search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஜ்பாய்"

    திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மறைவுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. #DMK #DMKGeneralCouncilMeeting
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி, சுர்ஜித் சிங் பர்னாலா, கோபி அன்னான் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் கேரளாவில் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.



    இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவிக்க உள்ளார்.  #DMK #DMKGeneralCouncilMeeting
    அஸ்தியை கரைப்பதில் அரசியல் சாயம் பூசி வாஜ்பாயை பா.ஜனதா சிறுமைப்படுத்துவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. #AtalBihariVajpayee #ShivSena
    மும்பை :

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள நதிகளில் கரைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா செய்துள்ளது.

    இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்தபின் உருவான அரசியல் வெற்றிடத்தை மோசமான மற்றும் பொருத்தமற்ற வழிகளில் நிரப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

    பா.ஜனதா கட்சியில் மூத்த தலைவர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை. ஆனால் இறந்த மூத்த தலைவர்களின் அஸ்தி மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

    வாஜ்பாய் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளாலும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக கருதப்பட்டார். இதனால் தான் அவரின் இறுதி ஊர்வலத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.

    ஆனால் இறப்பிற்கு பின் அவரை சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது.



    அவர் அஸ்தி கரைக்கப்படும் நிகழ்ச்சி ஒரு கட்சியால் நடத்தப்படுவதாக இருக்க கூடாது. அனைத்து கட்சிகளும் உள்ளடக்கிய ஒரு தேசிய நிகழ்வாக அது நடந்திருக்கவேண்டும்.

    ஜவகர்லால் நேருவும், அடல்பிகாரி வாஜ்பாயும் அரசியல் வட்டத்திற்கு அப்பாற்பட்ட மிகப்பெரிய தலைவர்கள் ஆவர். ஆனால் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்கும் நிகழ்ச்சிக்கு அரசியல் சாயம் பூசுவது நல்லதல்ல.

    சில மந்திரிகளும், கட்சியின் பொறுப்பாளர்களும் வாஜ்பாயின் அஸ்தி கலசத்தை வாங்கிக்கொண்டு, உலக கோப்பையை வென்றது போன்ற உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

    எப்படி அவர்களால் மகிழ்ச்சியுடன் அவரின் அஸ்தியை வாங்க முடிகிறது? இது டி.வி. கேமராக்களில் பதிவாகிறது. சிலர் அந்த அஸ்தி கலசத்துடனேயே ‘செல்பி’ எடுத்து கொள்கின்றனர். இது வாஜ்பாயின் மீது நீங்கள் வைத்துள்ள பாசத்தின் முகமூடியற்ற வெளிப்பாடாகும்.

    வாஜ்பாயின் அஸ்தி அரசியலாக்கப்படுவதை கண்டு அவரின் குடும்பத்தினர் கூட வருத்தப்படுவார்கள். இது ஒரு தீவிரமான பிரச்சினையாகும். இனி யாருக்கும் இதுபோல் நிகழக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #ShivSena
    உத்தரபிரதேசத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை கரைக்க சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #AtalBihariVaajpayee
    லக்னோ:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாள் 17-ந்தேதி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    வாஜ்பாய் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள நதிகளில் கரைக்க பா.ஜ.க. முடிவு செய்தது. அதன்படி கடந்த 22-ந்தேதி அனைத்து மாநில பா.ஜனதா முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்து பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரால் வழங்கப்பட்டது.

    வாஜ்பாய் அஸ்தியை கரைக்கும் பணியில் பா.ஜனதாவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தியை கரைக்க பா.ஜனதா நிர்வாகிகள் படகில் சென்றனர். முன்னாள் மாநில பா.ஜனதா தலைவர் ராம் திரிபாதி, எம்.பி. ஹரிஷ் திரிவேதி, எம்.எல்.ஏ. ராம் சவுத்ரி, மற்றும் மூத்த நிர்வாகிகள், போலீஸ் சூப்பிரண்டு திலீப்குமார் உள்பட பலர் படகில் இருந்தனர்.

    அதிகமான கூட்டத்தால் ஆற்றில் சென்ற சிறிய படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்ததால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் தடுமாறி ஆற்றில் குதித்தனர். உடனே போலீசார் ஆற்றுக்குள் குதித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரை காப்பாற்றினர்.

    இந்த விபத்தில் அனைவரும் உயிர் தப்பினர். யாரும் ஆற்றில் மூழ்காமல் போலீசார் காப்பாற்றினார்கள்.  #AtalBihariVaajpayee
    டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படுவதாக வெளியான செய்திக்கு டெல்லி மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. #RamlilaMaidan ##RamlilaMaidanrename
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு முழு மரியாதையுடன் டெல்லி ஸ்மிருதி ஸ்தல் திடலில் தகனம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது அஸ்தி மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்கு வடக்கு டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வரும் மாநகராட்சி கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.  இதை டெல்லி வடக்கு மாநகராட்சி மேயர் ஆடேஷ் குப்தா இன்று மறுத்துள்ளார்.

    டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை சூட்டும் திட்டம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி, ‘இவ்விவகாரத்தில் சிலர் வதந்தியை உருவாக்க நினைக்கிறார்கள், நாம் அனைவரும் ராமரை வழிபாடு செய்பவர்கள். எனவே, ராம்லீலா மைதானத்தின் பெயரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை’ என தெரிவித்திருந்தார். #RamlilaMaidan ##RamlilaMaidanrename 
    டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. #RamlilaMaidan #VajpayeeName
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு முழு மரியாதையுடன் டெல்லி ஸ்மிருதி ஸ்தல் திடலில் தகனம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது அஸ்தி மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்கு வடக்கு டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வரும் மாநகராட்சி கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    இதுபற்றி வடக்கு டெல்லி மாநகராட்சி மேயர் ஆர்தர் குப்தா கூறுகையில், “ராம்லீலா மைதானம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த  மைதானத்தில் நடைபெற்ற பல்வேறு பொதுக்கூட்டங்களில் வாஜ்பாய்  உரையாற்றியிருக்கிறார். அதனால் அவரது நினைவாக மைதானத்தின் பெயரை அடல் பிகாரி வாஜ்பாய் ராம்லீலா மைதானம் என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாநகராட்சி மருத்துவமனைக்கும் அவரது பெயர் சூட்டப்படும். வரும் 30-ம் தேதி இது தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்படும்” என்றார்.


    ராம்லீலா மைதானத்தில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க போராட்டங்கள் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் இங்கு போராட்டம் நடத்தி உள்ளனர். ராம்தேவ் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. #RamlilaMaidan #VajpayeeName
    முன்னாள் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய்க்கு மும்பையில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
    மும்பை :

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார். மும்பையில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தரபிரதேச கவர்னர் ராம் நாயக், ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல், மாநில பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே, மந்திரிகள் சுதிர் முங்கண்டிவார், சந்திரகாந்த் பாட்டீல், வினோத் தாவ்டே மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    இதில் மாநிலத்தில் உள்ள கோதாவரி, பஞ்சகங்கா மற்றும் சந்திரபாகா உள்ளிட்ட 14 ஆறுகளில் கரைப்பதற்காக வாஜ்பாயின் அஸ்தியை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வழங்கினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கூறியதாவது:-

    நாட்டை நேசிப்பதற்கான பாதையை வாஜ்பாய் காட்டியுள்ளார். நாம் அவரை தலைவணங்கி அவர் வகுத்து தந்த பாதையில் பயணிக்க வேண்டும். அவர் தன் சித்தாந்தங்களை வாய்வழியாக மட்டுமே சொல்லவில்லை. அதன்படி வாழ்ந்து காட்டினார்.

    அவர் இந்த நாட்டிற்கு தான் முதலில் முன்னுரிமை அளித்தார். அடுத்ததாக கட்சிக்கு, கடைசியில் தான் அவர் தன்னை பற்றி சிந்தித்தார். வாஜ்பாய் ஒன்றும் பொருளாதார மேதை இல்லை. ஆனால் மனித வளர்ச்சி தேவையானவற்றை அவர் அறிந்திருந்தார். அவர் சமூக நீதியை வலியுறுத்தினார்.

    அவருக்காக மும்பையில் மராட்டிய அரசு நினைவு சின்னம் அமைக்கும். அதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நாளை மறுதினம் புதுவை கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் கடலில் கரைக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி புனித நதிக்கரைகள், கடல்களில் கரைக்கப்பட உள்ளது. இதேபோல் புதுவையிலும் கரைக்கப்பட உள்ளது.

    அஸ்தியை பெறுவதற்காக மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் பெங்களுரூ வழியாக டெல்லி செல்கிறார். அவர் புதுவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாளை மறுதினம் வாஜ்பாயின் அஸ்தி புதுவைக்கு கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஒரு நாள் வைக்கப்படுகிறது.

    இதனை தொடர்ந்து சனிக்கிழமை முதல்- அமைச்சர், கவர்னர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு நடக்கிறது. தொடர்ந்து அவரது அஸ்தி கடலில் கரைக்கபட உள்ளது.

    ரபேல் விமான ஊழல் தொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளது பொய்யான குற்றச்சாட்டு. ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நிரூபிக்கப்பட்டால் துறை அமைச்சர் ராஜினாமா செய்வார். உலகிலேயே 4 ஆண்டுகள் 1 ரூபாய் கூட ஊழலற்ற ஆட்சியை பா.ஜனதா நடத்தி வருகிறது.

    இவ்வாறு சாமிநாதன் கூறினார்.
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தான் குழுவில், மும்மை குண்டுவெடிப்பு பயங்கரவாதி டேவிட் ஹேட்லி தம்பியும் இடம்பெற்றிருந்தார். #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதிச்சடங்கில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    பாகிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் தூதர் சொகைல் முகமது, சட்ட மந்திரி சையதுஅலி ஷாபர் உள்ளிட்ட 5 பேர் குழு பங்கேற்றது. இந்த குழுவில் தன்யாள்கிலானி என்பவரும் இடம்பெற்றிருந்தார்.

    இவர் பாகிஸ்தானில் மத்திய சினிமா தணிக்கை குழு தலைவராக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

    ஆனால் இவர் மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி டேவிட் ஹேட்லியின் தம்பி என்று தெரியவந்துள்ளது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

    இந்த தாக்குதலுக்கு டேவிட் ஹேட்லிதான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தான். தாக்குதல் நடப்பதற்கு முன்பு இந்தியாவிற்குள் ரகசியமாக வந்த அவன் மும்பை சென்று எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என முன்கூட்டியே ஆய்வு செய்தான்.

    டேவிட் ஹேட்லி

    பின்னர் பயங்கரவாதிகளை அனுப்பிய அவன் பாகிஸ்தானில் இருந்தபடி சாட்டிலைட் போன்மூலம் எங்கெங்கு தாக்குதல் நடத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று பயங்கரவாதிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

    அமெரிக்காவில் குடியுரிமை பெற்றிருந்த அவன் பின்னர் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டான். தற்போது அமெரிக்க ஜெயிலில் இருக்கிறான்.

    அவருடைய தம்பி தன்யாள்கிலானி வாஜ்பாய் இறுதி சடங்கில் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் தன்யாள்கிலானி டேவிட் ஹேட்லியின் தம்பி என தெரிந்திருந்தும் அவரை இந்தியாவிற்கு வர விசா வழங்கி உள்ளனர். இறுதிசடங்கில் பங்கேற்கவும் அனுமதி அளித்துள்ளனர்.

    இதுபற்றி வெளியுறவு துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தன்யாள் கிலானி, டேவிட் ஹேட்லியின் தம்பியாக இருந்தபோதும் அவர் மீது பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக எந்த புகாரும் இல்லை.

    இந்தியா தரப்பில் இருந்து அவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவில்லை. எனவே பாகிஸ்தான் அரசு குழுவில் அவர் வருவதால் நம்மால் தடுக்க முடியாது என்று கூறினார்கள்.  #AtalBihariVajpayee
    முன்னாள் பிரதமர் 'பாரத ரத்னா’ அட்டல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தி இன்று ஹரித்துவார் நகரில் கங்கைல் ஆற்றில் கரைக்கப்பட்டது. #AtalBihariVajpayee
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.

    பன்னா லால் பல்லா நகராட்சி கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை பிரேம் ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் புனித நதியான கங்கையின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் பகுதிக்கு சென்று சேர்ந்தது.


    புரோகிதர்கள் மந்திரம் ஓத, ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளும், அவரது சிதைக்கு தீமூட்டியவருமான நமிதா கலசத்தில் இருந்த வாஜ்பாயின் அஸ்தியை கங்கை நீரில் கரைத்தனர்.

    இந்த சடங்கில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், வாஜ்பாயின் பேத்தி நிஹாரிக்கா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #RIPVajpayee #AtalBihariVajpayee #VajpayeeAsthiimmersed
    உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வார் நகரில் நடைபெறும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரையில் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். #AtalBihariVajpayee
    டேராடூன்:

    டெல்லியில் தகனம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி  வாஜ்பாயின் அஸ்தி வைக்கப்பட்ட கலசங்கள் விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது.

    அவ்வகையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி கங்கை நீரில் கரைக்கப்படுகிறது.

    முன்னதாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் அஸ்தி கலசம் வைக்கப்பட்டு யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.


    பன்னா லால் பல்லா நகராட்சி கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை பிரேம் ஆசிரமத்தை சென்றடையும். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் புனித நதியான கங்கையின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் என்னும் இடத்தில் ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நீரில் கரைக்கப்படுகிறது.

    தற்போது நடைபெற்றுவரும் அஸ்தி கலசம் யாத்திரையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர மாநிலங்களின் முதல் மந்திரிகள் கலந்து கொண்டுள்ளனர். #Vajpayee #AsthiKalashYatra #AtalBihariVajpayee
    ஆண்கள் மட்டுமே சிதைக்கு தீ மூட்ட வேண்டும் என்ற பாரம்பரிய வழக்கத்தை உடைத்த வாஜ்பாய் வளர்ப்பு மகளுக்கு, புதிய கவுரவத்தை ஏற்படுத்தி தந்துள்ளார். #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு மகன் நமிதா கவுல் பட்டாச்சார்யா தீமூட்டி இறுதி சடங்குகளை செய்தார்.

    வாஜ்பாய் திருமணம் ஆகாதவர். எனவே, நமிதா கவுலை வளர்ப்பு மகளாக எடுத்து வளர்த்து வந்தார்.

    பொதுவாக இந்துக்களின் மரபுப்படி பெற்றோரின் சிதைக்கு மகன் தீ மூட்ட வேண்டும். அப்படிஇல்லாத பட்சத்தில் நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தில் மகன் உறவு கொண்ட ஒரு ஆண் தீ மூட்ட வேண்டும்.பெண்கள் தீ மூட்டுவதற்கு அனுமதிப்பது இல்லை.

    வாஜ்பாய் குடும்பத்திலும் இதே நடைமுறைதான் இருந்து வந்தது. இறந்தவருடைய மகன் பல ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு அப்பால் இருந்து வர முடியாத நிலை இருந்தாலும், ஆண் வாரிசு இல்லை என்றாலும் உறவினரில் ஒரு ஆண்தான் தீ மூட்ட வேண்டும் என்று விதிகளை வகுத்துள்ளனர்.

    ஆனால், வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு மகள் நமிதா கவுல் தீ மூட்டினார். இது, பாரம்பரிய பழக்கத்தை மீறும் செயல் என சர்ச்சை எழுந்துள்ளது.

    ஆனாலும், நமிதா கவுல் செய்தது சரியானது என்று பல பெண்கள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.

    டெல்லியை சேர்ந்த பேராசிரியை கியா சவுத்ரி கூறும்போது, பெண்களை சுடுகாட்டுக்கு செல்ல அனுமதி மறுப்பது, இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்காதது போன்ற பழக்கங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது.

    எங்கள் வீட்டில் ஆண் வாரிசு இல்லை. எனது தாயார் இறந்த போது நான் தான் தீ மூட்டினேன். அடுத்து எனது தந்தைக்கும் நான் அதை செய்வேன்.

    நான் அவர்களுக்கு ஒரே மகள். என்னை அவர்கள் ஒரு ஆண் மகன் போலவே வளர்த்தார்கள். ஆண் மகன் போன்ற கடமையை நான் செய்கிறேன் என்று கூறினார்.

    மகள்களையும் இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே சமூக அமைப்புகளை சேர்ந்த பெண்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பெண்கள் பிரசாரமும் செய்து வருகிறார்கள்.

    கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி மதுநாயர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

    அப்போது மதுநாயரின் விருப்பப்படி அவரது மகள்கள் தான் சிதைக்கு தீ மூட்டினர். இதனால் அவர்கள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மகள்கள் தீ மூட்டினால் இறந்தவர் மோட்சத்துக்கு செல்ல முடியாது என்று அவர்கள் வாதிட்டார்கள்.

    மராட்டிய மாநிலம் குபாரி என்ற இடத்தில் இறந்தவர் ஒருவருக்கு அவரது மகள்கள் தீ மூட்ட முயற்சித்தனர். அப்போது உறவினர்கள் அவர்களை தள்ளி விட்டு விட்டு உறவினரில் ஒரு ஆண் சிதைக்கு தீ மூட்டினார்.

    இது சம்பந்தமாக அந்த பெண்கள் கூறும்போது, வாஜ்பாய் உடலுக்கு அவரது வளர்ப்பு மகள் தீ மூட்டியதை நாங்கள் பார்த்தோம். இது, பெண்களுக்கு கிடைத்த உரிமையாக கருதுகிறோம் என்று கூறினார்கள்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் இறந்த ஒருவருக்கு அவரது மகள் தீ வைத்ததற்காக கிராம பஞ்சாயத்தார் அந்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்தனர். அவர்களுக்கு யாரும் உணவு மற்றும் எந்த பொருளும் வழங்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

    மராட்டிய பாரதிய ஜனதா தலைவர கோபிநாத் முண்டே 2014-ல் மரணம் அடைந்தார். அப்போது கூட அவரது மகள் பங்கஜ் முண்டேதான் சிதைக்கு தீ மூட்டியது குறிப்பிடத்தக்கது.

    அதே போல் வாஜ்பாய் உடலுக்கு நமிதா கவுல் தீ மூட்டி பெண்களுக்கும் உரிமை உள்ளது என்பதை நிலைநாட்டி உள்ளார்.

    இதற்கிடையே வாஜ்பாய் அஸ்தியை கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இது சம்பந்தமாக வாஜ்பாய் குடும்ப பூசாரிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.

    வாஜ்பாயின் பூர்வீக ஊர் பதேஸ்வர் ஆகும். ஆனால், வாஜ்பாய் குடும்பத்தினர் நீண்ட காலமாக குவாலியரில் வசித்து வந்தனர். அங்கு தான் வாஜ்பாய் பிறந்தார்.

    இப்போது பதேஸ்வர் மற்றும் குவாலியரில் இருந்து 3 பூசாரிகள் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் நான்தான் வாஜ்பாய் அஸ்திக்கு சடங்கு செய்யும் அதிகாரம் கொண்டவன் என்று வாதிட்டு வருகிறார்கள்.

    இது சம்பந்தமாக கங்கா சபா என்ற அமைப்பு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

    ஹரித்வாரில் தொடங்கி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளில் கரைக்கப்படுகிறது. #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்(94) கடந்த 16-ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடலுக்கு வளர்ப்பு மகள் தகனம் செய்தார்.

    இந்நிலையில், டெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.


    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகருக்கு இன்று மாலை கொண்டு செல்லப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து உரிய மரியாதையுடன் கொண்டு செல்லப்படும் வாஜ்பாயின் அஸ்தி கலசம் லக்னோ நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    ஹரித்வார் நகரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் அவரது ஈமச்சடங்குகள் இன்று நடைபெறுகிறது.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் நகருக்கு கொண்டு செல்லப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி அங்குள்ள சாந்தி கஞ்ச் ஆசிரமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கங்கை நதியின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் என்னும் இடத்தில் ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நீரில் கரைக்கப்படுகிறது.


    வாஜ்பாயின் ஈமச்சடங்குகளில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர மாநிலங்களின் முதல் மந்திரிகள் கலந்து கொள்கின்றனர்.

    ஹரித்வாரில் கரைக்கப்படுவது போல் நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளிலும் மறைந்த வாஜ்பாயின் அஸ்தி கரைக்கடவுள்ளது. அனைத்து மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. தலைமையகங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் வைக்கப்படுகிறது. மாநில, மாவட்ட, பஞ்சாயத்துகள் அளவில் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை கூட்டங்களை பா.ஜ.கவினர் நடத்துகின்றனர்.

    நாளை டெல்லியில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு வாஜ்பாயின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவில் வரும் 23-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி பிரார்த்தனை கூட்டத்தில் ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யாநாத் மற்றும் வாஜ்பாயின் உறவினர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் அவரது அஸ்தி கோமதி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

    சென்னைக்கு கொண்டு வரப்படும் வாஜ்பாயின் அஸ்தி தமிழக மக்களின் அஞ்சலிக்கு பின்னர் இராமேஸ்வரம், கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. #AtalBihariVajpayee #RIPVajpayee #Vajpayeeashes #Haridwar
    ×