search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்திரிகள்"

    பிரதமர் நரேந்திர மோடி, மந்திரிகள் ஆகியோர் தங்களது வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.393 கோடி செலவாகியுள்ளது.

    மும்பை:

    மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ஆகியோர் 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் செய்த செலவு விவரங்களை கோரி இருந்தார்.

    அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் மந்திரிகளும் 2014-15-ம் நிதியாண்டு முதல் 2018- 19-ம் நிதியாண்டு வரை மேற்கொண்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப் பயணங்களில் மொத்தம் ரூ.393.58 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வெளி நாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.263 கோடியும், உள்நாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.48 கோடியும் செலவிட்டுள்ளனர். மத்திய இணை மந்திரிகள் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.29 கோடியும், உள்நாட்டு பயணங்களுக்கு ரூ.53 கோடியும் செலவு செய்துள்ளனர்.

    இதில் அதிகபட்சமாக கடந்த 2014-15ம் நிதியாண்டில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வெளிநாடு, உள்நாட்டு பயணங்களின் போது ரூ.88 கோடி செலவிட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிரதமர் அலுவலக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் மோடி 49 வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த 3 மந்திரிகள் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்கள். #AsomGanaParishad #CitizenshipBill
    கவுகாத்தி:

    அசாமில் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது.



    இதைத்தொடர்ந்து நேற்று அம்மாநில அரசில் மந்திரிகளாக இருந்த அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த அதுல் போரா, கேசவ் மஹந்தா, பானிபூஷன் சவுத்ரி ஆகியோர் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்கள். முதல்-மந்திரியிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். #AsomGanaParishad #CitizenshipBill

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசில் இரு பெண்கள் உள்பட 28 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். #28ministers #MPministers #ministerstakeoath
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதைதொடர்ந்து, கடந்த 17-ம் தேதி அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்.



    இந்நிலையில், கமல்நாத் தலைமையிலான அரசில் இரு பெண்கள் உள்பட 28 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றனர். தலைநகர் போபாலில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆனந்தி பென் படேல், புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். #28ministers #MPministers   #ministerstakeoath
    இலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, இலங்கை மந்திரிகள் அரசு பணத்தை செலவு செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது. #SriLankaParliament #SriLankaMinisters
    கொழும்பு:

    இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
     
    ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார்.

    சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தது. ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார்.



    நவம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 2 முறை தோற்கடிக்கப்பட்ட பின்னரும் ராஜபக்சே எப்படி பிரதமர் பதவியில் நீடிக்கலாம் என பல்வேறு கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தன. 16-ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. நாற்காலிகளும், மிளகாய் பொடியும் வீசப்பட்டது. போலீசார் அவைக்கு உள்ளே அழைக்கப்பட்டதும் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில எம்.பி.க்களும் காயம் அடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த சபாநாயகர் நேற்று ஒரு குழுவை அமைத்தார்.

    இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அரசு நிதியில் செலவுகளை செய்வதற்கு தடை விதித்து நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது ராஜபக்சேவுக்கு மற்றொரு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், இலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, இலங்கை மந்திரிகளும் அரசு பணத்தை செலவு செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தீர்மானம் இன்று நிறைவேறியது. 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 122 உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. #SriLankaParliament #SriLankaMinisters
    பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 6 புதிய மந்திரிகள் பதவியேற்றுள்ளனர். #PakistanCabinet #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ) அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அதன்பின்னர் அவரது அமைச்சரவையில் 15 பேர் மந்திரிகளாகவும், 5 பேர் ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டு பதவியேற்றனர்.

    இந்நிலையில், இம்ரான் கான் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்து, 6 பேரை இணைத்துள்ளார். புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. மத்திய மந்திரிகளாக உமர் அயூப், அலி முகமது கான் மெஹர் மற்றும் சையத் அலி ஹைதர் ஜைதி ஆகியோர் மத்திய மந்திரிகளாக பதவியேற்றனர். முகமது ஷபிர் அலி, முராத் சயீத் மற்றும் முகமது ஹமத் அஸார் ஆகியோர் இணை மந்திரிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    விழாவில் பிரதமர் இம்ரான் கான், மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இன்று பதவியேற்ற மந்திரிகளில் உமர் அயூப் கான், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிடிஐ கட்சியில் சேர்ந்தார். இதற்கு முன்பு, சவுகத் அஜீஸ் அமைச்சரவையில் நிதித்துறை இணை மந்திரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. #PakistanCabinet #ImranKhan
    ×