search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107602"

    கோவை செல்வபுரம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    கோவை செல்வபுரம் அருகே உள்ள சொக்கம்புதூரை சேர்ந்தவர் சேகர் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகன்யா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் சேகருக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த சுகன்யா கணவரை பிரிந்து கடந்த 10 நாட்களாக பக்கத்து தெருவில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று சேகர் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சுகன்யாவின் தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது சுகன்யா உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த சேகர் அங்கு இருந்த எல்.இ.டி. டி.வி.யை எடுத்து சுகன்யாவின் தலையில் அடித்தார். பின்னர் தரதரவென வெளியே இழுத்து சென்று அங்கு கிடந்த கல்லால் 2 கால்களில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சுகன்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து செல்வபுரம் போலீசார் மனைவியை தாக்கிய சேகர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    பாளையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    பாளை சமாதானபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது40). இவர் முருகன் குறிச்சியில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (31). முருகேசன் அடிக்கடி மதுகுடித்து விட்டு வருவதால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அதுபோல நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ராஜேஸ்வரி, அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய ராஜேஸ்வரியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    டெல்லியில் குடும்ப சண்டையில் கர்ப்பிணி பெண் தனது கணவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #delhiwoman

    புதுடெல்லி, செப். 24-

    டெல்லி ரங்கோலா பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசித்து வருபவர் கரண்சிங்.

    தெருக்கூத்து கலைஞரான இவருக்கும், காஜல் என்ற பெண்ணிற்கும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

    காஜல் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று அவருக்கும் அவரது கணவர் கரண்சிங்குக்கும் கலை நிகழ்ச்சி தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    கரண்சிங்கின் பெற்றோர் தலையிட்டு அவர்களது சண்டையை தீர்த்து வைத் தனர். பிறகு இரவு சாப் பிட்டு முடித்ததும் தூங்க சென்றனர். அப்போதும் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

    சண்டையின் போது கரண்சிங் மிகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காஜல், ‘‘இந்த நாக்குதானே பேசு கிறது’’ என்று சொல்லியபடி அவர் நாக்கை கடித்து துண்டாக்கினார்.

    நாக்கு பாதி துண்டான நிலையில் ரத்தம் வழிந் தோட கரண்சிங் அலறி துடித் தார். உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப் பட்ட பிறகு மேல் சிகிச்சைக் காக அவர் ஜப்தர்சங் மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    டாக்டர்கள் நீண்ட நேரம் அவருக்கு சிகிச்சை அளித் தனர். துண்டான நாக்கை ஒட்ட வைக்க முயற்சி நடந்தது. ஆனால் நாக்கை ஒட்டவைக்க முடியவில்லை.

    இதனால் கரண்சிங்கால் மீண்டும் பேச முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்தனர். பிறகு கர்ப்பிணி பெண்ணான காஜலை கைது செய்தனர்.

    செய்யாறு அருகே மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள சாமந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் மணிகண்டன் (வயது 29). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (28) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழுந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகாலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

    சம்பவத்தன்று மணிகண்டன் மகாலட்சுமியிடம் மீண்டும் நகை, பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகாலட்சுமியை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

    இதுகுறித்து மகாலட்சுமி செய்யாறு அனைத்து மகளீர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டன், அவரது தந்தை சந்திரசேகர், நாராயணசாமி ஆகியோரை கைது செய்தனர்.

    புதுவை கவர்னர் மாளிகை எதிரே மனைவிக்கு விடுமுறையை நீட்டிக்க கோரி அரசு ஊழியர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை தேத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். பொதுப் பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாலாம்பாள் (45). இவர், புதுவை நீதிமன்றத்தில் பல்நோக்கு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    பாலாம்பாளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதனால் பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிக்க கோரி அவர் பணியாற்றும் நீதிபதி இல்லத்தில் அவரது கணவர் முருகையன் கேட்டு இருந்தார். ஆனால், அவர்கள் விடுமுறையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விடுமுறை அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாம்பாளின் கணவர் முருகையன் தனது 2 குழந்தைகள் மற்றும் உறவினருடன் புதுவை கவர்னர் மாளிகை எதிரே திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிப்பு செய்ய வேண்டும், அவரை வேறு துறைக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என முருகையன் வலியுறுத்தினார்.

    இதையடுத்து அங்கு வந்த பெரியக்கடை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட முருகையனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். #tamilnews
    அகமதாபாத்தில் முன்னாள் காதலியின் ஆவி தன்னை இயக்குவதாக கூறிய தொழில் அதிபர் மனைவி, மகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் குணால் திரிவேதி (வயது 45). அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் தனது மனைவி கவிதா (45), மகள் ஷிரீன் (16), தாயார் ஜெயஸ்ரீ பென் (75) ஆகியோருடன் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

    அவரது உறவினர்கள் திரிவேதிக்கு போன் செய்தனர். நீண்ட நேரமாக ரிங் கொடுத்தும் போனை எடுக்கவில்லை.

    எனவே, நேரடியாக வீட்டுக்கு வந்து பார்த்தனர். அங்கு குணால் திரிவேதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். மனைவி கவிதா, மகள் ஷிரீன் ஆகியோர் அடித்து கொல்லப்பட்ட நிலையில் தரையில் பிணமாக கிடந்தனர். தாயார் ஜெயஸ்ரீபென் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதுபற்றி போலீசாருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். 3 பேர் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயஸ்ரீபென் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வி‌ஷத்தை கொடுத்துள்ளனர். இதனால் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

    இந்த சம்பவத்துக்கு காரணம் என்ற என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குணால் திரிவேதி எழுதி வைத்திருந்த 2 கடிதங்கள் கிடைத்தன.

    அதில், தன்னை இறந்து போன முன்னாள் காதலியின் ஆவி இயக்குவதாகவும், அதனால்தான் குடிகாரனாக மாறி விட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    மற்றொரு கடிதத்தில் காதலியின் ஆவி ஏவுவதால் குடும்பத்தினரை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து விட்டு கடவுளிடம் செல்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    இந்த சாவுக்கு கடன் பிரச்சினையோ, மற்ற வி‌ஷயங்களோ காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    தனது மூட நம்பிக்கையால் குணால் திரிவேதி குடும்பத்தையே கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. #tamilnews
    வாணரப்பேட்டையில் ஆயுள்தண்டனை கைதியின் மனைவி மற்றும் மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவா தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையத்தில் நடந்த சகாயராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலில் உள்ளார்.

    ஜெயிலில் அடைக்கப்பட்ட பிரேம்குமாரை அவரது மனைவி காயத்ரி அவ்வப்போது பார்க்க செல்லும் போது பிரபல ரவுடியான நேதாஜி நகரை சேர்ந்த ஜெனாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஜெனா அடிக்கடி காயத்ரி வீட்டுக்கு சென்று வந்தார். இதுகாயத்ரியின் மகன் வசந்துக்கு பிடிக்கவில்லை. வசந்த் தனது தாயை கண்டித்ததுடன் ஜெனாவை வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறுமாறு அறிவுறுத்தினார்.

    மகனின் அறிவுறுத்தலை ஏற்று காயத்ரி, ஜெனாவிடம் வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் வசந்த் மீது ஜெனா ஆத்திரம் அடைந்தார். நேற்று மாலை காயத்ரி வீட்டுக்கு சென்ற ஜெனா அங்கிருந்த வசந்த்தையும், காயத்ரியையும் தாக்கினார். மேலும் பீர்பாட்டிலை உடைத்து இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதுகுறித்து காயத்ரி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ஜெனாவை கைது செய்தனர். #tamilnews
    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, 10 மணி நேரத்துக்கும் மேலாக அருகிலேயே அமர்ந்திருந்த கணவரும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். #Bengaluru
    பெங்களூரு:

    கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் ஹிரென் குமார் என்பவரும், அவரது 15 வயது மகனும் போர்வையால் சுற்றப்பட்ட ஒன்றை காருக்கு எடுத்துச் செல்வதை கண்ட குடியிருப்பின் பாதுகாவலர், அவர்களை தடுத்தி நிறுத்தி விசாரித்துள்ளார். இருவரும் தெளிவாக விடையளிக்காததாலும், அந்த போர்வையில் இரத்தக்கறை இருப்பதையும் கண்ட பாதுகாவலர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த போர்வையால் சுற்றப்பட்டிருந்த பெண்ணின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஹிரென் குமாரையும், மகனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், தனது மனைவி ப்ரீத்திக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், அதனால் அடிக்கடி அவர் தன்னை கொடூரமாக தாக்கி வந்ததாகவும் கூறியுள்ளார்.

    ப்ரீத்தியின் மனநிலையை கருத்தில்கொண்டு பொறுமையுடன் இருந்ததாகவும், ஆனால் இன்று பொறுமையை இழந்ததால் கத்தியை எடுத்து கழுத்தை அறுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் மதியம் 1 மணியளவில் நடந்துள்ளது. அதன் பிறகு தனது மனைவியின் பிணத்தின் அருகில் அமர்ந்த ஹிரென் குமாரை மாலை 4 மணியளவில் அவரது மகன் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இதன்பிறகு வேறுவழியின்றி, இரவு வரை இருவரும் காத்திருந்து, உடலை கண்காணாத இடத்தில் போட்டுவிட திட்டமிட்டதாக போலீசாரிடம் ஹிரென் குமார் தெரிவித்துள்ளார். இதற்காக, சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக இறந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மனைவியின் உடலின் அருகிலேயே ஹிரென் குமார் அமர்ந்திருந்தது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  #Bengaluru
    ஆந்திர மாநிலத்தில் மணமகள் அழகாக இல்லை என்ற காரணத்தால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    ஐதாராபாத்:

    ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஷேக் மைதீன். இவருக்கு சூலுரு பகுதியில் குடியிருக்கும் முபீனா என்பவருக்கும் கடந்த 2-ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமண நாள் மாலையில் இருந்தே மணமகன் மிகவும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதை அறிந்த மணமகனின் தாயார், என்ன காரணம் என தமது மகனிடம் விசாரித்துள்ளார். அப்போது தமது மனைவி அழகாக இல்லை எனவும், திருமணத்திற்கு முன்னர் அவர்கள் அளித்த புகைப்படம் வேறு எனவும் பதில் அளித்துள்ளார். இதனையடுத்து மகனை சமாதானம் செய்த தாயார், மருமகளை அழைத்துக் கொண்டு தோல் நோய் மருத்துவர் ஒருவரை நாடி சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளார்.

    இருப்பினும் தமது மகன் மகிழ்ச்சியுடன் இல்லை என தாயாருக்கு தெரியவந்தது. இதனிடையே செவ்வாய் அன்று இரவு நண்பரின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மைதீன், நண்பரின் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுமாப்பிள்ளையை வெகுநேரமாகியும் காணவில்லை என தேடிய குடும்பத்தினர், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தமது குடும்பத்தை ஏமாற்றியதாக கூறி மணமகளின் வீட்டார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சொத்தை எழுதி கேட்டு கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற ரமேஷ் (வயது 50).

    இவரது மனைவி பெயர் லலிதா (45). மகன் ஸ்ரீநாத் (20). இவர் கல்லூரி படிப்பை முடித்து உள்ளார்.

    நாராயணசாமி பெயரில் ரூ.2 கோடிக்கு சொத்து உள்ளது. மேலும் மாத வாடகை பணமும் ரூ.30 ஆயிரம் வருகிறது.

    நாராயணசாமியின் மனைவி மற்றும் மகனும் சொத்தை எழுதி கேட்டுள்ளனர். மனைவி லலிதா “உங்களிடம் உள்ள சொத்துகளை இப்போதே எனது பெயரில் மாற்றி எழுதி கொடுங்கள்” என்று கட்டாயப்படுத்தினாராம்.

    ஆனால் இதற்கு நாராயணசாமி மறுத்து உள்ளார். “உன் பெயருக்கு இப்போது சொத்தை மாற்ற மாட்டேன். பிறகு பார்க்கலாம்” என்று கூறினாராம்.

    இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதமும் தகராறும் ஏற்பட்டது. இந்த நிலையில் நாராயணசாமியை அவரது மனைவியும் மகனும் சேர்ந்து வீட்டில் ஒரு அறையில் கடந்த ஒரு வாரமாக வெளியே செல்லவிடாமல் அடைத்து வைத்துள்ளனர். சொத்தை எழுதி கேட்டு உள்ளனர்.

    அப்போதும் நாராயணசாமி மறுக்கவே மனைவியும் மகனும் அவரது உடலில் பல இடங்களில் சூடுபோட்டு சித்ரவதை செய்தார்கள்.

    நேற்று இரவு 10 மணியளவில் மனைவி சித்ரவதை தாங்காமல் சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள நாராயணசாமியின் உறவினர் கோபால் என்பவருக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் சென்னிமலைக்கு விரைந்தார்.

    வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாராயணசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    அவரது உடலில் சூடு போடப்பட்டிருந்ததால் தீக்காயத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    பிறகு இது குறித்து சென்னிமலை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவி லலிதா மற்றும் மகன் ஸ்ரீநாத்தையும் போலீசார் கைது செய்தனர்.

    பிறகு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் சென்னிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கிய மனைவி மற்றும் குழந்தையை அவரது கணவர் மீட்டு பத்திரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார். #keralarain #keralafloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் காரணமாக குடும்பத்தையும், உற்றார் உறவினர்களையும் இழந்தும், பிரிந்தும் தவிப்பவர்கள் ஏராளம்.

    தற்போது கேரளாவில் இயல்புநிலை திரும்பும் சூழ்நிலை உருவாகி வருவதால் பிரிந்து சென்றவர்களை தேடும் பணியிலும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    செங்கனூர் விருவன் மண்டூர் பகுதியை சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் அருண். பிரசவத்திற்காக சில மாதங்களுக்கு முன்பு அகிலா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அவர் தாய் வீட்டிலேயே வசித்துவந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அவரால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் குழந்தை மற்றும் வயதான பெற்றோருடன் அகிலா அந்த வீட்டின் மாடியில் தஞ்சமடைந்தார்.

    போன் மூலம் தனது கணவர் அருணுக்கு இது பற்றி தெரிவித்தார். உடனே அவர் அங்கு செல்ல முடியாதபடி அதிகளவு வெள்ளப் பெருக்கு காணப்பட்டது. 5 நாட்கள் தவிப்புக்கு பிறகு தனது உறவினர்கள் சிலர் உதவியுடன் ஒரு படகு மூலம் அங்கு சென்ற அருண் தனது மனைவி, குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு பத்திரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    செங்கனூர் பகுதியை சேர்ந்த லெட்சுமி என்ற பெண்ணும் தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற போது அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தனது 11 மாத குழந்தை மற்றும் பெற்றோருடன் தனது வீட்டு மாடியில் பாதுகாப்பாக தங்கிக்கொண்டார். அவரது வீட்டு அருகே வசிக்கும் 14 பேரும் அவரது வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.



    3 நாட்களாக அவர்கள் பகுதிக்கு உதவிக்கு யாரும் வரவில்லை. செல்போன் செயல்படாததால் இவர்களாலும் தங்கள் நிலைமையை மற்றவருக்கு தெரியப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அங்கு படகில் சென்ற மீட்புபடையினர் மூலம் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். #keralarain #keralafloods
    போடியில் மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 28). இவருக்கும் பி.சி.பட்டியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சதீஸ்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் தினமும் மது குடித்து விட்டு வந்துமனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரித்ததால் அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது முதல் சதீஸ்குமார் மன உளைச்சலில் இருந்து வந்தார். தனது குடி பழக்கம்தான் மனைவி இறக்க காரணம் என நினைத்தார். எனவே தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி தென்னை மரத்துக்கு வைக்கும் மாத்திரையை தின்று விட்டு மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு சதீஸ்குமாரை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×