search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாபம்"

    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

    `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் துவங்கிய நிலையில் மதுரை, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #LaabamShootKickStarts
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

    `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையோடு இன்று ராஜபாளையத்தில் துவங்கியது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

    `புறம்போக்கு' படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LaabamShootKickStarts #VijaySethupathi #ShrutiHaasan

    ‘மின்வாரியத்துறை விரைவில் லாபத்தை அடையும் நிலைக்கு வந்து விடும்’ என அமைச்சர் தங்கமணி கூறினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மண்டல மின்வாரியத்துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மின்வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மண்டலம் வாரியாக ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு ஆண்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் மின் இணைப்புகள் ஒரே நாளில் கொடுக்கப்பட்டுள்ளது சாதனையாகும்.

    விவசாயிகளிடம் தட்கல் திட்டம் தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு மின்சாரவாரியம் வெளிப்படை தன்மையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மின்வாரியத்தில் 3 வருடம் ஒரே இடத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும் என்பதற்காக கேட்டிருந்தோம். அதன்படி ஆன்லைனில் 14 ஆயிரம் மனுக்கள் வந்திருக்கிறது. அந்த மனுக்களில் ஊழியர்கள் எந்த இடத்தில் மாறுதல் கேட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பணி மாறுதல் விரைவில் வழங்கப்படும்.

    மின்சார வாரியம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்தது. தற்போது இது ரூ.3 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. நிலக்கரியாக இருந்தாலும் மற்ற எந்த டெண்டராக இருந்தாலும் இ-டெண்டர் முறையில் நடைபெற்று வருவதால், விரைவில் மின்வாரியத்துறை லாபத்தை அடையும் நிலைக்கு வரும்.

    மின்சார வாரிய ஊழியர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. மழைக்காலம் மற்றும் இயற்கை இடர்பாடுகளின் போது பொதுமக்கள் மின்தடையால் அவதியடைய கூடாது என்பதற்காக, உடனுக்குடன் பணிகள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×