search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    மதுரையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.7 லட்சத்து 34 ஆயிரத்து 330 சிக்கியது. #LSPolls

    மதுரை:

    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    மதுரை மாநகர பறக்கும் படை தாசில்தார் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த வேனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதனை சோதனை செய்தபோது 10 பண்டல்களில் ரூ.7 லட்சத்து 34 ஆயிரத்து 330 இருந்தது தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள பீடி கம்பெனி ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வதற்காக கொண்டு வரப்பட்ட பணம் என தெரியவந்தது. இருப்பினும் ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அந்த பணம் கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. #LSPolls

    மதுரையில் அனுமதியின்றி தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LSPolls #Venkatesan
    மதுரை:

    மதுரையில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை நேற்று தேர்தல் அதிகாரி நடராஜனிடம் தாக்கல் செய்தார்.

    வேட்பு மனுத்தாக்கலில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக வெங்கடேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் தங்கமீனா தல்லாகுளம் போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வேட்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #LSPolls #Venkatesan

    மதுரை அருகே பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை சோலையழகுபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் முத்துபாலன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது37). கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாக வில்லை. இதனால் விரக்தி அடைந்த ஈஸ்வரி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஜெய் ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.

    மதுரை பீ.பி.குளம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (30). குடிபழக்கத்துக்கு அடிமையானதால் இவருக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த விஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யர்பங்களா சசி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் (58). குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகராஜன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.50 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #ElectionFlyingSquad #LSPolls
    மதுரை:

    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், மதுரை யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கத்தை கத்தையாக ரூ.4.50 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    வாகனத்தில் வந்த ஊழியர்களிடம் விசாரித்தபோது, அந்த பணம் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள கனரா வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், திருச்சியில் இருந்து எடுத்து வருவதாகவும் கூறினர். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.  இதையடுத்து பணத்துடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து, மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.  பணத்திற்கான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



    இதேபோல் சென்னை யானைக்கவுனி, வால்டாக்ஸ் சாலையில் லோகேஷ் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #ElectionFlyingSquad #LSPolls

    தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்கம்-வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    மதுரை:

    17-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை காரணமாக நாள்தோறும் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி டோல்கேட் பகுதியில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அதிகாலை 4.30 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த கண்டெய்னர் வேனை மறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கண்டெய்னரை திறந்து சோதனை செய்தனர்.

    அப்போது அதில், 8 கிலோ தங்கம், வைரம், வெள்ளி கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து ஆவணங்கள் கேட்டபோது, டிரைவரிடம் எந்த பதிலும் இல்லை.

    இதையடுத்து அதிகாரிகள் கண்டெய்னருடன் தங்கம், வெள்ளி, வைரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான நடராஜன் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, வைர கட்டிகளை ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரத்தின் மதிப்பு ரூ.3.64 கோடி ஆகும்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சிட்டம்பட்டி டோல்கேட் அருகில் இன்று அதிகாலை வாகன சோதனை செய்தபோது 8 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி, வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3.64 கோடி ஆகும்.

    டிரைவரிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்ததில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மதுரைக்கு ஏன் கொண்டு வரப்பட்டது? என தெரியவில்லை. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    கடந்த 24 மணி நேரத்தில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4.74 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை மதுரை மாவட்டத்தில் ரூ.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட் களுக்கு உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டால் அதனை உரியவரிடம் அளிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை கூடல்புதூரில் வீட்டுக்குள் புகுந்து நகை -பணம்,பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை கூடல்புதூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மகாத்மாகாந்தி நகர், நர்மதா நதி குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் குட்டிராஜன். இவரது மனைவி இடாஜெயக்குமாரி.

    சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு மாடியில் தூங்க சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, ரூ.70 ஆயிரம் ரொக்கம், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். காலையில் கீழே இறங்கி வந்த இடாஜெயக்குமாரி கதவு உடைக்கப்பட்டு நகை-பணம், பொருட்கள் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    மதுரை அருகே கிணற்றில் மூழ்கிய 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

    மதுரை, மார்ச். 13-

    மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவரது மகன் ஆரோக்கிய தமிழரசு (வயது 15) 9-ம் வகுப்பு மாணவன்.

    சம்பவத்தன்று திருப்பரங்குன்றம் பாம்பன்சாமி நகரில் உள்ள கிணற்றுக்கு ஆரோக்கிய தமிழரசு குளிக்கச் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் நீரில் மூழ்கினான். இதில் மூச்சு திணறிய ஆரோக்கிய தமிழரசு, பரிதாபமாக இறந்தான்.

    அவனியாபுரம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் விக்னேஸ்வரன் (15). 10-ம் வகுப்பு படித்து வந்த இவன், சின்னம்மை பாதிப்புக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டான். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விக்னேஸ்வரன் பரிதாபமாக இறந்தான். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏப்ரல் 18-ந் தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நடப்பதால் தேர்தலை 23-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என மதுரை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மதுரை:

    தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி ஆகிய பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் பகுதிகள் அடங்கி உள்ளன.

    உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது. அன்றுதான் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. தேரோட்டம் முடிந்த மறு நாள் 19-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியிலும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரை வைகை ஆற்றில் திரளுவார்கள்.

    தேரோட்டம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தென் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள். இதனால் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும். எனவே வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    டாக்டர் இஸ்மாயில் (கல்லூரி முதல்வர்):- நாட்டின் 17-வது பாராளுமன்றம் அமைப்பதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஏப்ரல் 18-ந்தேதி தென் மாவட்ட மக்களே மகிழ்ச்சி பொங்க மதுரையில் திர ளும் மகத்தான சித்திரை திருவிழா காலமாகும். உலக மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைகின்ற மீனாட்சி அம்மன் கோவில் தேரோட் டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகிய நிகழ்ச்சிகளை காண லட்சக்கணக்கானோர் மதுரையில் கூடுவார்கள்.

    அன்றைய தினம் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது. எனவே 5 நாட்கள் கழித்து 3-வது கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 23-ந்தேதி தமிழகத்தில் தேர்தலை நடத்தினால் சிறப்பாக இருக்கும்.

    சுப்புராம் (பெட்கிராட் தொண்டு நிறுவன தாளாளர்):- பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி தான். ஆனாலும் மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடைபெறும் காலத்தில் தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

    எனவே ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் தேதியை மாற்றி 23-ந்தேதிக்கு தள்ளிவைத்தால் நன்றாக இருக்கும். இதனை மாநில தேர்தல் ஆணையம் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். லட்சக்கணக்கானோர் சித்திரை திருவிழாவில் கூடுகின்ற நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது. எனவே இதனை உடனடியாக மாற்றி உத்தரவிட வேண்டும்.

    எஸ்.ஜி.மணிகண்டன் (தனியார் நிறுவன ஊழியர்):- பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயக கடமை ஆற்றுவதா? அல்லது சாமி கும்பிட செல்வதா? என்ற குழப்பமான மனநிலை ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு தேர்தல் ஆணையம் இதுபோன்ற வி‌ஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது அதிர்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் கூடும் திருவிழாவை மாற்ற முடியாது. எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றார்.

    கீர்த்தி (கல்லூரி மாணவி):- சித்திரை திருவிழாவின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேதியை முடிவு செய்யும் முன் மாநில தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்டிருந்தால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டு இருக்காது.

    திருவிழாவின்போது வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இதனால் வாக்கு சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

    அருண்குமார் (வங்கி ஊழியர்):- சித்திரை திருவிழாவின் போது வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமம் பார்க்காமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அதற்காக தேர்தல் தேதியை மாற்றச் சொல்வது என்பது தவறான முன் உதாரணம்.

    தேர்தல் தேதியை மாற்றினால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருவிழா மற்றும் பல்வேறு காரணங்களை கூறி மாற்ற வேண்டிய நிலைமை வரும் என்றார்.

    மூகாம்பிகை (எஸ்.ஆலங்குளம்):-மதுரை சித்திரை திருவிழா பாரம்பரிய திருவிழா. மதுரையை பூர்வீகமாக கொண்ட அனைவரும் திரு விழாவுக்கு வருவார்கள். இதனை தேர்தல் கமி‌ஷன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கலாசாரமா? தேர்தலா? என்று கேட்டால், கலாசாரம் தான் முக்கியம். பொதுத்தேர்தல் என்பது பொது மக்களுக்கான தேர்தல்தான். தேர்தல் பற்றி பொதுமக்கள் கவனமாக இருந்தால்தான் அது வெற்றி பெறும். இந்த நேரத்தில் மக்கள் திருவிழாவில் பங்கேற்பதால் கவனம் சிதற வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும். #tamilnews

    தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டருக்கான அரசாணை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #HighCourt #EggProcurement
    மதுரை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, முட்டை கொள்முதல் அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.

    முட்டை கொள்முதல் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.



    இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மகாதேவன் தமது உத்தரவில், அரசாணை முறையாக இல்லை என்றும், பல்வேறு பாகுபாடுகள் உள்ளதாகவும் கூறி, அதனை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். முட்டை வழங்குவதில் பாதிப்பு இல்லாத வகையில், இதுவரை யார் முட்டை வழங்கி வருகிறார்களோ அவர்களிடம் அதே விலையில் அதே எண்ணிக்கையில் முட்டை வாங்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  #HighCourt #EggProcurement
    மதுரையில் ரூ.3 கோடி மதிப்புள்ள நகை கொள்ளையில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அழகர்கோவில் ரோட்டைச் சேர்ந்தவர் கோபிநாத் (61). இவர் மதுரை நரிமேடு மருதுபாண்டியன் நகரில் அடகு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று அடகு கடைக்கு விடுமுறை என்பதால் கோபிநாத் கோவிலுக்குச் சென்று விட்டார். மாலையில் அவரது மகன் கடையை திறக்க வந்தபோது கடையில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அறை கதவுகள் மற்றும் லார்கர்கள் உடைக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. அதில் இருந்த சுமார் 1,450 பவுன் நகைகளும், ரூ.9 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. கொள்ளை போன 12 கிலோ நகைகளின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.

    இது குறித்து கோபிநாத் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அடகு கடையில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படவில்லை. ஆனாலும் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவையும் கொள்ளையர்கள் திருப்பி வைத்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

    அடகு கடை பூட்டுக்களையும், லாக்கரையும் கொள்ளையர்கள் வெல்டிங் மெஷின் மூலம் அறுத்துள்ளனர். இதற்காக ஒரு வேனில் கியாஸ் சிலிண்டரையும் எடுத்துச் சென்று கொள்ளையை நடத்திவிட்டு தப்பி விட்டனர்.

    இது குறித்து போலீஸ் கமி‌ஷனர் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முகமூடி கும்பல் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து மதுரையில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். ஆனாலும் துப்பு கிடைக்கவில்லை.

    அடகு கடை கொள்ளை சம்பவத்தில் 17 பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னரே கொள்ளையர்கள் நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் நகைக்கடை ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு வந்துள்ளது. இதனால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரையில் உள்ள நகை அடகுக்கடை ஒன்றில் நேற்றிரவு சுமார் ஆயிரத்து 483 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GoldTheft #MaduraiGoldTheft
    மதுரை:

    மதுரை நரிமேடு மருதுபாண்டியர் நகரில் கோபிநாத் என்பவர் நகை அடகுக்கடையை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் கடைக்குள் புகுந்தனர்.

    அவர்கள் வெல்டிங் கருவிகள் மூலம் லாக்கரை உடைத்து அதிலிருந்த ஆயிரத்து 483 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்நிலையில், இன்று பிற்பகல் கடைக்கு சென்று பார்த்த கோபிநாத் நகைகள் கொள்ளை போனது குறித்து அறிந்தார். 

    இதுகுறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். #GoldTheft #MaduraiGoldTheft
    மதுரை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண்கள் மாயமானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மேலூர் அருகே உள்ள சேக்குப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் காளீஸ்வரி (வயது17).

    இவர் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள சித்தப்பா வெய்யமுத்து (30) வீட்டில் தங்கி கூத்தியார்குண்டு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    தினமும் வீட்டில் இருந்து பஸ்சில் காளீஸ்வரி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 15-ந்தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் காளீஸ்வரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காளீஸ்வரியை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்....

    டி.குன்னத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (25) தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 15-ந்தேதி திடீரென மாயமானார்.

    இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×