search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டனம்"

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், உற்பத்தி வரியை குறைக்கும்படி வலியுறுத்தி உள்ளார். #PetrolPrice #MKStalin
    சென்னை:

    இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வெளிநாடுகளுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, உள்நாட்டில் தாறுமாறாக விலையை உயர்த்தி வருவதாக பொதுமக்கள் தரப்பில் விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில்  பெட்ரோல் விலையை  உயர்த்திவிட்டு வெளிநாடுகளுக்கு பெட்ரோல் லிட்டர் 38 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 34 ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்வது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது எனக் கூறியுள்ளார்.


    பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்துவதற்கு எக்சைஸ் வரியை குறைத்திட மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். #PetrolPrice #MKStalin
    வழக்கு ஒன்றில் மேல்முறையீடு செய்ததில் தாமதம் ஏற்படுத்தியது தொடர்பாக வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது. #SupremeCourt #IncomeTax
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஹபுர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் (எச்.பி.டி.ஏ.) என்ற அமைப்பு, வருமான வரிச்சட்டத்தில் விலக்கு கேட்டு வருமான வரித்துறைக்கு மனு செய்தது. இதை காசியாபாத் வருமான வரித்துறை ஆணையர் கடந்த 2006-ம் ஆண்டு நிராகரித்தார்.

    இதை எதிர்த்து அந்த அமைப்பு வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடியது. இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயமும், மானிய பதிவுக்கு ஒப்புக்கொண்டது. இதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி தள்ளுபடி செய்தது.



    ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு, மேல்முறையீட்டுக்கு 596 நாட்கள் தாமதமானது ஏன்? என விளக்கம் கேட்டது. இதற்கு போதுமான விளக்கம் அளிக்கப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக நீதிபதிகள் கூறும்போது, ‘தயவு செய்து இப்படி செய்யாதீர்கள். சுப்ரீம் கோர்ட்டு என்பது சுற்றுலா தலம் அல்ல. இந்திய சுப்ரீம் கோர்ட்டை நீங்கள் இப்படித்தான் நடத்துவீர்களா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    அவர்கள் மேலும் கூறுகையில், ‘வேறுவகையில் சொல்ல வேண்டுமானால், மனுதாரர்கள் (வருமான வரித்துறை) முற்றிலும் தவறான தகவல்களை கோர்ட்டுக்கு வழங்கி இருக்கின்றனர். வருமான வரித்துறை ஆணையர் வழியாக மத்திய அரசு இந்த பிரச்சினையை வெகு இயல்பாக எடுத்துக்கொண்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது’ என்றும் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து வருமான வரித்துறையின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தாமதத்துக்கான காரணம் குறித்து கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர். இந்த தொகையை 4 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டின் சட்ட சேவை குழுவிடம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.  #SupremeCourt #IncomeTax
    ஆர்.எஸ்.எஸ். தவிர அனைத்து அமைப்பையும் மூடி விடுங்கள் என்று தன்னார்வலர்கள் கைதுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலம் பீமா கோரேகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இடது சாரிகள் மாநாட்டை தொடர்ந்து மராத்தா சமூகத்தினரும் தலித் சமூகத்தினரும் மோதிக்கொண்டனர்.

    மாநாட்டில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ‘‘ராஜிவ் பாணியில் மோடி கொலை செய்யப்படுவார் என்று எழுதப்பட்டிருந்த கடிதம் சிக்கியது. இந்த கடிதத்தை எழுதிய ஐதராபாத்தைச் சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவை புனே போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் வட மாநிலங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை குறி வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தன்னார்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் சமூக நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‘இந்தியா என்பது ஒரே ஒரு தன்னாவ தொண்டு நிறுவனம் மட்டுமே இருக்கும் இடம். அதுதான் ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிறது.

    மற்றவைகளை எல்லாம் மூடி விடுங்கள். தன்னார்வலர்கள் அனைவரையும் ஜெயிலில் தள்ளுங்கள், குறை கூறுபவர்களை சுட்டுத் தள்ளுங்கள், புதிய இந்தியாவுக்கு வரவேற்பு’ என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். #Congress #RahulGandhi
    புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #RSS
    புதுடெல்லி:

    கடந்த ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக 9 செயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே போலீசார் சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர். மேலும், டெல்லி, பரீதாபாத், கோவா, ராஞ்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வீட்டில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகளுக்கு பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், இந்தியாவில் ஒரே ஒரு தொண்டு நிறுவனம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டன. அரசை எதிர்த்து பேசினால் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. புதிய இந்தியாவுக்கு நல்வரவு என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #RSS
    வேலையில்லா திண்டாட்டமும், வளர்ச்சி திட்டங்களில் இருந்து மக்களை ஒதுக்குவதும் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உருவாக வழிவகுத்துவிடும் என்ற ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. #RahulGandhi #ISISRemark #BJP
    புதுடெல்லி:

    ஜெர்மனியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹம்பர்க் நகரில் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், ‘வேலையில்லா திண்டாட்டமும், வளர்ச்சி திட்டங்களில் இருந்து மக்களை ஒதுக்குவதும் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உருவாக வழிவகுத்துவிடும்’ என்று கூறினார்.

    ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா போன்ற குழுக்களின் கொள்கைகளை ஏற்கனவே நாம் நிராகரித்து இருக்கிறோம். அப்படியிருக்க ராகுல் காந்தியின் அச்சுறுத்தலுக்கு பின்னால் இருக்கும் பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தலைவரான பிறகும், நாட்டில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களை ராகுல் காந்தி இன்னும் புரிந்து கொள்ளவில்லை’ என்று தெரிவித்தார்.

    இதைப்போல பா.ஜனதா கட்சியும் ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. #RahulGandhi #ISISRemark #BJP
    கருணாநிதி உடல் அடக்கத்துக்கு வந்த ராகுலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்காததை சகித்துக்கொள்ள முடியாது என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #KarunanidhiFuneral #RahulGandhi #EVKSElangovan
    கோபி:

    முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்று ராகுல்காந்தி சென்னை வந்தார். அவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு தமிழக அரசு சரியான பாதுகாப்பு தரவில்லை. பொதுமக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு ராகுல்காந்தி தள்ளப்பட்டுவிட்டார்.

    இந்தியாவிலேயே ராகுல் காந்திக்கு முதல்தர பாதுகாப்பு தர வேண்டியது சட்டமாக உள்ளது. ஆனால் இங்கு எந்தவிதமான பாதுகாப்பையும் இந்த அரசு அளிக்கவில்லை. இது இந்த அரசின் கையாளாகாத தனத்தை காட்டுகிறது.


    பிரதமர் மோடிக்கு கொடுத்த பாதுகாப்பை ராகுலுக்கு ஏன் அளிக்கவில்லை? நாங்கள் ராகுலுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பாதுகாப்பு தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

    இந்தியாவில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ராகுல் காந்திக்கு ஏன் பாதுகாப்பு தரவில்லை? என எழுதி வருகின்றனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளவருக்கு பாதுகாப்பு குளறுபடியா? இது சகித்துக்கொள்ள முடியாது. இதை உயர்மட்ட விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarunanidhiFuneral #Congress #RahulGandhi #EVKSElangovan
    ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். #HighCourt #InquiryCommission
    சென்னை:

    கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்த போது சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமை செயலக கட்டிடம் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி புதிய தலைமை செயலக கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது முழு வீச்சில் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் விசாரணை கமி‌ஷனை அமைத்து அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டது.

    விசாரணை கமி‌ஷன் விசாரணைக்கு ஆஜராகுமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.


    இதை எதிர்த்து கருணாநிதி உள்பட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தனர். அதில் விசாரணை கமி‌ஷனுக்கு தடை விதிக்குமாறு கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ரகுபதி கமி‌ஷன் விசாரணைக்கு தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜரானார்.

    அவரிடம் தமிழக அரசின் செயலுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். 2015-ம் ஆண்டு இந்த விசாரணை கமி‌ஷன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும், இத்தனை ஆண்டுகளாக அந்த கமி‌ஷனுக்கு அலுவலகம், ஊழியர்கள் என்று பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.

    ‘தலைமை செயலகத்துக்கு கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால், அது குறித்து ஊழல் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டியது தானே? அதற்கு பதில், ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் எதற்காக விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும்?

    இதனால், நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறையாதா?’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்த வழக்கை 26-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

    அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மீண்டும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கண்துடைப்புக்காகவே இது போன்ற விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.

    இதுபோன்ற ஆணையத்திற்காக பொது மக்களின் பணத்தை வீணடிக்க கூடாது. இதுவரை அரசால் எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன?

    அவற்றிற்கு எத்தனை வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? இதற்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? இந்த ஆணையங்கள் தரும் அறிக்கைக்கு எந்த பயனும் இல்லை.

    இந்த ஆணையத்தினால் அரசு சாதித்தது என்ன? இந்த ஆணையங்கள் விசாரணையை முடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்து கொள்கின்றன?

    ஆணையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் தானா? அவர்களுக்கு அரசு தானே சம்பளம் தருகிறது. இது குறித்து பிற்பகலில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். #HighCourt #InquiryCommission
    ராஜஸ்தானில் பசுக்களை கடத்தியதாக கருதி வாலிபர் ஒருவரை வன்முறைக் கும்பல் அடித்துக் கொன்றது. இதற்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார்.
    ஜெய்ப்பூர்:

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.

    இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த உத்தரவுக்கு பிறகும் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகர் அருகே பசு பாதுகாவலர்கள் அப்பாவி ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

    அரியானா மாநிலம் கலோகான் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான்(வயது 28). இவர் தனது நண்பரான அஸ்லாம் என்பவருடன் 2 பசுக்களை தனது சொந்த ஊருக்கு அல்வார் அருகேயுள்ள லாலாவாண்டி காட்டு்ப் பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர்கள் இருவரும் பசுக்களை கடத்திச் செல்வதாக கருதிய பசு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் இருவரையும் வழி மறித்து கடுமையாக தாக்கினர்.

    அப்போது அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்பர்கான் மட்டும் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரை வன்முறைக் கும்பல் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தது.

    இதில் படுகாயம் அடைந்த வாலிபர் அக்பர் கானை சிலர் மீட்டு அருகில் உள்ள ராம்கார் நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய உடல் ராம்கார் அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அக்பர்கானின் குடும்பத்தினர் விரைந்தனர்.

    இந்த படுகொலை தொடர்பாக ராம்கார் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 பசுக்களும் கிராம மக்களிடம் இருந்து மீட்கப்பட்டன.

    இந்த சம்பவத்துக்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 
    வரம்பு மீறி செயல்படும் புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு மார்க்சிஸ்டு கம்யூ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவதற்கு பட்ஜெட்டிற்கான கோப்புகளை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவரும் கவர்னர் கிரண்பேடியின் அடாவடி செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. 

    புதுவையில் பொருளாதார மந்தம், வேலையின்மை, கடன் சுமை என அசாதாரன சூழ்நிலை ஏற்ப்பட்டு வரும் நிலையில் செயல் மக்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ளது.

    மத்திய பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மாநில கவர்னர்களை தனது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. இதனால் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கோட்பாடு சிதைக்கப்படுகின்றன. மாநில கவர்னர்களின் அத்துமீறிய செயல்பாடுகளால் கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

    புதுவையிலும் கவர்னர் மக்கள் ஆட்சியை புறந்தள்ளி போட்டி ஆட்சியை நடத்தி வருகிறார். அனைத்து துறைகளிலும் தன்னிச்சையாக வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார் தற்போது நடப்பாண்டிற்க்கான மொத்த வரவு, செலவு திட்ட மதிப்பீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்க்கு உரியதாகும்.

    மேலும் கவர்னர் தன்னிச்சையாக 3.பா.ஜனதா தலைவர்களை நியமன உறுப்பினர்களாக மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அவசர அவசகரமாக இரவில் பதவி பிரமானமும் செய்து வைத்தார். இத்தகைய கீழ்த்தரமான அரசியல் மற்றும் ஜனநாயக படுகொலை செயல் புதுவையில் எப்போதும் நடந்ததில்லை.

    மாநில அரசால் பரிந்துரை செய்யப்பட்டு கவர்னர் மூலமாக மத்திய அரசிடம் அனுமதி பெறுவது தான் சட்டமும், நடைமுறையும் மரபுமாக இருந்து வருகிறது.

    ஆகவே, புதுவை காங்கிரஸ் அரசு மாநிலத்தின் உரிமை, மக்களாட்சியின் அதிகாரத்தை பாதுகாத்திட நியமன உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் உறுதியாக சட்டபடியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

    புதுவை மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரம், சுதந்திரமான, ஜனநாயக பூர்வமான செயல்பாடுகளுக்கு மாநில அந்தஸ்து பெறுவது தான் நிரந்தர தீர்வாகும். ஆகவே புதுவை மாநிலத்தின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாத்திட மாநில அந்தஸ்து பெறுவதற்கான முயற்ச்சியில் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும்.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    ஜாமீன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பாரதிராஜா இளமையாகி விட்டாரா? இப்போது அவரது வயதும், உடலும் ஒத்துழைக்க தயாராக உள்ளதா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
    சென்னை:

    சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா, விநாயகரை இறக்குமதி கடவுள் என்றும், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு அவமானம் ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார்.

    இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நிபந்தனை அடிப்படையில் பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதில், சைதாப்பேட்டை கோர்ட்டில் உத்தரவாதம் அளித்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் 3 வாரங்களுக்குள் போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டது.

    ஆனால் இந்த நிபந்தனையை பாரதிராஜா நிறைவேற்றவில்லை. இதற்கு கால அவகாசம் வேண்டும் என்று பாரதிராஜா தரப்பில் புதிதாக ஐகோர்ட்டில் மனுதாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை நீதிபதி பி.ராஜமாணிக்கம் விசாரித்தார். முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாத பாரதிராஜாவுக்கு ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதற்காக நிபந்தனையை நிறைவேற்றவில்லை என்று பாரதிராஜாவின் வக்கீலிடம், நீதிபதி ராஜமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.


    அதற்கு, பாரதிராஜாவுக்கு வயதாகி விட்டது. உடல் நலம் சரியில்லை என்று அவரது வக்கீல் பிரபாகரன் கூறினார்.

    இப்போது நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பாரதிராஜா இளமையாகி விட்டாரா? இப்போது அவரது வயதும், உடலும் ஒத்துழைக்க தயாராக உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

    பாரதிராஜாவின் மனுவுக்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது ரியாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். பாரதிராஜா தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் பல தவறுகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையடுத்து, இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்வதாகவும், அவரது வக்கீல் பிரபாகரன் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #HighCourt #BharathiRaja
    நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் 0 அல்லது அதைவிட குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #NEET
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மருத்துவக் கல்வி வணிக மயமாவதைத் தடுக்கவும், அதன் தரத்தை உயர்த்தவும் தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், அது முற்றிலும் பொய் என்பதை புள்ளி விவரங்கள் நிரூபித்திருக்கின்றன. நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் ‘0’ அல்லது அதைவிட குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பது தான் புள்ளிவிவரம் சொல்லும் சேதியாகும். இது கல்வியை கடைச்சரக்காக விற்கும் செயல் ஆகும்.

    2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 720-க்கு 150-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பாடவாரியான நீட் தேர்வு மதிப்பெண்களை ஒரு ஆங்கில நாளிதழ் ஆய்வு செய்தது. அதில் நீட் தேர்வில் 150-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேசிய தரவரிசையில் 5 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் பிந்தைய இடத்தை பிடித்தவர்களில் 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்கு மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    நீட் தேர்வு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் தலா 180 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இத்தேர்வில் 500-க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் தான் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். 150-க்கும் குறைவான மதிப்பெண் என்பது எந்த வகையிலும் பரிசீலிக்கக் கூட தகுதியானதல்ல. ஆனாலும், இந்த மதிப்பெண் பெற்றவர்களில் 1990 பேர் மருத்துவப் படிப்பில் சேர முடிந்ததற்கு காரணம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு சாதகமான விதிகள் தான்.

    அதிலும் குறிப்பாக இந்த 1990 பேரில் 400 பேர் இயற்பியல்- வேதியியல் பாடங்களில் 9-க்கும் குறைவான ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 110 பேர் இந்த இரு பாடங்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ பூஜ்ஜியம் அல்லது அதை விடக் குறைவான எதிர்மறை மதிப்பெண்களை பெற்றுள்ளனர். எனினும், உயிரியல் பாடத்தில் சற்று கூடுதலான மதிப்பெண் எடுத்ததால் நீட் தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெற முடிந்துள்ளது. இவ்வாறு தேர்ச்சி பெற்ற 530 பேரில் 507 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து ஓராண்டை முடித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு சுமார் 60,000 இடங்கள் மட்டுமே இருந்தன. தகுதி அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் தரவரிசையில் முதல் 75,000 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தரவரிசையில் 50,000-க்குள் வந்த பலருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலோ வாய்ப்பு கிடைக்கவில்லை.

    அதே நேரத்தில் தரவரிசையில் 5.30 லட்சத்திற்கும் கீழ் ஆறரை லட்சமாவது இடத்தைப் பிடித்தவர்களுக் குக் கூட தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் 50,000க்குள் இடங்களைப் பிடித்தவர்களால் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலுத்திப் படிக்க வசதி இல்லை. அதனால் அவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதேநேரத்தில் மதிப்பெண்களே இல்லாமல், பணத்தை குவித்து வைத் திருப்பவர்களால் நிகர் நிலைப் பல்கலைகளில் சேர முடிந்துள்ளது. அப்படியா னால், மருத்துவப் படிப்பில் சேரத் தேவை மதிப்பெண்களா... கோடிகளா? என்ற வினா எழுகிறது.

    இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 180-க்கு பத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களால் மருத்துவக் கல்வியை எவ்வாறு கற்க முடியும்? அதன் நுணுக்கங்களை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? இவர்கள் தட்டுத்தடுமாறி மருத்துவர்கள் ஆனாலும் கூட இவர்கள் தரும் மருத்துவம் எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும்? என்ற வினாக்களுக்கு மத்திய அரசு தான் விடையளிக்க வேண்டும்.

    12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு 35 சதவீதம் மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால், நீட் தேர்வில் அத்தகைய கட்டாயம் எதுவும் கிடையாது. இத்தகைய சூழலில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதி இல்லை என்றும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் படிக்க தகுதியுள்ளது என்றும் கூறுவது எந்த வகையான சமூகநீதி? என்பதை நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.

    உண்மையில் நீட் தேர்வு 2010ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது, அதில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள், அத்தகைய சூழலில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் பாட வாரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிபந்தனை நீக்கப்பட்டது. இது தான் மருத்துவக்கல்வி சீரழிவின் தொடக்கமாகும்.

    இத்தகைய முறையில் மருத்துவப் படிப்பின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்த முடியாது. ஓட்டைகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய இதை விட சிறந்த காரணம் தேவையில்லை.

    எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி இடங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு மட்டும் கடுமையான விதிகளுடன் நீட் தேர்வை நடத்த வேண்டும். அப்போது தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss #NEET
    இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறும் என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சசிதரூர் பேசுகிறார் என சுப்பிரமணியன்சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #ShashiTharoor #HinduPakistan
    புதுடெல்லி:

    திருவனந்தபுரம் பாராளு மன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூர், 2 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்று பேசினார்.

    அவர் பேசுகையில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் நமது நாட்டின் ஜனநாயகம் சிதைந்து விடும். பாகிஸ்தானை போல சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்காத புதிய நாடாக இந்தியா உருவாகும்.

    காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் எதற்காக போராடி சுதந்திரம் பெற்றார்களோ, அது இல்லாமல் போய் விடும். மொத்தத்தில் இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறி விடும் என்றார்.

    சசிதரூரின் பேச்சு ஊடகங்களில் வெளியானதும் பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பிட் பிட்ரா கூறும்போது, இந்திய ஜனநாயகத்தின் மீதும், இந்துக்கள் மீதும் சசிதரூர் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி உள்ளார். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் மதிப்பை குறைத்து விட்டார். பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மீது வெறுப்புணர்வு அதிகமானதால் காங்கிரஸ் தலைவர்கள் இவ்வாறு பேசி வருகிறார்கள். இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமியும், சசிதரூர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணமடைந்ததால் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, சசிதரூருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சசிதரூர் மீது பிரதமர் மோடி இரக்கம் காட்ட வேண்டும். அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதா? என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பாரதிய ஜனதா தலைவர்களின் கண்டன பேச்சுக்கு சசிதரூர் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என சசிதரூர் கூறி உள்ளார். இந்து ராஜ்ஜியம் உருவாக்குவோம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறி வருகிறது. அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கையும் அதுதான் என்று கூறுகிறது.

    ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகளில் ஒருவரான தீன்தயாள் உபாத்தியாயா இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காதவர். இப்படிப்பட்ட தீன்தயாள் உபாத்தியாயாவின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி வருகிறார்.

    இவர்கள் இந்து மக்களுக்காகவே அரசியல் சட்டமும், நாடும் உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள். இப்படிப்பட்டவர்களின் செயல்பாட்டை நான், சுட்டிக்காட்டியதில் என்ன தவறு இருக்கிறது? இதற்காகத்தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    சசிதரூரின் இந்து பாகிஸ்தான் பேச்சு குறித்து காங்கிரசும் கருத்து தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலா கூறும் போது, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பும், நெறிமுறைகளும் எந்தவித சவால்களுக்கும் இடம் அளிக்காத வகையில் உறுதியாக உள்ளது.

    நமது கொள்கைகள் பாகிஸ்தானின் பிரிவினைவாத போக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வரலாற்று ரீதியாக நமக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

    பாரதிய ஜனதா கட்சியின் வெறுப்பு உணர்வு கொள்கைகளை எதிர்த்து பேசும்போது, வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று கூறி உள்ளார்.

    இதுபோல காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷீர்ஜில் கூறும் போது, மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாகிஸ்தானை போல மோசமான நிலைக்கு செல்ல இந்திய ஜனநாயகம் அனுமதிக்காது.

    காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது யோசித்து கவனமாக வார்த்தைகளை தேர்வு செய்து பேச வேண்டும் என்று கூறினார். #ShashiTharoor #HinduPakistan
    ×