search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலவரம்"

    கலவரத்தால் பாதித்த ஷில்லாங்கில் பிரச்சினைக்கு உரிய பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று கொடி அணி வகுப்புகள் நடத்தினர்.
    ஷில்லாங்:

    மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் தெம்மேட்டர் என்ற இடத்தில் 31-ந் தேதி மாலை பஸ் ஊழியர் ஒருவர் உள்ளூர் பொதுமக்களால் தாக்கப்பட்டார். அவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானதால், பஸ் டிரைவர்கள் திரண்டனர். இதில் கலவரம் மூண்டது. கல்வீச்சு நடந்தது. போலீஸ் படை விரைந்து வந்து கூட்டத்தை விரட்டியடிக்க கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். போலீசார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அங்கு பல இடங்களுக்கும் கலவரம் பரவியது. நிலைமை மோசமானதால் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதள சேவை முடக்கப்பட்டது.

    மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ராணுவம் விரைந்தது. பிரச்சினைக்கு உரிய பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று கொடி அணி வகுப்புகள் நடத்தினர்.

    கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்து 200 பெண்கள், குழந்தைகள் உள்பட 500 பேரை ராணுவம் மீட்டது. அவர்களுக்கு ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது.

    முதல்-மந்திரி கொன்ராட் கே. சங்மா, உயர் மட்டக்குழுவை கூட்டி ஷில்லாங் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த உசிலம்பட்டி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    உசிலம்பட்டி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் (வயது45) என்பவர் நேற்று 12-வது நபராக இறந்தார். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டியை சேர்ந்தவர்.

    விவசாயம் செய்து வந்த ஜெயராமன், ஆரம்பத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில் இருந்துள்ளார். பின்னர் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினரான அவர், விவசாயிகளின் பிரச்சினை மற்றும் பொது பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

    மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரங்களையும் வழங்கி வந்த ஜெயராமன், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்க மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகளுடன் சென்றார்.

    அங்கு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது போலீசார் துப்பாக்கி சூட்டில் தலையில் காயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெயராமன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    அவருக்கு பாலம்மாள் என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். கருமாத்தூரில் உள்ள கல்லூரியில் நந்தினி இந்த ஆண்டுதான் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் புதுமாப்பிள்ளை இறந்த தகவல் அறிந்த அவரது இளம்மனைவி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று பொது மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் பலியானார்கள். இதனால் தூத்துக்குடி நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்த மணிராஜூம் (வயது 25) ஒருவர். இவர் தொடக்கத்தில் இருந்தே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வந்தார்.

    இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. நேற்று நடந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க அவர் காலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார். துப்பாக்கி சூட்டில் அவர் பலியானது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    புதுமாப்பிள்ளை மணிராஜ் இறந்த தகவல் அறிந்த அவரது இளம் மனைவி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. வாழ்க்கையை தொடங்கிய 3 மாதத்திலேயே மணிராஜின் வாழ்வு முடிந்துபோனது.
    தூத்துக்குடியில் நிலைமை பதட்டமாக உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை தலைமை செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் பொதுமக்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

    இதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.



    தூத்துக்குடியில் நிலைமை பதட்டமாக உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.

    இதைதொடர்ந்து மேலும் 2 ஆயிரம் போலீசார் மதுரை உள்பட பக்கத்து மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் இன்றும் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

    இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை தலைமை செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், உள்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. #SterliteProtest

    ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி அறவழியில் போராட்டம் நடத்தியவர்களை காட்டுமிராண்டித்தனமாக போலீசார் சுட்டுக்கொன்றது கண்டிக்கத்தக்கது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #SterliteProtest #Vaiko
    தூத்துக்குடி:

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி அறவழியில் போராட்டம் நடத்தியவர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டு கொன்றுள்ளார்கள். 50 ஆயிரம் மக்கள் எந்த ஆயுதமும் இன்றி அறவழியில் திரண்டு வந்தார்கள்.

    அவர்களை வேன்களில் ஏறி நின்றும், கட்டிடங்களில் மறைந்து நின்றும் போலீசார் சுட்டுக்கொன்றுள்ளார்கள். சீருடை அணியாத போலீசார் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 22 வருடமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மகராஷ்டிராவில் 3 நாள் போராட்டத்திலேயே இந்த கம்பெனியை அரசு இழுத்து மூடியது. அங்கு எந்த போலீஸ் நடவடிக்கையும் இல்லை.

    இங்குதான் போலீசாரால் வன்முறை நடத்தப்பட்டுள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவி கொல்லப்பட்டுள்ளார். வேலைக்கு சென்றவர் பலியாகி உள்ளார். இந்த சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது. துப்பாக்கி சூடு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு இழப்பீடு தீர்வாகாது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதுதான் தீர்வு.

    இவ்வாறு அவர் கூறினார்.



    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து கண்ணீர் விட்டு அழுது ஆறுதல் கூறினார். அப்போது வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து நடந்த விவரங்களையும் கேட்டறிந்தார். அங்கு நின்ற டாக்டர்களிடம் தரமான சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார்.  #SterliteProtest #Vaiko

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பா.ஜ.க.தான் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #SterliteProtest #ChidambaramAttackBJP
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல்துறையின் இந்த அடக்குமுறைக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுத்ததால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பா.ஜ.க. கடுமையாக சாடியுள்ளார்.

    தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்? சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை. காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ் நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா? என சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறியுள்ளார். #SterliteProtest #ThoothukudiFiring #ChidambaramAttackBJP
    ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பலியான 10 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.



    அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள். ஏற்கனவே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று அவர்களது உறவினர்கள் அறிவித்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை மூட எழுத்து பூர்வமாக அரசு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும்”என்றனர். தொடர்ந்து அரசை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  #SterliteProtest

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #BanSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்று பொதுமக்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியது. இதையொட்டி ஏற்கனவே பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்ட குழுவினருடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கூறினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் போராட்ட குழுவினர் திட்டமிட்டப்படி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தார்கள்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் 4 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 3 ஆயிரம் போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர்.

    தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம் தெற்கு போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. போராட்டக்குழுவினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டனர்.

    மேலும் கலவரம் ஏற்பட்டால் தடுக்க கூடிய வஜ்ரா மற்றும் வருண் வாகனங்களும் நிறுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை அருகே போராட்டக்காரர்கள் செல்லாத வகையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 15 இடங்களில் தற்காலிக வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டன.

    மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து போராட்டத்துக்கு வருகிறார்களா? என்று முழுமையாக கண்காணிக்கப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களை அடைத்து வைப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    அதேபோன்று போராட்டத்தில் தீவிரம் காட்டி வருபவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனிடையே மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டனர். பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் அணி அணியாக திரண்டு வந்தார்கள். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி இல்லை என்றனர்.

    அப்போது போலீசாருக்கும், பொது மக்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு போலீஸ் தடையையும் மீறி பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு சென்றார்கள்.



    இதனிடையே தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே போராட்டக்குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டாது. இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்களும் கல்வீசினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

    பொதுமக்கள் கல்வீசியதால் தங்களை காத்து கொள்ள போலீசார் ஓடும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்த போலீஸ் வாகனங்களை தாக்கினார்கள். சிக்னல் மற்றும் தடுப்புகளும் உடைத்து எறியப்பட்டன. தொடர்ந்து போலீசாரை கடந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறினார்கள்.

    அதே வேளையில் மடத்தூர் பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்றார்கள். அவர்களை மடத்தூர் பகுதியில் போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும்-பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் எண்ணிக்கையை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பதட்டம் உண்டானது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    எனினும் போலீஸ் தடுப்பையும் மீறி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றார்கள். தூத்துக்குடி 3-ம் மைல் பாலம் அருகே பொதுமக்கள் திரண்டு சென்ற போது கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். தடியடியும் நடத்தினார்கள்.

    இந்த சம்பவத்தின் போது போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்த தனியார் வங்கி மீதும் கல்வீசப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அப்போது பொதுமக்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    இந்த சம்பவத்தில் ஏராளமானவர்கள் காயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 10 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டது.

    ஜெயராமன், கிளாட்சன்,கந்தையா,வினிஸ்டா,தமிழரசன்,சண்முகம், மணிராஜ், கார்த்திக்,  உள்ளிட்ட 9 பேர் இதுவரை உயிரிழந்தனர். இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சில மணிநேரத்திற்கு பின்னர் திரேஸ்புரம் பகுதியில் மீண்டும் போலீசார் போராட்டக்காரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி பகுதி முழுவதுமே போர்க்களமானது. இந்த போராட்டங்களால் தூத்துக்குடி நகர் முழுவதுமே பதட்டம், பரபரப்பாக காணப்பட்டது. #SterlitepProtest #BanSterlite
    மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளதால் தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். #Yechury #PanchayatElection #Pollviolence
    புது டெல்லி :

    மேற்கு வங்காளம் மாநிலத்தின்பஞ்சாயத்து தேர்தல் வாக்குபதிவு  இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்  சீதாராம் யெச்சூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :-

    தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையை மேற்கு வங்காள தேர்தல் ஆணையம் மீட்டெடுக்க வேண்டும். இல்லையேல் ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் திரிணாமுல் காங்கிரஸின் செயலுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பது போலாகிவிடும்.

    மேலும்,  ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் திரிணாமூல் காங்கிரசின் இந்த செயல் மேற்கு வங்காள மாநிலத்துக்கு வெளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு யெச்சூரி தெரிவித்துள்ளார். #Yechury #PanchayatElection #Pollviolence
    ×