என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 106392
நீங்கள் தேடியது "slug 106392"
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் அற்புதஆரோக்கிய அன்னை தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர்திருவிழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. இதன் நிறைவு நாள் அன்று ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடைபெற்றது.
முன்னதாக ஜெபமாலை மற்றும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9.45 மணிக்கு தேரை புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை மைக்கேல் அடிகளார், தஞ்சை தூய மரியன்னை இளம் குருமட அதிபர் அகஸ்டின் அடிகளார் ஆகியோர் ஆகியோர் புனிதம் செய்து தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் தேர்பவனி நடைபெற்றது.
முதலில் காவல்சம்மனசு சிறிய தேர் வர அதைத்தொடர்ந்து சூசையப்பர், மரியாள், இருதய ஆண்டவர், ஆரோக்கிய அன்னை தேர் என 5 தேர் பவனி வந்தது. தேர் ஆலயத்தில் இருந்து தொடங்கி மாதாகோவில் தெரு வழியாக ஊரை சுற்றி ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று காலை 9 மணிக்கு திருவிழா திருப்பலி லாரன்ஸ்அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதுன்மை வழங்கும் விழா நடைபெற்றது. பின்னர் கொடியிறக்கம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பபியான்அடிகள், அருட்சகோதரிகள், கிராம மக்கள் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.
முன்னதாக ஜெபமாலை மற்றும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9.45 மணிக்கு தேரை புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை மைக்கேல் அடிகளார், தஞ்சை தூய மரியன்னை இளம் குருமட அதிபர் அகஸ்டின் அடிகளார் ஆகியோர் ஆகியோர் புனிதம் செய்து தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் தேர்பவனி நடைபெற்றது.
முதலில் காவல்சம்மனசு சிறிய தேர் வர அதைத்தொடர்ந்து சூசையப்பர், மரியாள், இருதய ஆண்டவர், ஆரோக்கிய அன்னை தேர் என 5 தேர் பவனி வந்தது. தேர் ஆலயத்தில் இருந்து தொடங்கி மாதாகோவில் தெரு வழியாக ஊரை சுற்றி ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று காலை 9 மணிக்கு திருவிழா திருப்பலி லாரன்ஸ்அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதுன்மை வழங்கும் விழா நடைபெற்றது. பின்னர் கொடியிறக்கம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பபியான்அடிகள், அருட்சகோதரிகள், கிராம மக்கள் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டியில் மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தினை தொடர்ந்து நவ நாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை கொடி ஊர்வலம், சிறு சப்பர பவனியுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பூண்டி மாதா பேராலயத்தில் பங்குத்தந்தையர்களாக பணியாற்றி மறைந்து, பூண்டிபேராலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அருட்தந்தையர்கள் லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் அடிகளார் நினைவு திருப்பலி நேற்று காலை 6 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் மரியா-அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நடைபெற்றது.
இந்த திருப்பலியில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டிமாதாபேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் மறைமாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர். திருப்பலி நிறைவடைந்தவுடன் குடந்தை பெஸ்கி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரவு 10 மணிக்கு மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது. தேர்பவனியை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். தேர்பவனி தொடங்கியதும் வாணவேடிக்கை நடைபெற்றது. தேர்பவனியின் போது பக்தர்கள் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மரியா- புதியஏவாள் என்ற பெயரில் திருப்பலி நிறைவேற்றப்படுவதுடன் பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
பூண்டி மாதா பேராலயத்தில் பங்குத்தந்தையர்களாக பணியாற்றி மறைந்து, பூண்டிபேராலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அருட்தந்தையர்கள் லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் அடிகளார் நினைவு திருப்பலி நேற்று காலை 6 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் மரியா-அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நடைபெற்றது.
இந்த திருப்பலியில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டிமாதாபேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் மறைமாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர். திருப்பலி நிறைவடைந்தவுடன் குடந்தை பெஸ்கி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரவு 10 மணிக்கு மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது. தேர்பவனியை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். தேர்பவனி தொடங்கியதும் வாணவேடிக்கை நடைபெற்றது. தேர்பவனியின் போது பக்தர்கள் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மரியா- புதியஏவாள் என்ற பெயரில் திருப்பலி நிறைவேற்றப்படுவதுடன் பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X