search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஸ்வரப்பா"

    • ஈஸ்வரப்பா தனது மகனுக்கு ஹவேரி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார்.
    • ஆனால் அவரது மகனுக்கு பா.ஜ.க. போட்டியிட சீட் தரவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா. பாராளுமன்ற தேர்தலில் தனது மகனுக்கு ஹவேரி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் அவரது மகனுக்கு பா.ஜ.க. போட்டியிட சீட் தரவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு பா.ஜ.க. சீட் கொடுத்தது.

    இதனால் அதிருப்தி அடைந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா தான் சுயேட்சையாக ஷிமோகா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான ராகவேந்திராவை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்து, வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். இதனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஈஸ்வரப்பாவை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார்.

    நேற்று வேட்புமனுக்கள் திரும்பப்பெற கடைசி நாளாகும். இதையடுத்து எப்படியாவது கே.எஸ்.ஈஸ்வரப்பாவை வாபஸ் பெற செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரம் காட்டினர். ஆனால் கடைசி நிமிடம் வரை அவர் போட்டியில் இருந்து விலகவில்லை. மனுக்கள் திரும்ப பெறுவதற்கான நேரமும் முடிந்துவிட்டதால் ஈஸ்வரப்பா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது.

    இதற்கிடையே, பா.ஜ.க. மாநில ஒழுங்குமுறை குழுத்தலைவர் லிங்கராஜ் பாட்டீல் கட்சியின் அறிவுறுத்தலை மதிக்காமல் ஷிமோகா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு கட்சிக்கு தர்மசங்கடத்தை ஈஸ்வரப்பா ஏற்படுத்தி உள்ளார். இது கட்சி ஒழுக்கத்தை மீறும் செயலாகும். எனவே அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக அறிவித்தார்.

    இந்நிலையில், ஈஸ்வரப்பா இன்று செய்தியாளர்க்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஷிமோகா தொகுதியில் கட்சி சாராத வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எந்த வெளியேற்றத்திற்கும் நான் அஞ்சவில்லை. மேலும் நான் 5 முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன். நான் எப்படியும் ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைவேன். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு கடுமையாக போராடியவர்களில் நானும் ஒருவர் என தெரிவித்தார்.

    கர்நாடக மாநில பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான ஈஸ்வரப்பா, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து விமர்சித்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜே.டி.எஸ். கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஜே.டி.எஸ். கட்சி தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதல் மந்திரியாகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்த கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா வெளிப்படையாகவே பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

    கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பா.ஜனதாவின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் பா.ஜனதாவின் வகுப்பு வாரியான அரசியலுக்கு முடிவு கட்ட ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையா முதல் மந்திரியாக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ராகுல் காந்தியையும், சித்தராமையாவையும் கர்நாடக மாநில பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ள மாட்டார். அதே போல் சித்தராமையா தனது வாழ்நாளில் மீண்டும் முதல் மந்திரியாக ஆக மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈஸ்வரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
    ×