என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 106658"
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்து ராஜ்ஜியம் என்பது இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்பது பொருள் அல்ல என்ற பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என பிரதமர் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்ட தொகாடியா, எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு வந்தபோது அதில் முடிவு எடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனக்கூறிய பிரதமர் மோடி, அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது என கூறுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கோரிக்கைகளை விடுப்பதற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் உத்தரவிட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #PMModi #AyodhyaRamTempleIssue #PravinTogadia #RSS
உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவார் நகரில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்திவரும் பதாஞ்சலி பீடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.
அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை எதிர்க்கட்சிகளால்கூட வெளிப்படையாக தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஆனால், இதற்கு உகந்த காலம் கைகூட சிறிது நேரம் ஆகலாம். எல்லா அரசாங்கங்களுக்கும் சில வரம்பு எல்லைகள் உள்ளன. அந்த வரம்புக்குள்தான் அவர்கள் செயல்பட முடியும்.
ஆனால், சாதுக்களுக்கும் ஜீயர்களுக்கும் அத்தகைய கட்டுப்பாடுகள் கிடையாது. மதம், நாடு மற்றும் சமூகத்தின் உயர்வுக்காக அவர்கள் பாடுபட வேண்டும்.
ராமபிரான் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வம் என்பதால் அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை எதிர்க்கட்சிகளால்கூட வெளிப்படையாக தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். #Ramtemple #MohanBhagwat
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ’குடும்ப விவகாரங்களை பெண்கள் கையாண்டு வருவதும், பெரிய துறைகளில் பெண்கள் தலைவர்களாக செயல்படுவதும் நல்ல ஒரு அடையாளம். பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் அல்ல. அவர்களின் ஆதரவின்றி நாடு வளர்ச்சி அடையாது.
தற்போது மக்கள் தங்கள் மனநிலையை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பெண்களை அவர்கள் அடிமைகளாக நடத்துவதற்கு பதிலாக பெண் கடவுளாக நடத்த வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கான கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சட்டத்திற்கு என வரம்பு உள்ளது. பெண்கள் பாதுகாப்பு பற்றிய சமூக விழிப்புணர்வினை உருவாக்கவும் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கான மதிப்பினை உயர்த்துவதற்காகவும் பொதுமக்கள் பணியாற்ற வேண்டும்’ என பகவத் தெரிவித்தார். #MohanBhagwat #RSS
புதுடெல்லி:
அயோத்தி ராமர் கோவில் போராட்டங்கள் தொடர்பாக எழுத்தாளர் ஹேமந்த் சர்மா எழுதிய 2 புத்தகங்கள் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அயோத்தியில் இருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டது என்பது உண்மையான சம்பவம். இதை அனைவரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ராமர் கடவுள் என்பது இந்துக்களின் அடையாளம். அது இந்துக்களின் நம்பிக்கை.
இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. அப்படி கேட்பதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அயோத்தியில் ராமர் கோவில் தாமதம் இல்லாமல் கட்டப்பட வேண்டும் என்பதை இந்த நாடே விரும்புகிறது. அப்படி ராமர்கோவில் கட்டப்பட்டு விட்டால், இந்து - முஸ்லிம்களிடையே உள்ள கருத்து வேற்றுமைகள் மறைந்து விடும்.
ராமர் கோவில் தொடர்பான வழக்கு தீர்ப்புகளை விரைவாக வழங்க வேண்டும். நீண்ட காலத்திற்கு இழுத்து கொண்டு செல்லக்கூடாது. இந்த சமூகம் தான் முதன்மையானது. அவர்களுக்கு உண்மையும், நீதியும் கிடைக்க வேண்டும்.
மதநம்பிக்கைகள் மீது கேள்வி எழுப்பக்கூடாது. அது பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இவ்வாறு மோகன்பகவத் பேசினார்.
பாரதிய ஜனதா அமித்ஷா பேசும்போது, ராமர் கோவில் விவகாரத்தில் 500 ஆண்டுகளாக மவுன போராட்டம் நடந்து வருகிறது. ராமஜென்ம பூமி போராட்டம் தான் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய போராட்டம் ஆகும்.
அங்கு ராமர் கோவில் கட்டப்பட வேண்டியது அனைவரின் விருப்பம். அயோத்தியில் கடந்த காலத்தில் நடந்த சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது என்பதற்கு சாட்சியமாக உள்ளது என்று கூறினார்.
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசும் போது, அயோத்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு அனைத்து சமூகத்தினரும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறினார்.
மராட்டிய மாநிலம் பீமா கோரேகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இடது சாரிகள் மாநாட்டை தொடர்ந்து மராத்தா சமூகத்தினரும் தலித் சமூகத்தினரும் மோதிக்கொண்டனர்.
மாநாட்டில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ‘‘ராஜிவ் பாணியில் மோடி கொலை செய்யப்படுவார் என்று எழுதப்பட்டிருந்த கடிதம் சிக்கியது. இந்த கடிதத்தை எழுதிய ஐதராபாத்தைச் சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவை புனே போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் வட மாநிலங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை குறி வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தன்னார்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் சமூக நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‘இந்தியா என்பது ஒரே ஒரு தன்னாவ தொண்டு நிறுவனம் மட்டுமே இருக்கும் இடம். அதுதான் ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிறது.
மற்றவைகளை எல்லாம் மூடி விடுங்கள். தன்னார்வலர்கள் அனைவரையும் ஜெயிலில் தள்ளுங்கள், குறை கூறுபவர்களை சுட்டுத் தள்ளுங்கள், புதிய இந்தியாவுக்கு வரவேற்பு’ என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். #Congress #RahulGandhi
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சமீபத்தில் கூறி இருந்தார்.
இது அரசியலமைப்பு சட்டம் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. சசிதரூரின் கருத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் இந்து தேசம் அமைப்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் கருத்தைத் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு சசிதரூர் பிரதிபலித்துள்ளார் என்று பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சி தனது பத்திரிகையான ‘சாம்னாவில்’ கூறி இருப்பதாவது:-
இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துதான். அதையே காங்கிரசில் இருந்து கொண்டு சசிதரூர் வெளிப்படுத்தி இருக்கிறார். பா.ஜனதாவின் மொழியில் தான் அவர் பேசி இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்காக ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்துவது வேடிக்கையாக இருக்கிறது.
ராமரே வந்தாலும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர நாராயணன்சிங் பேசியுள்ளார். இது இந்துக்களை புண்படுத்தும் கருத்தாகும். இதற்காக அக்கட்சி தலைவர் அமித்ஷா மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டாமா?
இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க 2019 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மோடி அதை இப்போதே செய்யலாம். அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று தான் நாங்களும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ShivSena #ShashiTharoor #RSS #BJP
ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் க.குமாரசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் கனவாக இருந்தது.
இந்த தேசம் ஒன்றல்ல, வெவ்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட பல்வேறு நாடுகளின் தொகுப்பு என்ற இடதுசாரி சித்தாந்தம் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ள சூழலில், மொழியின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிராந்தியவாதம் தலைதூக்கி உள்ள சூழலில் தேசியத்தை வலியுறுத்தும் வரலாற்று சின்னம் தமிழகத்தில் அமைவதன் அவசியத்தை புரிந்து, பாரதமாதா கோவில் கட்ட தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதே போன்று, பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று சர்வதேச யோகா தினத்தை ஐ.நா.சபை அறிவித்து சிறப்பித்துள்ள நிலையில், சர்வதேச யோகா மையம் அமைக்க நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் முன் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவிலும், செங்கல்பட்டில் சர்வதேச யோகா மையமும் அமைக்க முன் வந்துள்ள தமிழக அரசுக்கு இந்த தேசத்தில் பிறந்த பாரதமாதாவின் புதல்வர்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு தாய் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் செயல்பட்டு வருகிறது. கட்சியை எப்படி நடத்த வேண்டும், அதன் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைகளை வழங்குவது உண்டு.
இந்த நிலையில் 2019 பாராளுமன்ற தேர்தலை பாரதிய ஜனதா எப்படி எதிர்கொள்வது என்பது சம்பந்தமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதற்கான ஆலோசனை கூட்டம் அரியானா மாநிலம் சூரஜ்குண்டில் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று அந்த கூட்டம் முடிவு பெறுகிறது.
இதில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தேர்தல் தொடர்பாக சில ஆலோசனைகளை பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கி உள்ளனர். அதில், தற்போது எம்.பி.க்களாக உள்ளவர்கள் செயல்பாடுகளை முற்றிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்காக தனியாக சர்வே ஒன்றை எடுக்க வேண்டும். அவர்களுடைய செயல்பாடுகளை முற்றிலும் அலச வேண்டும். அவர்கள் தொகுதியில் எப்படி பணிகளை செய்திருக்கிறார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதா? வருகிற தேர்தலில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் தங்களுக்கு அறிக்கை தர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இவர்களில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு மட்டுமே 2019 பாராளுமன்ற தேர்தலில் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் உத்தரபிரதேசத்தில் தற்போது கட்சியின் நிலைமை பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளனர். அங்கு சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அது பாரதிய ஜனதாவை எந்த வகையில் பாதிக்கும். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக எதை செய்யலாம் என்றும் ஆலோசித்து உள்ளனர்.
இதுபோன்ற கூட்டங்களை இந்த ஆண்டில் இன்னும் பல தடவை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இறுதியாக பிரதமர் மற்றும் கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பின்னர் தேர்தலை சந்திப்பது தொடர்பான இறுதி கட்ட முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். அப்போது கூட்டத்தில் நடந்த ஆலோசனை தொடர்பாக பிரதமருடன் அவர்கள் விவாதித்து உள்ளனர். #BJP #RSS
இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட அந்த மனித மிருகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
மராட்டிய மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் 2 தலித் சிறுவர்கள், ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு, மற்றொரு சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்ததுதான்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவின் மனுதர்மம் பரப்பிய இத்தகைய நச்சுத்தன்மை நிறைந்த வெறுப்புணர்வு அரசியலை நாம் எதிர்க்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #Dalit Boys
2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரத்தில் பேசிய ராகுல்காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் மகாத்மா காந்தியை கொன்று விட்டதாக கூறினார். இதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ராகுல்காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த மனுவை வாபஸ் பெற்ற ராகுல்காந்தி, இந்த வழக்கை நேருக்கு நேர் சந்திக்க போவதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள பிவண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ராகுல்காந்தி ஏப்ரல் 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கு மீதான விசாரணை பிவண்டி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மும்பை வந்தடைந்தார்.
அவதூறு வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார் ராகுல்காந்தி. #RSS #rahulgandhi #defamationcase
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாக்பூரில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்தில் 3 நாள் நடைபெறும் விழாவில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்தது.
இந்த அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முன்பு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரிடம் வலியுறுத்தினர்.
மேலும் அவர் பா.ஜனதாவில் இணைந்ததாக வதந்தி பரவிய செய்தியாலும் கோபம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ஷர்மிஸ்தா முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பா.ஜனதா இப்படி பொய்யான செய்திகளை பரப்பும். நிகழ்ச்சியில் பிரணாப் என்ன பேசினார் என்பது மறக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மட்டுமே வைத்து பொய்யான செய்திகளையும், தகவல்களையும் பா.ஜனதா பரப்பும். அதற்கான வாய்ப்பை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) அளிக்கிறீர்கள். இதனால் பிரணாப் தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PranabMukherjee #SharmisthaMukherjee
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்