search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுருதிஹாசன்"

    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

    `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் துவங்கிய நிலையில் மதுரை, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #LaabamShootKickStarts
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

    `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையோடு இன்று ராஜபாளையத்தில் துவங்கியது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

    `புறம்போக்கு' படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LaabamShootKickStarts #VijaySethupathi #ShrutiHaasan

    உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்கள் நடத்திய லண்டன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய சுருதிஹாசனின் இசை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. #ShrutiHaasan #ShrutiHaasanLiveinLondon
    நடிகர் கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன். நடிகை, பாடகி, தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடங்கினார். தற்போது இசைப் பயணத்தின் மீது மீண்டும் கவனத்தை திருப்பி உள்ளார்.

    இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் எனும் இடத்திலும் சமீபத்தில் இசைக்கச்சேரி நடத்தி பாடினார்.

    இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.



    உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களான பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றோர் இந்த இடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். இப்புகழ் பெற்ற அரங்கு 1954-ல் ஒரு காபி ஹவுஸ் ஆக தொடங்கப்பட்டது.

    ‘தி நெட்’ என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாசனின் இசை நிகழ்ச்சி சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

    நியூயார்க்கில் உள்ள மேடி‌ஷன் அவென்யூவில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி நடந்த தி இந்தியன்டே பாரடே எனும் உலகின் மிகப்பெரிய சுதந்திர தின கூட்டத்தில் இவர் முழங்கிய வந்தே மாதரம் என்ற முழக்கம் அனைவரின் பாராட்டை பெற்றது. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருக்கும் இவரது இசை நிகழ்ச்சி வீடியோக்களை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். #ShrutiHaasan #ShrutiHaasanLiveinLondon

    நே‌ஷனல் ஜியோகிராபி சேனலில் ஒளிபரப்பப்படும் ‘மெகா ஐகான்’ நிகழ்ச்சியில், கமல்ஹாசனின் கனவு குறித்து பேசிய சுருதிஹாசன், என் தந்தை விதியை எதிர்த்து நின்றவர் என்று கூறினார். #KamalHaasan #ShrutiHaasan
    நே‌ஷனல் ஜியோகிராபி சேனலில் நாடு முழுவதிலும் பிரபலமானவர்கள் பற்றி புதிதாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி ‘மெகா ஐகான்’.

    இந்த தொடரில் பிரபலங்களின் சாதனைகளை மட்டுமே விளக்கும் வழக்கமான ஒரு தொடராக இல்லாமல், அவர்களின் பின்புலம், சூழல், அவர்களுக்கு நெருக்க மானவர் களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளி விபரங்கள், கள ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், நிபுணர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை கொண்டு விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் முதல் 5 பிரபலங்களின் பட்டியலில் கமல்ஹாசன், விராட் கோலி, தலாய் லாமா, அப்துல் கலாம், கிரண் பேடி ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர்.



    இந்தத் தொடரின் முதல் 5 எபிசோடுகளை தொகுத்து வழங்குகிறார் நடிகர் மாதவன். இந்த நிகழ்ச்சியில் தனது தந்தையின் அரசியல் கனவு குறித்து பேசிய சுருதிஹாசன், “சினிமாவில் அப்பா தனக்குக் கிடைத்த பாராட்டுகளைக் கொண்டாடினார்.

    எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டார். இதுதான் விதி என்றால் அதை எதிர்த்து நின்று துணிந்து கேள்வி கேட்பார். இந்த குணங்களைத் தான் அரசியலிலும் பிரதிபலிக்கிறார். அரசியலில் அவர் தீவிரமாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்’ என்று கூறி இருக்கிறார். #KamalHaasan #ShrutiHaasan

    லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ்வை நடிகை சுருதிஹாசன் காதலிப்பதாக செய்தி வந்த நிலையில், அவர்களது திருமணம் பற்றி சுருதி தான் முடிவு செய்ய வேண்டும் என்று கமல் கூறியுள்ளார். #KamalHaasan
    கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ்வை காதலிப்பதாக செய்தி வந்தது. அதை உறுதிபடுத்தும் வகையில் சுருதி நிகழ்ச்சிகளில் மைக்கேலுடன் கலந்துகொள்கிறார்.

    கமல் முன்பு கூட காதலருடன் வலம் வருகிறார். இது குறித்து கமலிடம் கேட்டபோது ‘என் மகள்களின் திருமணத்தை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். என் கல்யாணத்தையோ விவாகரத்தையோ என் அப்பா முடிவு செய்யவில்லை. அதுபோல அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முக்கியம்’ என்று பதில் அளித்தார். #KamalHaasan #ShrutiHaasan
    கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் அவரது காதலரை பிரிந்துவிட்டதாக சில தகவல்கள் வெளியான நிலையில், சுருதி, அவரது காதலர் என இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். #Vishwaroopam2 #ShrutiHaasan
    கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பக்கம் அரசியலிலும் இன்னொரு பக்கம் பிக்பாஸ் டிவி நிகழ்ச்சி, விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீடு, சபாஷ் நாயுடு, இந்தியன் 2 படங்கள் என சினிமாவிலும் கால் ஊன்றியபடியே உள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்ற ‘ஞாபகம் வருகிறதா' பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவர் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு செல்ல வேண்டாம் என்று கமலிடம் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு பதில் அளித்து கமல் நான் சினிமாவை விட்டு விலகி போகமாட்டேன். நடித்தால்தான் சினிமாவா? உங்களில் ‘ஒருவனாக’ அமர்ந்து சினிமாவை பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அதை விடவும் ஒரு பெரிய பணியில் ஈடுபட விரும்புகிறேன்.

    எனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழிவிடுவது தான் முதிர்ச்சி. என் முன்னோர்கள் அப்படித் தான் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது தியாகம் எல்லாம் இல்லை. “என் சீட்ல உக்காருன்னு” உத்தமவில்லன் படத்துல வர்ற காட்சியை பாலச்சந்தர்தான் எழுதினார். மறுபடியும் மறுபடியும் சினிமாவில் நடிக்கக் கேட்டு என்னை சஞ்சலப்படுத்தி விடாதீர்கள்”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விஸ்வரூபம் 2 பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சுருதிஹாசனின் காதலர் மைக்கேலும் கலந்துகொண்டார். சுருதிஹாசனும் லண்டனை சேர்ந்த நடிகரான மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாகவும், அவர்கள் காதலுக்கு கமல்ஹாசன் சரிகா இருவருமே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் செய்தி வந்தது. இடையில் இருவரும் பிரிந்ததாகவும் தகவல் வந்தது.

    இந்தநிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பாடல் வெளியீட்டில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஸ்ருதிஹாசன் மேடையில் பாடியதை மைக்கேல் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார். #Vishwaroopam2 #BiggBoss2 #ShrutiHaasan

    ×