search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106977"

    • 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 171 மலைக் கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமானால் கச்சிராய பாளையம் அருகே உள்ள வெள்ளிமலைக்கு தான் வர வேண்டும். மலை கிராமங்களுக்கு முக்கிய நகரமாக வெள்ளி மலை திகழ்ந்து வருகிறது. இதனால் வெள்ளி மலைக்கு சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    வெள்ளிமலை பஸ் நிலையத்தை சுற்றி 250 கடைகள் உள்ளது. பஸ் நிலைய விரிவாக்கத்திற்காக பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளை அகற்றும் படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு காலக்கெடுவும் விதித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கடைகளை அகற்ற அதிகாரிகள் வந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சின்னசாமி, கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் வியாபாரிகள் கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்தினார்கள்.200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இச் சம்பவத்தால் வெள்ளிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெரம்பலூரில் குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • போக்குவரத்து பாதிப்பு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் நகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட புறநகர் பகுதியான துறைமங்கலம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திடீரென்று காலிக்குடங்களுடன் துறைமங்கலம் மூன்று ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் சரி செய்து விடுவார்கள். அதன்பிறகு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும். தற்போது அதற்கு மாற்றாக வாகனம் மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்தப்பகுதிக்கு வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    • இரட்டைமடி வலைகள் மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    நாகப்பட்டினம்:

    காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் அக்கரைப்பேட்டை மீன் பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நாகப்ப ட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர் கிராம நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலைகளை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் பயன்படுத்தி தொழில் செய்வதை தடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தமிழ்நாடு கடல் எல்லையில் தொழில் செய்ய வந்தால் விசைப்படகுகளை சிறைபிடித்து மீன்வளத்து றையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், காரைக்கால் மாவட்ட விசைப்படகுகளுக்கு வியாபார ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது எனவும், ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்களை நாகை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வழங்க கூடாது என முடிவு செய்துள்ளனர்.

    மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து அத்துமீறி தொழில் செய்தால் மீன்பிடி தடைக்காலம் முடிந்தவுடன் வரும் 14ம் தேதி முதல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொழில் மறியல் போராட்ட த்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • 30-க்கும் மேற்பட்டோர் சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • மேட்டுப்பாளையம் -சிறுமுகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் பெள்ளேபாளையம் ஊராட்சி பட்டக்காரனூர் கிராமத்தில் அனிதா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய நிலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊராட்சி சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலை வழியாக தங்களது தோட்டங்களுக்கு செல்ல அனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது விவசாய தோட்டத்திற்கு செல்லும் சாலையை அருகில் உள்ள தனிநபர் ஒருவர் அது தன்னுடைய இடம் என கூறி அந்த வழியாக தங்களை செல்ல அனுமதிப்பது இல்லை என கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் அனிதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகம் முன்பு சத்தி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் இரு தரப்பு ஆவணங்கள் சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் மேட்டுப்பாளையம் -சிறுமுகை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சிக்கல் பஸ் நிறுத்தம் முன்பு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி நேற்று முன்தினம் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல் பஸ் நிறுத்தம் முன்பு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தை சேர்ந்த சேகர், பிரேம்நாத், சிவக்குமார், பிரபாகரன், சங்கர் மற்றும் 3 பெண்கள் உள்பட 8 பேர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு ஆட்டோ சங்கத்தினர் திடீர் மறியல்
    • புதிதாக ஸ்டாண்டு திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது

    அறந்தாங்கி,

    அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 13 இடங்களில் ஆட்டோ ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டு சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பேருந்து நிலையத்திற்குள் செல்லும் வழியில் புதிதாக ஆட்டோ ஸ்டாண்ட் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடன்பாடு எட்டப்படாதததால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தார். வட்டாட்சியரின் உறுதியளிப்பை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    மறியல் போராட்டத்தால் பேருந்து நிலையம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. கௌரவ தலைவர் ராஜேந்திரன், ஆட்டோ சங்க நகர தலைவர் சேகர்,நகர செயலாளர் கார்த்திக், நகர பொருளாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் பெரியசாமி, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. தலைவர் கர்ணா,

    சி.பி.ஐ. ஒன்றிய துணை செயலாளர் போஸ் கணேசன், ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, விநாயகமூர்த்தி, சித்திக் முகமது, ரவி, கணேசன், நாகராஜ், கணேசன், சேகர், சிங்கசெல்வம், கல்யாணராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
    • வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ். இவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

    இவருக்கு சொந்தமான இடம் மங்கலம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் செல்லுவதற்கு ரோடு எடுப்பதற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வழி எடுக்க இடம் கொடுக்காததால் தான் கொடுத்த ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    குலசேகரம் போலீசில் இது தொடர்பாக ஜஸ்டின் ராஜ் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஜஸ்டின் ராஜிற்கு ஆதரவாக பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலன் இல்லாததால் வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் கல்லுரி மாணவ-மாணவிகள் சென்ற வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட் டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இன்ஸ்பெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

    இதனால் குலசேகரம் பகுதியில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலை நேரமானதால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆவேச மடைந்து போராட்டம் நடத்தியவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இரவு தக்கலை டி.எஸ்.பி. குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

    • ஊரக வேலை உறுத்தித் திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • பட்டியலில் பெயர் சேர்க்க கோரி நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கு ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களின் பணி அட்டை புதுப்பிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் 60 பேரின் பெயர்கள் இல்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்தும், விடுபட்டடோரை பட்டியலில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியும், குளமங்கலம் வடக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஊராக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    • மண்ணசச்சநல்லூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
    • சாலை விரைந்து அமைத்து தர வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூனாம்பாளையம் அழகு நகரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதற்கிடையே திருச்சி-துறையூர் நெடுஞ்சாலையில் உள்ள அழகு நகரில் சாலை அமைப்பதற்காக கற்களை கொட்டி ஒன்றை மாதங்களாகியும் தார்ச்சாலை அமைக்காமல் சாலை நடுவே குவிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் அந்த குடிருப்பு பகுதிக்குள் மருத்துவமனை செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்லமுடியவில்லை. இதனால் பலமுறை பூனாம்பாளையம் ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் அழகு நகரில் வசிக்கும் மக்கள் தீடீரென இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் உள்ள கற்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோஷம் போட்டனர். மேலும் அழகு நகரில் 400 குடும்பங்களுக்கு 2 குடிநீர் பைப் மட்டுமே உள்ளது. போதிய அளவு குடிநீர் வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.இப்பகுதியில் உள்ள கற்களை விரைந்து சாலை அமைத்து தரப்படும் என்று அவர் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • செல்போன் ேகாபுரம் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    • 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கூர் கிராமம் அமைந்து உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் இங்கு செல்போன் சிக்னல் சரிவர கிடைக்காததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் அங்குள்ள கடைகள், இ-சேவை மையங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு சரிவர இணைய வசதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் ஒக்கூர் கிராமத்தில் செல்போன் ேகாபுரம் அமைத்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் முஜிபூர்ரஹ்மான் தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவா்த்தை நடத்தினர். அப்போது செல்போன் ேகாபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு செல்போன் கோபுரம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மேலமடை குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் தேங்கியதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மதுரை

    மதுரையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதுரை அண்ணா பஸ் நிலையம், கே.கே. நகர், மேலமடை, தமுக்கம் மைதானம், கே.புதூர், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், பழங்காநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    சரியான வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் மதுரை 36-வது வார்டுக்கு உட்பட்ட மேலமடை பகுதியிலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தண்ணீர் வடியா மல் தேங்கி உள்ளதால் சேறும், சகதியுமாக மாறி மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநகராட்சியில் புகார் செய்தனர். இருந்தபோதிலும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை விரகனூர் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத னால் அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்றன. அதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே பொது மக்களின் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த கருப்பாயூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் மேலமடை குடியிருப்பு களுக்குள் புகுந்த மழை நீரை அகற்றினால் தான் சாலை மறியலை கைவிடு வோம் என்று உறுதியாக கூறினர். இதை தொடர்ந்து 36-வது வார்டு மாநகராட்சி பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி னர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.

    • 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
    • 300-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன் (27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உப்பனாறு கரையில் கனிவண்ணன் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதனிடையே திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிவண்ணனின் உடல் தடைய அறிவியல் பிரேதப் பரிசோதனை நேற்று மாலை செய்யப்பட்டது.

    இந்நிலையில் கொலை செய்யப்பட்டு பல மணி நேரம் கடந்தும் இதுவரை கொலை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    என உறவினர்கள் குடும்பத்தினர் ஊர் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

    கொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மயிலாடுதுறை - சீர்காழி நெடுஞ்சாலை தென்பாதி மெயின் ரோட்டில் 300க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஏ.டி.எஸ்.பி தலைமை யில் ஏராளமான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் குற்றவாளிகளை விரைவில் காவல்துறை கைது செய்யும் என்று தெரிவி த்ததன் அடிப்படையில் சாலை மறியலை விலக்கி கொண்டனர்.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார். தெரிவிக்கின்றனர்.

    ×