search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107602"

    கணவன்-மனைவி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில் குழந்தைக்கு பெயர் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கேரள ஐகோர்ட் நீதிபதி குழந்தைக்கு பெயர் சூட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. #KeralaHighCourt #ChildName
    கொச்சி:

    கேரள ஐகோர்ட்டுக்கு ஒரு ருசிகரமான வழக்கு வந்தது. கிறிஸ்தவ பெண்ணுக்கும், இந்து ஆணுக்கும் பிறந்த 2-வது குழந்தைக்கு பெயர் சூட்டும் தகராறு தொடர்பான வழக்கு அது.

    கணவன்-மனைவி இருவரும் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில், அந்த குழந்தை, தற்போது தாயின் பராமரிப்பில் இருக்கிறது.

    குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்’ என்று ஞானஸ்நானம் செய்யப்பட்டு இருப்பதால், அதே பெயரையே சூட்ட வேண்டும் என்று தாயார் தரப்பு வாதிட்டது. ஆனால், குழந்தை பிறந்த 28-வது நாளில், இந்து முறைப்படி சூட்டப்பட்ட ‘அபிநவ் சச்சின்’ என்ற பெயரே இருக்க வேண்டும் என்று தந்தை தரப்பு வாதிட்டது. அவர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில், குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்’ என்று தானே பெயர் சூட்டினார். தாயாரை திருப்திப்படுத்த ‘ஜோகன்’ என்ற பெயரையும், தந்தையை திருப்திப்படுத்த ‘சச்சின்’ என்ற பெயரையும் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

    குழந்தையை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் அவசியம் என்பதால், 2 வாரங்களுக்குள் இந்த பெயரில் பிறப்பு சான்றிதழ் வழங்குமாறு நகராட்சி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.  #KeralaHighCourt #ChildName
    மீஞ்சூர் அருகே மனைவியிடம் நகை பறித்த கொள்ளையர்களை தடுத்த கணவரை கொள்ளையர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 65). இவரது மனைவி விஜயா. நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் திருவெள்ளைவாயில் உள்ள பஜாருக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    திருவெள்ளைவாயிலை தாண்டி சிறிது தூரத்தில் வந்த போதுமோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஜெயராமனையும், விஜயாவையும் வழி மறித்தனர். திடீரென விஜயா அணிந்து இருந்த 10 பவுன் நகையை பறித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த ஜெயராமன் கொள்ளையர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயராமனை வெட்டினர். மேலும் விஜயாவையும் சரமாரியாக தாக்கினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த தேவதானம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அங்கு வந்தார். அவரையும் கொள்ளை கும்பல் தாக்கி விட்டு 10 பவுன் நகையுடன் தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் ஜெயராமனின் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது மனைவி விஜயா மற்றும் ஆறுமுகம் ஆகியோரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக இறந்தார். விஜயாவின் நிலைமை மோசமாக உள்ளது. ஆறுமுகத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையை தடுத்த முதியவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருமணமான ஆரம்ப காலத்தில் கணவருடைய குடும்பத்தினருடன் உறவை பேணுவதில் புதுப்பெண்களுக்கு ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
    புதிதாக திருமணமான தம்பதியர்களுக்குள் ஆரம்ப காலத்தில் புரிதல் என்பது குறைவாகவே இருக்கும். காதல் திருமணமாகவோ, நிச்சயித்த திருமணமாகவோ இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் ஒன்றிணைந்து செயல்படும்போது ஒருவித தடுமாற்றம் ஏற்படும். ஒருவருக்கொருவர் சரிவர புரிந்து கொள்வதற்கு சில காலம் பிடிக்கும். அப்படியிருக்கையில் கணவருடைய குடும்பத்தினருடன் உறவை பேணுவதில் புதுப்பெண்களுக்கு ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. புகுந்த வீட்டில் அடியெடுத்துவைக்கும் புதுப்பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

    * கணவர் குடும்பத்தினருக்குள் பிரச்சினை ஏற்படும் விதத்தில் புதுப்பெண்ணின் தலையீடு இருக்கக்கூடாது. தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் புதுப்பெண்ணின் குணாதிசயங்களை கணவரின் குடும்பத்தினர் சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் அது அவளுக்கு பாதகமாகவே அமையும். கணவரை அவருடைய குடும்பத்தினர் வசைபாடுவதாகவே இருந்தாலும் பிரச்சினையின் வீரியத்தை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். அதிலும் அவருடைய பெற்றோர் மகனின் தவறுகளை கண்டிக்கும்போது அமைதி காப்பதே நல்லது.

    * கணவர் வீட்டினர் தன்னை 'என்ன நினைப்பார்களோ' என்று நினைத்து புதுப்பெண் தன்னுடைய இயல்பான சுபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அப் படியே மாற்ற முயற்சித்தாலும் அது நீண்ட நாட்களுக்கு கைக்கொடுக்காது. அவள் அவளாகவே இருப்பதுதான் அவளை பற்றி கணவர் குடும்பத்தினர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். தனக்கு தெரியாத விஷயங்களை தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் முயற்சிக்கக்கூடாது. அவள் வெளிப்படையாக பேசுவது அவர்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும்.

    * திருமணமான புதிதில் தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும், நேசத்தை அதிகப்படுத்திக்கொள்வதற்கும் ஆர்வம் காண்பிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரை பற்றியும், அவர்களுடைய சுபாவங்கள் குறித்தும் கணவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கணவரே தனது குடும்பத்தில் உள்ள சிலரை பற்றி குறை கூறினாலும், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அனைவரிடமும் அன்புடன் பழக முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே ஒதுங்கி இருக்க முயற்சிப்பது புதுப்பெண்ணை பற்றி தவறான அபிப்பிராயத்தை விதைத்துவிடும்.



    * கணவரின் உடன் பிறந்தவர்களிடம் சகஜமாக பழகுவது என்பது சிக்கலான விஷயம்தான். அவர்களும் புதுப்பெண்ணிடம் பழக தயங்கத்தான் செய்வார்கள். அதிலும் நாத்தனாரிடம் நல்ல நட்புறவை ஆரம்பத்திலேயே வளர்த்து கொள்ளாவிட்டால் இருவருக்குமிடையே தவறான புரிதல் உருவாகிவிடும். தோழியிடம் பழகுவது போல சகஜமாக சிரித்து பேசி உறவை வலுப்படுத்தி கொண்டால் அது கடைசி வரை சுமுகமாக நீடிக்கும்.

    * கணவர் வீட்டில் இருக்கும் மற்ற பெண்களிடம் குழந்தைகள் மூலமாகவே உறவை வளர்த்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செல விடும்போது அது வீட்டில் உள்ளவர்களுடனும் நெருக்கத்தை அதிகப்படுத்தும். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கு உணவு ஊட்டி விடுவது, பாடம் சொல்லிக்கொடுப்பது, அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது என நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம். சமையல் வேலைகளை பகிர்ந்து கொள்வதும் உறவை மேம்படுத்த உதவும்.

    * புகுந்தவீட்டு உறவையும், பிறந்த வீட்டு உறவையும் சரிசமமாக பேண வேண்டும். ஒரேடியாக பிறந்த வீட்டு உறவை பற்றி பெருமை பேசுவதும், புகுந்த வீட்டினரின் செயல்பாடுகளை தனது வீட்டினருடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவதும் கூடாது. புகுந்த வீட்டினருடன் நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிறந்த வீட்டு உறவை உதாசீனப்படுத்துவதும் கூடாது. இரு குடும்பத்தினரும் உறவை வளர்த்துக்கொள்வதற்கு இணைப்பு பாலமாக புதுப்பெண் செயல்பட வேண்டும்.

    * புகுந்த வீட்டினருடன் சுமுக உறவை பேணுவதில் மாமியார்-மருமகள் இடையேயான பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாமியாரை அன்னிய நபராக அணுகுவது அல்லது அவரிடம் இருந்து ஒதுங்கி இருக்க முயற்சிப்பதுதான் பிரச்சினையின் தொடக்கமாக அமையும். ஆரம்பத்திலேயே அவரையும் தன்னுடைய குடும்ப உறவுகளில் ஒருவராக பாவிப்பது இடைவெளி தோன்றுவதற்கு இடம் கொடுக்காது. அவரையும் தாயார் ஸ்தானத்தில் வைத்து தக்க மரியாதையுடன் பழக ஆரம்பித்தாலே போதும். உறவு வலுப்பட்டு விடும்.



    * புதுப்பெண் கணவருடனான பந்தத்தையும் சுமுகமாக தொடர வேண்டும். அவருடைய அன்றாட நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள், அவருடைய குடும்ப உள் விவகாரங்கள் போன்றவற்றில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அது கணவன்-மனைவி இடையேயான உறவில் பங்கத்தை ஏற்படுத்திவிடும். தன்னுடைய சுதந்திரம் பறிபோய்க்கொண்டிருப்பதாக உணரும் நிலையை கணவருக்கு ஏற்படுத்திவிடக்கூடாது. அதற்காக கணவரின் நடவடிக்கைகளை கண்டும், காணாமல் இருந்துவிடவும் கூடாது. அவருடைய போக்கிலேயே சென்று நிறை, குறைகளை மனம் நோகாமல் எடுத்துக்கூறலாம்.

    * குடும்ப பட்ஜெட்டை நிர்வகித்து அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது கணவரின் குடும்ப உறவுகளுக்குள் புகைச்சலையோ, மனக்கசப்பையோ ஏற்படுத்திவிடக்கூடாது. அவர்களுடைய வழக்கமான பழக்க வழக்கங்கள், செலவுகளில் தலையிட முயற்சிப்பது வீண் சச்சரவுகளையே ஏற்படுத்தும். குடும்ப வரவு-செலவுகளில் கணவரிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையை மற்றவர்களிடமும் காண்பிக்க நினைப்பது உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும்.

    * கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கூறும் ஆர்வத்தில் மனதில் தோன்று வதையெல்லாம் அப்படியே கொட்டிவிடக்கூடாது. அது பிரச்சினையில் தானாகவே மாட்டிக்கொள்வதற்கு வழிவகுத்துவிடும். வாழ்க்கைப் பயணத்தில் கூடவே வரும் துணையுடன் மனம் விட்டு பேசுவதற்கு காலங்கள் காத்திருக்கின்றன. பிரச்சினையை உண்டாக்குபவை எவை, அவசியம் பேசிய ஆக வேண்டிய விஷயங்கள் எவை, பேசக்கூடாத விஷயங்கள் எவை என மனத்திரையில் அசைபோட்டு அதன் பிறகு தேவைப்பட்டால் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம். அனுசரித்து போவதும், அநாவசிய பேச்சை தவிர்ப்பதும் இல்லறம் என்றும் நல்லறமாக அமைய வித்திடும்.
    சிறிய அளவு 'பட்ஜெட்' கொண்ட வீடாக இருந்தாலும் கண் கவரும் அலங்கார பொருட்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அறையையும் அழகாக காண்பிக்கவே பெண்கள் விரும்புவார்கள்.
    சிறிய அளவு 'பட்ஜெட்' கொண்ட வீடாக இருந்தாலும் கண் கவரும் அலங்கார பொருட்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அறையையும் அழகாக காண்பிக்கவே அனைவரும்(பெண்கள்) விரும்புவார்கள். பொதுவாக, எல்லா அறைகளுக்கும் உள் அலங்காரம் தேவை என்ற நிலையில், ஒரு சில அறைகளை நமக்கு பிடித்தமான வகையில் அழகுபடுத்த முடியும்.

    ஒரே தோற்றம் :

    சமையல் அறை, 'வார்ட்ரோப்ஸ்' என்ற அலமாரிகள், பூஜை அறை, டி.வியை வைப்பதற்கான 'கேபினட்டுகள்', குட்டி பசங்களின் ஸ்கூல் புராஜக்ட் மற்றும் பரிசு கோப்பைகள் வைக்கும் கண்ணாடி பொருத்திய அலமாரிகள், பல்வேறு 'லேமினேஷன்கள்' ஆகியவற்றை ஒரே மாதிரியாக அமைத்தால், வித்தியாசமான அழகாக இருக்கும். சமையல் அறையில் 'வாட்டர் புரூப்' கொண்ட பொருட்களையும் பயன்படுத்தலாம்.

    அலமாரிகள் அவசியம் :

    சுவர் அலமாரிகள் 'ஸ்லைடிங்' கதவுகள் கொண்டதாக இருப்பது வழக்கம். வீட்டில் குறைவான உபயோகம் கொண்ட பொருட்களை சுவர் அலமாரிகள் அல்லது மர கதவு பொருத்தப்பட்ட 'லாப்ட்' அமைப்புகளில் வைத்து பராமரிப்பது வழக்கம். பொதுவாக கான்கிரீட் பரண்கள் அதிகமாக அமைப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. 'வார்ட்ரோப்' அமைக்கும்போது மேற்கூரையை தொடும் வகையில் உயரமாக அமைத்துவிட்டால், சூட்கேஸ்கள் உள்ளிட்ட 'டிராவல் பேக்' போன்றவற்றை அவற்றில் வைப்பது சுலபமாக இருக்கும்.



    சுவர் அலமாரிகள் :

    'வால்க் இன் க்ளோசட்' என்ற அலமாரிகளை உள்ளே அமைத்து ஒற்றை கதவு பொருத்தப்படும் முறையானது இப்போது மெதுவாக பல இடங்களில் பரவி வருகிறது. இந்த முறையில் அதிக செலவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒற்றைக் கதவு என்பதால் பொருட்கள் வைக்க நிறைய இடம் கிடைக்கும். நமது செலவுகளை பொறுத்து இரண்டு அறைகளுக்கு இடைவெளிகளில் இதை அமைத்துக்கொள்ளலாம். வீட்டு கட்டுமான பணிகளின்போதே இந்த முறைக்கான இடத்தை கச்சிதமாக தேர்வு செய்து கொள்வது சிறப்பு.

    'ஸ்கர்டிங்' பலகைகள் :

    நவீன சமையலறை அமைப்பில் கவனிக்க வேண்டிய விஷயம், கேபினட்டுகளை தாங்கக்கூடிய 'புஷ்' அமைப்பை மறைக்கும் 'ஸ்கர்டிங்' என்ற சிறிய பலகைகள் ஆகும். மேலும், அங்கே குப்பைகள் சேராமல் தடுக்கவும் இந்த அமைப்பு பயன்படும். அந்த 'ஸ்கர்டிங்' அமைப்பை மரத்தால் செய்யப்பட்டதாக இல்லாமல் 'பி.வி.சி' தயாரிப்புகளான 'பிளாஸ்டிக்' பொருள்கள் மூலம் அமைத்து, தண்ணீர் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.



    அழகிய படுக்கையறை :

    பொதுவாக, படுக்கையறை கதவு திறந்தவுடன் கண்ணில் படுக்கை படாதவாறு அமைக்கவேண்டும். படுக்கையறைக்கு போதுமான வெளிச்சம் இருக்குமாறு ஜன்னல்களை கச்சிதமாக அமைக்கவேண்டும். அறை நடுவில் கட்டில் போடும்போது 'சைடு டேபிள்' இருப்பின் அவற்றின் மீது புத்தகங்களை வைத்து உபயோகப்படுத்தலாம். சிறிய அறையாக இருந்தாலும் முக்கியமாக கருதப்படுவது படுக்கை அறையாகும்.

    படிக்கும் இடம் :

    அலுவலக பணிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடம் போன்றவற்றை செய்வதற்காக பல வீடுகளில் 'லேப்டாப்' பயன்படுத்தப்படுவது வழக்கம். அதை பயன்படுத்தும்போதும், 'சார்ஜ்' செய்யும்போதும் தனியாக வைத்து பராமரிப்பதற்காக தனியிடம் தேவைப்படும். முக்கியமாக பசங்கள் படிக்கும்போது அமைதியாக இருப்பது அவசியம். அந்த அறைகளில் 'டிரெஸ்ஸிங் டேபிள்' வைக்கப்படும் சூழலில் அலமாரிகளில் கண்ணாடியை பதித்துக்கொள்ளலாம்.
    ×