search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோன்டா"

    ஹோன்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஜப்பான் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஹோன்டா தனது எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இ ப்ரோடோடைப் என்ற பெயர் கொண்டிருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    முன்னதாக இந்த கார் 2017 ஃபிரான்க்புர்ட் மோட்டார் விழா மற்றும் ஜெனிவா மோட்டார் விழாக்களில் பிரீவியூ செய்யப்பட்டது. இத்துடன் அடுத்த தலைமுறை ஜாஸ் கார் மாடல் ஹைப்ரிட் பவர்டிரெயின் உடன் வெளியாகும் என்றும் ஹோன்டா தெரிவித்துள்ளது.

    2017 ஆம் ஆண்டு ரெட்ரோ-ஸ்டைல் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை ஹோன்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. முன்னதாக ஜெனிவா மோட்டார் விழாவில் ஹோன்டா தனது இ ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்தது. மேலும் இந்த கார் உற்பத்திக்கு தயாராகி இருப்பதாக ஹோனடா தெரிவித்தது. 



    ஹோன்டா இ சிறிய காராக உருவாகி வருகிறது. இது 3895 எம்.எம். நீளம், 1750 எம்.எம். அகலம் மற்றும் 1495 எம்.எம். உயரம் கொண்டிருக்கிறது. ஹோன்டா இ கார் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. ஹோன்டாவின் எலெக்ட்ரிக் இ ஹேட்ச்பேக் காரின் உயரம் சிலருக்கு சவுகரியமற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    எனினும், இதுவரை ஐரோப்பாவில் மட்டும் ஹோன்டா எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் காருக்கு 22,000 பேர் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஹோன்டா அறிவித்துள்ளது. இத்துடன் ஹோன்டா தனது அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    ஹோன்டா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஜாஸ் கார் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என்றும் உறுதியாக தெரிவித்திருக்கிறது. இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ் கார் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 ஹோன்டா சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Honda



    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடல் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இதன் விலை 99,800 பட் (இந்திய மதிப்பில் ரூ.2.16 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய 2019 சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் புதிய பெயின்ட் ஸ்கீம் மற்றும் பிரேக் கேலிப்பர்களில் ரெட் நிற டிடெயிலங் செய்யப்பட்டுள்ளது. சி.பி.300ஆர் மாடலை போன்றே புதிய சி.பி.150ஆர் மாடலும் நியூ-ரெட்ரோ ஸ்டைலிங் செய்யப்பட்டிருக்கிறது. ஹோன்டா சி.பி.150ஆர் மோட்டார்சைக்கிள் முன்னதாக 2017 பேங்காக் சர்வதேச மோட்டார் விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. 



    சி.பி.150ஆர் மோட்டார்தைக்கிளில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சம் 20 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் என்றும் இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஹோன்டா சி.பி.150ஆர் மாடலின் முன்புறம் 41எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டிருக்கிறது. 

    பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்புறம் 296 எம்.எம். மற்றும் பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். ஸ்டேன்டர்டு வசதியாக வழங்கப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ஹோன்டா சி.பி.300ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சி.கே.டி. முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது.
    ஹோன்டா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹோன்டா சிவிக் காரினை வாங்க 40 நாட்களில் சுமார் 2400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HondaCivic



    இந்தியாவில் ஏழு ஆண்டுகளுக்கு பின் புதிய அம்சங்களுடன் ஹோன்டா சிவிக் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருந்த சிவிக் காரை வாங்க இதுவரை சுமார் 2400 பேர் முன்பதிவு செய்திருப்பதாக ஹோன்டா கார் இந்தியா தெரிவித்துள்ளது.

    முன்பதிவு எண்ணிக்கை குறைவாக காணப்பட்ட நிலையிலும், இவை வெறும் 40 நாட்களுக்குள் நடைபெற்றிருக்கின்றன. புதிய சிவிக் கார் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹோன்டா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது.



    தற்சமயம் உலகம் முழுக்க சுமார் 170 நாடுகளில் ஹோன்டா சிவிக் விற்பனையாகி வருகிறது. இவற்றில் இந்த கார் 10 இடங்களில் மட்டுமே உறபத்தி செய்யப்படுகிறது. பத்து இடங்களஇலும் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை விற்பனை செய்கிறது. கிரேட்டர் நொய்டா ஆலையில் 20 சதவிகிதம் டீசல் வேரியண்ட்டும் 80 சதவிகிதம் பெட்ரோல் வேரியண்ட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய ஹோன்டா சிவிக் மாடலில் 1.8 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 139 பி.ஹெச்.பி. @6500 ஆர்.பி.எம்., 174 என்.எம். டார்க் @4300 ஆர்.பி.எம். வழங்குகிறது. இத்துடன் முதல் முறையாக சிவிக் மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் புதிய சிவிக் மாடலில் 1.6 லிட்டர் i-DTEC டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம்., 300 என்.எம். டார்க் @2000 ஆர்.பி.எம். வழங்குகிறது. பெட்ரோல் என்ஜின் சி.வி.டி. யூனிட் கொண்டிருக்கும் நிலையில், டீசல் வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    ஹோன்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆப்பிரிக்கா மோட்டார் சைக்கிள் பெரிய என்ஜினுடன் உருவாகி வருகிறது. #Honda #HonaAfrica
    ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற மோட்டார் சைக்கிளை உருவாக்குவதில் தனித்துவமாய் திகழும் ஜப்பானின் ஹோன்டா நிறுவனம் தனது ஹோன்டா ஆப்பிரிக்கா மாடல் மோட்டார் சைக்கிளில் அடுத்த தலைமுறை மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது முந்தைய மாடலை விட பெரிய என்ஜினைக் கொண்டிருக்கிறது. 

    சாகசப் பிரியர்கள் பெரிதும் விரும்பும் இந்தமாடல் முதன் முதலில் 1988-ம் ஆண்டு எக்ஸ்.ஆர்.வி. 650 என்ற பெயரில் அறிமுகமானது. இதையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டில் எக்ஸ்.ஆர்.வி. 750 மாடல் அறிமுகமானது. தற்போது அறிமுகமாகியுள்ள ஆப்பிரிக்கா ட்வின் மாடல் மோட்டார் சைக்கிள் 2016-ம் ஆண்டில் அறிமுகமானது. 

    அனேகமாக இதில் பெரிய அளவிலான மாற்றங்கள் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என ஹோன்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள சி.ஆர்.எப்.1000 எல் மாடல் ஆப்பிரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் என்ஜின் சற்று பெரியதாகும். இது ஐரோப்பிய எமிஷனான பி.எஸ். 5-க்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 1,080 சி.சி. திறன் கொண்டிருக்கிறது. இரட்டை என்ஜினுடன் 94 ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,000 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. 20 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இதன் பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் இதன் விலை ரூ.13.23 லட்சம் முதல் துவங்குகிறது. இதன் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ.13.55 லட்சம் என  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் தனது டிரீம் யுகா மற்றும் ஹோன்டா லிவோ மோட்டார்சைக்கிள்களில் கூடுதல் பாதுகாப்பு வசதியை வழங்கியிருக்கிறது. #Honda



    ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் தனது டிரீம் யுகா மற்றும் லிவோ மோட்டார்சைக்கிள்களில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக ஹோன்டா நிறுவனம் தனது 110 சிசி திறன் கொண்ட வாகனங்களில் பாதுகாப்பு வசதியை வழங்கியிருந்தது. இந்நிலையில், இரண்டு மோட்டார்சைக்கிள்களில் சி.பி.எஸ். வசதியை சேர்த்திருக்கிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து 125சிசிக்கும் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். வழங்க வேண்டும்.

    புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்களில் பாதுகாப்பு வசதியை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஹோன்டா நிறுவனமும் தனது மோட்டார்சைக்கிள்களை அப்டேட் செய்து வருகிறது. 



    ஹோன்டா லிவோ மற்றும் டிரீம் யுகா மோட்டார்சைக்கிள்களில் பாதுகாப்பு தவிர எவ்வித அம்சங்களும் மாற்றப்படவில்லை. அந்த வகையில் இரு மோட்டார்சைக்கிள்களிலும் 109சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.4 பி.ஹெச்.பி. பவர், 9.09 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ஹோன்டா டிரீம் யுகா சி.பி.எஸ். இருபுறங்களிலும் டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை தற்சமயம் விற்பனையாகும் சி.பி.எஸ். இல்லாத மாடலை விட ரூ.600 அதிகம் ஆகும். இந்தியாவில் சி.பி.எஸ். வசதி கொண்ட டிரீம் யுகா விலை ரூ.54,847 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    டிரம்-பிரேக் கொண்ட ஹோன்டா லிவோ சி.பி.எஸ். விலை ரூ.57,539 என்றும் டிஸ்க் பிரேக் கொண்ட சி.பி.எஸ். விலை ரூ.59,950 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் சிடி 110 டிரீம் மோட்டார்சைக்கிளை சி.பி.எஸ். வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. #Honda



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் சிடி110 டிரீம் மோட்டார்சைக்கிளை சி.பி.எஸ். வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. ஹோன்டா சி.டி. 110 டிரீம் சி.பி.எஸ். விலை ரூ.50,028 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    சி.பி.எஸ். இல்லாத மோட்டார்சைக்கிள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இதன் விற்பனை ஏப்ரல் 1, 2019 முதல் நிறுத்தப்பட்டு விடும். சி.பி.எஸ். வசதி தவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    புதிய சிடி டிரீம் 110 மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.31 பி.ஹெச்.பி. மற்றும் 9.09 என்.எம். டார்க் செயல்திறன், 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. சிடி 110 டிரீம் சி.பி.எஸ். மாடலில் இரண்டு சக்கரங்களிலும் 130 எம்.எம். டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ஹைட்ராலிக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மோட்டார்சைக்கிள் 18-இன்ச் வீல்களில் 80/100 டையர்களை கொண்டிருக்கிறது. புதிய சிடி 110 டிரீம் சி.பி.எஸ். தவிர ஹோன்டா நிறுவனம் 2019 கிரேசியா ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

    புதிய ஹோன்டா கிரேசியா ஸ்கூட்டர்  விலை ரூ.64,668 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா கிரேசியா அப்டேட் DX வேரியண்ட்டில் மட்டுமே் வழங்கப்பட்டிருக்கிறது. 
    ஹோன்டா டூ வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த CB300R மோட்டார்சைக்கிளை இதுவரை 400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HondaCB300R #Motorcycle



    ஹோன்டா டூ வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட CB300R மோட்டார்சைக்கிளை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஹோன்டா மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஜனவரி மாத துவக்கத்தில் துவங்கியது.

    புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள் ஜப்பான் நிறுவன பிராண்டின் முதல் நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே மோட்டார்சைக்கிள் ஆகும். பெயருக்கு ஏற்றார்போல் புதிய மோட்டார்சைக்கிள் முற்றிலும் வித்தியாச வடிவமைப்பை கொண்டிருக்கிறது.



    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளை வாங்க இதுவரை சுமார் 400 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிள் முதல் மூன்று மாதங்களுக்கு விற்றுத் தீர்நதுள்ளது. இதனால் ஹோன்டா CB300R வாங்க விரும்புவோர் மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளில் 286சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். மற்றும் 27.5 என்.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. 

    இத்துடன் ஃபுல்-எல்.இ.டி. ஹெட்லேம்ப் யூனிட் சேர்க்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை பின்புறம் மோனோஷாக் மற்றும் முன்பக்கம் அப்சைடு-டவுன் ஃபோர்க்கள் வழங்கப்பட்டிருக்கிறது. பிரேக்கிங் வழங்க இரு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய CB300R மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், கவாசகி நின்ஜா 400 மற்றும் யமஹா YZF-R3 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சி.பி.ஆர்.400ஆர். மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. #HondaCBR400R
    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹோன்டா சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்ட சி.பி.ஆர்.500ஆர் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.

    ஹோன்டா சி.பி.ஆர்.500ஆர் மோட்டார்சைக்கிள் கடந்த ஆண்டு நடைபெற்ற EICMA மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சி.பி.ஆர்.400ஆர் தோற்றம், நிறங்கள் மற்றும் என்ஜின் உள்ளிட்டவை 500ஆர் மாடலைத் தழுவி உருவாகி இருக்கிறது. புதிய சி.பி.ஆர். மோட்டார்சைக்கிளை ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    புதிய சி.பி.ஆர்.400ஆர். மாடலில் 399சிசி பேரலெல் ட்வின், லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 46 பி.ஹெச்.பி. பவர் @9000 ஆர்.பி.எம். மற்றும் 38 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.


    கூடுதலாக புதிய மோட்டார்சைக்கிளில் ஸ்லிப்பர் கிளட்ச், ஹோன்டா ரேசிங் வடிவமைப்பில் உருவாகி இருக்கும் புதிய எக்சாஸ்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. ஹோன்டா வலைதளத்தின் படி புதிய சி.பி.ஆர்.400ஆர் மோட்டர்சைக்கிளை மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினால் லிட்டருக்கு 41 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை எல்.இ.டி. ஸைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மோட்டார்சைக்கிளின் இருசக்கரங்களிலும் ஒற்றை டிஸ்க் பிரேக்கள், வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறமும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் 17-இன்ச் அலாய் வீல் முன்புறம் 120/70-R17 டையரும், பின்புறம் 160/60-R16 டையர் கொண்டிருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட், பியல் கிளேர் வைட் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.  #HondaCBR400R
    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது. #CB300R #Motorcycle



    ஹோன்டா டூ-வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் CB300R மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2019 ஹோன்டா CB300R மாடல் CB1000R மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய CB300R மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதன் விநியோகம் துவங்கும் என தெரிகிறது. புதிய CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டு வரப்படுகிறது. 

    புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளில் 286சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். மற்றும் 27.5 என்.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. 



    இத்துடன் ஃபுல்-எல்.இ.டி. ஹெட்லேம்ப் யூனிட் சேர்க்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை பின்புறம் மோனோஷாக் மற்றும் முன்பக்கம் அப்சைடு-டவுன் ஃபோர்க்கள் வழங்கப்பட்டிருக்கிறது. பிரேக்கிங் வழங்க இரு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய CB300R மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், கவாசகி நின்ஜா 400 மற்றும் யமஹா YZF-R3 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட சி.பி. ஷைன் மற்றும் சி.பி. ஷைன் எஸ்.பி. மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Honda #CBShine



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட சி.பி. ஷைன் மற்றும் சி.பி. ஷைன் எஸ்.பி. மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிள்களில் ஹோன்டா நிறுவனம் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதியை வழங்கியிருக்கிறது.

    இந்தியாவில் ஹோன்டா சி.பி. ஷைன் சி.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள் விலை ரூ.58,338 மற்றும் ஹோன்டா சி.பி. ஷைன் எஸ்.பி. சி.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ.64,098 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பயணத்தை பாதுகாப்பாக்குவதுடன் இந்தியாவில் ஏப்ரல் 01, 2019 முதல் விற்பனையாகும் புதிய மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். வசதி வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் விற்பனையாக இருக்கும் 125சிசி அல்லது அதற்கும் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் ஏ.பி.எஸ். வழங்க வேண்டும். 



    ஹோன்டா சி.பி. ஷைன் மற்றும் சி.பி. ஷைன் எஸ்.பி. மாடல்களில் 124சிசி என்ஜின் வழங்கப்பட்டிருப்பதால் இவற்றில் சி.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது. அந்தவகையில் புதிய மோட்டார்சைக்கிள்களில் சி.பி.எஸ். வசதி தவிர எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    புதிய மோட்டார்சைக்கிளில் 124சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 10.1 பி.ஹெச்.பி. பவர், 10.3 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
    ஹோன்டா நிறுவனத்தின் CB300R மோட்டார்சைக்கிளின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #HondaCB300R #Motorcycle



    ஹோன்டா நிறுவனத்தின் CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக ஹோன்டா நிறுவனம் தனது CB300R விலை ரூ.2.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்தது.

    இந்நிலையில் புதிய CB300R விளம்பரம் செய்வதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. படப்பிடிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோன்டா CB300R புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிளின் பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.

    இந்தியாவில் ஹோன்டா CB300R என்ட்ரி-பிரீமியம் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிளாக இருக்கும். புதிய மோட்டார்சைக்கிள் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஹோன்டா CB300R வடிவமைப்பு CB1000R  மாடலை தழுவி அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Rushlane

    ஹோன்டா CB300R மாடலில் 286சிசி, 4-வால்வ், DOHC, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். பவர், 27.5 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மாடலில் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலும் இதேபோன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இவற்றுடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்டரூமென்ட் கிளஸ்டர், IMU மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படலாம். மேலும் 41 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க் மற்றும் பிரீலோடு-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
    ஹோன்டா நிறுவனத்தின் ஹாஸ் இ.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இந்த காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Honda #Jazz



    ஹோன்டா ஃபிட் இ.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. ஃபிட் இ.வி. கார் ஹோன்டா ஜாஸ் பேட்ஜ் கொண்டிருக்கிறது. டெல்லியில் புதிய ஜாஸ் இ.வி. கார் சோதனை செய்யப்படுவதாக நியூஸ்18 வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் ஃபிட் ஹேட்ச்பேக் இரண்டாம் தலைமுறை மாடலை தழுவி ஃபிட் இ.வி. உருவாகியிருக்கிறது. ஃபிட் இ.வி. கார் மாடல் தான் இந்தியாவில் ஜாஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ஹோன்டா ஃபிட் இ.வி. காரின் முன்பக்கம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 15 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் வித்தியாசமான ஸ்பாயிலர் காரின் பின்புற கிளாஸ் வரை நீள்கிறது. ஹோன்டா ஃபிட் இ.வி. மாடலில் MCF3 எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 331-வோல்ட், 20கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: News18

    எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்யும் போது 225 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஃபிட் இ.வி. மாடலில் வழக்கமான சார்ஜிங் போர்ட் வலதுபுறமாகவும், ஃபாஸ்ட் சார்ஜிங் செய்வதற்கான போர்ட் இடதுபுறத்தில் வழங்கப்படுகிறது.

    வழக்கமான சார்ஜிங் போர்ட் மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரம் ஆகும், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பயன்படுத்தும் போது பேட்டரியை 20 நிமிடங்களில் 80 சதவிகிதம் சார்ஜ் செய்துவிடும். இந்தியாவில் வெளியிட முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் காரை ஹோன்டா உருவாக்கி வருகிறது.

    எனினும், இந்த கார் பி-பிரிவில் வெளியாகும் என்றும் இது ஜாஸ் மாடலை சார்ந்திருக்காது என கூறப்படுகிறது. இதேபோன்று 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய விலை குறைந்த எலெக்ட்ரிக் வாகனத்தை ஹோன்டா உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ×