என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சரண்"
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 53).
விவசாயியான இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் விவசாய அணி ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த விவசாயியான கிருஷ்ணன்(55). என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் கிருஷ்ணன், தனது மனைவி ராணியுடன் தனது நிலத்திற்கு சென்றார். அப்போது வீட்டுக்கு அருகில் இருந்த துரைசாமி மற்றும் அவருடைய மனைவி முத்து ஆகிய 2 பேரும், தங்களது நிலத்தில் உள்ள பாதையில் செல்லக்கூடாது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே துரைசாமி வீட்டுக்கு அருகில் கிடந்த தடியால் கிருஷ்ணனை தாக்கினார்.
அப்போது ஆத்திரமடைந்த கிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் துரைசாமியின் மார்பில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து துரைசாமியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது துரைசாமி வழியிலேயே இறந்து விட்டது தெரிவித்தனர்.
இதுகுறித்து இண்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது துரைசாமியின் உறவினர்கள் நிலத்தகராறு காரணமாக துரைசாமியை பக்கத்து நிலத்துக்காரர் கிருஷ்ணன் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். என்பது தெரியவந்தது. உடனே போலீசார் துரைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் துரைசாமியின் உறவினர்களும், தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் சமாதானம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் கொலையாளி கிருஷ்ணனை விரைவில் கைது செய்து விடுவதாக கூறினர். இதையடுத்து அவர்கள் துரைசாமி உடலை பெற்று கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கிருஷ்ணனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தேடப்பட்டு வந்த கிருஷ்ணன் நேற்று இண்டூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்துக்காக இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயிற்சி அளித்து பயங்கரவாத இயக்கத்துடன் இணைத்துக் கொள்கின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாவட்டம் குப்வாரா மாவட்டத்தில் இருந்து 4 பேரை அல்-பத்ர் இயக்கத்தில் இணைத்து, அவர்களை 3 பயங்கரவாதிகள் அழைத்து செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்டுப்பகுதி வழியாக வந்த பயங்கரவாதிகள், புதிதாக இணைந்த 4 பேரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். மேலும், பலத்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 4 பேர் பாதுகாப்பு படையிடம் சரணடைந்தனர்.
மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகள் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MilitantsSurrender
கேரள மாநிலம் கொள்ளம் பகுதியில் தனது கடந்த கால வாழ்க்கையில் நடந்த தவறு குறித்து பாவ மன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை, அவர் கூறிய தகவலை வைத்துக் கொண்டு அந்த பாதிரியார் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த தகவலை இன்னும் சில பாதிரியார்களுக்கும் பகிர்ந்து அவர்களும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அவரது கணவரின் மூலமாக வெளிவந்ததை அடுத்து மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற கேரளாவின் சில பாதிரியார்கள் முயற்சி செய்த தகவலும் அம்பலமானது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து 4 பாதிரியார்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னர் ஜாப் மேத்யூ, ஜான்சன் மேத்யூ ஆகிய இரண்டு பாதிரியார்களும் தாமாக முன்வந்து சரணடைந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு ஜாமின் அளிக்கப்பட்டது.
இதேபோல், தலைமறைவாக இருந்த 2 பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் மற்றும் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோர் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்களின் மனு நிராகரிக்கப்படவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த அமர்வு, அவர்களின் மனுவை நிராகரித்து சரணடையும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் திருவல்லா நீதிமன்றத்தின் முன்பும், பாதிரியார் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் போலீசாரிடமும் சரணடைந்தனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இருவரும் சரணடைந்ததால், விரைவில் இவர்கள் ஜாமினில் வெளிவருவார்கள் என தெரிகிறது. #Kerala #PriestRapeCase
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப்போரை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அங்கு கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கும் தலீபான்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தன.
குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான ஜோஸ்ஜான் மாகாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருந்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அழுத்தம் வந்தது. இந்த நிலையில் அங்கு 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்தனர்.
இதுபற்றி வட பகுதி ராணுவ தளபதி முகமது ஹனிப் ரெஸாயீ கூறும்போது, “கடந்த காலத்திலும் இப்படி ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண் அடைந்தது உண்டு. ஆனால் இந்த முறை அதன் தலைவர்களில் ஒருவரும், துணைத்தலைவரும் 150-க்கும் மேற்பட்டோருடன் சரண் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.
இதன்மூலம் வட பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும் அவர் கூறினார். #Afghanistan #tamilnews
தஞ்சையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 19-ந்தேதி ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களை வரவேற்க இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்.
அப்போது நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவர் , வைகோ குறித்து தெரிவித்த கருத்தால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கொடி கம்பத்தால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் ம.தி.மு.கவை சேர்ந்த 2பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ம.திமு.க.வின் திருச்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சீமான், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபு உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 5பேர் கைது செய்யப்பட்டனர். சீமான் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.
இதனிடையே ஏர்போர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும், போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது புகார் செய்தார். அதன் பேரில் சீமான் மற்றும் ம.தி.மு.க. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு உள்பட இரு தரப்பினரை சேர்ந்த பலர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் வெல்ல மண்டி சோமு, நிர்வாகிகள் ராஜமாணிக்கம், சுப்பிரமணி உள்பட 6 பேர் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 6 ல் சரணடைந்தனர். அவர்களுக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். #tamilnews
மானாமதுரை அருகே ஆவரங்காட்டில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
இதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் கொலை தொடர்பாக பழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய சுமன், அருண்குமார், அக்கினி, ராஜேஷ், அஜய் தேவன் ஆகிய 5 பேர் இன்று மதுரை மாவட்ட ஜே.எம்.(எண்.4) கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து நீதிபதி கவுதமன், 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். #tamilnews
கடந்த 10-ந் தேதி சித்தூர் குடிபாலா, நரஹரிபேட்டை செக்போஸ்ட் அருகே அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இது குறித்து, குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அவர்களில் ஒருவர் சென்னை கே.கே.நகரை சேர்ந்த அசோக்குமார் என்றும், மற்றொருவர் குன்றத்தூரை சேர்ந்த கோபி என தெரிந்தது.
இது குறித்து, 3 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கசித்தூர் போலீஸ் நிலையத்தில் 5 பேர் சரண் அடைந்தனர்.
விசாரணையில், அவர்கள் சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரமேஷ் (எ) குட்டி (வயது 35), தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக் (23), குன்றத்தூரை சேர்ந்த குழந்தைவேல் (23), சிவா (26), நந்தம்பாக்கம் சுமேஷ் (32) என்பது தெரியவந்தது.
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் சீசிங் ராஜா, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர். இவருக்கும் அசோக்குமாருக்கு நட்பு ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சனைக்குரிய நிலம் ஒன்று அசோக்குமாரிடம் விற்பனைக்கு வந்தது. அவர் சீசிங் ராஜாவிற்கு தெரிவித்து, இருவரும் சேர்ந்து ரூ.3 கோடிக்கு அந்த நிலத்தை வாங்கி உள்ளனர். பின்னர், அந்த நிலத்தை அசோக்குமார் கடந்த மாதம் ரூ.10 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். சீசிங் ராஜாவுக்கு பங்கு தொகை வழங்காமல் ஏமாற்றி உள்ளார்.
இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீசிங் ராஜா, அசோக்குமாரை கொலை செய்யதிட்டமிட்டார்.
கடந்த 9-ந் தேதி அசோக்குமார், சீசிங் ராஜா, அசோக்குமாரின் நண்பர் கோபி உட்பட 7 பேர் ஒரு கொலை வழக்கில் திருவள்ளூர் கோர்ட்டுக்கு சென்றனர். பின்னர், அனைவரும் சேர்ந்து மது குடித்தனர். இரவு 11 மணியளவில் ஆந்திர மாநில எல்லைப்பகுதிக்கு வந்த அவர்கள் அசோக்குமாரிடம் பணம் தருமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அசோக்குமாரின் நண்பர் கோபி, சீசிங் ராஜாவிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
சீசிங் ராஜா மீது சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது, அவர் தான் செய்த குற்றங்களை மறைக்க போலியான ஆட்களை சரணடைய வைத்து தப்பி வருவதும் தெரியவந்தது.
முக்கிய குற்றவாளியான சீசிங் ராஜாவை கைது செய்ததால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னை சென்ற ஆந்திரா போலீசாரை தமிழக போலீசார் அலைக்கழித்துள்ளனர்.
சீசிங் ராஜா குறித்து விசாரித்த போது அதற்கு போலீசார் சரியாக பதில் அளிக்காமல் தட்டி கழித்துள்ளனர். தலைமறைவாக உள்ள சீசிங் ராஜாவை பிடிக்க முயன்ற போது, அவர் சில போலீசாரின் உதவியால் தப்பி செல்வது தெரியவந்தது என சித்தூர் குற்றவியல் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார்.#tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்