என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107458"
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ரஷித் என்ற கம்ரன் நேற்று காஷ்மீரில் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தீவிரவாதி கம்ரன் தலைமையில் 21 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியது தெரிய வந்தது. அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சென்றதாக உளவுத்துறை தற்போது கண்டுபிடித்துள்ளது.
அதில் ஒரு பிரிவினர் குஜராத் மாநிலத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மாநில உளவுத்துறையும் எச்சரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சர்தார் சரோவர் அணைக்கட்டு, சோம நாத் ஆலயம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாதாரண உடைகளில் போலீசாரின் கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி குஜராத் முதல்-மந்திரி விஜய்ரூபானி நேற்று ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.
இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளனர். #PulwamaAttack
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் வழியாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பொதுமக்களின் வாகனங்களுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 78 வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். இவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 2,547 வீரர்கள் வாகனங்களில் சென்றனர்.
அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று மாலை சென்றபோது வீரர்கள் சென்ற ஒரு வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை கார் மோதியது. அந்த காரில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு இருந்தன. கார் மோதியதும் பயங்கர சத்தத்துடன் காரும் வீரர்களின் வாகனமும் வெடித்து தீப்பிடித்து எரிந்தன. இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 40 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். பல வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் பற்றி தகவல் அறிந்ததும் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடி உடனடியாக கண்டனம் தெரிவித்தார். இன்று காலை அவர் டெல்லியில் மத்திய மந்திரி சபையின் அவசர கூட்டத்தை கூட்டி, நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் பிரதமர் மோடி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டெல்லி - வாரணாசி இடையே அதிநவீன சொகுசு ரெயிலான ‘வந்தே பாரத்’ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு கடும் எச்சரிக்கை விடுத்தார். அவர் பேசியதாவது:-
இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சக்திகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இந்த தாக்குதலுக்கு எதிராக நாடு ஒன்றிணைந்து நிற்கிறது.
நாடு தற்போது மிகவும் கோபமாக உள்ளது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் ரத்தமும் கொதித்துப் போய் உள்ளது. இந்த செயலுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும்.
பயங்கரவாதிகள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள். இதன் பின்னணியில் இருப்பவர்கள் மிகப்பெரிய விலை கொடுப்பார்கள். இனி அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியை சந்திக்கும்.
இதுபோன்ற தாக்குதலால் இந்தியா ஒரு போதும் அச்சத்தில் உறைந்துவிடாது, சதி செய்து இந்தியாவை சீர்குலைக்கும் கனவு நிறைவேறாது. அவர்களது சதி- நாசவேலையை கோடிக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து முறியடிப்பார்கள். எந்த நோக்கத்திற்காக வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தார்களோ அவர்களது நோக்கம் விரைவில் நிறைவேறும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இன்று மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. அவர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக ஸ்ரீநகர் விரைந்தார். அங்கு காஷ்மீர் கவர்னருடன் பயங்கரவாதிகள் தாக்குதல் பற்றியும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பற்றியும் ஆலோசனை நடத்தினார்.
ஏற்கனவே காஷ்மீரின் உரி பகுதியில் ராணுவ முகாம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது.
அதுபோல் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், எந்த நேரத்திலும் தாக்குதல் நடைபெறலாம் என்றும் தெரிகிறது. இதற்காக எல்லைப் பகுதியில் வகிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். #PMModi #CRPF #PulwamaAttack
அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. #JKEncounter #MilitantsNeutralised
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நுழையும் பயங்கரவாதிகளை ராணுவம் வேட்டையாடி வருகிறது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல் பாதுகாப்பு படைக்கு கிடைத்தது.
இதையடுத்து இன்று அதிகாலை அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் சுட்டனர்.
நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #JKEncounter
புதுடெல்லி:
டெல்லியில் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதில் பயங்கரவாதிகள் புகுந்து நாச வேலையில் ஈடுபடலாம் என்று கருதி டெல்லி போலீசார் கடந்த சில நாட்களாகவே தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.
சமீபத்தில் மத்திய டெல்லியின் ராஜ்கத் பகுதியில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பயங்கரவாதி பிடிபட்டான். அவன் பெயர் அப்துல் லத்தீப் கானாய் என்ற உமைல் என்ற திலாவர். போலீசார் அவனை கைது செய்து ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதில் டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடன் பதுங்கி இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சமீபத்தில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தற்போது பிடிபட்ட லத்தீப் என்பதும் தெரிய வந்தது.
ஸ்ரீநகரில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது போல் டெல்லி குடியரசு தின விழாவிலும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் விசாரணையின் போது தெரிவித்தான்.
பயங்கரவாதி லத்தீப்பிடம் இருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் டெல்லி தாக்குதலுக்காக காஷ்மீரில் கையெறி குண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தான். அதன்பேரில் போலீசார் காஷ்மீருக்கு விரைந்து சென்று 2 கையெறி குண்டுகளை கைப்பற்றினார்கள்.
இது தொடர்பாக காஷ்மீரின் பந்திபோராவைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதி ஹிலால் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். இவன் டெல்லி வந்து பல இடங்களுக்கு சென்று தாக்குதல் நடத்துவதற்கு நோட்டமிட்டு சென்றுள்ளான்.
பயங்கரவாதி லத்தீப் கைது செய்யப்பட்ட தகவல் காஷ்மீர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இவன் கைது செய்யப்பட்டதன் மூலம் டெல்லி குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க நடந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.
இதற்கிடையே கேரள மாநிலம் கோழிக்கோடில் கடந்த 2006-ம் ஆண்டு இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இது தொடர்பாக 2-வது முக்கிய குற்றவாளியான முகமத் அசார் என்பவன் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டான்.
சவுதி அரேபியாவில் பதுங்கி இருந்த இவன் டெல்லி திரும்பிய போது அதிகாரிகள் விசாரணையின் போது குண்டு வெடிப்பில் தேடப்பட்டவன் என்பதை கண்டுபிடித்தனர். இவன் தலைச்சேரியை சேர்ந்தவன்.
கடந்த 2003-ம் ஆண்டு கேரளாவின் மராட் பகுதியில் நடந்த படுகொலைகள் தொடர்பான குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் கோழிக்கோடில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக அசார் தெரிவித்துள்ளான். இவனும் மற்ற இரு குற்றவாளிகளான யூசுப், நசீர் ஆகியோர் சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
2006 மார்ச் மாதம் 3-ந் தேதி கோழிக்கோடில் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் ஒரு குண்டும், கால்வாயில் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில் 2 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பு பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 2-வது குற்றவாளி சிக்கியுள்ளான். #RepublicDay
அப்போது பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #JKEncounter #Militants
பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னரே தேடுதல் வேட்டை, துப்பாக்கிச் சண்டையாக மாறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என பாதுகாப்பு படையினரால் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சண்டை நீடித்து வரும் நிலையில், அப்பகுதியில் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார், டுவிட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, பயங்கரவாதிகள் மாநிலத்தில் பெரும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter #Militants
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்