search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினகரன்"

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரன் பார்முலா எடுபடாது என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார். #dinakaran

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீதிபதி எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் நிலையூர் முருகன், அம்பலம், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பான திட்டங்களை தந்து வருகிறது. ஆனால் இந்த அரசு செயல்படாத அரசு என எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரத்தை கூறி வருகின்றன. இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    தமிழகத்தில் இனி அ.தி. மு.க. ஆட்சிக்குவராது என சிலர் கற்பனை உலகில் மிதக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்- அமைச்சராகிவிட வேண்டும் என துடிக்கிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது.

    மதுரை எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டை. திருப்பரங்குன்றத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு இடைத்தேர்தல் மீண்டும் வந்து இருக்கிறது. அங்கு கழகத்தின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். மற்ற அனைத் வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நாங்கள் அமைத்துக் கொடுத்த முன்னுரை காரணமாக அங்கே ஒருவர் வெற்றி பெற்றுவிட்டார்.


    அதேபோல் திருப்பரங்குன்றத்திலும் வெற்றி பெற்றுவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் செல்லப்பிள்ளைகள் நிறைந்த திருப்பங்குன்றம் தொகுதி என்றும் இரட்டை இலை பக்கம்தான் இருக்கும்.

    ஆர்.கே.நகரில் வகுக்கப்பட்ட பார்முலா நிச்சயம் திருப்பரங்குன்றத்தில் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran

    சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தீபா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். #JDeepa #Sasikala #TTVDhinakaran
    சென்னை:

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று திடீரென்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    எனது அத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    இதையடுத்து கடந்த பல ஆண்டுகளாக என் அத்தையோடு இருந்து அவரது சொத்துக்களை சுரண்டி வாழ்ந்த சசிகலாவையும், அவரது உறவினர்களையும் எதிர்த்து குரல் கொடுத்தேன்.

    அவர்கள் மீது போலீசில் புகார் செய்தேன். இதனால் சசிகலா தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியது.

    அவரது தூண்டுதலின் பேரில் சிலர் நள்ளிரவு நேரங்களில் என் வீட்டின் வளாகத்தில் நுழைந்து இடையூறுகள் செய்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்ததும் மேல் மாடியில் இருக்கும் என் தம்பி தீபக்கை பார்க்க வந்ததாக கூறினார்கள். தொடர்ந்து பல வழிகளில் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.


    எனக்கோ, என் கணவர் மாதவனின் உயிருக்கோ, உடமைக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு.

    எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கும், என் கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    எனக்கு பலமுறை சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆட்களால் மிரட்டல் வந்துள்ளது. அரசியலில் எனது பெயரை கெடுக்கவும், எனது அரசியல் பணிகளை தடுக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.

    நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன். எனவே தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #JDeepa #Sasikala #TTVDhinakaran
    குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி என டிடிவி தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran #EdappadiPalaniswami

    கரூர்:

    கரூரில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    அ.தி.மு.க.வின் பரிணாம வளர்ச்சிதான் அ.ம.மு.க., அம்மாவின் உண்மையான கட்சி என்பதை தொண்டர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இப்போது ஒரு கோடிக்கும் மேலாக உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் 2 கோடியை எட்டி விடுவோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணி சேரும் உணர்வில் நிறைய கட்சிகள் இருக்கின்றன. சிலர் தொடர்பிலேயே இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

    வால்டர் தேவாரம், ஐ.ஜி.அருள் ஆகியோர் மாதிரி ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நேர்மையானவர், நடுநிலையானவர். யாரையோ காப்பாற்ற எதையோ மறைக்க, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு உதவியாக சி.பி.ஐ. செயல் படுவதற்கு உத்தரவிட்டிருக்கலாம்.

    காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா ஆகியோர் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாண்பை மறந்து பேசி கொண்டிருக்கிறார். நாலாந்திர அரசியல்வாதி போன்று இருக்கும் அவரது செயல்பாட்டினால் தமிழக மக்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. எதிர் கட்சி தலைவர்களையும் ஒருமையில் பேசி வருகிறார். ஆசிரியர்களுக்கு ஏதோ இவர் சம்பளம் வழங்குவது போன்று பேசுகிறார். குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்னும் ஓரிரு மாதங்களில் ஆட்சி முடிவுக்கு வரும். அதன் பின்னர் மக்களாட்சி வரும்.

     


    அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஐ.ஜி. பொன்மாணிக்க வேலை வைத்து சிலை கடத்தல் வழக்கு விசாரிக்கப்படும். அ.தி.மு.க.வின் செல்வாக்கு தமிழகத்தில் எங்கும் உயரவில்லை. பாகிஸ்தானில் வேண்டு மென்றால் உயர்ந்திருக்கலாம். திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். ஆர்.கே.நகர் தேர்தலை போன்று 50ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

    இந்த ஆட்சியில் சாலை, பாலம் அமைப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்திகள் சம்பந்தப்பட்டிருப்பதால் அதில் அர்வம் காட்டுகின்றனர். அமைச்சர்கள் என்ன பேச வேண்டும்என்று தெரியாமலேயே பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் எம்.பி. அன்பழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    சசிகலா மற்றும் தினகரனை தாக்கி அ.தி.மு.க. நாளேடான புரட்சித்தலைவி நமது அம்மாவில் கட்டுரை வெளியாகியுள்ளது. #Jayalalithaa #TTVDhinakaran
    சென்னை:

    சசிகலா- தினகரனை தாக்கி அ.தி.மு.க. நாளேடான புரட்சித்தலைவி நமது அம்மாவில் வெளியாகி உள்ள செய்தி வருமாறு:-

    * ஆர்.கே.நகர் மக்களை
    ஏமாற்ற அல்லக்கையை 
    வைத்து முட்டை 
    போண்டா வெளியிட்ட
    வீடியோ மொத்தமும்
    போலியாம்.... 
    அம்மா சிகிச்சை
    பெறுவது போன்ற
    காட்சிகள்
    அப்பல்லோவில் 
    எடுக்கப்பட்டதல்ல
    என்னும் அதிர்ச்சி தகவல்.
    விசாரணை ஆணைய
    வட்டாரத்திலிருந்து
    பரவுகிறது.

    * அடப்பாவிகளா...
    அன்று அரசு விழாவில்
    அம்மா தடுமாறி
    விழப்போன நிலையிலும்,
    ஆம்புலன்ஸ் ஒன்றை
    போயஸ் தோட்டத்தில்
    நிறுத்தி வைக்காத
    பொறுப்பற்ற கும்பல்.

    * ஐநூறு என்னும் அளவுக்கு
    சுகர் ஏறவும் ஆக்சிஸன்
    அளவு நாற்பதுக்கும்
    கீழே வரும் அளவுக்கு
    வேடிக்கை பார்த்து விட்டு
    நினைவிழந்து
    மயக்கமுற்ற நிலையில்
    அப்பல்லோவில்
    இருந்து வந்த ஆம்புலன்சில்
    ஏற்றி முதலுதவி ஏதும்
    செய்யாமல்
    மருத்துவமனை
    முகப்பிலிருக்கும்
    கண்காணிப்பு
    கேமராக்களை
    அகற்றுவதில் மட்டுமே
    முழுக்கவனம் செலுத்தி...

    * அமைச்சர்களை சந்திக்க
    விடாமலும்
    அடுத்த மேல் சிகிச்சைக்கு
    அயல்நாடு கொண்டு
    செல்ல  அனுமதிக்காமலும்
    ஆக்டோபஸ்
    குடும்பத்தோடு
    அரண் அமைத்து
    கொண்டு
    அம்மா உயிர் பிரியும்
    வரை காத்திருந்து...

    * பிறகென்ன முப்பது நாள்
    முடிவதற்குள் தங்களுக்கு
    முடிசூட்டு விழா நடத்த
    முகூர்த்தம் குறித்தவர்கள்
    அம்மா போலவே
    ஆடை  உடுத்தி
    கொண்டைதரித்து
    ஆயத்தமானவர்கள்....
    ஆட்சியை பிடிக்க

    * மக்கள் திலகமும்
    மகராசி அம்மாவும்
    கண் இமையாய்
    கட்டிக்காத்த கழகத்தை
    கழகத்தின் ஆட்சியை
    கைப்பற்றிக் கொண்டு
    மஞ்சள் குளிக்கலாம் என
    மனக்கணக்கு
    போட்டதெல்லாம்
    மண்ணாகிப் போனாலும்.

    * அடித்த பணத்தை வைத்து
    அத்தனையும் பிடிப்போம்
    என அகங்காரம்
    கொண்டலையும் மாபியா
    கும்பலின் முகமூடிகள்
    ஒவ்வொன்றாய் கிழிகிறது.
    அதில் போலி வீடியோவும்
    ஒன்றென்பது புரிகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #Jayalalithaa  #Sasikala #TTVDhinakaran

    ஓ.பி.எஸ். மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran #Panneerselvam

    ராமேசுவரம்:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ராமேசுவரம் வந்தார்.

    அப்துல்கலாம் அண்ணன் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்த தினகரன் அங்கு நிரூபர்களிடம் கூறியதாவது:-

    அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த வருவேன். அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

    அப்துல்கலாம் நினைவிடத்தில் தேசிய அறிவியல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அவரது நினைவு நாளில் மாணவர்கள் இந்தியாவை வல்லரசாக்குவோம் என உறுதியேற்க வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நியாயமான தீர்ப்பு வரும். அப்போது தமிழக அரசு கவிழும். அது விரைவில் நடக்கும். அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும்.

    ஓ.பி.எஸ். மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhinakaran #Panneerselvam

    திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் என டிடிவி தினகரன் மற்றும் பாஜக தலைவர்கள் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர். #Karunanidhi #Dinakaran #MuralidharRao #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி செயற்கை சுவாச குழாய் மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. இதனால் திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்தேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும் என பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘திரு. கருணாநிதியின் உடல் நலனுக்காக நான் பிராத்திக்கிறேன். விரைவில் அவர் பூரணகுணமடைவார் என நம்புகிறேன், அவரது பரந்த அரசியல் அனுபவம் தமிழ்நாடு மற்றும் தேசிய மக்களின் நலனுக்கு பயனளிப்பதாக உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

    மேலும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். #Karunanidhi #Dinakaran #MuralidharRao #TamilisaiSoundararajan
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மேலும் 3 சட்டசபை தொகுதி வேட்பாளர்களை தினகரன் அறிவித்துள்ளார். #Dhinakaran #Assemblyelection

    அரூர்:

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் போட்டியிடுவார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் அறிவித்து இருந்தார்.

    தற்போது தருமபுரி, அரூர் உள்பட 3 தொகுதி வேட்பாளர்களை தினகரன் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் தருமபுரி மாவட்டம், அரூரில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில், வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையை ஏற்கும் தி.மு.க. தவிர, மதசார்பற்ற எந்த கட்சியும் எங்களின் கூட்டனிக்கு வரலாம். தமிழகத்தில் நல்லாட்சி மலர, நாங்கள் அனைத்து கட்சியினரையும் வரவேற்கிறோம்.

    தமிழகத்தில் எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தருமபுரி சட்டசபை தொகுதியில் டி.கே.ராஜேந்திரன், பாப்பிரெட்டிப்பட்டியில் பி.பழனியப்பன், அரூர் (தனி)தொகுதியில் ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும்.

    மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும். தற்போது அணைக்கு நீர்வரத்து இருப்பதால் தூர்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் குறையும், இதேபோல் தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மழை காலங்களில் மழைநீரை சேமிக்க அரசு விரைவான நடவடிக்கை எடுத்து விவசாயப் பணிகளை மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெறும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhinakaran #Assemblyelection

    திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை அழிக்க டிடிவி தினகரன் நினைக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். #EdappadiPalanisamy #dinakaran
    மதுரை:

    மதுரையில் பாண்டிகோவிலில் இன்று நடைபெற்ற அதிமுக அரசின் சாதனை சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றிபிரச்சாரத்தினை தொடங்கிவிட்டோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்போடு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. 

    கட்சி வலிமைபெற ஒற்றுமை அவசியம். தினகரன், அதிமுகவுக்காக உழைத்தவரா? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்?, திமுகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிக்க நினைக்கிறார் டிடிவி தினகரன். ஆட்சியை பிடிக்க நினைக்கும் துரோகிதான் தினகரன். ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவுகளை தூள் தூளாக்கி விட்டோம். கொல்லைபுறமாக சிலபேர் ஆட்சியை பிடிக்க முயல்கிறார்கள். கட்சியை உடைக்க நினைத்தவர்களின் சூழ்ச்சியை முறியடித்து ஒற்றுமையாக நிற்கிறோம்.

    காவிரி பிரச்னைக்கு நல்ல தீர்வை அதிமுக அரசு பெற்றுத் தந்திருக்கிறது. அப்போது கேட்டும் கிடைக்காத காவிரி நீர், தற்போது கேட்காமலேயே வந்துகொண்டிருக்கிறது’ எனக் கூறினார். #EdappadiPalanisamy #dinakaran
    தேர்தலுக்கு 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Dhinakaran #Assemblyelection

    திருச்சி:

    திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் நிரூபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் விரோத, ஊழல் ஆட்சி நடை பெற்று வருகிறது. இதை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா கூறினால் ஏற்றுக் கொள்கிறீர்கள். இந்தியாவிலேயே ஊழலில் முதலிடம் பெற்ற மாநிலமாகத்தான் தமிழகம் திகழ்கிறது. சாதாரண மக்களை கேட்டால் கூட இதனைத் தான் கூறுவார்கள்.

    தமிழகத்தில் லோக்பால் கொண்டு வருவது என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகும். பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேர வைக்கும் தேர்தல் வரும். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி தமிழகத்தில் மலரும். அப்போது உண்மையான லோக்பால் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்படும். யாரால் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். கைகோர்த்தார்களோ? அவர்களாலேயே அது பிரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் திண்டுக்கல்லுக்கு காரில் புறப்பட்டு சென்றார். ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் செல்லும்போது அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது டி.டி.வி.தினகரன் பேசும் போது, துரோகத்தை கருவறுக்க வேண்டும் என்பார்கள். அது போலத்தான் இப்போது தமிழகத்தில் நடக்கும் துரோக ஆட்சிக்கு கரு உள்ள முட்டையின் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சசிகலாவின் ஆசி பெற்ற வேட்பாளர் மனோகரன் போட்டியிடுவார். அரசு தலைமை கொறடாவாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்து மக்கள் பணியாற்றிய அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து அவர் திண்டுக்கல் புறப்பட்டு சென்றார்.

    தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் ஆட்சி முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Dhinakaran #Assemblyelection

    தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசி எம்.எல்.ஏ.க்கள் பயன்பெறுவதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டி வருமாறு:-

    சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழ் பாடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய சொந்த தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதைத்தான் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் பார்த்தேன்.

    அம்மாவை மறந்து விட்டு, பழனிசாமி ஏதோ பரம்பரையாக முதல்-அமைச்சராக இருப்பது போல புகழ்பாடுகிறார்கள். இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களின் சொந்த நலனுக்காக அரசு பணம் வாரி இறைக்கப்படுகிறது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது தான் உண்மை.

    நிதியே இல்லை. 110-வது விதியின் கீழ் புதிதாக அறிவிக்கப்படும் எல்லாவற்றையும் பழனிசாமியால் நிறைவேற்ற முடியாது. இது அவருக்கு தெரியும்.

    இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இருக்கிறவரை அறிவிப்போம் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இப்படி செய்கிறார். வர இருக்கும் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran
    டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-



    டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கட்சியின் அடிப்படை உறுப்பினரே அல்ல. கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக அவருக்கு அவசர அவசரமாக உறுப்பினர் அட்டையும், துணை பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

    டி.டி.வி.தினகரன் தொடர்ச்சியாக கட்சியில் பிரிவினைகளை உருவாக்கி வந்தார். கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டார். அதனால் கட்சி விதிமுறைகளின் அடிப்படையில் அவரை பதவிநீக்கம் செய்ய அனைத்து அதிகாரமும் கட்சிக்கு உண்டு.

    அவர் பிரிவினைவாதியாக செயல்பட்டது மட்டுமின்றி அ.தி.மு.க. கட்சிக்கு எதிராக புதிய கட்சியையும் தொடங்கி இருக்கிறார். ஒருவர் அடிப்படை உறுப்பினரே அல்லாத போது அவர் எப்படி கட்சிக்கும், கட்சியின் சின்னத்துக்கும் உரிமை கொண்டாட முடியும்?

    கட்சி மற்றும் கட்சியின் சின்னத்தின் மீது உரிமை கொண்டாட டி.டி.வி.தினகரனுக்கும், அவரை சேர்ந்தவர்களுக்கும் எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர், கட்சி சின்னம் ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் கமிஷன் விதிமுறைகள், அ.தி.மு.க. கட்சியின் விதிமுறைகள், கட்சி பதிவு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை கோர்ட்டில் வாசித்துக் காட்டினார்.

    அவற்றை கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக கூறினர். 
    90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ADMK #Dhinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- 8 வழிச் சாலையை எதிர்த்து பேசிய வைகோ, தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர் போன்ற தலைவர்கள் தற்போது மக்களைக் கேட்டு முடிவு செய்வோம் என்று சொல்வதன் மூலம் பின் வாங்குவதாக தெரிகிறதே?

    பதில்:- பின்வாங்குற செயலாக தெரியலை. அரசாங்கத்திடம் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க. மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களைப் பார்க்கும் போதே தெரிகிறது. மக்களிடம் கருத்து கேளுங்க. அதுதான் சரி என்று சொல்லி இருக்கலாம்.

    கேள்வி:- 8 வழிச்சாலையின் தலைவர்களின் வீரியம் குறைந்தது போல் தெரிகிறதே?

    பதில்:- வீரியம் எல்லாம் குறையவில்லை. 6-ந்தேதி திருவண்ணாமலையிலும், 9-ந்தேதி அரூரிலும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக அனுமதி கேட்டிருக்கிறோம். போலீஸ் அனுமதி கொடுக்க வில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம். நீதிமன்றத்தின் மூலம் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். போராட்டம் நடக்கும்.


    கேள்வி:- காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டு செல்ல வேண்டும் என்று கர்நாடகத்தில் அனைத்துக் கட்சி சார்பாக முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரியும், தமிழக அரசு சார்பாக இதுவரை எந்த ஒரு பதிலும் சொல்லவில்லையே?

    பதில்:- தமிழக அரசு இதுவரை என்னதான் செய்திருக்கிறது? நீதிமன்றம் சரியா முடிவெடுக்கறதால காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கு. தொடர்ந்து பார்ப்போம். தமிழகத்தில் அரசு ஒன்று இருக்கிறதா? நீங்கதான் நினைக்கிறீங்க. மக்கள் யாரும் அரசு ஒன்று இருப்பதாக பொருட்படுத்தவில்லை. இருக்கிற அரசாங்கமும் மக்களை கஷ்டப்படுத்த தான் இருக்கிறது என்பது மக்களோடு எண்ணம். விரைவில் இந்த அரசாங்கத்துக்கு நல்ல முடிவு வரும்.

    கேள்வி:- தொடர்ந்து நீங்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டுவர்றீங்க. போற இடங்களில் எல்லாம் உங்களுக்கு எப்படி வரவேற்பு இருக்கு?

    பதில்:- வரவேற்பை பற்றி நீங்கள்தான் சொல்லணும்?

    கேள்வி:- போற இடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வோட அடிமட்ட தொண்டர்கள் எல்லாம் உங்கள் பக்கம் இருப்பதாக சொல்லப்படுதே?

    பதில்:- உண்மைதான். தொன்னூறு சதவீதத்துக்கு மேலே அம்மாவோட தொண்டர்கள் எங்கக் கூட தான் இருக்காங்க. ஆட்சி அதிகாரத்துல இருக்கிற தால அ.தி.மு.க. என்கிற கட்சி ஓடிக்கிட்டு இருக்கு. ஆட்சியை விட்டு இறங்கினால் அது முழுவதும் எங்களிடம் வந்து விடும்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #ADMK #Dhinakaran

    ×