search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியேற்றம்"

    தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணுவை வெளியேற்றியது கண்டனத்துக்குரியது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தியாகராயநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை காலி செய்ய அரசு இன்று உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார்.

    இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணுவை வெளியேற்றியது கண்டனத்துக்குரியது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட நல்லக்கண்ணு ஐயா, 12 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு குடியிருப்பில் இருந்து வெளியேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது.

    தோழர் நல்லக்கண்ணு ஐயா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர். #IndianWellsTennis #Djokovic #Osaka
    இன்டியன்வெல்ஸ்:

    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா), 39-ம் நிலை வீரரான ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரீபரை சந்தித்தார்.

    மழையால் பாதிக்கப்பட்டு மறுநாளில் தொடர்ந்த இந்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஜோகோவிச் 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிலிப் கோல்ஸ்கிரீபரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். ஜோகோவிச்சிடம் தொடர்ச்சியாக 11 முறை தோல்வி கண்ட கோல்ஸ்கிரீபர் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார். பின்னர் கோல்ஸ்கிரீபர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை எனது பயிற்சியாளருடன் இணைந்து கொண்டாடுவேன். எனக்கு நிறைய வாழ்த்து செய்திகள் வந்து இருக்கின்றன’ என்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-1 என்ற நேர்செட்டில் 26-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் ஸ்வார்ட்ஸ்மானை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தினார். ஜப்பான் வீரர் நிஷிகோரி, குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 3-6, 1-6 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சிடம் (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு நவோமி ஒசாகா சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். தொடர்ச்சியாக 11-வது வெற்றியை ருசித்த பெலின்டா பென்சிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் செக்குடியரசு வீராங்கனை மார்கெடா வோன்ட்ரோசோவாவிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர். #IndianWellsTennis #Djokovic #Osaka
    தமிழக சட்டசபையில் சபாநாயகர் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். #TNAssembly #congress #Vijayadharani
    சென்னை:

    சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.

    அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் உள்ளே வந்து விஜயதரணியை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர்.

    அவர்களைப் பார்த்து விஜயதரணி, ‘‘என்னை தொடாதீர்கள்’’ என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆவேசமாக கூறினார். தொடர்ந்து அவர் வெளியேற மறுத்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

    பின்னர் விஜயதரணி நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

    சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன். நேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார்.


    சபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை அமுக்கியும் வெளியேற்றினார்கள். சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார்.

    இவ்வாறு விஜயதரணி கண்ணீர் மல்க கூறினார்.

    விஜயதரணி வெளியேற்றப்பட்டதை கண்டித்து மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #congress #Vijayadharani
    ×