என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாஜ்பாய்"
முன்னாள் பிரதமரும் பா.ஜனதாவின் முதுபெரும் தலைவருமான வாஜ்பாய் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.
வாஜ்பாய் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகத்துக்கு அஸ்தி கலசத்தை எடுத்து வருவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அஸ்தி கலசம் நாளை (திங்கள்) சென்னை கொண்டுவரப்படுகிறது.
கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய கடல் உள்பட பல இடங்களில் அஸ்தியை கரைப்பது பற்றி தமிழக தலைமை முடிவு செய்யும் என்றார்.
இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-
அனைத்து மாநில பா.ஜனதா தலைவர்களும் டெல்லியில் வாஜ்பாய் அஸ்தியை பெற்று அந்த அந்த மாநிலங்களில் உள்ள நதிகள், கடல்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நானும் முக்கிய நிர்வாகிகளும் இன்று டெல்லி சென்று அஸ்தியை பெற்றுக் கொள்வோம். அதை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க முடிவு செய்துள்ளோம்.
சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம், மதுரையில் வைகை ஆறு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு, கோவையில் பவானி ஆறு, கன்னியாகுமரி கடல் ஆகிய இடங்களில் கரைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் பிரதமரும் பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.
டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள வீட்டில் இருந்து அவரது உடல் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்குப்பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு யமுனை கரையில் உள்ள ஸ்மிருதி ஸ்தலத்தில் தகனம் செய்யப்பட்டது.
வாஜ்பாய் வீட்டில் இருந்து உடல் தகனம் நடந்த இடம் வரை 7 கி,மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மற்றும் மத்திய மந்திரிகள், முதல்- மந்திரிகள், தலைவர்கள் நடந்து சென்றனர்.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஓடும் புனித நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படுகிறது. ஆக்ராவில் யமுனையிலும், அலகாபாத், கான்பூர், வாரணாசி, கோரக்பூர், காக்ரா, பைசாபாத், அசம் கார், ஆகிய இடங்களில் கங்கையிலும், லக்னோ, அமேதியில் கோமதி ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.
ஆக்ராவில் பதேஸ்வர் என்ற இடம்தான் வாஜ்பாயின் பூர்வீகம். கான்பூரில் கல்விகற்றார். பலராம்பூர் அவர் முதன்முதலில் தேர்தலில் நின்றார். லக்னோவில் அவர் 5 முறை எம்.பி.யானார் என்பதால் இந்த 4 இடங்களில் நினைவிடம் அமைக்கப்படுகிறது.
இதேபோல் வாஜ்பாய் பிறந்த குவாலியரிலும் நினைவிடம் கட்டப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. #Vajpayee #AtalBihariVajpayee
ஈடு, இணையற்ற பேச்சாளர், அரிதான நகைச்சுவை உணர்விலிருந்து மிகஉயர்ந்த தொலைநோக்குக்கு எளிதாக மடைமாற்றம் செய்துகொள்பவராகவும், மக்களோடு இயல்பாக தொடர்புகொள்ளும் அரிய திறனோடும், அவர்கள் தன்னம்பிக்கை கொள்வதற்கு ஊக்கம் தருபவராகவும், உயரிய கருத்துக்கு கொண்டு செல்பவராகவும் இருந்தார்.
தமது அரசியல் நம்பிக்கைகளில் உறுதியாக இருந்த அவர், மற்ற கருத்துகளுக்கு இடம் கொடுத்து மரியாதை தந்து நாடாளுமன்ற விவாதத்திற்கான அளவுகோலை நிர்ணயித்தார். எளிமை, நேர்மை, கண்ணியம், பதவி மீதான தனிப்பட்ட பற்றின்மை ஆகியவற்றால் நாட்டின் இளைஞர்களுக்கு வாஜ்பாய் ஒரு ஊக்கசக்தியாக இருந்தார்.
வாஜ்பாயை பொறுத்தவரை, ‘வளர்ச்சி என்பது பலவீனமானவர்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பது, ஒடுக்கப்பட்டவர்களை தேசிய நீரோட்டத்திற்குள் இணைப்பது’. இந்த தொலைநோக்கு தான் தொடர்ந்து நமது அரசின் கொள்கையாக உள்ளது.
21-ம் நூற்றாண்டில் உலக அளவிலான தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா தயாராவதற்கான அடித்தளத்தை அமைத்தார் வாஜ்பாய். எதிர்காலத்துக்கான அவரது பொருளாதார கொள்கைகள் மற்றும் அவரது அரசின் சீர்திருத்தங்கள், பல இந்தியர்களின் வளத்தை உறுதி செய்தது. அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பிற்கு அவர் முன்னுரிமை கொடுத்தார்.
வாஜ்பாய், உலக அளவில் மாற்றமுடியாத அளவுக்கு இந்தியாவின் இடத்தை உறுதி செய்தார். நாட்டின் தயக்கம், உலகின் எதிர்ப்பு தனிமைப்படுத்தப்படும் அச்சம் ஆகியவற்றை கடந்து இந்தியாவை அணு ஆயுத வல்லரசு நாடாக அவர் உருவாக்கினார். இந்த முடிவை அவர் சாதாரணமாக எடுக்கவில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகமாகி வருகின்றன என்பதால் அதன் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்தார்.
‘நான் எப்போதும் அமைப்பில் இருந்துதான் பணி செய்திருக்கிறேன்’ என்று கூறியபோது ‘மக்களின் எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக’ அவர் தெரிவித்தார். என் மீது வாஜ்பாய் வைத்த நம்பிக்கை மிகவும் பெருமைக்குரியது.
நமது இளைஞர்களின் சக்தியுடன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்கிற, மாற்றத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிற, அதை சாதிக்கின்ற நம்பிக்கையுள்ள, தூய்மையான பொறுப்புமிக்க நிர்வாகத்திற்காக பாடுபடுகின்ற, இந்தியர்கள் அனைவருக்கும் வாய்ப்பளித்து, அனைவரையும் உள்ளடக்கிய எதிர் காலத்தை கட்டமைக்கின்ற தற்சார்புள்ள தேசமாக இன்று நாம் விளங்குகிறோம்.
உலகத்தில் சமத்துவமும், அமைதியும் நிலவ நாம் பாடுபடுவோம். கோட்பாடுகளுக் காக நாம் பேசுகிறோம். மற்றவர்களின் விருப்பங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நம்மை கொண்டுசெல்ல வாஜ்பாய் விரும்பிய பாதையில் நாம் பயணம் செய்கிறோம்.
ஒரு ஒளி மறையும்போது ஏற்படுகின்ற துயரத்தை வைத்து ஒருவரின் வாழ்க்கை மதிப்பிடப்படுவதில்லை. வாழ்ந்த காலத்தில் மக்களின் வாழ்க்கையில் ஒருவரின் தாக்கம் எவ்வளவு நீடித்திருந்தது என்பதை வைத்தே அளவிடப்படுகிறது. இந்த காரணத்தால் வாஜ்பாய் உண்மையிலேயே பாரதத்தின் ரத்னாவாக இருந்தார். அவரது கனவுகளுடன் புதிய இந்தியாவை நாம் உருவாக்க, அவரது உணர்வுகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #PMModi #Modi
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி, உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நதிகளில் கரைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
இதற்காக, 75 மாவட்டங்களின் பட்டியலையும், அஸ்தி கரைக்கப்பட உள்ள சிறிய மற்றும் பெரிய நதிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டார். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ந்து 5 தடவை வாஜ்பாய் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த அளவுக்கு வாஜ்பாய்க்கு நெருக்கமான உத்தரபிரதேசத்தின் மக்கள், அவரது இறுதி பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த அஸ்தி கரைப்பு அறிவிப்பை வெளியிடுவதாக யோகி ஆதித்யநாத் கூறினார். #AtalBihariVajpayee #YogiAdityanath
மயிலாடுதுறை:
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் டெல்லியில் நேற்று காலமானார்.
வாஜ்பாயின் மறைவுக்கு மத்திய அரசு சார்பில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக அரசு சார்பிலும் இன்று ஒருநாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாஜ்பாய் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்து இரங்கல் தெரிவித்தனர். இதனால் நகரில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
மயிலாடுதுறையில் இன்று மாலை பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் மவுன ஊர்வலம் நடக்கிறது. இதில் அனைத்து கட்சியினர், வணிக சங்கத்தினர் கலந்து கொள்கின்றனர். இதன்பிறகு கிட்டப்பா அங்காடி முன்பு வாஜ்பாய் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதேபோல் சீர்காழி பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
புதுச்சேரி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை 5.30 மணியளவில் காலமானார். இந்த தகவல் புதுவை முழுவதும் பரவியது.
இதனால் வியாபாரிகள் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடந்து விடுமோ? என்ற அச்சத்துடன் கடைகளை தொடர்ந்து நடத்தலாமா? அல்லது மூடி விடலாமா? என்ற நிலையில் இருந்தனர்.
இன்று காலை 10 மணி வரை நகர பகுதியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.
கடை ஊழியர்களும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் கடை முன்பு காத்து இருந்தனர். அதன் பிறகு ஒருசில கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் கடைகளை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
அதன்படி வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டனர்.
அவர்கள் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால், வாஜ்பாய் அப்படிப்பட்டவர் அல்ல. சிறந்த கவிஞர். கலகலப்பான நபர். மிகப்பெரும் கலா ரசிகர். அதுவும் சினிமா என்றால் அவருக்கு உயிர்.
இதுபற்றி அவரது நெருங்கிய உறவினரான மாலா திவாரி சொல்வதை கேளுங்கள்...
நான் வாஜ்பாயின் மூத்த சகோதரர் சதாபிகாரி வாஜ்பாயின் மகள். நாங்கள் ஆரம்பத்தில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் வசித்து வந்தோம்.
அப்போது நாங்கள் அடிக்கடி சினிமா பார்ப்போம். சித்தப்பா வாஜ்பாய்க்கும் சினிமா பார்ப்பதில் அலாதி பிரியம். எங்களுடன் அமர்ந்து அவரும் சினிமா பார்ப்பார்.
நான் 1955-ல் பிறந்தேன். எனக்கு வேறு பெயர் சூட்டப்பட்டு இருந்தது. நான் பிறந்து ஒரு வருடம் கழித்து வைஜெயந்திமாலா நடித்த ‘நகின்’ என்ற படம் வெளியானது.
நான் குழந்தையாக இருந்த போது, அடிக்கடி அழுவேனாம். ஆனால், நகின் படத்தின் பாடலை ஒலிபரப்பினால் உடனே அழுகையை நிறுத்தி விடுவேனாம்.
இதனால் சித்தப்பா வாஜ்பாய் எனக்கு அந்த படத்தின் கதாநாயகியான வைஜெயந்திமாலா பெயரை சுருக்கி மாலா என்று பெயர் வைத்து விட்டார். அந்த பெயர்தான் இப்போது நீடித்து விட்டது.
1999-ல் அமீர்கான் நடித்து வெளிவந்த ‘சர்பரோஸ்’ படத்தையும் மிகவும் விரும்பி பார்த்தார். அந்த படத்தை பார்த்து விட்டு என்னிடம் போனில் பேசி நீயும் அந்த படத்தை பார். நன்றாக இருக்கிறது என்று கூறினார்.
நான் திருமணம் முடிந்து டெல்லியில் இருந்த போது, வாஜ்பாய், அத்வானி, அவருடைய மனைவி மற்றும் எனது கணவர் ஆகியோர் ஒன்றாக சென்றும் படம் பார்த்து இருக்கிறோம்.
குவாலியரில் தயாரிக்கும் லட்டு என்றால் வாஜ்பாய்க்கு மிகவும் பிடிக்கும். எனவே, குவாலியரில் இருந்து எங்களது குடும்பத்தினர் யார் வந்தாலும் அவருக்காக லட்டு தயாரித்து கொண்டு வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #AtalBihariVajpayee
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மிக மூத்த அரசியல் தலைவருமான வாஜ்பாய் தனது 93-வது வயதில் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வாஜ்பாயின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இலங்கை அரசின் சார்பில் அந்நாட்டின் நெடுஞ்சாலை மற்றும் உயர்க்கல்வித்துறை மந்திரி லக்ஷ்மன் கிரியெல்லா டெல்லி வந்துள்ளார்.
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அவர் பெருந்துணையாக இருந்ததாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
வாஜ்பாயின் மறைவுக்கு விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இலங்கையின் உண்மையான நண்பராக விளங்கிய திரு.வாஜ்பாயின் மரண செய்தி அறிந்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன்.
2002-2004 ஆண்டுகளில் நான் பிரதமராக இருந்தபோது, இலங்கையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார். அந்த உயர்ந்த மனிதருடன் நான் கொண்டிருந்த நட்பை எனது நினைவு கருவூலத்தில் என்றென்றும் பாதுகாத்திருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.
‘மிக உயர்ந்த மனித நேயரும், இலங்கையின் உண்மையான நண்பருமான வாஜ்பாயை நாம் இன்று இழந்துள்ளோம். ஜனநாயகத்தின் பாதுகாவலராக விளங்கிய முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் தொலைநோக்கு சிந்தனை கொண்ட பெரும் தலைவராக திகழ்ந்தவர்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார், மற்றும் உலகம் முழுவதும் உள்ள வாஜ்பாயின் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #SriLanka #MaithripalaSirisena #Wickremesinghe
அப்போது ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தார். அவர், வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர்களோடு எம்.பி.க்கள் குழுவும் சென்றது.
அதில், இளம் எம்.பி.யான வாஜ்பாயும் இருந்தார். வாஜ்பாயின் வித்தியாசமான செயல்பாடுகளை கவனித்த நேரு, இவர் ஒரு நாள் பிரதமராக வருவார் என்று கூறினார்.
ஆனால், அன்று நேரு சொன்னது போலவே பிற்காலத்தில் இந்த நாட்டின் பிரதமர் ஆகி இந்திய பிரதமர்களிலேயே மாபெரும் சாதனை செய்தவர் என்ற பெருமையையும் சேர்த்தார்.
பொதுவாக வாஜ்பாயின் நடவடிக்கைகள் மிக மிருதுவான மனிதராகத்தான் வெளியுலகுக்கு காட்டும். இதை நினைத்து அவரை தவறாக எடை போட்டவர்களும் உண்டு.
அவ்வாறு தவறான எடை போட்டவர்கள்தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், முன்னாள் அதிபர் முஷரப். அவர்கள் இருவருமே வாஜ்பாயை சாதாரணமாக நினைத்து கொண்டு இந்தியாவோடு வாலாட்டி பார்த்தார்கள்.
பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அமெரிக்கா கூட வாஜ்பாயை சாதாரணமாக எடை போட்டது.
உலகில் பல நாட்டு தலைவர்களை தாங்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகள் போல் நடத்துவது அமெரிக்காவுக்கு வாடிக்கையான ஒன்று.
அதுபோல்தான் வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் நாம் சொல்வதை எல்லாம் வாஜ்பாய் கேட்பார் என்ற எண்ணத்துடன் அமெரிக்கா செயல்பட்டது.
ஈராக்குடன் போரில் ஈடுபட்ட அமெரிக்கா பல நாடுகளையும் தங்களோடு போரில் இணைத்து கொண்டது.
அதே போல் இந்தியாவையும் போரில் ஈடுபட வைக்க முயற்சித்தது. ஆனால், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவின் சூழ்ச்சி வலையில் சிக்கவில்லை. போருக்கு படையை அனுப்ப மறுத்து விட்டார்.
இதனால் அமெரிக்காவிடம் இருந்து பல எதிர் விளைவுகள் வந்தன. அதையும் வெற்றிகரமாக சமாளித்தார். பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதால் அமெரிக்கா அதை காரணம் காட்டி அமெரிக்கா நமக்கு தொல்லை கொடுத்தது. அதையும் சமாளித்தார்.
இந்தியாவை எப்போதுமே எதிரி நாடாக பாவித்து வரும் சீனாவின் தொல்லை வாஜ்பாய் காலத்திலும் இருந்தது. அதையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார்.
அவருடைய செயல்பாடுகள் நாட்டு நலன் விஷயத்தில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்பதை காட்டியது.
அது மட்டும் அல்ல, பகை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் எப்போதும் கடுகடுப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் வாஜ்பாயிடம் இருந்ததில்லை.
உறவுக்கு கை கொடுப்போம் என்பது போல் இவராகவே தானாக முன்வந்து இரு நாடுகளிடமும் சமரச பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டார்.
கார்கில் போருக்கு காரணமாக இருந்த முஷரப்பையே நமது நாட்டுக்கு அழைத்து வந்து சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
வாஜ்பாய் கொடுத்த அழுத்தத்தினால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டிய நிலை முஷரப்புக்கு ஏற்பட்டது.
சீனாவுக்கு பயணம் செய்த வாஜ்பாய், பழைய பகைகளை எல்லாம் மறந்து விட்டு வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்த முன்வந்தார்.
2003-ல் இந்தியா- சீனா இடையேயான வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியாக இருந்தது.
தற்போது ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு வித்திட்டவர் வாஜ்பாய்.
வெளிநாட்டு விவகாரங்களில் மிகத்துல்லியமான அறிவுத்திறன் கொண்டவர். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கூட வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக வாஜ்பாயுடன்தான் அடிக்கடி கருத்துக்களை கேட்டு வந்தார்.
மிகச்சிறந்த அரசியல் ராஜ தந்திரமும் அவரிடம் உண்டு. இந்தியாவில் மிகச் சிறிய கட்சிகளில் ஒன்றாக ஜனசங்கம் இருந்து வந்தது. பின்னர் பா.ஜனதாவாக உருவெடுத்த இந்த கட்சி 2 எம்.பி.க்களை மட்டுமே கொண்டு இருந்தது.
அந்த கட்சி நாட்டையே ஆளும் அளவுக்கு வந்தது என்றால் அதற்கு முழு காரணமாக வாஜ்பாய் இருந்தார்.
முதலில் அவர் ஆட்சிக்கு வந்து 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தார். அடுத்து 13 கட்சி கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்தார். 13 மாதம் மட்டுமே ஆட்சி நீடித்தது.
ஆனாலும், வாஜ்பாய் மீது கொண்ட நம்பிக்கையால் மக்கள் வாக்குகளை அள்ளி குவித்தனர். இதன் காரணமாக மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர், தொடர்ந்து 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தார்.
அதற்கு முன்பு வரை காங்கிரஸ் அல்லாத கட்சிகள் நாட்டில் நிலையான ஆட்சியை தர முடியாது என்ற எண்ணமே இருந்தது.
ஆனால், அதை வாஜ்பாய் முறியடித்து காட்டினார். ஏராளமான கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைந்த போதும் எல்லோரையும் சமாளித்து மிக சாதுர்யமாக ஆட்சியை நடத்தினார்.
பாராளுமன்ற வரலாற்றிலேயே மிகச் சிறந்த பேச்சாளர் என்ற பெருமை வாஜ்பாய்க்கு உண்டு. பாராளுமன்ற பேச்சானாலும் சரி, வெளி மேடை பேச்சானாலும் சரி, அவரது பேச்சு எல்லோரையும் கவருவதாக இருக்கும்.
ஒரு கதை சொல்வது போல் தனது பேச்சை வடிவமைத்துக்கொள்வார். அத்தனை பேரையும் தனது பேச்சோடு ஒன்றிணைய செய்து விடுவார். ஏற்ற, இறக்கங்களுடன் தலையை அங்குமிங்கும் அசைத்து அவர் பேசுவதே வித்தியாசமாக இருக்கும்.
வாழ்நாளில் யாரும் அவரை விரல் நீட்டி குறை சொல்ல முடியாத நபராக வாழ்ந்து மறைந்து இருக்கிறார், நமது தலைவர் வாஜ்பாய். #AtalBihariVajpayee
முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவருமான வாஜ்பாய் நேற்று மரணம் அடைந்தார்.
வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பாரதிய ஜனதா கட்சியினரும், பொதுமக்களும் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்திலும் அவரது படத்துக்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
வாஜ்பாய் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில், கோட்டார், வடசேரி, மீனாட்சிபுரம் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
காலையில் சில கடைகள் திறந்து இருந்தன. பிறகு அந்த கடைகளும் மூடப்பட்டன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் லாட்ஜூகளில் முடங்கி கிடந்தனர். சின்ன முட்டம் விசைப்படகு மீனவர்களும் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
தக்கலை, பத்மனாபபுரம், குலசேகரம், திருவட்டார், இரணியல் போன்ற இடங்களிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. நித்திரவிளை போன்ற பகுதிகளில் சில கடைகள் திறந்திருந்தன.
வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து அசம் பாவிதங்களை தடுக்க குமரி மாவட்டத்தில் கிராம புறங்களில் இரவு தங்கும் ஸ்டேபஸ்களை டெப்போவுக்கு கொண்டுச் செல்ல உத்தரவிடப்பட்டது. இதனால் அனைத்து பஸ்களும் இரவு டெப்போவுக்கு திரும்பின. ராணித்தோட்டம், விவேகானந்தபுரம் உள்பட 11 அரசு டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களில் இன்று காலை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக காலை 4.30 மணி முதல் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்ளுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று அதிகாலையில் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளானார்கள்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் 5 என்டு டூ என்டு பஸ்களையும், மதுரைக்கு ஒரு பஸ்சையும் காலை 6 மணிக்கு இயக்கினார்கள். இந்த பஸ்களில் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து இதே போல 6 பஸ்களாக இயக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு பிறகு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. கிராம புறங்களுக்கும் பஸ்கள் சென்றன. வடசேரி பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இதே போல ஐரேனியபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசினார்கள். மூசாரி பகுதியில் குளச்சலில் இருந்து திருவட்டார் நோக்கி அரசு பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது.
பஸ்கள் அடுத்தடுத்து கல் வீசி உடைக்கப்பட்டதையடுத்து கருங்கல் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
வாஜ்பாய் 1999-ல் பிரதமராக இருந்த போது, கார்கில் போர் நடந்தது. அந்த போரில் இந்தியா மாபெரும் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டியது. இந்தியாவின் அந்த சாதனைக்கு சொந்தக்காரர் வாஜ்பாய்.
இந்தியாவில் காஷ்மீரில் சில பகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷரப் கார்கில் பகுதியில் ரகசியமாக படைகளை ஊடுருவ செய்தார்.
இது, இந்திய ராணுவத்துக்கு தெரியாது. மே 3-ந் தேதி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவி இருப்பதை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து விட்டு இந்திய ராணுவத்துக்கு தகவல் கொடுத்தனர்.
மே 5-ந் தேதி இது, உண்மைதானா? என்பதை கண்டறிவதற்காக 5 ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர்.
இதன் பின்னர் மேலும் ஆய்வு செய்த போது, பாகிஸ்தான் வீரர்கள் கார்கிலில் உள்ள டராஸ், காக்சர், முஷ்கோக் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் புகுந்திருப்பது தெரிய வந்தது.
அப்போது பிரதமர் வாஜ்பாய் தலைநகரத்தில் இல்லை. அவர் புதுவைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்தார். இங்கு கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார்.
டெல்லியில் இருந்து அவருக்கு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருப்பதை உறுதி செய்து தகவல் வந்தது.
உடனே பிரதமர் வாஜ்பாய் உறுதியான நடவடிக்கைகளை தொடங்கினார். எந்த தயக்கத்தையும் காட்டாத அவர், பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று உடனடி முடிவுக்கு வந்தார்.
அவர் புதுவையில் இருந்தபடியே போர் உத்தரவை பிறப்பித்தார். அடுத்த வினாடி இந்திய விமானப் படைகள் தாக்குதலை தொடங்கின.
ஜூலை 26-ந் தேதி போர் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. சுமார் 4 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
அன்று பிரதமர் வாஜ்பாய் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரியான பாடம் கற்றுக்கொண்டது. #AtalBihariVajpayee
மத்திய மந்திரிசபை கூட்டங்களில் கூட வாஜ்பாய் உப்புக்கடலையை கொறித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு தடவையும் தட்டு நிறைய அதை நிரப்பி வைக்க வேண்டும். கூட்டம் முடிவடையும்போது, தட்டு காலியாகி இருக்கும்.
வாஜ்பாய்க்கு இனிப்புகளும், கடல் உணவுகளும் குறிப்பாக இறால் மிகவும் பிடிக்கும். எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரின் புகழ்பெற்ற உணவு வகைகளை கேட்டு வாங்கி சாப்பிடுவார்.
வாஜ்பாயின் சீடரான லால்ஜி தாண்டன், லக்னோவில் இருந்து கபாப் உணவுவகைகளை வாங்கி வந்து தருவார்.
மத்திய மந்திரி விஜய் கோயலுக்கு பழைய டெல்லியில் இருந்து சாட் உணவுவகைகளை வாங்கி வரும் பொறுப்பு.
தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திராவில் இருந்து இறால் வாங்கி வருவார்.
ஏராளமான மசாலாவுடன் பக்கோடா சாப்பிடுவதும், மசாலா டீ அருந்துவதும் வாஜ்பாய்க்கு பிடித்தமான விஷயம்.
ஒருமுறை அரசாங்க விருந்தின்போது, உணவு பகுதியில், குலாப் ஜாமுன் உள்ளிட்ட இனிப்புவகைகள் அணிவகுத்து இருந்ததை பார்த்தவுடன், வாஜ்பாய் அந்த பகுதிக்கு நகர்ந்தார்.
அதை பார்த்து கவலை அடைந்த அதிகாரிகள், ஒரு தந்திரம் செய்தனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மாதுரி தீட்சித்தை வாஜ்பாய்க்கு அறிமுகம் செய்து வைத்தனர். பிறகு மாதுரி தீட்சித்துடன் திரையுலகம் குறித்து வாஜ்பாய் உரையாடத் தொடங்கினார். அந்த இடைவெளியில், இனிப்புவகைகளை அங்கிருந்து மறைத்து விட்டனர், அதிகாரிகள்.
வாஜ்பாய்க்கும் நன்றாக சமைக்கத் தெரியும். தன்னை சந்திக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு அவரே ஏதேனும் ஒரு உணவுவகையை சமைத்து வழங்குவார். அது பெரும்பாலும் இனிப்புவகையாகவோ அல்லது அசைவமாகவோ இருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்