search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107602"

    திருச்சி செந்தண்ணீர்புரத்தில் மனைவி, மகளுடன் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். உருக்கமான கடிதம் சிக்கியது.
    பொன்மலைப்பட்டி: 

    திருச்சி செந்தண்ணீர்புரம் பாரி தெரு மூன்றாவது குறுக்கு சந்தில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தவர் பால சகாயராஜ்(வயது 43). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி யுவராணி(40), மகள் முத்துலட்சுமி(25). முத்துலட்சுமி நர்சிங் படித்து வந்தார். இவர்களது வீடு கடந்த 2 நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.

    இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி மாத வாடகை பணம் வாங்குவதற்காக பால சகாயராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் பேச முடியவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி நேற்று இரவு 7 மணி அளவில் நேரில் வந்து பார்ப்பதற்காக மாடிப்பகுதிக்கு சென்றார். அப்போது துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தபோது பால சகாயராஜ் தனியாகவும், யுவராணியும், முத்துலட்சுமியும் ஒரே சேலையிலும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பொன்மலை சரக உதவி போலீஸ் கமிஷனர் பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் காவேரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். 3 உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததால் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உடல்களை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பொன்மலை போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பால சகாயராஜ் குடும்பத்தினர் ஒரு மாதத்திற்கு முன்புதான் பாரி தெருவுக்கு குடிவந்து உள்ளனர். அதற்கு முன்பு செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியில் குடியிருந்தனர். 3 மாதங்களுக்கு முன்பு பால சகாயராஜின் 17 வயது மகன் நந்தகுமார் உடல் நலக்குறைவினால் திடீர் என இறந்து விட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்காக தான் வீட்டை மாற்றி புது இடத்திற்கு வந்து உள்ளனர். எனவே மகனின் இறப்பை தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    தற்கொலை நடந்த வீட்டில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். பால சகாயராஜ் கைப்பட எழுதிய அந்த கடிதத்தில் எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நாங்களாகத்தான் இந்த முடிவை எடுத்தோம். யுவராணியின் அக்காள் சுசீலாவிடம் வாங்கிய ரூ.50 ஆயிரம் தொகைக்காக எனது ஆட்டோவை விற்று கடனை அடைத்து விடுங்கள் என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் பலரிடம் கடன் வாங்கி இருக்கலாம். கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செந்தண்ணீர்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். 
    அரும்பாக்கத்தில் குடும்ப தகராறில் மனைவியை வெட்டி கொல்ல முயன்ற கணவர், தனது கையையும் அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போரூர்:

    அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தேவி (வயது36) இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    கருத்து வேறுபாட்டால் ரமேஷ் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை தேவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த ரமேஷ் மனைவி தேவியுடன் தகராறில் ஈடுபட்டார். திடீரென ரமேஷ் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தேவியை வெட்டினார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது ரமேஷ்- தேவி இருவரும் மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். ரமேசின் கையும் அறுக்கப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினர் வருவதை கண்டதும் ரமேசும் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய ரமேஷ், தேவியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தேவி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இன்று காலை வீட்டுக்கு வந்த ரமேஷ் ஆதார் கார்டு கேட்டுமனைவி தேவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில் தேவி மீது மிளகாய் பொடி தூவி கத்தியால் வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. #tamilnews
    மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது என்று கூறியுள்ள சுப்ரீம் கோர்ட்டு, மனைவியின் தண்டனையை 10 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. #SC
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான கொலை சம்பவம் ஒன்று நடந்தது. கணவரை அவரது மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தனர்.

    பின்னர் அவரது உடலை காரில் எடுத்து சென்று காட்டுக்குள் வைத்து எரித்தனர். 40 நாட்களுக்கு பிறகு அந்த கொலை கண்டு பிடிக்கப்பட்டது. மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.

    அதுதொடர்பாக மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு நடந்தது. அதில் அவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அந்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கு நீதிபதிகள் சந்தானகவுடர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கீழ்க்கோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்து தண்டனையையும் குறைத்தார்கள்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. மரணத்தை ஏற்படுத்திய (கோமிசைடு) குற்றமாக கருதி தான் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.

    கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவியையும், மகளையும் விபச்சாரி என்று அழைத்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணுக்கு உதவியாக அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த கள்ளக்காதலன் வந்துள்ளார். அவர்கள் இருவரும் அவரை தாக்கி உள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள்.

    கணவர் தன்னையும், தனது மகளையும் விபச்சாரி என்று அழைத்ததால் கடும் ஆத்திரம் ஏற்பட்டு கணவரை தாக்கி இருக்கிறார்.

    நமது சமுதாயத்தில் தன்னை விபச்சாரி என்று அழைப்பதை எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த நிலையில் கணவரே தன்னை விபச்சாரி என்று அழைத்ததோடு, தனது மகளையும் விபச்சாரி என்று கூறியதால் கடுமையான ஆத்திரம் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. திடீர் ஆவேசத்தால் அவர் கணவரை கொலை செய்து விட்டார்.



    தன்னை விபச்சாரி என்று அழைத்த கணவரை ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருப்பதால் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. அதே நேரத்தில் இதை மரணத்தை ஏற்படுத்திய குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும்.

    அந்த வகையில் கீழ்க்கோர்ட்டு அளித்த தண்டனையை குறைத்து அவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. #SC

    ஆண்டிப்பட்டி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    தேனி:

    ஆண்டிப்பட்டி தாலுகா, தெற்கு மூணான்டிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 26) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தவசி என்பவருடைய மகள் பவித்ரா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 2.6.16-ம் தேதி அன்று குடும்ப பிரச்சனை காரணமாக பவித்ரா தனது தாய் வீட்டிற்கு வந்து மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு போராடிய நிலையில் பவித்ராவை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த பவித்ரா கடந்த 5.6.16-ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இது தொடர்பாக பவித்ராவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் ஜெயக்குமார் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி திலகம் தீர்ப்பு கூறினார்.

    தீர்ப்பில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்தார். இதில் அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ராஜேஸ்வரி ஆஜரானார். #tamilnews
    அந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புன்னம் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் (வயது 40). இவர் அப்பகுதியில் லேத் ஒர்க்ஷாப் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

    இவரது மனைவி பெயர் ஹேமலதா (21). நேற்று மாலை வேலை முடிந்து கைலாசம் தனது மனைவி ஹேமலதாவுடன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அந்தியூர் அருகே காட்டூர் பக்கம் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி வேமாக வந்து கைலாசத்தை வழி மறித்தார். திடீரென இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வழிமறித்த ஆசாமி திடீரென தான் கொண்டு வந்த கத்தியால் கைலாசத்தின் கழுத்தை அவரது மனைவி கண்முன்னால் அறுத்தார். இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. இதைகண்டு மனைவி ஹேமலதா சத்தம்போடவே அவன் தப்பி ஓடிவிட்டான்.

    ரத்த வெள்ளத்தில் துடித்த கைலாசத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த படுகொலை குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைலாசத்தை கொலை செய்த ஆசாமி தலைமறைவாக உள்ளான். அவன் யார்? எதற்காக இந்த கொலையை செய்தான்? முன்பகை அல்லது தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கொலையை பற்றி துப்பு துலக்கவும், கொலையாளியை பிடிக்கவும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    மனைவி கண் எதிரே கணவன் கொலை செய்யப்பட்டாலும் மனைவி ஹேமலதாவுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

    மேலும் கொலைகாரன் பற்றியும் இந்த கொலைக்கு காரணம் எதுவும் உண்டா? என்று மனைவியிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

    இன்று காலை நடந்த தொடர் விசாரணை மூலம் கைலாசம் கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கைலாசம் மனைவி ஹேமலதாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்தான இந்த கொலையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    பல்லடத்தில் ஒரே சேலையில் கணவன் -மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(32). இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் முத்து கிருஷ்ணன் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.

    அப்போது வீட்டில் உள்ள அறையில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்து கிருஷ்ணனும், லாவண்யாவும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கதவை உடைத்து உ ள்ளே சென்று தூக்கில் பிணமாக தொங்கிய கணவன்-மனைவி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    நெல்லையில் மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு கொளுந்தியாளை திருமணம் செய்த வாலிபரை மைத்துனர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி பெருமாள் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது35). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் மேலப்பாளையம் அமுதாபீட் நகரை சேர்ந்த மாரிசெல்வி (29) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மாரிசெல்வி கருத்து வேறுபாடு காரணமாக முத்துவை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து மாரி செல்வியின் தங்கை ரேவதியுடன் முத்துவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி ரேவதியை தனிமையில் சந்தித்து பேசி வந்தார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொளுந்தியாள் ரேவதியை முத்து திருமணம் செய்தார். தற்பாது அவர்கள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே மேலப்பாளையம் சாலையில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக முத்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது எதிரே முதல் மனைவி மாரிசெல்வி, 2-வது மனைவி ரேவதியின் தம்பியாகிய வள்ளி மணிகண்டன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை பார்த்ததும் முத்து மோட்டார் சைக்கிளை திருப்பினார். ஆனால் வள்ளி மணிகண்டன் அரிவாளுடன் முத்துவை துரத்தி வந்தார்.

    அவரிடம் இருந்து தப்பிக்க முத்து தனது மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடினார். ஆனால் வள்ளி மணிகண்டன் விடாமல் துரத்தி சென்று முத்துவை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் முத்துவின் தலை, கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த முத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இதையடுத்து வள்ளி மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங், உதவி கமி‌ஷனர் சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் தில்லை நாகராஜன், காளியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்துவை சரமாரி வெட்டிக்கொலை செய்த வள்ளி மணிகண்டனை பிடிக்க போலீசார் விரைந்தனர். அப்போது நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு தப்ப முயன்ற வள்ளி மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    கொலைக்கான காரணம் குறித்து வள்ளி மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

     

    கடலூர் மத்திய சிறையில் கைதி மரணமடைந்தது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் ஏழுமலை என்ற மைக்கேல் (வயது 36). ரவுடியான இவர் தாதா மணிகண்டனின் தம்பி ஆவார்.

    கடந்த 15-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஏழுமலை இறந்த தகவல் குறித்து குயிலாபாளையத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மர்மமான முறையில் இறந்துபோன ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழுமலை இறந்து 3 நாட்கள் ஆகியும் நேற்று மாலை வரை கடலூர் ஆஸ்பத்திரிக்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் யாரும் வரவில்லை.

    இதனால் ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே ஏழுமலையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மனைவி கோமதி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வந்த பிறகுதான் ஏழுமலையின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஏழுமலையின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று 4 நாட்களாகியும் ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் இரவும்-பகலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலூர் ஜெயிலில் மர்மமாக இறந்த கைதி ஏழுமலையின் மனைவி கோமதி இன்று குடும்பத்தினருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர் கலெக்டரின் உதவியாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த டிசம்பர் மாதம் நாங்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தோம். நாங்கள் காரில் இருந்து இறங்குவதற்குள் 2 டாடா சுமோவில் வந்த பத்துக்கும் மேற்பட்ட போலீசார் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் எனது கணவரை அடித்தனர்.

    அப்போது நான் தடுக்க சென்ற போது என்னையும், என் பிள்ளைகளையும் கீழே தள்ளிவிட்டு அடித்தனர். பின்னர் எனது கணவரை அடித்து இழுத்துச் சென்றனர். அதன்பிறகு என் கணவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் வக்கீல் மூலமாக ஆரோவில் போலீஸ் நிலையத்தில் விசாரித்தபோது போலீசார் சரியான முறையில் எங்களுக்கு பதில் தரவில்லை.

    மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் செய்தோம். இந்த நிலையில் காவல்துறையினர் என் கணவரை தாக்கி அடித்து கை மற்றும் கால் உடைத்து உடல் முழுவதும் காயத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    ஆனால் உடலில் காயம் ஏற்படுத்திய போலீசார் என் கணவரை மருத்துவமனையில் சேர்க்காமல் வானூர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று காவலில் அடைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாத காரணத்தினால் செஞ்சி நீதித்துறை நடுவரிடம் என் கணவரை அழைத்து சென்று காவலில் அடைக்க அனுமதி கேட்டுள்ளனர். அப்போது என் கணவர் நடந்தவற்றை அனைத்தும் நீதிபதியிடம் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி கேட்டு உள்ளார். ஆனால் காவல்துறையினர் செஞ்சி நீதிமன்ற நடுவரிடம் பொய்யான காரணங்களைக் கூறி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க அனுமதி வாங்கி விட்டனர்.

    என் கணவருக்கு எந்தவித சிகிச்சையும் செய்யாமல் காவல்துறையினரே உடைக்கப்பட்ட கை மற்றும் காலுக்கு கட்டு கட்டி எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அப்போது மத்திய சிறை நிர்வாகம் எங்களுக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி உள்ளனர்.

    ஆனால் ஆரோவில் இன்ஸ்பெக்டர் மத்திய சிறை காவலர்களிடம் சண்டை போட்டு சட்டத்திற்கு புறம்பாக மத்திய சிறை காவலர்களை மிரட்டி சிறையில் அடைத்து உள்ளது.

    இந்த நிலையில் போதிய சிகிச்சையை காவலர்கள் கொடுக்காததால் என் கணவர் கடந்த 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கடலூர் மத்திய சிறைச்சாலையில் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் சொன்னார்கள்.

    காவல்துறையினர் என் கணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு அடித்து கை கால்களை உடைத்து காயங்கள் ஏற்படுத்தி கொலை செய்த மேற்கண்ட காவல்துறையினர் மீது தகுந்த விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் என் கணவர் இழந்ததால் நான் என் பிள்ளைகளும் நடுத்தெருவில் நிற்கின்றோம். எனவே மேற்கண்ட காவலர்களிடமிருந்து அரசிடமிருந்து என்னுடைய குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது அப்போது வக்கீல்கள் சுந்தர், திருமேனி, வினோத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் உடன் இருந்தனர். #tamilnews
    அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மகள், மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி பெரியார்நகர் சங்கோதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 60). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். கடந்த சில ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவரது மனைவி வனஜா(50). இவர்களுக்கு வெங்கடேஸ்வரி, ஹேமலதா, தீபாவதி(23) என 3 மகள்கள் உள்ளனர். இதில் வெங்கடேஸ்வரி, ஹேமலதா ஆகிய 2 பேருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

    தீபாவதி மாலத்தீவில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் புதுவை திரும்பினார். தற்போது புதுவை மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தனர்.

    அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் பாலகிருஷ்ணன் சண்டை போடுவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. இதனை வழக்கமான சண்டை தான் என அருகில் இருந்தவர்கள் கருதினர். நேற்று காலை வெகுநேரமாகியும் பாலகிருஷ்ணன் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன், வீட்டுக்குள் பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தொங்கியதை பார்த்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தான். உடனே அவர்கள் அந்த வீட்டின் கதவை திறக்க முயன்றபோது உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கதவின் பூட்டை உடைந்து உள்ளே சென்று பார்த்ததில் பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பூட்டப்பட்டு கிடந்த மற்றொரு அறையின் கதவின் அடிப்பகுதி வழியாக ரத்தம் வெளியே வந்து உறைந்து கிடந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த கதவை திறந்து பார்த்தனர். அங்கு வனஜாவும், தீபாவதியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்கள் கட்டையால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

    இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் அந்த வீட்டின் முன் கூடினர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு காணப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் மகள் தீபாவதிக்கு அடுத்த மாதம் நடைபெற இருந்த திருமணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதும், இதனால் ஆத்திரமடைந்து மனைவி, மகளை கொலை செய்துவிட்டு பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    மனைவி, மகளை கொலை செய்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    எட்டயபுரத்தில் அ.ம.மு.க. நிர்வாகி மீது அவரது மனைவி கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    எட்டயபுரம்:

    எட்டயபுரம் கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 48). இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இவரது மனைவி மீனாட்சி(40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி அதிகாலை மீனாட்சி சமைத்து கொண்டிருந்தார். அப்போது கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த மீனாட்சி சமைத்து கொண்டிருந்த கொதிக்கும் எண்ணையை எடுத்து முனியசாமி மீது ஊற்றியுள்ளார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் மீனாட்சியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருமங்கலம் அருகே மனைவியை கொல்வதற்காக மண்எண்ணை ஊற்றி தீ வைத்த கணவரும் அதே தீயில் சிக்கி இறந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்டது எஸ்.வலையங்குளம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது29), கூலி தொழிலாளி.

    இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). இவர்களுக்கு 7 வயதில் செல்வகுமார் என்ற மகன் உள்ளார். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இரவும் தகராறு ஏற்பட ஆத்திரம் அடைந்த இளங்கோ வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்து விட்டு கதவை சாத்தி விட்டு வெளியே வந்து விட்டார்.

    அப்போது உள்ளே இருந்த செல்வகுமாரின் அழுகுரல் கேட்டது. உடனே மகனை காப்பாற்ற இளங்கோ கதவை திறந்து கொண்டு உள்ளே போனார். அப்போது உடலில் தீயுடன் அலறி துடித்துக் கொண்டிருந்த பஞ்சவர்ணம் கணவரை கட்டிப்பிடித்தார். இதில் அவரது ஆடையிலும் தீ பிடித்தது.

    சிறிது நேரத்தில் அவரும் வலியால் அலறி துடித்தார். கணவன்-மனைவியின் கூக்குரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.

    ஆபத்தான நிலையில் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இளங்கோ பரிதாபமாக இறந்தார். இன்று அதிகாலை பஞ்சவர்ணமும் இறந்தார். #tamilnews
    இரணியல் அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை காப்பாற்ற முயன்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

    இரணியல்:

    இரணியல் அருகே தலக்குளம் குலாலர் தெருவைச் சேர்ந்தவர் சேகர், (வயது 35), லாரி டிரைவர். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்றிரவு இவர்கள் வழக்கம்போல் தூங்கச் சென்றனர். இன்று அதிகாலை சுனிதா கண் விழித்தார். வீட்டின் பின்பக்க கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் பின்புறம் துணியை உலர வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றின் மீது சுனிதாவின் கை பட்டது.

    அந்த கயிற்றில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் சுனிதா தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து சேகர் ஓடி வந்தார். மின்சாரம் தாக்கிய மனைவி சுனிதாவை காப்பாற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக சேகர், அதே கயிற்றின் மீது தவறி விழுந்தார்.

    இதில் அவரது மீதும் மின்சாரம் பாய்ந்தது. கணவன், மனைவி இருவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.உடனடியாக அந்த பகுதியினர் மின் இணைப்பை துண்டித்தனர். அதற்குள் சேகர் பரிதாபமாக இறந்தார்.

    கணவரின் உடலை பார்த்து சுனிதா கதறி அழுதார். சேகர் பலியானது குறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியை காப்பாற்ற முயன்றபோது கணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×