search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகாசி"

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகிய 4 தொழிலாளிகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை அடுத்துள்ள காளையார் குறிச்சி கிராமத்தில் கனகபிரபு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

    இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் ராக்கெட் வெடிக்கு மருந்து நிரப்பும் பணி நடைபெற்று வந்தது.

    அப்போது மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு வெடிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ அறை முழுவதும் பரவியது. அங்கிருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

    இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த தொழிலாளர்கள் திருத்தங்கலைச் சேர்ந்த ராமசாமி (வயது 67), சுக்கிரவார்பட்டி மாரி பாண்டி (47), காளையார் குறிச்சி முருகேசன் (47), எரிச்சநத்தம் அழகுபாண்டி (26) ஆகிய 4 பேர் உடல் கருகினர்.

    தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மற்றும் எம்.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டனர். 90 சதவீதத்திற்கும் மேல் காயமடைந்த இவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சிவகாசி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள கண்டியாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் கார்த்தி (வயது22). பூசாரிபட்டியை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துராஜ்(21).

    இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை வெம்பக் கோட்டையில் இருந்து புறப்பட்டனர்.

    வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது எழுவன்பச்சேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த முத்துராஜ், வெங்கடேசை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி முத்துராஜ் பரிதாபமாக இறந்தார். ஊயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வெங்கடேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கண்டியாபுரத்தில் உள்ள கண்டியாரம்மன் கோவில் திருவிழா இன்று நடைபெறுகிறது. விழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் பலியானது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருதுநகர்:

    சிவகாசி அருகே உள்ள இடையன் குளத்தில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

    நேற்று இங்கு ஊழியர்கள் பணி முடிந்து அலுமினிய பவுடரை அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர்.

    இன்று காலை 6 மணியளவில் அலுமினிய பவுடர் தீப்பிடித்துக் கொண்டது. இதில் அந்த அறை முழுவதும் சேதமடைந்தது.

    அதிகாலை நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து இது குறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×