search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினகரன்"

    ஜி.எஸ்.டி.யால் தொழில் முடக்கம், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #dinakaran #gst

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி இல்லதிருமண விழா நடைபெற்றது. இதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:- 

    அம்மாவின் இணைபிரியாத தோழி சின்னம்மா. அம்மா உயிரோடு இருந்திருந்தால் அவர் இந்த திருமணத்தை நடத்தி வைத்திருப்பார். சின்னம்மா இருந்தாலும் நடத்தி வைத்திருப்பார். சின்னம்மா கலந்து கொள்ள முடியாத நிலையில் நான் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளேன் என்று கூறினார். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் கலந்து கொண்டார்.

    பின்னர் தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி:- ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை அபகரித்து கொண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் உல்லாசமாக இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளாரே. உங்கள் கருத்து? 


    பதில்:- திண்டுக்கல் சீனிவாசனை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். 18 எம்.எல்.ஏ., வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சட்டமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடைபெறும். அப்போது இந்த ஆட்சி கலைந்து விடும்.

    நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அப்போது அம்மா வழியில் ஆட்சி நடைபெறும். சேலம்- சென்னை 8 வழிச்சாலையால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யால் தொழில் முடக்கம், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். #dinakaran #gst

    தி.மு.க.வுடன் கை கோர்த்துக்கொண்டு அ.தி.மு.க.வை அழிக்க துடிக்கும் தினகரனின் கனவு பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #TTVDhinakaran #Jayakumar

    சென்னை:

    வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றியை விளக்கப் பொதுக்கூட்டம். மாவட்ட செயலாளர் டி. ஜி. வெங்டேஷ்பாபு எம் பி தலைமையில் கொளத்தூர் தொகுதி மங்காரம் தோட்ட பகுதியில் நடந்தது. கூட்டத்தில் மீன் வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஆர்.கே.நகரில் பொது மக்களிடம் 20 ரூபாய் நோட்டை காட்டி ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற தினகரன் மீது இப்போது அப்பகுதி மக்கள் கோபத்தில் உள்ளனர்.


    தினகரன் எப்படிப் பட்டவர் என்பதை தெரிந்து தான் அம்மா சுமார் 10 வருட காலம் போயஸ் கார்டன் பக்கமே வரவிடவில்லை. தி.மு.க.வுடன் தினகரன் கை கோர்த்துக் கொண்டு அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என்று எண்ணுகிறார். அவரது கனவு ஒரு நாளும் பலிக்காது. அ.தி.மு.க. இரும்பு கோட்டை அதை யாராலும் அழிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் தாடி மா.ராசு, அமுதா, சிந்தை ஆறுமுகம், ஓட்டேரி பி. கே ஜெயக்குமார், செங்கை கோவிந்தராஜ், எஸ்.அமீனுதீன், எ.எல் நடராஜன், எஸ் எ. அண்ணாமலை, பத்மேடு சாரதி, எம். மகேந்திரன், வெற்றி நகர் ஜீவா, எம் சந்திரசேகர், பி.வேலு, உஷாராணி, சமிம்பானு, அருணகிரி, புரசை ராஜாராம், தனராஜா, மல்லிகா சுப்புராஜ், செந்தில்குமார், எம்.இமாச்சலபதி, பி.அரசு, ஐ.அம்பேத்கர், திருமங்கலம் மோகன், புரசை கே.சேகர், ஜி.ஆர். பி. கோகுல், சாந்தி, எஸ் சத்தியநாராயணன், முனிரத்தினம், வேணு, அயன்புரம் முரளிதரன், திருமங்கலம் பிரபு, தங்கம் துரைசாமி, கொளத்தூர் கிருபா. அகரம் ரவிச் சந்திரன், உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கொளத்தூர் கே. கணேசன் நன்றி கூறினார். #TTVDhinakaran #Jayakumar

    துணை முதலைச்சர் ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #SC
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தன. எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ. பன்னீர் செல்வம் அணியும் எதிரெதிராக நின்றன. அப்போது அமைக்கப்பட்ட எடப்பாடி தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பன்னீர் செல்வம் உட்பட 7 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.

    இதையடுத்து, பன்னீர் செல்வமும், எடப்பாடியும் ஒரு அணியாக இணைந்த பிறகு, தினகரன் அணி என 3-ம் அணி உருவானது. அந்த அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனவும், முதல்வரை மாற்றுமாறும் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.



    இதனைத் தொடர்ந்து தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தினகரன் தரப்பு போட்டாபோட்டியாக, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தினகரன் தரப்புக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். #SC 
    தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை என்று மோகனூரில் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #ttvdinakaran #thangatamilselvan #edappadipalanisamy

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் வருமாறு:-

    கேள்வி: 17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சொல்லப்பட்டு இருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: சபாநாயகர் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது. 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என அப்போது இருந்த கவர்னரிடம் மனு கொடுத்தார்கள்.

    இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது 3- வது நீதிபதி அமைத்திருக்கிறார்கள். எப்படியும் சுப்ரீம் கோர்ட்டு தான் இறுதி தீர்ப்பு வழங்க போகிறது. அதனால் தான் சுப்ரீம் கோர்ட்டுக்கே போக முடிவு எடுத்து கடந்த 21-ந்தேதி அன்று மனு தாக்கல் செய்தோம். இன்றைக்கு மனுவிசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று அதை புதன்கிழமைக்கு மாற்றி இருகிறார்கள். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும் என காத்திருக்கிறோம்.


    கேள்வி: தங்க தமிழ்செல்வன் மட்டும் மனு தாக்கல் செய்யவில்லை. மற்றவர்கள் எல்லாம் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர் தனித்து விடப்பட்டு இருக்கிறாரா?

    பதில்: தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 17 பேர் சபாநாயகர் தீர்ப்பு தவறு என்பதை சட்ட ரீதியாக நிருபிப்பதற்காக போராடுகிறோம். சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று இருக்கிறோம்.

    இதில் நம்பிக்கை இல்லை என்று ஒரு வாரத்திற்கு முன்பாகவே தங்க தமிழ்செல்வன் சொன்னார். மனுவை திரும்ப பெற போகிறேன். தேர்தல் வரட்டும் சந்திக்கிறேன் என்று சொன்னார். என்னுடைய அனுமதி பெற்றுத்தான் செய்கிறார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லோருக்கும் தெரியும்.

    கேள்வி: நீதிமன்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் தலையீடு இருக்கிறதா?

    பதில்: அதெல்லாம் காலம் உங்களுக்கு நிருபிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ttvdinakaran #thangatamilselvan #edappadipalanisamy

    அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை தினகரன் தரப்புக்கு வழங்க எழும்பூர் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #TTVDhinakaran #Foreigncurrencycase

    சென்னை:

    இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்து அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, டி.டி.வி.தினகரன் மீது 1996-ம் ஆண்டு அமலாக்க பிரிவு வழக்கு தொடர்ந்தது.

    எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், லண்டன் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனது தரப்பு சாட்சிகள் 17 பேரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும், இந்த வழக்கு குறித்து விசாரணை அதிகாரி, லண்டன் இந்திய தூதரகத்திற்கு அனுப்பிய ஆவணங்களை தனக்கு வழங்கவேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் பொருளாதார கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதை எதிர்த்து தினகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், தினகரன் தரப்பு கோரிய ஆவணங்களை எல்லாம் எழும்பூர் கோர்ட்டு வழங்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக விசாரணையில் உள்ள வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


    அப்போது, டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, ‘ஒரே பரிவர்த்தனை தொடர்பாக 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த 2 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 2 வழக்குகளையும் விசாரிக்க தடை விதித்துள்ளது’ என்று கூறினார்.

    இதையடுத்து 6 மாதங்களுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை மட்டும் நீதிபதி ரத்து செய்தார். #TTVDhinakaran #Foreigncurrencycase

    கவர்னரின் சிறை தண்டனை எச்சரிக்கை மிரட்டும் தொனியில் இருக்கிறது என்று டி.டி. வி.தினகரன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #GovernorBanwarilal

    கரூர்:

    கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன் இன்று கரூர் வந்தார்.

    இதையடுத்து தான் தோன்றிமலை பகுதியில் கட்சி கொடியேற்றி வைத்த அவர், திறந்த வேனில் நின்றவாறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட அவைத்தலைவர் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் டி.டி.வி.தினகரன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கே: கவர்னரின் ஆய்வு பணியை தடுத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளதே?

    ப: இது ஜனநாயக நாடா? அல்லது அதிபர் ஆட்சி நடைபெறும் பாகிஸ்தானா? என்று தெரியவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இந்த ஆட்சி நமக்கு பிடிக்கிறதோ, இல்லையோ? குற்றம் சாட்டப்பட்ட கவர்னர் சுற்றுப்பயணம், ஆய்வு மேற்கொள்வது தவறு. இதனை கண்டிக்கிறோம்.

    கவர்னர் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் எத்தனையோ கவர்னர்கள் இருந்துள்ளனர். அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

     


    தற்போது கவர்னரின் சுற்றுப்பயணம்-ஆய்வை கண்டித்து ஜனநாயக முறையில் ஒரு அரசியல் கட்சி கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துகிறது. இதற்காக வழக்கு தொடர்வோம் என்று சொல்லலாம். அதைவிட்டு விட்டு விட்டு 7 வருடம் சிறை தண்டனை அளிப்போம் என்று கூறுவது மிரட்டும் தொனியில் உள்ளது.

    கே: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் விளக்க வேண்டும். சேலம், முதல்வரின் சொந்த மாவட்டம். எனவே அவரே நேரிடையாக மக்களை சந்தித்து விளக்கலாம்.

    கே: கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்துவீர்களா?

    ப: என்னை பொறுத்த வரை மக்கள் பிரச்சினைகள், மக்கள் விரும்பாத திட்டங்களை எதிர்த்து போராடுவதைத்தான் விரும்புகிறேன். கவர்னர் விவகாரத்தை பெரிதுப்படுத்த விரும்பவில்லை.

    கே: இயக்குனர் கவுதமன் கைது பற்றி?

    ப: தமிழகத்தில் அரசை எதிர்த்து போராடுபவர்கள் மீது அடக்குமுறை கையாளப்படுகிறது. தமிழகத்தில் நடப்பது ஆட்சியே கிடையாது.அடக்குமுறை ஆட்சிதான் நடக்கிறது.

    கே : கமல் உள்ளிட்டவர்கள் தேர்தல் கூட்டணி நோக்கி அரசியல் பயணம் மேற் கொண்டிருக்கிறார்களே?

    ப: தேர்தல் வரும் போது தக்க நேரத்தில் முடிவு செய்வோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் தான் தேர்தல் கூட்டணி வைக்கப்படும்.

    கே: தூத்துக்குடி சம்பவ விசாரணை குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப:தூத்துக்குடி சம்பவம் குறித்து முதல்வரின் கீழ் உள்ள சி.பி.சி.ஐ.டி. விசாரணையால் எந்த உண்மையும் வெளிவராது. எனவே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #GovernorBanwarilal

    ‘தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி செய்து வருகிறார்’ என்று கொடைக்கானலில் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். #Minister #Jayakumar #TTVDinakaran
    கொடைக்கானல்:

    மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கொடைக்கானலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியின் காரணமாக தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது ஆசியுடன் நடைபெறும் ஆட்சியில் முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் சர்வ அதிகாரம் பெற்றது.

    கர்நாடக அரசு அரசியலமைப்பு சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதிக்க வேண்டும். இதனை மீறுவது கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தின் உரிமை கண்டிப்பாக பாதுகாக்கப்படும். சென்னை-சேலம் பசுமை வழிச்சாலையினை காரணமில்லாமல் எதிர்க்கின்றனர். தற்போது தமிழகத்தில் 2½ கோடி வாகனங்கள் உள்ளன. இன்னும் 10 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரிக்கும்.

    வருங்கால தேவையினை கருத்தில் கொண்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த திட்டத்தால் யாருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது. அதிக இழப்பீடு வழங்கப்படுவதால் இந்த திட்டத்திற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு இல்லை. இயற்கையை பாதுகாக்க, அங்கு 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

    கவர்னரை பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர். கவர்னரே தேவையில்லை என்று சொல்பவர்கள், எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அவரை சந்தித்து முறையிடுகின்றனர். நாங்கள் அரசியல் காரணங்களுக்காக 7 முறை ஜெயிலுக்கு சென்றுள்ளோம். ஆனால் எங்களை விடுதலை செய்ய சொல்லி கோரிக்கை விடுத்ததில்லை.



    ஆனால் தற்போது கைது செய்யப்பட்டவுடன் விடுதலை செய்யக்கோரி உடனடியாக போராட்டம் செய்கின்றனர். எதையும் தாங்கும் மனப்பக்குவம் குறைந்துள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துகின்றனர்.

    கமல்ஹாசனுக்கு அவருடைய விஸ்வரூபம்-2 கர்நாடகாவில் ஓட வேண்டும் என்பதற்காக குமாரசாமியை சந்தித்தார். அதற்காகவே ராகுல்காந்தியையும், சோனியா காந்தியையும் அவர் சந்தித்துள்ளார். இதனால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி முறியுமா? என்பது தெரியாது. தினகரன் அ.தி.மு.க.வே கிடையாது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது 10 ஆண்டுகளாக அவரை சேர்க்கவே இல்லை.

    தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி செய்து வருகிறார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் நிலையில் உள்ள அவர், கனிமொழி விடுதலை ஆனதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Minister #Jayakumar #TTVDinakaran
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தை பொறுத்தவரை நான் நீதிமன்றத்தை நம்புகிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #18mlasdisqualified #dinakaran #edappadipalanisamy

    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் போராட்டம் என்பது அறவழியில் நடத்தப்படுவதாகும். மகாத்மா காந்திகூட அறவழியில் போராட்டம் நடத்தியவர்தான்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுகாதாரகேடு காரணமாக போராட்டம் ஏற்பட்டது. சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் என்ன சமூக விரோதிகளா?

    தமிழக அரசு காவல் துறை மூலமாக மாநிலம் முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளது. மத்திய அரசு, தாய் கோழிக்குஞ்சை பாதுகாப்பது போல தமிழக அரசை காப்பாற்றி வருகிறது.

    எங்கள் கட்சிக்காரர்களை தீவிரவாதி போல கைது செய்யும் தமிழக காவல் துறை, எஸ்.வி.சேகரை கைது செய்ய பயப்படுகிறது.

    இரண்டு மந்திரிகள் உள்பட எம்.எல்.ஏ.க்கள் சிலர் எங்களிடம் வருவதாக வரும் தகவல் காற்றில் வரும் செய்தியாகும். இதற்கு நான் பொறுப்பல்ல.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசு முதலில் நில உரிமையாளர்களிடம் பேசவேண்டும். இந்த திட்டத்தால் அவர்களுக்கு பாதிப்பு இல்லையென்றால் தாராளமாக திட்டத்தை செயல்படுத்தலாம். அதற்குள் ஏன் இந்த அவசரம்?

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக அறவழியில் போராடிய நடிகர் மன்சூர்அலிகான், சமூக ஆர்வலர்கள் வளர்மதி, பியூஸ்மானுஷ் ஆகியோரை கைது செய்ததில் என்ன நியாயம் இருக்கிறது?

    குட்கா வி‌ஷயத்தில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக அந்த வழக்கை துரிதப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

    தமிழக சட்டசபையில் அம்மாவின் படத்தை முனிசிபாலிட்டியில் திறந்து வைத்தது போன்று திறந்து வைத்தனர். இது அம்மாவை இழிவுபடுத்துவது போன்றதாகும். எனவேதான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தை பொறுத்தவரை நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

    ஆர்.கே. நகர் தேர்தலில் நான் (தினகரன்) தோற்று விடுவேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னார். அது நடந்துவிட்டதா என்ன?


    விவசாயி மகன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்து அறவழியில் போராட்டம் நடத்தியிருந்தால் தமிழக அரசு அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக டி.டி.வி. தினகரன் மதுரை கீரைத்துறையில் கொலையுண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வட்ட செயலாளர் முனியசாமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். #18mlasdisqualified #dinakaran #edappadipalanisamy

    சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #TTVDhinakaran #RKNagarBypoll
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து காலியாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோர் தோல்வி அடைந்தனர். தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த தேர்தல் முடிவுகள் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



    இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது டிடிவி தினகரன் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தது. #TTVDhinakaran #RKNagar #RKNagarBypoll #CaseAgainstTTV

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார். #MLAsDisqualified #Tamilarasan

    வாலாஜா:

    இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் ராணிப்பேட்டையில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பிற சமுதாய மக்களிடம் உள்ளது. பஞ்சமி நிலம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இது குறித்த விவரங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த விவரங்களை வழங்காமல் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருகிறது. உடனடியாக தமிழக அரசு, மாநில மீட்பு ஆணையத்தை உருவாக்கி பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பின்னடைவு காலி பணியிடங்களை சிறப்பு பணி நியமனம் மூலம் தலித் மக்களுக்கு வழங்க ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. 3 வருடங்கள் ஆகியும் இது நிறைவேற்றப்படவில்லை. சிறப்பு நியமனம் மூலம் இந்த பணி இடங்களில் தலித் மக்களை அரசு நியமிக்க வேண்டும்.

    ஜவ்வாதுமலை, ஏலகிரி மலை பகுதிகளில் போலி சான்றிதழ்கள் பரவி வருகிறது. தகுதியானவர்களுக்கு அவரவர் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்பு அதிகாரம் பெற்ற ஆதிதிராவிடர் நல ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

    பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் நிர்வாக பங்கீட்டில் தலித் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே வழங்க வேண்டும். நீட்தேர்வு அவசியமில்லை. இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரியான கல்வி திட்டம், ஒரே மாதிரியான பாடத்திட்டம் வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். தமிழக காவல்துறை தற்போது செயலற்று உள்ளது. நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. தமிழக அரசை மத்திய அரசு பின்னால் இருந்து இயக்குகிறது என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #MLAsDisqualified #Tamilarasan

    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் எடப்பாடி அரசின் தலைவிதியை 3-வது நீதிபதி நிர்ணயிப்பார் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MLAsDisqualification #MKStalin

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணாநகர் வடக்கு பகுதியில் நேற்றிரவு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்துக்கு பகுதிச் செயலாளர் ச.பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்டக் கழக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் 5 முறை கலைஞர் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். பலமுறை எதிர் கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். அவர் நாட்டைப்பற்றி, மக்களைப்பற்றி என்றைக்கும் சிந்திக்க கூடிய தலைவராக விளங்கியிருக்கிறார்.

    கருணாநிதி உடல் நலிவுற்று ஓய்வெடுத்து வருகிறார். அவரது தொண்டையில் ஒரு ‘டியூப்’ உள்ளது. அதன் மூலம்தான் உணவு உண்ணும் நிலை உள்ளது. சுவாசமும் அந்த டியூப் வழியாகத்தான். அவரால் தெளிவாக பேச முடியா விட்டாலும், நாம் சொல்வதை புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளார்.

    கருணாநிதி நல்ல நிலையில் இருந்திருந்தால் விட்டிருப்பாரா? என்கிறார்கள். கருணாநிதி செயல் பட்டிருந்தால் அது முடிந்திருக்குமே? இது நடந்திருக்குமே? என்று சொல்கிறார்கள்.

    கருணாநிதி எந்த நேரத்தில் எதை செய்வார்? எப்படி செய்வார்? என்று அவரிடம் நாங்களும் கற்று வைத்திருக்கிறோம்.

    எனவே இங்கு இருக்கக்கூடிய உங்களுக்கெல்லாம் சொல்கிறேன். கவலைப் படாதீர்கள். இன்னும் செய்யவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்.

    நேரம் வரும். அந்த நேரத்தை பயன்படுத்தி எப்படி செய்ய வேண்டும் என்ற தந்திரத்தை பயன்படுத்த வேண்டிய நேரத்திலே பயன் படுத்துவோம்.

    எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய நாம் தொடர்ந்து மக்கள் பிரச்சினைக்காக போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறோம். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இது கண்டனத்துக் குரியது.

    இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்று இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி மத்தியிலே உள்ள பி.ஜே.பி. ஆட்சிக்கு மோடிக்கு அடி பணிந்து தலைகுனிந்து மண்டியிட்டு அடங்கி இருக்கக்கூடிய ஆட்சியாக உள்ளது.


    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட கருத்து சொல்லி உள்ளனர். இதில் நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவை கடுமையாக விமர்சித்து ரத்து செய்திருக்கிறார்.

    இனி 3-வது நீதிபதி எடப்பாடி அரசின் தலைவிதியை நிர்ணயிப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. அதனால்தான் நேற்றைக்கே இந்த தீர்ப்பால் மக்களுக்கு ஆபத்து என்று சொன்னேன். ஏனென்றால் இந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பேராபத்து என்பதாலேயே அப்படி கூறினேன்.

    சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நீதிமன்றத்தின் நிலையோ இப்படி...? இனி எங்கே, யாரை நம்புவது இனி நாங்கள் நம்புவது மக்களைத்தான்.

    எனவே தமிழ்நாட்டிலே மிக விரைவிலே தி.மு.க. ஆட்சி உதயமாகும் தயாராக இருங்கள், தயாராக இருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளி செங்கோல் வழங்கி சிறப்பு செய்தார்.

    கூட்டத்தில் பகுதி செயலாளர் ராமலிங்கம், பரமசிவம், கே. ஏழுமலை, ஜெ.கருணாநிதி, மதன் மோகன், மாவட்ட நிர்வாகிகள் எம்.டி.ஆர்.நாதன், வெல்டிங் மணி, ஐ.கென்னடி, துரை, செல்வி சவுந்தர்ராஜன், குணசேகர், கோவிந்தராஜ், பாபு, இளங்கோவன், ஏ.டி. முருகன், டாக்டர் ஆற்காடு கலாநிதி வீராசாமி, வக்கீல் ரகு, டாக்டர் ஜீவகன், இளைஞரணி சிற்றரசு, சேப்பாக்கம் சிதம்பரம் உதயசூரியன், மாரி, ஜானகி ராமன் உள்பட பலர் பங்கேற்றனர். #MLAsDisqualification #MKStalin

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலதாமதம் செய்யாமல் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ரங்கராஜன் எம்.பி. நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualified

    ராஜபாளையம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ராஜபாளையத்தில் இன்று மாலை நடைபெற உள்ள தொழில் பாதுகாப்பு மாநாட்டில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் ரெயில் நிலையத்தில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் ஏற்படக் கூடிய தொழில் நெருக்கடி காரணமாக, ராஜபாளையத்தில் தொழில் நெருக்கடி வளர்ந்து கொண்டே இருக்கிறது. பஞ்சாலைகள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் மூடு விழாக்களை கண்டு கொண்டு இருக்கிறது.

    அரசின் கொள்கை காரணமாக தொழில் முனைவோர், உழைப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில அரசு இது குறித்து பொருட்படுத்தாமல் இருப்பது இன்னொரு துயரமான பகுதி.

    இதற்கான மாற்று வழி கண்டுபிடிக்க ராஜபாளையத்தில் கூட்டம் நடக்க உள்ளது. இதில் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதை நாடாளுமன்றத்திலும், மத்திய அரசுக்கும் தெரிவிக்க உள்ளோம்.

    முரண்பட்ட கருத்துக்களை நீதிபதிகள் கொடுப்பது புதிதல்ல. அரசியல் நெருக்கடியை உருவாக்கி கொண்டே இருக்கும்போது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலதாமதப்படுத்தாமல் தீர்ப்பு வழங்க முடியும் என்றால் நீதிமன்றம் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும். இல்லை என்றால் ஜனநாயக செயல்பாட்டை மேலும் முடக்கும் என்பது எனது கருத்து.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualified

    ×