search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106977"

    • ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம்
    • போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள வடக்குப்பட்டியில் ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்குப்பட்டியில் புதிதாக ரேஷன் கடை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.இந்நிலையில் வடக்குப்பட்டி மற்றும் கல்லிக்கொல்லை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ரேசன் பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு சென்றனர்.அப்போது அங்கு உங்களது பெயர் இங்கு இல்லை எனவும் இதனால் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாது என கடை ஊழியர் தெரிவித்த தாக கூறப்படுகிறது .இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் வடகாடு பெரிய கடை வீதி ஆலங்குடி ஆவணம் கைகாட்டி நெ டுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமா தான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உரிய அரசு அலுவலர்களிடம் பேசி ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


    • அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பெயர் பலகை இரும்பு கம்பத்தில் வைக்கப்பட்டிருந்து.
    • பெயர் பலகை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடம் அருகே அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பெயர் பலகை இரும்பு கம்பத்தில் வைக்கப்பட்டிருந்து.

    இதனை கால்வாய் பணிக்காக முன்னறிவிப்பின்றி அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

    பெயர் பலகை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. உடனே பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

    இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

    • குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் 3-வது வார்டான கல்லாங்குத்து பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான சாலை வசதி இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கல்லாங்குத்து பகுதியில் சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    குடி தண்ணீருக்காக அவர்கள் நீண்டதூரம் செல்ல வேண்டி யிருந்தது. குடிநீர் பிரச்சி னையை சரிசெய்ய அதிகாரி களிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இதை கண்டித்தும், குடிநீர், சாலை வசதியை செய்து தரக்கோரி இன்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர், வார்டு கவுன்சிலர் முத்துகுமார் தலைமையில் தேனூர் பஸ் நிறுத்தம் முன்பு திரண்டர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சோழவந்தான்- தேனூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்திருந்தனர்
    • ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூரில் இருந்து பன்னிமடை வழியாக வரப்பாளையம் செல்லும் சாலையில் அத்திக்கடவு குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. அப்பணிகள் முடிவடைந்து நீண்ட நாட்கள் ஆகியும் சாலை பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியும் ஆகி, குண்டும் குழியுமாக உள்ளன.

    இதனால் இந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவைகள் உள்ளன. பள்ளி, கல்லூரி வாகனங்களும் இந்த வழியாக சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்திருந்தனர். இருந்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் திடீரென்று பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையை வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக சென்ற அனைத்து பள்ளி கல்லூரி வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நின்றன. இதனால் போக்குவரத்து கடும் போக்குவரத்து ஏற்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் பி.டி.ஒ செந்தில்குமார், மண்டல அலுவலர் ஜோதி, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், தடாகம் கப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நாயனார் மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அவர்கள் உடனடியாக சாலை போடுவதற்கான நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    • என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கப்பட்டது.
    • உழவர் சந்தை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2-வது சுரங்க விரிவாக்க பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், வடக்குத்து ஜெகன், செல்வ.மகேஷ், கார்த்திகேயன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கைது செய்ததை கண்டித்தும், என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கடலூரில் மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி தலைமையில் மாணவர் அணி கோபிநாத், இளைஞர் அணி சந்திரசேகரன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மாவட்ட தலைவர் தடா. தட்சிணாமூர்த்தி உட்பட 25 பேரை கைது செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. 

    • காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது.
    • இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது. இந்த சாலையை, உடனே சீரமைக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம், கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது, அந்த சாலை மிகவும் மோசமாகி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளதால், அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து, கிராம மக்கள் காரைக்கால்-கும்பகோணம் செல்லும் பிரதான தேசிய நெடு ஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், திருநள்ளாறு, அம்பகரத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது கிராம மக்கள் ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கும் பணியினை தொடங்க வேண்டும். இல்லையேல், மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    • 3 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து நடைபெற்றது
    • பெரம்பலூர் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் சாலை கவுல்பாளையத்தில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய(குடிசை மாற்று வாரியம்) குடியிருப்பு உள்ளது. இங்கு 504 வீடுகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சப்ளை சீராக இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக முற்றிலுமாக குடிநீர் வரவில்லை. இது குறித்து பல அரசு அலுவலகங்களில் பொது மக்கள் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று காலை ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்களுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெரம்பலூர் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அங்கு வந்த அரசு அலுவலர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் விநியோகம் நடைபெறும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு, பெரம்பலூரில் இருந்து அரியலூர், தஞ்சை, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். 

    • ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்து பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்
    • வேலை செய்த வீட்டின் உரிமையாளரை கைது செய்ய கோரிக்கை

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே–யுள்ள பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திக் (வயது 30). திருமணமாகாத இவர் கழுவந்தோண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் பெயிண் டிங் வேலை செய்து கொண் டிருந்தார். அப்போது வீட் டின் மேலே சென்ற மின் கம்பி உரசி–யதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதா–பமாக உயிரிழந்தார்.இது குறித்து ஜெயங் கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக ஜெயங்கொண்டம் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற் கிடையே உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட் டதாக கூறப்ப–டுகி–றது.இந்நிலையில் கார்த்திக் கின் உடலை உடற்கூராய்வு செய்து உடனடியாக உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் அவர் பணி செய்த வீட்டு உரிமையாளரிடம் நஷ்டஈடு பெற்று வழங்க வேண்டும். அந்த வீட்டு உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம மக்கள், உறவினர்கள் ஜெயங் கொண்டம் அரசு மருத்து–வமனைக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த ஜெயங் கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ–குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடு–பட்டவர்களிடம் பேச்சு–வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் உறவினர்கள் கலைந்து சென்ற–னர். இதற்கிடையே வீட்டு உரிமையாளர் கழு–வந்தோண்டி கரைமேடு பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆலங்குடியில் ஆட்டோ சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்
    • ஆன்லைன் அபராதம், எப்சி உரிமையை தனியாருக்கு தாரை வார்ப்பது உள்ளிட்டவற்றை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது

    ஆலங்குடி:

    ஆலங்குடியில் ஆட்டோ சங்கத்தினர் மற்றும் அனைத்து மோட்டார் வாகனங்கள் சார்பில் 15 நிமிடம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்டிஓ அலுவலங்களில் லஞ்சம் வாங்குபதை தடுத்த வேண்டும், ஆன்லைன் அபராதம், எப்சி உரிமையை தனியாருக்கு தாரை வார்ப்பது. கார்ப்பரேட் ஆதரவாக மோட்டார் வாகன சட்டம் திருத்தம் உள்ளிட்டவற்றை கண்டித்து ஆலங்குடியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஆலங்குடி அரசமரம் பஸ்ஸ்டாப் ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையிலும், சந்தப்பேட்டையில் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், வடகாடு முக்கத்தில் பெரியகுமாரவேல் சார்பிலும் ஆட்டோ சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் வம்பன் திருவரங்குளம் ஆகிய இடங்களிலும் ஆட்டோ சங்கத்தினர் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் ஆட்டோ சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் வைத்தியலிங்கம் மற்றும் சிஐடியு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தோகைமலை- பாளையம் சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
    • சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தினர்

    கரூர்

    தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி பரந்தாடியில் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக அருகே உள்ள நல்லாக்கவுண்டம்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து பரந்தாடி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும், நல்லாக்கவுண்டம்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை தோகைமலை- பாளையம் சாலையில் உள்ள பரந்தாடி பிரிவில் காலிக்குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், நாகனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • இதற்கு மாநில செயலாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.
    • மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூா்:

    தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி 10 ஆண்டுகள் பணி செய்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் .

    24-2-2018 முத்தரப்பு ஒப்பந்தப்படி ஒப்பந்த ஊழியர்கள் அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380 வழங்கிட வேண்டும்,அனைவருக்கும் கருணை தொகை வழங்க வேண்டும்.

    கே2 அக்ரீமெண்ட் படி அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநில செயலாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜு, வட்ட தலைவர் அதிதூதன மைக்கேல் ராஜ், சி.ஐ.டி.யூ மாவட்டத் துணைத் தலைவர் அன்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அறந்தாங்கி:

    மணமேல்குடி தாலுகா கிருஷ்ணாஜி பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட திருமங்களப்பட்டினத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில்இங்கு முறையான தார்ச்சாலை, குடிநீர் வசதி, பேருந்து நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லையென கூறப்படு கிறது. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியுடன் இணைந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணாஜி பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த மணமேல்குடி போலீ சார் மறியலில் ஈடுட்ட பொது மக்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர். இந்த சமாதான பேச்சு வார்த்தையில் உட ன்பாடு எட்டவில்லை. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

    ×