என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 106233
நீங்கள் தேடியது "தினகரன்"
கோவையில் வருகிற 21-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:
கோவையில் அ.தி.மு.க.வினர் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இது குறித்து தினகரன் அணி அமைப்பு செயலாளரும், கோவை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை கூறியதாவது:-
எங்கள் கட்சியின் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி வீட்டில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் நாங்கள் அமைதியான முறையில் வந்து கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க.வினர் எங்கள் காரை வழி மறித்து தாக்குதல் நடத்தினார்கள். நிறைய கார்கள் தாக்கப்பட்டது.
இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். எங்களை கைது செய்து உள்ளனர். எங்கள் காரை உடைத்தவர்களை போலீசார் கைது செய்யாமல் எங்களை கைது செய்து இருப்பது கண்டிக்கத் தக்கது.
அ.திமு.க.வினர் அவர்களாகவே தங்கள் காரை உடைத்து விட்டு நாங்கள் உடைத்ததாக கூறி உள்ளனர். இதில் எங்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வருகிற 21-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் கோவையில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் அ.தி.மு.க.வினர் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இது குறித்து தினகரன் அணி அமைப்பு செயலாளரும், கோவை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை கூறியதாவது:-
எங்கள் கட்சியின் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி வீட்டில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் நாங்கள் அமைதியான முறையில் வந்து கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க.வினர் எங்கள் காரை வழி மறித்து தாக்குதல் நடத்தினார்கள். நிறைய கார்கள் தாக்கப்பட்டது.
இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். எங்களை கைது செய்து உள்ளனர். எங்கள் காரை உடைத்தவர்களை போலீசார் கைது செய்யாமல் எங்களை கைது செய்து இருப்பது கண்டிக்கத் தக்கது.
அ.திமு.க.வினர் அவர்களாகவே தங்கள் காரை உடைத்து விட்டு நாங்கள் உடைத்ததாக கூறி உள்ளனர். இதில் எங்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வருகிற 21-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் கோவையில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.வி. சேகரை கைது செய்ய அமைச்சர் ஜெயக்குமார் நடுங்குவதாகவும், வரும் தேர்தலுக்கு பிறகு அவர் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை:
புதுவண்ணாரப்பேட்டை இளையமுதலி தெருவில் உள்ள வீட்டில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது. புதிதாக பதவி ஏற்கும் அரசு தமிழ்நாடு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை பார்க்கும்போது மாநில அரசுகள் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் உள்ளது.
கமலின் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.
நான் மிரட்டல் விடும் தொனியில் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அவர்தான் தினமும் காலை எழுந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து மிரட்டல் விடும் தொனியில் பேசி வருகிறார்.
விவேக் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்தான் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகிறார். முதலில் எஸ்.வி. சேகரை கைது செய்ய சொல்லுங்கள். அவரை கைது செய்ய பயந்து நடுங்குகிறார்கள்.
வரும் தேர்தலுக்கு பிறகு ஜெயக்குமார் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்.
சசிகலா நோட்டீஸ் மூலம் திவாகரனுக்கு உரிய பதில் தெரிவித்து விட்டார். நான் அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது வெற்றிவேல் உடன் இருந்தார்.
புதுவண்ணாரப்பேட்டை இளையமுதலி தெருவில் உள்ள வீட்டில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது. புதிதாக பதவி ஏற்கும் அரசு தமிழ்நாடு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை பார்க்கும்போது மாநில அரசுகள் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் உள்ளது.
கமலின் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.
நான் மிரட்டல் விடும் தொனியில் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அவர்தான் தினமும் காலை எழுந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து மிரட்டல் விடும் தொனியில் பேசி வருகிறார்.
விவேக் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்தான் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகிறார். முதலில் எஸ்.வி. சேகரை கைது செய்ய சொல்லுங்கள். அவரை கைது செய்ய பயந்து நடுங்குகிறார்கள்.
வரும் தேர்தலுக்கு பிறகு ஜெயக்குமார் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்.
சசிகலா நோட்டீஸ் மூலம் திவாகரனுக்கு உரிய பதில் தெரிவித்து விட்டார். நான் அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது வெற்றிவேல் உடன் இருந்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனை வழி மறித்து 20 ரூபாய் நோட்டுடன் பெண்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் நோட்டு டோக்கனாக கொடுக்கப்பட்டது என்றும் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டது எனவும் அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதனை தினகரன் மறுத்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை யில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தினகரன் வந்த போது 20 ரூபாய் நோட்டை காட்டி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டனர்.
இந்த நிலையில் தினகரனுக்கு எதிராக மீண்டும் 20 ரூபாய் நோட்டுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தண்டையார்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் சந்தோஷ், சரவணகுமார், ரசாக் ஆகியோர் புனேவுக்கு சுற்றுலா சென்றபோது அங்கு தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தினகரன் அறிவித்து இருந்தார். இதனை வழங்குவதற்காக தினகரன் இன்று காலை தண்டையார்பேட்டையில் உள்ள மாணவர்களின் வீட்டுக்கு வந்தார். அவர் மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் காரில் புறப்பட்டார்.
தினகரன் வந்திருப்பதை அறிந்த ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 ரூபாய் நோட்டுடன் ஜீவரத்தினம் சாலையில் திரண்டு இருந்தனர்.
அவர்கள் தினகரனின் கார் வந்ததும் அதனை மறித்து 20 ரூபாய் நோட்டை காட்டியபடி ரூ.10 ஆயிரம் எங்கே என்று கோஷமிட்டனர்.
இதனை கண்டு தினகரனுடன் வந்த ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந் தனர். அவர்கள் 20 ரூபாய் நோட்டுடன் நின்ற பெண்களை பார்த்து சில வார்த்தைகளை கூறினர்.
இதனால் பெண்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பெண்களை சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினகரனுக்கு எதிராக திரண்டு நின்ற பெண்களும், ஆண்களும் அங்கிருந்து ஓடினர்.
இதனை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டினர். தாக்குதல் சம்பவம் நடந்து கொண்டிருந்த போது காரில் தினகரன் அமர்ந்து இருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காசிமேடு போலீசார் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.
இதைத் தொடர்ந்து தினகரன் தனது ஆதரவா ளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தாக்குதல் தொடர் பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் நோட்டு டோக்கனாக கொடுக்கப்பட்டது என்றும் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டது எனவும் அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதனை தினகரன் மறுத்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை யில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தினகரன் வந்த போது 20 ரூபாய் நோட்டை காட்டி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டனர்.
இந்த நிலையில் தினகரனுக்கு எதிராக மீண்டும் 20 ரூபாய் நோட்டுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தண்டையார்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் சந்தோஷ், சரவணகுமார், ரசாக் ஆகியோர் புனேவுக்கு சுற்றுலா சென்றபோது அங்கு தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தினகரன் அறிவித்து இருந்தார். இதனை வழங்குவதற்காக தினகரன் இன்று காலை தண்டையார்பேட்டையில் உள்ள மாணவர்களின் வீட்டுக்கு வந்தார். அவர் மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் காரில் புறப்பட்டார்.
தினகரன் வந்திருப்பதை அறிந்த ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 ரூபாய் நோட்டுடன் ஜீவரத்தினம் சாலையில் திரண்டு இருந்தனர்.
அவர்கள் தினகரனின் கார் வந்ததும் அதனை மறித்து 20 ரூபாய் நோட்டை காட்டியபடி ரூ.10 ஆயிரம் எங்கே என்று கோஷமிட்டனர்.
இதனை கண்டு தினகரனுடன் வந்த ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந் தனர். அவர்கள் 20 ரூபாய் நோட்டுடன் நின்ற பெண்களை பார்த்து சில வார்த்தைகளை கூறினர்.
இதனால் பெண்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பெண்களை சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினகரனுக்கு எதிராக திரண்டு நின்ற பெண்களும், ஆண்களும் அங்கிருந்து ஓடினர்.
இதனை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டினர். தாக்குதல் சம்பவம் நடந்து கொண்டிருந்த போது காரில் தினகரன் அமர்ந்து இருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காசிமேடு போலீசார் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.
இதைத் தொடர்ந்து தினகரன் தனது ஆதரவா ளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தாக்குதல் தொடர் பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X