search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலன்"

    • உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • போலீசார் ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    கொடைக்கானல்:

    சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி (வயது 20). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டலத்தைச் சேர்ந்த சஜின்ராஜ் (27) என்பவரும் பணியாற்றி வந்தார்.

    அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சஜின்ராஜூம், காதலிப்பதாக கூறி இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கலைவாணி கேட்டபோது, சஜின்ராஜ் மறுத்து வந்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த கலைவாணி கடந்த சில நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

    அதன் பின்னர் அவர் வீடு திரும்பினார். இதனையடுத்து தனது காதலனுக்கு போன் செய்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த கலைவாணி ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சஜின்ராஜை தேடி வந்தனர்.

    சஜின்ராஜின் செல்போன் அவ்வப்போது ஆன் செய்து பின்னர் அணைத்து வைக்கப்பட்டது. இதனை வைத்து ஆய்வு செய்ததில் சஜின்ராஜ் கொடைக்கானலில் பதுங்கி இருப்பது உறுதியானது. மேலும் அவர் வேறு ஒரு பெண்ணை கொடைக்கானலில் திருமணம் செய்யவும் தயாராகி வந்தது கலைவாணிக்கு தெரிந்தது.

    இதனையடுத்து சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்த கலைவாணி அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த சஜின்ராஜை கையும் களவுமாக பிடித்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். மேலும் அவர் அங்கிருந்து தப்பித்து விடாமல் இருக்க கொடைக்கானல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களது பெற்றோரிடமும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதமா என கேட்டனர்.

    இதனிடையே கலைவாணியை தானே திருமணம் செய்து கொள்வதாக சஜின்ராஜ் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் அவர்கள் போலீஸ் நிலையம் அருகிலேயே மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். அவர்களை போலீசார் ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சென்னையில் ஏமாற்றிய காதலனை கொடைக்கானலில் தேடி கண்டுபிடித்து இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கணவனை கை விட்டு காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயராம் (வயது 25). இவருக்கும் சிவரஞ்சனி (21) என்பவருக்கும் கடந்த வருடம் தேனியில் திருமணம் நடந்தது. அரசு சார்பில் நடந்த இந்த திருமணத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார். பின்னர் அவர்களுக்கு அரசு சார்பில் சீர் வரிசைகளும் வழங்கப்பட்டது.

    திருமணத்துக்கு பிறகு விஜயராம் சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார். அவ்வப்போது ஊருக்கு வந்த தனது மனைவியை பார்த்து சென்றுள்ளார்.

    இந்நிலையில் சிவரஞ்சனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் அஜித்குமார் (24) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் அவர்களது பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணத்தில் காதலியிடம் தனிமையில் இருந்ததில் கர்ப்பம் அடைந்தார். தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அழகாபுத்தூர் அருகே அண்ணா நகர் சேர்ந்தவர் வீரமுத்து மகள் ஆஷா (வயது 17). அதே பகுதியை சேர்ந்த ராமன் (24) கூலி தொழிலாளி. இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். அடிக்கடி தனிமையில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆஷாவுடன் பலமுறை ராமன் தனிமையில் இருந்து வந்தார். இதில் ஆஷா கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

    இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராமனை வலியுறுத்தினார். ஆனால் அவர் கேட்காமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து ஆஷா கும்பகோணம் அனைத்து பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    திருச்சி காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கே.கே.நகர்:

    திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றிய காவலர் முத்து, பெண்கள் ஜெயில் வார்டர் செந்தமிழ் செல்வி ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இன்று மேலும் ஒரு பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை எடமலைப் பட்டிபுதூர் கிராப்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் காவலர் ராஜலட்சுமி (வயது 24).

    இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் வேலை பார்த்து வந்தார். பெண் போலீஸ் ராஜலட்சுமி திருச்சி அருகே பெட்டவாய்த்தலையை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் சிவக்குமார் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

    ஆனால் இருவரின் வீடுகளிலும் அவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இதனால் ராஜலட்சுமி மன முடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே நேற்று இரவு சிவக்குமாரும், ராஜலட்சுமியும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதில் அவர்களுக்கிடையே பிரச்சினை எழுந்துள்ளது.

    அப்போது கோபத்தில் ராஜலட்சுமி செல்போன் இணைப்பினை துண்டித்துள்ளார். இன்று காலை சிவக்குமார், ராஜலட்சுமியின் செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் செல்போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் கிராப்பட்டி காவலர் குடியிருப்பிற்கு வந்துள்ளார். அப்போது ராஜலட்சுமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அவர் அரளி விதையை அரைத்து குடித்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    அதனை தொடர்ந்து சிவக்குமார் அங்கிருந்த தனது பைக்கில் பெட்டவாய்த்த லைக்கு திரும்பியுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே சாலை விபத்தில் சிக்கினார். இதில் காயமடைந்த அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    திருச்சி காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் ராஜலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ராஜலட்சுமி தற்போது கர்ப்பமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து அறிந்த கே.கே.நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    லால்குடி: 

    திருச்சி மாவட்டம், சமயபுரம் இனாம்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் வெங்கடேஷ்(வயது 28). இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் உதவி என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். தஞ்சை மாவட்டம் திருவையாறு தேர்முட்டி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் கண்மணி(25). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    கண்மணியின் அத்தை மகன் தர்மராஜுக்கு, வெங்கடேஷ் நண்பர் ஆவார். இதனால் டால்மியாவில் உள்ள தர்மராஜ் வீட்டுக்கு வெங்கடேஷ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அத்தை வீட்டில் தங்கி படித்த கண்மணிக்கும், வெங்கடேசுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த 9 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர். கண்மணியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் பலமுறை வெங்கடேஷ் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெங்கடேசை கண்மணி வற்புறுத்தினார். ஆனால் வெங்கடேஷ் மறுத்து விட்டார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்மணி, கடந்த 2-ந் தேதி லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் கவிதா மனு ரசீது பதிவு செய்தார்.

    இந்நிலையில் நேற்று காலை லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற கண்மணி, போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து, தன்னை காதலித்து ஏமாற்றிய வெங்கடேசுடன் திருமணம் செய்து வைக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து, கண்மணி அங்கிருந்து சென்றார். 
    திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    கடமலைக்குண்டு:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பொன்னார் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 25). இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அதே கல்லூரியில், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (27) என்பவரும் படித்தார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். கல்லூரி படிப்பு முடிந்து 2 பேரும் அவரவர் கிராமங்களுக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் குமணன்தொழு கிராமத்தில் உள்ள ரஞ்சித் வீட்டுக்கு நந்தினி வந்தார். ரஞ்சித்தை சந்தித்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    அப்போது, தனது தங்கை திருமணம் நடைபெற இருப்பதாகவும் அது முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் ரஞ்சித் தெரிவித்தார். ஆனால் இதனை நந்தினி ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை திருமணம் செய்ய ரஞ்சித் மறுப்பதாக நந்தினி நினைத்தார். இதனையடுத்து, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை (விஷம்) ரஞ்சித் வீட்டின் முன்பு வைத்து நந்தினி குடித்தார். சிறிதுநேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடமலைக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து நந்தினி மீது தற்கொலைக்கு முயன்றதாக மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் அருகே பெண் வார்டன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் செந்தமிழ்ச்செல்வி (வயது 24). இவர் திருச்சி மத்திய பெண்கள் சிறையில் சிறை வார்டனாக பணியாற்றி வந்தார். திருச்சி கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வி, தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செந்தமிழ்ச்செல்வி இறந்தது பற்றிய தகவல் பெரியகாட்டுப்பாளையத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம், செந்தமிழ்ச்செல்வி சாவுக்கு அவரது காதலனே காரணம்.

    செந்தமிழ்ச்செல்வியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி விட்டு தற்போது மறுத்துள்ளார். இதனால் அவளின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

    அதற்கு அங்கிருந்த போலீசார், சம்பவம் நடந்த ஊரில் உள்ள போலீசில்தான் நீங்கள் புகார் செய்ய வேண்டும். அவர்கள்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினர்.

    பின்னர் அவர்கள் இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்க சென்றனர். அங்கு இவர்கள் கொடுத்த புகாரை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து இன்று காலை பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கடலூர்- புதுவை சாலையில் செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, போராட்டக்காரர்கள் செந்தமிழ்ச்செல்வியின் சாவுக்கு காரணமான அவரது காதலனை கைது செய்யும்வரை எங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    போராட்டக்காரர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கையை ஒரு மனுவாக எழுதி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுங்கள். அதன் பின்னர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.


    இதனை ஏற்றுக் கொண்ட செந்தமிழ்ச்சசெல்வியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சாலையோரம் திரண்டு நிற்கின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட ஆசிரியர் பயிற்சி மாணவி பாதுகாப்பு கேட்டு காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் பூவிழி (வயது 21).நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட்.2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (25). டெய்லர். என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் காதல் குறித்து அறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை கூறி காதல் ஜோடியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்தனர். இதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காதலன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் போலீஸ் நிலையம் அருகே ஒரு லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி காலை 7 மணி அளவில் இந்த லாட்ஜிக்கு இளம்பெண் ஒருவருடன் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தாங்கள் கன்னியாகுமரியை சுற்றிப்பார்க்க வந்துள்ளதாகவும், சில நாட்கள் இங்கு தங்கி இருக்க போவதால் தங்களுக்கு லாட்ஜ்யில் ரூம் வேண்டும் என்று கேட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு லாட்ஜ்யில் ரூம் ஒதுக்கப்பட்டது. அந்த ஜோடியிடம் இருந்து முகவரி சான்றாக ஆதார் அட்டையின் நகலும் வாங்கப்பட்டது.

    தினமும் காலையில் லாட்ஜ்யில் இருந்து புறப்படும் அந்த ஜோடி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு இரவு மீண்டும் லாட்ஜிக்கு திரும்பி விடுவார்கள்.

    இந்த நிலையில் நேற்றும் காலையில் அவர்கள் இருவரும் வழக்கம் போல வெளியில் சென்று விட்டு இரவு தாங்கள் தங்கி இருந்த லாட்ஜிக்கு திரும்பினார்கள். இன்று காலையில் லாட்ஜ் ஊழியர்கள் அங்கு தங்கி இருப்பவர்களின் அறைகளுக்குச் சென்று அவர்களுக்கு உணவு தேவையா? என்பது பற்றி கேட்டனர்.

    இந்த ஜோடி தங்கி இருந்த அறை கதவை தட்டிய போது திறக்கப்படவில்லை. அதே சமயம் அறை உள்ளே இருந்து வாலிபரின் அலறல் சத்தம் கேட்டது.  இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த லாட்ஜிக்கு விரைந்துச் சென்றனர். அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளேச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    அங்கு அந்த வாலிபர் கையில் ரத்தம் வடிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருடன் தங்கி இருந்த இளம்பெண் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.

    உடனடியாக அந்த வாலிபரை காப்பாற்றி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த பெண்ணின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

    அந்த வாலிபர் பெயர் சதீஷ் (வயது27), ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கருமாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    அவருடன் தங்கி இருந்த பெண்ணின் பெயர் கார்த்திகா(24). கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கடத்தூர். இவருக்கு திருமணமாகி விட்டது. சதீஷ் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கார்த்திகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலைக்குச் செல்லும் போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    இவர்களது கள்ளக்காதல் உறவினர்களுக்கு தெரிய வந்ததால் அவர்கள் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்யும் எண்ணத்துடன் கன்னியாகுமரிக்கு வந்தனர்.

    இங்கு பல இடங்களையும் சுற்றிப்பார்த்த அவர்கள் லாட்ஜியில் வைத்து வி‌ஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளனர். இதில் கார்த்திகா இறந்து விட்டார்.

    சதீஷ்சுக்கு வாந்தி ஏற்பட்டதால் அவர் சாப்பிட்ட வி‌ஷ மாத்திரையில் இருந்து தப்பி விட்டார். ஆனாலும் கள்ளக்காதலி இறந்த பிறகு தான் உயிர் வாழக்கூடாது என்பதற்காக கத்தியால் கையை அறுத்து உள்ளார். அதற்குள் போலீஸ் வந்து அவரை காப்பாற்றி உள்ளனர். இது பற்றி சதீஷ் மற்றும் கார்திகாவின் பெற்றோர், உறவினர்களுக்கு கன்னியாகுமரி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    மதுரை அருகே என்ஜினீயரிங் மாணவியை கடத்தியதாக காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள பரவை பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவரது மகள் கிருத்திகா (30). என்ஜினீயரிங் மாணவியான கிருத்திகா. கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் கிருத்திகாவை அவரது காதலன் நவீன்குமார் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சமயநல்லூர் போலீசில் செந்தமிழ்செல்வன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவி கிருத்திகா மற்றும் நவீன்குமாரை தேடி வருகிறார். #tamilnews
    திருச்சியில் கல்லூரி மாணவியை கடத்திய காதலன் மீது மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மலைக்கோட்டை:

    திருச்சி கல்லுக்குழியை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது 17 வயது மகள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் மகளை பைக்கில் சென்று கல்லூரியில் விட்டுவிட்டு அழைத்து வருவது வழக்கம்.

    இதேபோல் கடந்த 16-ந் தேதி மகளை கல்லூரியில் கொண்டு சென்று விட்டுள்னார். பின்னர் மதியம் மகளை அழைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை காணவில்லை. ஏற்கனவே தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாலிபர் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இதனால் அவர் மகளை கடத்தியிருக்கலாம் என சந்தேகித்த சின்னப்பா கோட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கல்லூரி மாணவியை கடத்தியதாக, மாணவியின் காதலன் கவுதம், அவரது தந்தை ராஜா, தாய் ரத்தினா உறவினர் முரளி உள்ளிட்ட 4 பேர் மீது  வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேச மறுத்த கள்ளகாதலியை அரிவாளால் வெட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர் பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். பாத்திர தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா தேவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் மஞ்சுளா தேவிக்கும் அனுப்பர் பாளையம் கஸ்தூரிபா நகரை சேர்ந்த பாத்திர தொழிலாளி சுரேஷ் (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்த விவரம் மஞ்சுளா தேவியின் கணவர் கணேசனுக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். சுரேசிடம் உள்ள தொடர்பை துண்டித்து விடு என தெரிவித்துள்ளார். மேலும் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மஞ்சுளா தேவி மனம் திருந்தினார். கடந்த 2 மாதமாக அவர் சுரேசிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். சுரேஷ் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் மஞ்சுளா தேவி அவரிடம் பேசவில்லை.

    இதனால் சுரேஷ் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மஞ்சுளா தேவி தனது கணவர் கணேசனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். 15 வேலம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் அவர்களை வழி மறித்தார். அவர் மஞ்சுளா தேவியிடம் எதற்காக என்னிடம் பேச மறுக்கிறீர்கள்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் தகராறு உருவானது. ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் வைத்திருந்த அரிவாளால் மஞ்சுளா தேவியை வெட்டினார்.

    இதனை கணேசன் தடுக்க முயன்றார். அவருக்கும் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்த கணவன்-மனைவியை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து 15 வேலம் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×