என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 107149
நீங்கள் தேடியது "திருநாவுக்கரசு"
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் தாய் கோர்ட்டு வளாகத்தில் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். #PollachiAbuseCase #PollachiAssaultCase
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் மாணவிகள் - பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு ஆவார்.
அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை ஜாமினில் விடுதலை செய்ய கோரி திருநாவுக்கரசின் தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் லதா நேரடியாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
திருநாவுக்கரசை வெளியில் விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால் திருநாவுக்கரசுக்கு ஜாமின் வழங்க முடியாது என நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார்.
ஜாமின் மனு விசாரணைக்கு வந்தததை தொடர்ந்து திருநாவுக்கரசின் தாய் லதா கோர்ட்டுக்கு வந்து இருந்தார். அவர் கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் உங்கள் மகன் இப்படி செய்து விட்டாரே? என திருநாவுக்கரசு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த லதா, எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை. அவனது செல்போனில் எத்தனை பெண்கள் படம் உள்ளதோ? அந்த பெண்களை பிடித்து விசாரணை செய்யுங்கள். என் மகன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர் என்றார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
பொள்ளாச்சியில் மாணவிகள் - பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு ஆவார்.
அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை ஜாமினில் விடுதலை செய்ய கோரி திருநாவுக்கரசின் தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் லதா நேரடியாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
திருநாவுக்கரசை வெளியில் விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால் திருநாவுக்கரசுக்கு ஜாமின் வழங்க முடியாது என நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார்.
ஜாமின் மனு விசாரணைக்கு வந்தததை தொடர்ந்து திருநாவுக்கரசின் தாய் லதா கோர்ட்டுக்கு வந்து இருந்தார். அவர் கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் உங்கள் மகன் இப்படி செய்து விட்டாரே? என திருநாவுக்கரசு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த லதா, எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை. அவனது செல்போனில் எத்தனை பெண்கள் படம் உள்ளதோ? அந்த பெண்களை பிடித்து விசாரணை செய்யுங்கள். என் மகன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர் என்றார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதிநகரை சேர்ந்தவர் சபரி என்கிற ரிஷ்வந்த் (வயது 25).சிவில் என்ஜினீயர். இவர் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக்கில் பழகி வந்துள்ளார். நாளடைவில் தொலைபேசியில் பேசும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கல்லூரி மாணவியை ஊஞ்சவேலாம்பட்டியில் காத்திருக்குமாறு சபரி தெரிவித்துள்ளார். ஊஞ்சவேலாம்பட்டிக்கு தனது நண்பர்கள் வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28) திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் சென்ற சபரி காரில் மாணவியை தாராபுரம் சாலையில் அழைத்து சென்று செல்போனில் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பியவரை திருநாவுக்கரசு மற்றும் குழுவினர் தொடர்ந்து போன் செய்து மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து மாணவி பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த மாதம் 25-ந் தேதி காலை சபரி, வசந்தகுமார், சதீஸ்குமார் ஆகியோரை கைதுசெய்தனர்.
பின்னர் 3 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம்.1., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் 3 பேரும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 25-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
ஆபாச வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் லதா பொள்ளாச்சி ஜே.எம்.1., கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குற்றச்சாட்டுகளின் தன்மையின் அடிப்படையிலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருதுவதாலும் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதிநகரை சேர்ந்தவர் சபரி என்கிற ரிஷ்வந்த் (வயது 25).சிவில் என்ஜினீயர். இவர் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக்கில் பழகி வந்துள்ளார். நாளடைவில் தொலைபேசியில் பேசும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கல்லூரி மாணவியை ஊஞ்சவேலாம்பட்டியில் காத்திருக்குமாறு சபரி தெரிவித்துள்ளார். ஊஞ்சவேலாம்பட்டிக்கு தனது நண்பர்கள் வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28) திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் சென்ற சபரி காரில் மாணவியை தாராபுரம் சாலையில் அழைத்து சென்று செல்போனில் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த புகைப்படத்தை காட்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடமுயன்றுள்ளனர். மேலும் மாணவியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் நகையை பறித்து கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும் மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாணவி கூச்சலிடவே தாராபுரம் சாலையில் பெரியாக்கவுண்டனூர் பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த மாதம் 25-ந் தேதி காலை சபரி, வசந்தகுமார், சதீஸ்குமார் ஆகியோரை கைதுசெய்தனர்.
பின்னர் 3 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம்.1., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் 3 பேரும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 25-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
ஆபாச வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் லதா பொள்ளாச்சி ஜே.எம்.1., கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குற்றச்சாட்டுகளின் தன்மையின் அடிப்படையிலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருதுவதாலும் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் ஆளுங்கட்சியினருக்கு எதிராக பேசி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் கேட்டுக்கொண்டுள்ளார். #PollachiAssaultCase
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவரை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் செந்தில், ஆச்சிப்பட்டி வசந்த குமார், நாகராஜ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் பாலியல் புகார் கொடுத்த மாணவியின் சகோதரர் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தது நாங்கள்தான். சுயநலத்திற்காக வழக்கு தொடரவில்லை. எனது தங்கை பாதிக்கப்பட்டதுபோன்று வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் வழக்குதொடர்ந்தோம்.
வழக்கின் ஆதாரமான வீடியோவை போலீசில் ஒப்படைத்தோம். பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரிடம் தெரிவித்தவுடன் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து 3 பேரை கைது செய்தனர்.
ஆளுங்கட்சியினர் எங்களுக்கு உதவியாக உள்ளனர். ஒரு சில அரசியல் விஷமிகள் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஆளும்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த இணையத்தில் அவதூறு பரப்புகின்றனர்.
இப்படி அவதூறு பரப்புபவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்கிறேன். உங்களிடம் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அதை காவல்துறையிடம் கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். உங்களுக்கு தோன்றுவதையோ, ஆளுங்கட்சியினர் மீது எவ்வளவு கெட்டபெயர் ஏற்படுத்தமுடியுமோ அந்த அளவிற்கு இணையத்தில் தவறான பதிவுகளை போடாதீர்கள். உங்களால் முடிந்தால் அந்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை வாங்கித்தர போராடுங்கள். அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.
இவ்வாறு வீடியோவில் பேசியுள்ளார். #PollachiAssaultCase
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவரை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் செந்தில், ஆச்சிப்பட்டி வசந்த குமார், நாகராஜ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் பாலியல் புகார் கொடுத்த மாணவியின் சகோதரர் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தது நாங்கள்தான். சுயநலத்திற்காக வழக்கு தொடரவில்லை. எனது தங்கை பாதிக்கப்பட்டதுபோன்று வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் வழக்குதொடர்ந்தோம்.
வழக்கின் ஆதாரமான வீடியோவை போலீசில் ஒப்படைத்தோம். பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரிடம் தெரிவித்தவுடன் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து 3 பேரை கைது செய்தனர்.
ஆளுங்கட்சியினர் எங்களுக்கு உதவியாக உள்ளனர். ஒரு சில அரசியல் விஷமிகள் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஆளும்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த இணையத்தில் அவதூறு பரப்புகின்றனர்.
இப்படி அவதூறு பரப்புபவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்கிறேன். உங்களிடம் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அதை காவல்துறையிடம் கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். உங்களுக்கு தோன்றுவதையோ, ஆளுங்கட்சியினர் மீது எவ்வளவு கெட்டபெயர் ஏற்படுத்தமுடியுமோ அந்த அளவிற்கு இணையத்தில் தவறான பதிவுகளை போடாதீர்கள். உங்களால் முடிந்தால் அந்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை வாங்கித்தர போராடுங்கள். அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.
இவ்வாறு வீடியோவில் பேசியுள்ளார். #PollachiAssaultCase
பொள்ளாச்சி கும்பலிடம் சிக்கிய மாணவிகள் மற்றும் பெண்கள் குறித்த வீடியோ காட்சிகளை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். #PollachiAssaultCase
கோவை:
சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதுதொடர்பாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு(27), என்ஜினீயர் சபரி ராஜன்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மாணவியின் அண்ணனை மிரட்டியதாக பார் நாகராஜ், பாபு, செந்தில், ஆச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில், ஏராளமான இளம்பெண்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் இருந்தன. அதில் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
அந்த வீடியோவில், ஒரு இளம்பெண்ணை கும்பல் நிர்வாணப்படுத்துவதும், பெல்ட்டால் அடித்து துன்புறுத்துவதும் போன்ற காட்சிகள் இருந்தன. கும்பலிடம் சிக்கிய அந்த இளம்பெண் ‘அண்ணா என்னை விட்டுருங்கண்ணா, உன்னை நம்பி தானே வந்தேன், ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என கதறுகிறார். இதேபோல எண்ணற்ற பெண்களை கும்பல் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ அடிப்படையில் இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதில் புகார் கொடுத்த மாணவியுடன், ஆனைமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ள போலீசார், அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங்கும் அளிக்கின்றனர்.
இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், கோவையை சேர்ந்த பல்கலை கழக பேராசிரியை என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கைதானவர்களின் செல்போன்களில் இவர்கள் குறித்த வீடியோக்கள் இல்லை. அந்த வீடியோக்களை அழித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
தற்போது, அந்த செல்போன்களை ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். ‘ரெக்கவரி சாப்ட்வேர்’ மூலம் அந்த செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்பப் பெற்று, அதில் உள்ள பெண்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கும்பல் கடந்த 7 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி, பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கும்பலின் பின்னணியில் மேலும் பலர் இருப்பதாக கூறப்படும் நிலையில், கைதான 4 பேரை தவிர வேறு யாருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இல்லை என போலீசார் மறுக்கின்றனர்.
இந்த வழக்கில் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தப்ப வைக்க போலீசார் முயற்சி செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள், பொது மக்கள் குற்றம் சாட்டினர். இவ்வழக்கில் கைதானவர்கள் மீது சாதாரண பிரிவுகளிலேயே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொள்ளாச்சியை சேர்ந்த வக்கீல்களும் குற்றம் சாட்டினர். #PollachiAssaultCase
சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதுதொடர்பாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு(27), என்ஜினீயர் சபரி ராஜன்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மாணவியின் அண்ணனை மிரட்டியதாக பார் நாகராஜ், பாபு, செந்தில், ஆச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில், ஏராளமான இளம்பெண்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் இருந்தன. அதில் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
அந்த வீடியோவில், ஒரு இளம்பெண்ணை கும்பல் நிர்வாணப்படுத்துவதும், பெல்ட்டால் அடித்து துன்புறுத்துவதும் போன்ற காட்சிகள் இருந்தன. கும்பலிடம் சிக்கிய அந்த இளம்பெண் ‘அண்ணா என்னை விட்டுருங்கண்ணா, உன்னை நம்பி தானே வந்தேன், ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என கதறுகிறார். இதேபோல எண்ணற்ற பெண்களை கும்பல் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ அடிப்படையில் இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதில் புகார் கொடுத்த மாணவியுடன், ஆனைமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ள போலீசார், அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங்கும் அளிக்கின்றனர்.
இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், கோவையை சேர்ந்த பல்கலை கழக பேராசிரியை என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கைதானவர்களின் செல்போன்களில் இவர்கள் குறித்த வீடியோக்கள் இல்லை. அந்த வீடியோக்களை அழித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
தற்போது, அந்த செல்போன்களை ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். ‘ரெக்கவரி சாப்ட்வேர்’ மூலம் அந்த செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்பப் பெற்று, அதில் உள்ள பெண்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கும்பல் கடந்த 7 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி, பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கும்பலின் பின்னணியில் மேலும் பலர் இருப்பதாக கூறப்படும் நிலையில், கைதான 4 பேரை தவிர வேறு யாருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இல்லை என போலீசார் மறுக்கின்றனர்.
இந்த வழக்கில் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தப்ப வைக்க போலீசார் முயற்சி செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள், பொது மக்கள் குற்றம் சாட்டினர். இவ்வழக்கில் கைதானவர்கள் மீது சாதாரண பிரிவுகளிலேயே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொள்ளாச்சியை சேர்ந்த வக்கீல்களும் குற்றம் சாட்டினர். #PollachiAssaultCase
விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் போதே பிளே-பாயாக வலம் வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. #PollachiAssaultCase
பொள்ளாச்சி:
விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.
வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர் தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
சொகுசு கார், பண்ணைத் தோட்டம் என ஆடம்பரமாக வாழ்ந்து வரும் இவர் 2011-ம் ஆண்டு முதல் 2016- வரை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது ‘பிளே-பாயாக’ வலம் வந்துள்ளார்.
இவரது தோழி ஒருவர் மூலமாக திருநாவுக்கரசுக்கு ஏராளமான மாணவிகளின் பழக்கம் கிடைத்துள்ளது. அவர்களிடம் இருந்து செல்போன் எண் வாங்கிய திருநாவுக்கரசு, அதனை தனது நண்பரும், என்ஜினீயருமான சபரிராஜனிடம் கூறி உள்ளார்.
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் சபரிராஜன் தனது பேச்சால் மாணவிகளை மயக்கி உள்ளார். தனது வலையில் சிக்கிய மாணவிகளை சபரிராஜன் ஜாலியாக ‘பிக்னிக்’ போகலாம் என அழைத்துள்ளார். அதை நம்பி வந்த மாணவிகளை சபரிராஜன், திருநாவுக்கரசின் காரில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மாணவிகளிடம் சபரிராஜன் சில்மிஷ லீலைகளை அரங்கேற்றுவதை திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் மறைந்து நின்று வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி மாணவிகளை, திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணைத் தோட்டத்துக்கு அழைத்து சென்று தங்களது இச்சைக்கு பலியாக்கி உள்ளனர்.
படித்த, பணம் படைத்த வாலிபர்களான இவர்களிடம் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது, சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பப் பெண்களும் சிக்கி சீரழிந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மானம் கருதி போலீசில் புகார் கொடுக்காதது இந்த கும்பலுக்கு மேலும் வசதியாகி போய் விட்டது.
தற்போது கைதாகி உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பாண்டியராஜன் மேலும் கூறியதாவது:-
இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. கைதானவர்களின் செல்போன்களில் 4 வீடியோக்கள் மட்டுமே இருந்தது. அதில் உள்ள பெண்களை அடையாளம் காணவும், அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று இவ்வழக்கில் மேலும் ஆதாரங்களை திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் அவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்த கும்பலுக்கு ஒரு பெண் உள்பட யார்-யாரெல்லாம் உதவி செய்தார்கள்? என்று விசாரித்து வருகிறோம். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக பெண்கள், மாணவிகள் சமூக வலை தளங்களில் தங்களுக்கு தெரியாதவர்களுடன் பழக வேண்டாம். தேவையில்லாதவர்கள் ‘பிரண்ட் ரிக்வஸ்ட்’ கொடுத்தால் அதை ஏற்க கூடாது. தங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை தெரியாதவர்களுடன் பகிர வேண்டாம். அதையும் மீறி யாரேனும் தொந்தரவு செய்தால் தைரியமாக புகார் கொடுக்கலாம். உங்களது விவரங்கள் ரகசியமாக வைத்து, புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #PollachiAssaultCase
விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.
வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர் தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
சொகுசு கார், பண்ணைத் தோட்டம் என ஆடம்பரமாக வாழ்ந்து வரும் இவர் 2011-ம் ஆண்டு முதல் 2016- வரை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது ‘பிளே-பாயாக’ வலம் வந்துள்ளார்.
இவரது தோழி ஒருவர் மூலமாக திருநாவுக்கரசுக்கு ஏராளமான மாணவிகளின் பழக்கம் கிடைத்துள்ளது. அவர்களிடம் இருந்து செல்போன் எண் வாங்கிய திருநாவுக்கரசு, அதனை தனது நண்பரும், என்ஜினீயருமான சபரிராஜனிடம் கூறி உள்ளார்.
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் சபரிராஜன் தனது பேச்சால் மாணவிகளை மயக்கி உள்ளார். தனது வலையில் சிக்கிய மாணவிகளை சபரிராஜன் ஜாலியாக ‘பிக்னிக்’ போகலாம் என அழைத்துள்ளார். அதை நம்பி வந்த மாணவிகளை சபரிராஜன், திருநாவுக்கரசின் காரில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மாணவிகளிடம் சபரிராஜன் சில்மிஷ லீலைகளை அரங்கேற்றுவதை திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் மறைந்து நின்று வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி மாணவிகளை, திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணைத் தோட்டத்துக்கு அழைத்து சென்று தங்களது இச்சைக்கு பலியாக்கி உள்ளனர்.
படித்த, பணம் படைத்த வாலிபர்களான இவர்களிடம் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது, சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பப் பெண்களும் சிக்கி சீரழிந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மானம் கருதி போலீசில் புகார் கொடுக்காதது இந்த கும்பலுக்கு மேலும் வசதியாகி போய் விட்டது.
தற்போது கைதாகி உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பாண்டியராஜன் மேலும் கூறியதாவது:-
இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. கைதானவர்களின் செல்போன்களில் 4 வீடியோக்கள் மட்டுமே இருந்தது. அதில் உள்ள பெண்களை அடையாளம் காணவும், அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று இவ்வழக்கில் மேலும் ஆதாரங்களை திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் அவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்த கும்பலுக்கு ஒரு பெண் உள்பட யார்-யாரெல்லாம் உதவி செய்தார்கள்? என்று விசாரித்து வருகிறோம். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக பெண்கள், மாணவிகள் சமூக வலை தளங்களில் தங்களுக்கு தெரியாதவர்களுடன் பழக வேண்டாம். தேவையில்லாதவர்கள் ‘பிரண்ட் ரிக்வஸ்ட்’ கொடுத்தால் அதை ஏற்க கூடாது. தங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை தெரியாதவர்களுடன் பகிர வேண்டாம். அதையும் மீறி யாரேனும் தொந்தரவு செய்தால் தைரியமாக புகார் கொடுக்கலாம். உங்களது விவரங்கள் ரகசியமாக வைத்து, புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #PollachiAssaultCase
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X