search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யாக்கண்ணு"

    விவசாயிகள் பிரச்சனைக்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் துணை நிற்பதில்லை என அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தடைசெய்யக்கோரி மார்ச் 1-ந் தேதி முதல் 100 நாட்கள் குமரிமுதல் கோட்டை வரை 32 மாவட்டங்கள் வழியாக விவசாயிகள் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் எண்ணத்தூர், உத்திரமேரூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட அவர் காஞ்சீபுரம் வந்தார்.

    பின்னர் அய்யாக்கண்ணு மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து பாலாற்றில் 3 கிலோ மீட்டருக்கு ஒன்று என தடுப்பணை கள் கட்ட வேண்டும், மாவட் டத்தில் உள்ள அனைத்து சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.

    அப்போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. காலம்காலமாக அரசியல் வாதிகள் விவசாயிகளை அடிமை போல் வைத்துள்ளனர்.

    அ.தி.மு.க, தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி என எந்த ஒரு அரசியல் கட்சியும் விவசாயிகளுக்காக துணை நிற்கவில்லை.

    மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு திட்டத்திற்காகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்த விட மாட்டோம். மீறி கையகப்படுத்தினால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்.

    நடிகர் ரஜினிகாந்த் நதிகள் இணைப்பிற்காக தருவேன் என்று சொன்ன 1 கோடி ரூபாயை என்னிடமோ அல்லது மத்திய அரசிடமோ இதுவரை தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அய்யாக்கண்ணு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவருடன் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைபொதுச் செயலாளர் தீனன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். #Tamilnews
    மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்யக்கோரி சென்னை தலைமைச்செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
    கடலூர்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இவர் கடலூர் வந்தார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை சந்தித்து மனு அளித்தார். அதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து கடந்த 1.3.2018 முதல் விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தி வருகிறோம். இதுவரை 29 மாவட்ட கலெக்டர்களை சந்தித்து மனு அளித்து இருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகும் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகளில் இருந்து 200 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கேரளா வழியாக கடலில் கலக்கிறது. ஆகவே இந்த ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். பல்வேறு விவசாய திட்டங்களுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

    இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றாவிட்டால் வருகிற 10-ந்தேதி முதல் தலைமைச் செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். ஏற்கனவே டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, முதல்- அமைச்சர் எங்களை சந்தித்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
    திருவண்ணாமலை:

    மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரியும், நதிநீர் இணைப்பை அமைக்கக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் தமிழகத்தில் 100 நாள் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று அய்யாக்கண்ணு திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர், சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லுக்கு ரூ.16.50 அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் நெல்லுக்கு விலை குறைத்து வழங்கப்படுகிறது. சில இடங்களில் நெல் விற்பனை செய்ய 40 கிலோ மூட்டைக்கு ரூ.50 கமிஷன் கேட்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவும், காப்பீடு, நஷ்ட ஈடு கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றையும், செய்யாற்றையும் இணைத்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

    கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்த உணவு பொருட்களை மக்களுக்கு கொடுத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே, மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

    மத்திய அரசு அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகள் கட்டவும், ஏரி, குளம், வரத்து கால்வாய்கள் அமைக்கவும், சீமை கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நதிகளை தேசிய மயமாக்கி அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தென்னகத்திற்கு குறிப்பாக தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும்.

    விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும். இன்னும் 21 நாட்களில் சென்னை செல்ல உள்ளோம். பின்னர் முதல்- அமைச்சரை சந்திக்க உள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரது வீட்டில் அல்லது அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை அங்கேயே இருந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    இது சம்பந்தமாக உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பதில் மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    வந்தவாசியில் மரபணு மாற்றம் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த அய்யாகண்ணுவிடம் பா.ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    வந்தவாசி:

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 100 நாள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 1-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பிரசாரம் சென்னை கோட்டையில் நிறைவு பெறுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

    செய்யாறில் பிரசாரம் செய்த அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    இயற்கை விவசாயத்தை அழித்து கார்பரேட் நிறுவனங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து விற்று வருகின்றனர்.

    இதே நிலை நீடித்தால் மக்களின் அழிவு நிலை நீடிக்கும். செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதைத் தொடர்ந்து, வந்தவாசி பழைய பஸ் நிலையம், பஜார் தெரு, காஞ்சிபுரம் சாலையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனர். தேரடி வீதியில் துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்த அய்யாக்கண்ணுவிடம் பா.ஜ.க. நகரத் தலைவர் குருலிங்கம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் துரை உள்ளிட்ட சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசை கண்டித்து நீங்கள் எப்படி துண்டு பிரசுரம் வழங்கலாம் என்று கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர் பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் தொடர்ந்து அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார்.

    கடந்த 14-ந் தேதி வேலூர் வந்த அய்யாக்கண்ணு பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வலியுறுத்தி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் மோடி குறித்து விமர்சிக்க கூடாது என்று அய்யாக்கண்ணுக்கு எச்சரிக்கை விடுத்து தாக்க முயன்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூரிலும் பா.ஜ.க. பெண் பிரமுகர் அய்யாக்கண்ணுவை தாக்கினார். அய்யாக்கண்ணு மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் விவசாய அமைப்பிகளுடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    வேலூர் கலெக்டர் ஆபீசில் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்ற இந்து அமைப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணத்தின் நீட்சியாக நேற்று வேலூருக்கு வந்திருந்தார். பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வலியுறுத்தி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவரை, சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற இந்து அமைப்பினர் தாக்க முயன்றனர்.

    சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர், தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன் பட்டியில் மதமாற்றம் செய்ய தாக்குதல் நடத்துபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது தான், அய்யாக்கண்ணுவை ஒருமையில் பேசி தாக்க முற்பட்டனர். மேலும் கோ‌ஷம் எழுப்பினர்.

    கலெக்டர் அலுவலகத்தில் அனுமதியில்லாமல் கோ‌ஷம் எழுப்பிய புகாரில் சத்துவாச்சாரி போலீசார், சக்தி சேனா இந்து மக்கள் இயக்க பொதுச்செயலாளர் ராஜகோபால் (வயது 48) உள்பட 4 நிர்வாகிகளை கைது செய்தனர்.

    ஆனால் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்றது தொடர்பாக, சக்தி சேனா அமைப்பினர் மீது இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட 4 பேரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  #Tamilnews
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அய்யாக்கண்ணுவை இந்து அமைப்பினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணமாக இன்று வேலூருக்கு வந்தார். வேலூர் கோட்டை அருகே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். பிறகு, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க சென்றார்.

    அப்போது, நிருபர்களுக்கு அய்யாக்கண்ணு பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:- காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய நீர்வளத்துறை செயலாளர் மற்றும் கர்நாடக தலைமை செயலாளரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலாற்றில் அணைகள் கட்ட வேண்டும். தென்பெண்ணையாற்றை பாலாற்றுடன் இணைக்க வேண்டும். இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைக்க இன்று வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த கமிட்டிக்கு காவிரி விவகாரத்தில் முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதிகாரமற்ற கமிட்டி என்றால் எங்களுக்கு தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சரை அழைப்போம். முதல்- அமைச்சர் வரவில்லை என்றாலும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    அய்யாக்கண்ணு மோடி மீது விமர்சனம் வைத்ததால், அந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக பாடை கட்டி வந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற அமைப்பினர் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்தனர். மோடியை பற்றி விமர்சிக்க உனக்கு தகுதியில்லை. விவசாய சங்கத்திற்கு நீ தலைவனாக இருப்பதற்கும் தகுதியில்லை என்று ஒருமையில் பேசினர்.

    இதனால் அய்யாக்கண்ணுவுக்கும், இந்து அமைப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் அய்யாக்கண்ணுவை தாக்க முயற்சித்தனர்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, மோதலை தடுத்து அய்யாக்கண்ணுவை மீட்டனர். பின்னர், இது பற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே, திருச்செந்தூரில் பா.ஜ.க. பெண் பிரமுகர் அய்யாக் கண்ணுவை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
    ×