகளை அ.தி.மு.க. ஆட்சி நிறைவு செய்யும். இதனை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும். திருவாரூர் தொகுதியை எதிர்வரும் மூன்றாண்டுகளில் சிறப்பான வளர்ச்சிக்கு கொண்டு செல்ல அதிமுகவால் மட்டுமே முடியும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

    கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் கலியபெருமான், விஜய ராகவன், பாப்பாத்தி மணி, சூரியசாமி, கூரியர் மதிவாணன், சின்னராஜ், எம்.ஜி.ஆர். கருப்பையன், குருசாமி, துரை, நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். #ministerkamaraj #mkstalin #dinakaran

    பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனுடன், தே.மு.தி.க. கூட்டணி வைக்குமா? என கேட்டதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பதில் அளித்தார். #DMDK #Sudhish
    திருச்சி:

    திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தே.மு.தி.க. சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் பங்கேற்றார்.

    இந்த நிகழ்ச்சியின் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சுதீஷ், மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி கணேஷ், நிர்வாகிகள் அலங்கராஜ், மில்டன் குமார் உள்பட 7 பேர் மீது திருச்சி காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு, திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-5 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சுதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 7 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.

    சாட்சிகள் விசாரணை முடிந்ததும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் நாகப்பன் உத்தரவிட்டார்.

    கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சுதீஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். விரைவில் தே.மு.தி.க.வின் மாநில மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இந்த மாநாட்டில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுவார்’ என்றார்.

    இதனை தொடர்ந்து நிருபர்கள் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. டி.டி.வி. தினகரன் கட்சியான அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு அதற்கு, “இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் முடிவு செய்து அறிவிப்பார்” என பதில் அளித்தார்.  #DMDK #Sudhish

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்று தினகரன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Parliamentelection #Sasikala #Dinakaran

    பெங்களூர்:

    பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலவை சந்தித்த பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சசிகலாவை நேரில் சந்தித்து பேசினேன். அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரிஇல்லை என்று வெளியான தகவல் வெறும் வதந்திதான்.

    தமிழகத்தில் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் விதமாக சோபியாவின் கைது சம்பவம் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பொதுவாழ்க்கையில் ஈடுபடும் தலைவர்களுக்கு சகிப்புதன்மை கட்டாயமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின் கருத்து ஏற்கதகுந்த வகையில் இல்லை. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் அணுகுமுறை மிகவும் தவறானது. மத்தியிலும் எங்கள் ஆட்சி, மாநிலத்திலும் எங்கள் கிளை ஆட்சி என்ற ஆணவ போக்கு இதில் தெரிகிறது.

     


    பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. கூட்டணி ஆட்சிதான் அமையும். தமிழக எம்.பி.க்கள் ஆதரவை பெற்றுதான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்துதான் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும்.

    தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட்கூட வாங்காது. விரைவில் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வந்து விடும். ஆயிரம் தினகரன் வந்தாலும் சமாளிப்போம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். முதலில் என்னை ஆட்சியாளர்களால் சமாளிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #Sasikala #Dinakaran

    ஜெயலலிதாவின் இறப்பிற்கும், அவருக்கு தண்டனை கிடைப்பதற்கும் டி.டி.வி.தினகரன் தான் காரணம் என்று வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். #TNMinister #Thangamani #TTVDhinakaran
    வேலூர்:

    வேலூரில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடிபழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரு சாமானியர்களாக இருந்து ஆட்சி புரிந்து வருகின்றனர்.

    அத்தகைய சாமானியர்களின் ஆட்சியைக் கலைத்திட திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு தினகரன் செயல்பட்டு வருகிறார்.

    அவர் தற்போது தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை கொண்டு மீண்டும் திமுகவுடன் கைகோர்த்து அதிமுக ஆட்சியைக் கலைக்க முயற்சித்து வருகிறார்.

    மேலும், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வந்தால் ஆட்சியில் உள்ளவர்கள் சிறை செல்வர் என்றும் தினகரன் கூறி வருகிறார். அவரது 1991ஆம் ஆண்டுக்கு முந்தைய சொத்துக் கணக்கும், தற்போதைய சொத்துக் கணக்கும் வெளியானாலே யார் சிறைக்கு செல்வர் என்பது தெளிவாகிவிடும்.

    எப்போதும் சிரித்து கொண்டே இருப்பவர் தான் லூசு மோகன். அவரது இடத்தை தற்போது டி.டி.வி.தினகரன் நிரப்பி உள்ளார். எனவே அவரை இனி லூசு மோகன் என்ற டி.டி.வி. தினகரன் என்று அழைக்கலாம்.

    திருப்பரங்குன்றம், திருவாரூரில் டி.டி.வி.தினகரனின் பலம் எடுபடாது.

    25 சதவீதம் மது அவரது தொழிற்சாலையில் இருந்து தான் வருகிறது. அவருடன் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி வைத்துள்ளார். எங்கள் மீது பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்.

    தொண்டர்களுக்கு எல்லாம் தெரியும். பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு இருந்த போது கருணாநிதியுடன் டி.டி.வி. தினகரன் கூட்டு வைத்துக்கொண்டு ஆட்சியையும், கட்சியையும் கலைக்க நினைத்தார்.

    அதன் காரணமாகவே லண்டன் ஓட்டல் வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் இறப்பிற்கும், அவருக்கு தண்டனை கிடைப்பதற்கும் காரணம் டி.டி.வி.தினகரன் தான்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Thangamani #TTVDhinakaran
    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 234 தொகுதிகளிலும் மக்கள் எதிர்பார்க்கிற நல்ல தீர்ப்பு வரும். மக்கள் விரும்பாத துரோக ஆட்சிக்கு முடிவு வரும் என்று ஆர்ப்பாட்டத்தில் தினகரன் பேசினார். #dinakaran #18mlas #edappadipalanisamy

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் காவிரி வெள்ளம் சென்றாலும் கடைமடை பாசன பகுதி பாலைவனமாக உள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் எம்.ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.கு.சீனிவாசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா.ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை. நதிகள் உள்ள பகுதிகளில் தான் நாகரீகம் தோன்றியது.உலக வரலாற்றில் இடம் பெற்ற கரிகாலன் கட்டிய கல்லணையும், ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலும் இன்றும் புகழ்பெற்று நிற்கிறது. கர்நாடகத்தில் மழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில் கர்நாடகம் காவிரிநீரை தந்தது. மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியது. ஆனால் அந்த நீர் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.

    ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டும் என்பதற்காக தமிழகத்தையே சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். குடி மராமத்து பணி, தூர் வாரும் பணி என்றெல்லாம் நிதி ஒதுக்கி கொள்ளையடித்து வருகிறார்கள். பல ஆண்டு போராட்டத்திற்குப் பின் உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பா.ஜனதா இழுத்தடித்தது.

    18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டாயம் வரும். 234 தொகுதிகளிலும் மக்கள் எதிர்பார்க்கிற நல்ல தீர்ப்பு வரும். மக்கள் விரும்பாத துரோக ஆட்சிக்கு முடிவு வரும்.

    கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பூமிக்கடியில் நிலக்கரி கிடைப்பதால் நிலக்கரி எடுக்க நிலங்களை தேர்வு செய்துள்ளார்கள். பூமிக்கடியில் வைரமே கிடைத்தாலும் தேவையில்லை.டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களை காப்பாற்றுவோம். டெல்டா மாவட்டங்களில் விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலுமே நடக்க வேண்டும். எட்டு வழிச்சாலை தொலை நோக்குத் திட்டம் என ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஆற்றுநீரை தேக்கி வைக்க முடியவில்லை.

    ஊழலை திசை திருப்ப ஆட்சியாளர்கள் ஊர், ஊராக சுற்றி வருகிறார்கள். மன்னார்குடியில் கூட்டம் போட்டு ஓ.பன்னீர்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்.

    ஆடிட்டர் குருமூர்த்தியின் தயவால் பா.ஜனதாவின் உத்தரவுப்படி தமிழகத்தில் ஆட்சி செய்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வத்திற்கு என்னைக் கண்டால் பயம் ஏற்படுகிறது.


    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிப்பது போல் தமிழக அமைச்சர்களின் நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, நடிகை சி.ஆர்.சரஸ்வதி, அறந்தாங்கி ரத்தினசபாபதி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் குடவாசல் ராஜேந்திரன், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சங்கர் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் எஸ்.சங்கர் நன்றி கூறினார். #dinakaran #18mlas #edappadipalanisamy

    கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் வகையில் தினகரன் ஆங்காங்கே பொதுக்கூட்டத்தை போடும் வேளையில் ஈடுபட்டு இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #TTVDinakaran #MinisterJayakumar
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் அமைந்துள்ள குந்தாளம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மாநில அரசின் வருவாய் பட்டியலில் இருக்க வேண்டும். அதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரக்கூடாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதனை எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

    மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு தான் ஜி.எஸ்.டி. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

    தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.டி.யாக ரூ.30 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அந்த ரூ.30 ஆயிரம் கோடியை இங்கு செலவு செய்யலாம்? அந்த பணத்தை சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை ஏழை- எளிய மக்களுக்கு நெசவாளர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு உதவி செய்யலாம்.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் நாம் ரூ.75 ஆயிரம் கோடி செலவு செய்கிறோம். ஜி.எஸ்.டி.யாக மத்திய அரசு பெற்றுக் கொண்டால் தமிழக அரசுக்கு எப்படி வருவாய் வரும்.

    மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வரவேண்டி இருக்கிறது. அதனை நண்பர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முதலில் வாங்கித் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அதை வாங்கி தந்தால் அவர் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய நன்மையாக இருக்கும்.

    தினகரன் போன்ற காளான்கள் முளைக்கும். கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் வகையில் ஆங்காங்கே ஒரு கூட்டத்தை போடும் வேளையில் ஈடுபட்டு இருக்கிறார். தினகரன் ஒரு பகல் கனவில் இருக்கிறார்.



    ஒரு பழமொழி சொல்வார்கள். “சொப்பனத்தில் காண்கின்ற அரிசி சோத்திற்கு உதவாது”. கடலை தாண்ட ஆசை இருக்கலாம். ஆனால் கால் இருக்கணும். முதலில் வாய்க்கால் தாண்ட பார்க்கணும். வாய்க்கால் தாண்டவே வக்கு இல்லாதவர்கள் சீட் பிடிப்பார்கள் என்பது உலக அதிசயம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran #MinisterJayakumar
    ×