என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106977"

    • சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது கீழப்பெரம்பலூர் காலனி தெரு முதல் சின்னாறு கரை வரை 900 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றி தருவதாக கூறி விட்டு அமைச்சர் மற்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றார்.

    இந்தநிலையில் கீழப்பெரம்பலூர் காலனி பகுதி மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் புறப்பட்டு வயலூர் கிராமம், அரியலூர் திட்டக்குடி ரோட்டில் கீழப்பெரம்பலூர் செல்லும் பிரிவு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கீழபெரம்பலூரில் இருந்து அந்த வழியாக சென்ற அமைச்சர் சிவசங்கர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கைது செய்யப்பட்டவர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
    • அவர்கள் மாலையில் விடு விக்கப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், கிடப்பில் போடப் பட்டுள்ள 4 வழிச்சாலை பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். 4 வழிச்சாலை பணிக்காக தனியாரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உடனடியாக மார்க்கெட் விலைப்படி பணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

    வில்லுக்குறி அருகே தோட்டியோடு பகுதி யில் நடந்த மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் ராஜேஷ்குமார் உட்பட 395 காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடு விக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உட்பட 395 பேர் மீது இரணியல் போலீசார் வழக் குப்பதிவு செய்து உள்ளனர்.

    • தோட்டியோடு சந்திப்பில் இன்று நடந்தது
    • 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையை பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும்.

    நான்கு வழி சாலை பணிக்காக தனியாரிடமிருந்து அரசு விலைக்கு எடுத்த நிலங்களுக்கு உடனடியாக மார்க்கெட் விலைப்படி பணம் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    தோட்டியோடு சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமை தாங்கினார்.மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் மற்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் உள்பட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர் .கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • சாலை மறியலில் ஈடுபட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர்.

    சேலம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் பைரோஸ்கான் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர் . ஆனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • திருமங்கலம் அருகே குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து மறியல் செய்தனர்.
    • மேடுபகுதியாக இருப்பதால் தண்ணீர் குழாய்களில் பல வீடுகளுக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சவுடார்பட்டி மீனாட்சிபுரம் உள்ளது. இந்த கிராமத்தில் 600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் மேற்குதெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.

    அந்த பகுதிக்கு பஞ்சாயத்து சார்பில் விநியோகம் செய்யப்படும் போர்வெல் தண்ணீர் சரிவர வருவதில்லை. மேடுபகுதியாக இருப்பதால் தண்ணீர் குழாய்களில் பல வீடுகளுக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் மீனாட்சிபுரத்தில் அமைக்கப்பட்ட ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீரை வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் மிஷன் திட்டமும் இந்த கிராமத்தில் தோல்வியடைந்தது.

    இதனால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது.

    இதே போல் தேசிய ஊரகவேலை உறுதித்திட்டத்தின் கீழ் மீனாட்சிபுரம் கிராம மக்களுக்கு சரிவர வேலை வழங்கப்படவில்லை என கிராமமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இதனை தொடர்ந்து மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் கிராம பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் சேடபட்டி யிலிருந்து திருமங்கலம் நோக்கி வந்த ஒரு டவுன்பஸ்சை சிறைபிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருமங்கலம் யூனியன் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. அறிவிப்பு
    • அனைவருக்கும் பாரபட்மின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் ஆகி யோர் குளச்சலில் செய்தி யாளர்களிடம் கூறியதா வது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா மையத்தை தன்னகத்தே கொண்டு உள்ளது. இது குமரி மாவட்டத்திற்கு கிடைத்த மாபெரும் சிறப்பு. கன்னியாகுமரி சுற்றுலா மையத்திற்கு வரும் பயணிகள் நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்கா விளை வழியாக கேரள மாநி லத்திற்கும் செல்வது வழக்கம்.தவிர நெல்லை மாவட்ட மக்களும் திருவ னந்தபுரம் விமான நிலையம் செல்ல நாகர்கோவில், களியக்காவிளை வழித் தடங்களையே பயன்படுத்து கின்றனர்.

    தினமும் சுற்றுலா பயணி களுக்கும், வெளிநாடு பயணிகளுக்கும் இந்த வழித் தடங்கள் பெரிதும் பயன்படுகிறது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது இந்த தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டது.இதனால் அனைத்து தரப் பினர்களின் போக்குவரத் திற்கும் சாலை எளிதாக இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை காங்கிரஸ் முற்றுகையிட்டதால் சாலையில் 'பேட்ச்' ஒர்க் செய்யப்பட்டது. 'பேட்ச்' ஒர்க்கும் முழுமையாக செய்யாததால் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட் டுள்ளது. சாலை சரியில்லா ததால் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவ னந்தபுரம் விமான நிலையம் செல்லும் விமான பயணிகள் குறித்த நேரத்திற்குள் விமான நிலையம் சென்றடைய முடியாமல் அதிருப்தியுடன் செல்கின்றனர்.

    சாலையை செப்பனிடும் பணிக்கு ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்தக்காரர் சாலைப்பணி முடிந்து 1 வருடத்திற்குள் சேதம டைந்தால் ஒப்பந்தக்காரரே பொறுப்பு ஆவார் என்பது ஓப்பந்த சரத்தில் உள்ளது.ஆனால் இந்த சரத்தை ஓப்பந்தக்காரர்கள் மீறி உள்ளனர். அதிகாரிகளும் இதனை கண்டு கொள்ளா மல் உள்ளனர்.

    குமரி மாவட்டத் தில் 4 வழிச்சாலை பணியும் கிடப்பில் போடப்பட்டுள் ளது. 4 வழிச்சாலை பணி யை பா.ஜ.க்காரர்களே தடுத்து நிறுத்தி உள்ளனர்.நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை ஒவ் வொரு கிராமத்திற்கும் பாரபட்சமாக வழங்கப் பட்டுள்ளது. கேரள மாநிலம் போன்று அனைவருக்கும் பாரபட்மின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.நிலம் அளித்தவர்க்கு அரசு வேலையும் வழங்க வேண் டும்.

    எனவே தேசிய நெடுஞ் சாலையை உடனே செப்ப னிடவும், கிடப்பில் போட் டுள்ள 4 வழிச்சாலை பணிகளையும் விரைந்து முடித்திடவும் வலியுறுத்தி வருகிற 1-ந்தேதி காங்கிரஸ் சார்பில் தோட்டியோடு சந்திப்பில் மாபெரும் மறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், செயலாளர் ஜெய ராஜ், நகர தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வா கிகள் உடனிருந்தனர்.

    • அருப்புக்கோட்டையில் இன்று கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • தரமான சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் குண்டும், குழியுமான சாலைகள் உள்ளன. இதனை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நகராட்சியின் 16-வது வார்டான திருநகரம் பகுதியில் புதிய சாலை அமைக்க நகராட்சி சார்பில் ரூ. 1 கோடியே 16 லட்சம் செலவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேற்கண்ட பகுதியில் ஏற்கனவே உள்ள குண்டும், குழியுமான சாலையை அப்புறப்படுத்தாமல் அதன் மேலேயே புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இதனை கண்டித்தும், தரமான சாலையை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று திருநகரம் விருதுநகர் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நகரச் செயலாளர் காத்த முத்து தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் நகராட்சிக்கு எதிராக கோஷமிட்டனர். தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் மறியல் கைவிடப்பட்டது.

    • 180 பெண்கள் உள்பட 372 பேர் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    கோவை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் மற்றும் மாவட்ட செயலாளர் சிவசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் மத்திய அரசே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, உத்தேச மின் கட்டண உயர்வை அமுல்படுத்த, மாநில அரசை நிர்பந்திக்காதே, உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி, வீட்டு வரி உயர்வை திரும்ப பெறு என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதில் 180 பெண்கள் உள்பட 372 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • வீட்டு வரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்
    • போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், மின்சார மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடந்தன.

    வீட்டு வரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். தாமரைசிங், சுரேஷ் மேசியா, நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப் பட்டனர்.

    • 4 அரசு பஸ்கள் சிறை பிடிப்பு
    • நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் செப்டம்பர் இறுதிக்குள் சாலைப்பணி முடித்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார்.

    கன்னியாகுமரி:

    கைதவிளாகம் முதல் ஹெலன் நகர் வரை சீரமைக்கப்படாமல் போடப்பட்டுள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி மேல்மிடாலம் சந்திப்பில் மீனவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 அரசு பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன.

    உதயமார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து கைதவிளாகம், மேல்மிடாலம் வழியாக கடலோரச்சாலை செல்கிறது. இச்சாலையை குறும்பனை, மிடாலம், மேல்மிடாலம், ஹெலன் நகர், இனயம், புத்தன்துறை, ராமன்துறை உள்ளிட்ட மீனவர் கிராமங்களை சார்ந்த மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை மக்கள் பயன் படுத்த முடியாத வகையில் குண்டுகுழிகள் நிறைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதன்பயனாக தமிழக அரசு ரூ.1.30 லட்சம் மதிப்பில் இச்சாலையை சீரமைக்க ஒதுக்கீடு செய்தது. இத்தொகையில் சாலை சீரமைக்கும் பணியை சில மாதங்கள் முன் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பணி தொடங்கிய சில நாட்களில் பணி கிடப்பில் போடப்பட்டது.

    இதனால் அப்பகுதி வழியாக மக்கள் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனத்தில் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மேல்மிடாலம் மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டடனர். அப்போது அவ்வழியாக வந்த தடம் எண் 302 மணக்குடி - இரயும்மன்துறை பஸ் மற்றும் நாகர்கோவில் செல்லும் 9 எ பஸ், மார்த்தாண்டம் செல்லும் 87 இ, பி ஆகிய 4 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஹெலன்நகர் மக்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அருட்பணி யாளர்கள் ஹென்றி பிலிப், ஆன்றனி கிளாரட், ஜினிஸ் ஆகியோர் பேசினர்.

    தகவல் அறிந்து வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ், கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. பின்னர் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஹெலன் ஜெனட் செப்டம்பர் இறுதிக்குள் சாலைப்பணி முடித்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார். அதன் பின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. போராட்டம் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 2019 டிசம்பர் முதல் 2022 நவம்பர் முடிய உள்ள காலத்திற்கு ஊதிய உயர்வுக்கு தீர்வு ஏற்படாமல் இருந்தது.
    • அனைத்து சங்க தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று காலை கல்குளம் தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு அரசின் வனத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு ரப்பர் கழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 2016 முதல் 2019 வரை இடைக்கால ஊதியம் உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது.

    ஆனால் ஊதிய உயர்வு உட்பட இறுதிப் படுத்தி உடன்பாடு கோரிக்கை தேர்வு ஏற்படவில்லை. இது நிலுவையில் உள்ள போது 2019 டிசம்பர் முதல் 2022 நவம்பர் முடிய உள்ள காலத்திற்கு ஊதிய உயர்வுக்கு தீர்வு ஏற்படாமல் இருந்தது.

    இந்நிலையில் அமைச்சர் முன்னிலையில் நாகர்கோவி லில் வைத்து டிசம்பர் மாதம் 2020 ஒன்றில் பேசி முடிக்கப்பட்டது. பத்து நாட்களில் உடன்பாடு செய்யவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால் 7 மாதங்களாகியும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்பு பேசியும் தீர்வு ஏற்படாத நிலையில் கன்னியாகுமாரி மாவட்ட அனைத்து சங்க தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று காலை கல்குளம் தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மறியலில் சிஐடியு மாவட்ட செயலாளர் வல்ச லகுமார், காங்கிரஸ் பால்ராஜ், அ.தி.மு.க. மகேந்திரன், ம.தி.மு.க. பால்ராஜ், பிஎம்எஸ் சார்பில் ரவிக்குமார், தொமுச சார்பில் நடராஜன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • அப்போது பேருந்தில் ஏற்றாமல் கண்டக்டர் தரக் குறைவாக திட்டியதால் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கிருந்து செல்லும் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக ஒரு சிறப்பு பேருந்து இயக்கப்படும். அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்து இன்று குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளிக்கு செல்ல காலதாமத மானது.

    இதனால் வழக்கமாக அந்த வழியில் இயங்கி வரும் 8-ம் எண் அரசு பேருந்தில் மாணவ-மாணவிகள் ஏற முயன்றனர். அப்போது பேருந்தில் ஏற்றாமல் கண்டக்டர் தரக் குறைவாக திட்டியதால் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு குமாரபாளையம் ரோட்டில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப் படுத்தினர். இதை அடுத்து சாலை மறியல் கைவிடப் பட்டது. இதுகுறித்து மாணவி மவுனிகா ஸ்ரீ மற்றும் வசந்தி கூறியதாவது:-

    வழக்கமான பள்ளிக்கு செல்லும் நேரத்தில் விடப்படும் சிறப்பு பேருந்து சில நேரங்களில் காலதாமதமாக வருகிறது. அவ்வாறு வரும்போது இந்த பகுதி வழியாக செல்லும் 8-ம் எண் மற்றும், 5-ம் எண் கொண்ட பேருந்துகளில் மாணவ, மாணவிகளாகிய நாங்கள் ஏறினால் நடத்துனர்கள் இடம் இல்லை எனக் கூறி இறக்கி விடுகிறார்கள்.

    பள்ளிக்கு நேரமாகிவிட்டது என கூறினால் தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பு மூஞ்சிக்கு வந்து விடும் என கூறுகிறார்கள்.

    நாங்கள் பள்ளிக்கு செல்ல காலதாமதம் ஆனால் ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். காலையில் சென்றால் மாலை வரை வீடு திரும்ப நேர ஆகிறது. பேருந்துகளை நம்பி செல்ல வேண்டி இருப்பதால் எங்களுக்கு சரியான நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மாண-மாணவிகளின் இந்த திடீர் சாலை மறியலால் கீழேரிப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×