search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்மயி"

    ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். அப்படி ஒரு பட்டம் அவருக்கு வழங்கப்படவில்லை என்று சின்மயி கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Chinmayi #Radharavis

    பினனணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூவில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். இந்த யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி.

    யூனியனுக்கு சந்தா தொகை செலுத்தாததால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வாழ்நாள் சந்தா செலுத்தி விட்டதாக சின்மயி கூறினார்.

    யூனியனில் இருந்து நீக்கப்பட்டதால் டப்பிங் பேசும் வாய்ப்பும் சின்மயிக்கு கிடைக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


    தனது வாய்ப்புகள் பறிபோக காரணமான நடிகர் ராதாரவி மீது சின்மயி புதிய புகார் தெரிவித்துள்ளார். ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். இது மலேசியாவில் வழங்கப்படும் கவுரவ பட்டம்.

    ஆனால் இந்த பட்டத்தை ராதாரவி தவறாக பயன் படுத்துகிறார். அவருக்கு அப்படி ஒரு பட்டமே வழங்கப்படவில்லை என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக மலேசிய நாட்டின் மெலேகோ மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த கடிதத்தில் ராதா ரவிக்கு அரசு எந்த பட்டமும் வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டிருப்பதாக அரசு செயலர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே ராதாரவி பயன் படுத்துவது போலி பட்டம் என்று விமர்சித்துள்ளார். சின்மயி கிளப்பி இருக்கும் இந்த புதிய சர்ச்சை மீண்டும் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #Chinmayi  #Radharavis

    டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவித்து வருவதாக ராதாரவி குற்றம்சாட்டியுள்ளார். #MeToo #Chinmayi #RadhaRavi
    கவிஞர் வைரமுத்து மீது சின்மயி மீடூ இயக்கம் மூலம் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.

    இது கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சின்மயி 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை என்று கூறி அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த வாரம் நீக்கினார்கள். ஆனால் சின்மயிதான் வாழ்நாள் உறுப்பினருக்கான கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தியதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி கூறியதாவது:-

    வைரமுத்து உள்ளிட்டோர் மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்து பிளாக் மெயில் செய்தார். அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதால் டப்பிங் யூனியன் பக்கம் திரும்பிவிட்டார்.

    சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையர் வாசுகி அம்மாள். நீக்கிய பிறகு அவர் சங்கம் பற்றி பேசக் கூடாது. வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை வங்கி கணக்கு மூலம் செலுத்தியதாக சின்மயி கூறுவது பொய். வைரமுத்து வி‌ஷயத்தில் அவர் கூறிய பாஸ்போர்ட் கதை போன்று தான் வங்கிக் கணக்கு கதையும்.



    எல்லாமே பொய். வாழ்நாள் உறுப்பினர் அடையாள அட்டையை காட்டச் சொல்லுங்கள்.

    சின்மயி யார் மீது வேண்டுமானாலும் மீ டூ புகார் தெரிவிக்கட்டும். ஏன் அவர் பிறந்தபோதே மீ டூ நடந்தது என்று கூட சொல்லட்டும். அவர் யார், யாரின் பெயர்களை கூறி பணம் பெற நினைக்கிறாரோ அவர்களின் பெயரை சொல்லட்டும். அதற்கும் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியதற்கும் தொடர்பு இல்லை.

    சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவித்து வருகிறார். தற்போது மீ டூவை ஆறப்போட்டுவிட்டு டப்பிங் சங்கம் பக்கம் வந்துள்ளார். நான் விஷாலுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

    விஷால் ஒரு வீட்டிற்கு இரவு 3 மணிக்கு வந்துவிட்டு 5 மணிக்கு சுவர் ஏறி குதித்துச் சென்றதாக கூறுகிறார்கள். அதுவரை அவர் பாலியல் குற்றம் செய்ய முயற்சி செய்தாரா? அப்படி இல்லையே.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Chinmayi #RadhaRavi

    நான் ஏற்கனவே வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை செலுத்தி உள்ளேன். என்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்க முடியாது என்று சின்மயி தெரிவித்துள்ளார். #MeToo
    சென்னை:

    பிரபல பின்னணி பாடகி சின்மயி. இவர் ‘மீடூ’வில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சின்மயிக்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. சின்மயி படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வந்தார்.

    இதற்கிடையே டப்பிங் யூனியனில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டார். அவர் உறுப்பினர் சந்தாவை 2 ஆண்டாக செலுத்த தவறியதால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதுபற்றி சின்மயி கூறும்போது, டப்பிங் யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி தூண்டுதலின் பேரில்தான் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து தன்னை நீக்க முடியாது என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டப்பிங் யூனியனில் இருந்து என்னை அவர்கள் நீக்கம் செய்ய வேண்டுமென்றால் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். அப்போதுதான் நான் விளக்கம் அளிக்க முடியும். ஆனால் இது அவர்களது சொந்த விதிமுறைபடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.



    நான் ஏற்கனவே வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை செலுத்தி உள்ளேன். அதற்கான வங்கி விவரங்கள் என்னிடம் உள்ளன. இதனால் சந்தா தொகை செலுத்தாததால் என்னை நீக்கியதாக கூறுவது தவறு. டப்பிங் யூனியனில் இருந்து என்னை நீக்கியது செல்லாது. ‘மீடு’ விவகாரத்தில் பாலியல் புகார்களை நான் கூறியதால் ராதாரவி என்னை நீக்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ரெட்கார்டு போடுவேன் என்று டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி மிரட்டியதாக பாடகி சின்மயி புகார் கூறியுள்ளார். #Chinmayi #RadhaRavi
    கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்து வந்தார். பாலியல் புகார் கூறியதால் அவர் டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக இன்று சின்மயி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் மீ டூ தொடர்பாக குரல் கொடுக்கத் துவங்கியதால் தான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். யார் எதிராக பேசினாலும் உடனே டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி அவர்களை நீக்கிவிடுவார். இது பல முறை நடந்துள்ளது. நான் 2006-ம் ஆண்டில் இருந்து டப்பிங் பேசி வருகிறேன்.

    தேர்தல் பற்றி எனக்கு தெரிவித்ததே இல்லை. ஒரு கண்டன பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் முன்பணம் வாங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்து முன்பணத்தை திருப்பி தர வைத்தார் ராதாரவி.

    பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் ரெட்கார்டு கொடுப்பேன் என்று மிரட்டினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் போராட்டம் நடத்தியபோது வருகைப்பதிவேடு வைத்திருந்தனர்.

    அவர் அழைக்கும் போராட்டங்களுக்கு வராதவர்களுக்கு வேலை கிடையாது. இல்லை என்றால் அபிபுல்லா சாலையில் இருந்த டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு வரவழைத்து கண்டபடி திட்டுவார். ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் கேவலமாக திட்டுவார்.

    நான் ஒரு முறை அப்படி திட்டு வாங்கியபோது என் அம்மாவும் உடன் இருந்தார். சுசித்ராவும் திட்டு வாங்கியுள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால் நானும், சுசித்ராவும் திட்டு வாங்கினோம். ஆனால் கூட்டம் நடப்பது குறித்து யாருமே எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    ஒட்டப்பாலத்தில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தார் ராதாரவி. நான் ராதாரவிக்கு போன் செய்து நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டது பற்றி தெரிவித்தது எனக்கு நினைவில் உள்ளது.

    அதற்கு அவரோ, எனக்கும் ஷூட்டிங் இருக்கு. நான் கேன்சல் பண்ணிட்டு வரல? நீ வரவில்லை என்றால் ரெட்கார்டு கொடுப்போம் என்றார். டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். அதற்கு உதாரணம் பூமாராவ் என்ற பெண்’

    இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.
    டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். #Chinmayi
    தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி. இவர் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் பேசியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார்.

    இவர் மீடூ விவகாரத்தில் கடந்த அக்டோபரில், கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார். இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.



    கடந்த 2 ஆண்டுகளாக சந்தா தொகை செலுத்தவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியுள்ள நிலையில், 96 தனது கடைசி படம் ஆக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    உண்மை மெதுவாய் பேசும், பொய்கள் புயலாக வீசும் என வைரமுத்துவுக்கு ஆதரவாக, வைரமுத்து எழுதிய பாடலையே மதன்கார்க்கி வெளியிட்ட நிலையில், கபிலன் வைரமுத்துவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #MeToo #Vairamuthu
    கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்பு கூறிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

    சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த விவகாரம் குறித்து ஒருமுறை மட்டுமே வைரமுத்து கருத்து தெரிவித்தார். அதில் என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறி இருந்தார். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் வைரமுத்து பங்கேற்காமலே உள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு குடும்பத்தினரும் விளக்கம் அளிக்காமலேயே இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் வைரமுத்துவின் மகன்களான மதன் கார்க்கி, கபிலன் ஆகியோர் தந்தை மீதான குற்றச்சாட்டுக்கு திடீரென விளக்கம் அளித்துள்ளனர்.



    மதன் கார்க்கி, ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் வைரமுத்து எழுதிய பாடலையே உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளார். அது தொடர்பான ஆடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார். அந்த பாடல் வரிகள் வருமாறு:-

    ‘‘உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும். அன்று ஊரே போற்றும் மனிதன். நீயே நீயடா. பொய்கள் புயல்போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும். அன்று நீயே வாழ்வில் வெல்வாய். கலங்காதே. கரையாதே. ராமனும் அழுதான் தர்மனும் அழுதான். நீயோ அழவில்லை. உனக்கோ அழிவில்லை.

    சிரித்து வரும் சிங்கம் உண்டு. புன்னகைக்கும் புலிகள் உண்டு. உரையாடி உயிர் குடிக்கும் ஓநாயும் உண்டு. பொன்னாடை போர்த்தி விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு. பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு. பள்ளத்தில் ஊர் யானை விழுந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்திட முடியாது. கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன். கரையாதே கலங்காதே.’’

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    இன்னொரு மகனான கபிலன் வைரமுத்துவும், தந்தைக்கு ஆதரவாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.

    அப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவர் பிறக்கும் போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர்பள்ளி செல்லும் வரை செருப்பு அணியும் சூழல் இன்றி காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர்.

    படிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்தத் தக்காளிகளைப் பறித்துத் தின்று விட்டு பரீட்சை எழுதப் போனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்கு கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது.

    அப்பாவும், அம்மாவும் தங்கள் காதல் திருமணத்திற்கு பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மின் விசிறி கூட இல்லாத வாடகை வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க் கவிஞராக ஒருவர். தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாகி அந்தத் தமிழின் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது.

    அவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால் அவரது எழுத்தை விட வாழ்க்கை பெருமை வாய்ந்தது.

    தற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும். இந்தப் பிரச்சினையை பொழுதுபோக்காகச் சித்தரித்து பல பிரச்சினைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MeToo #Vairamuthu #MadhanKarky #KabilanVairamuthu

    கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகாருக்கு பதிலளித்துள்ள அவரது மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது என தெரிவித்துள்ளார். #Vairamuthu #MeToo #Chinmayi
    சென்னை:

    இந்தியா முழுவதும் மீடூ இயக்கம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. பணியிடங்களில் குறிப்பாக சினிமா துறையில் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியான தொல்லைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார்.



    இந்த பதிவு சினிமா துறையையே உலுக்கியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குப்படுத்த நினைப்பவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள் என தெரிவித்துள்ளார்.

    மேலும், வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக வந்தால் எதிர்கொள்ள தயார் எனவும், வைரமுத்துவின் எழுத்துக்களை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது மற்றும் பாடம் நிறைந்தது என குறிப்பிட்டுள்ளார். #Vairamuthu #MeToo #Chinmayi
    ‘மீ டூ’ மூலம் சின்மயியை யாரோ தூண்டி விடுவதாக கூறிய ராதாரவி, சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிவதாக கூறியுள்ளார். #MeToo #RadhaRavi #ChinmayiSripada
    வைரமுத்து, அர்ஜூனை அடுத்து தியாகராஜன் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக சென்னை பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் தியாகராஜன். அவருக்கு ஆதரவு அளித்து நடிகர் ராதாரவியும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பத்திரிகையாளர்கள் காலை பிடித்து கேட்கிறேன். எது உண்மையோ அதை மட்டும் எழுதுங்கள். நாம் எல்லோரும் ஒண்ணு இல்லையா?. யாராவது புகார் கொடுத்தால் அதைப் பற்றி விசாரித்து பதிவு செய்யுங்கள்.

    சின்மயி நல்ல குழந்தைதான். ஆனால் அவங்களை யாரோ தூண்டிவிட்டுட்டாங்க போல. அதான் அந்தக் குழந்தை அப்படி பேசுது. எங்க டப்பிங் யூனியன்லகூட அந்தப் பொண்ணு உறுப்பினராக இருக்கு.

    சின்மயி இப்போது பாடுறதை விட்டுட்டு பேசுறதுக்கு ஆரம்பிச்சிருச்சு போல. இது இப்படியே வளர்ந்தால் தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக மீ டூ இருக்கும். சம்மதம் இல்லாமல் எந்த குற்றமும் நடப்பது இல்லை. ‘மீ டூ’ வை தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் ‘பிளாக்மெயில்’ செய்வார்கள்.



    இதனால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதற்கு முடிவு கட்ட வேண்டும். அர்ஜூனும் நல்ல பையன்தான். அவர் மேல போய் இப்படி சொல்லியிருக்காங்க. நான் கெட்டவார்த்தை பேசுறேன்னு சொல்றாங்க.. ஒருபடம் முழுக்க கெட்ட வார்த்தை பேசியிருக்காங்க. நான் அதற்காக வெற்றிமாறனை பாராட்டுகிறேன். அந்த படமே வடசென்னை மக்களை பற்றிய படம். அந்த மக்கள் பேசுவதை அப்படியே தான் காட்ட முடியும்.

    எப்போது நடந்தது என்று கேட்டால் சின்மயிக்கு பதில் சொல்ல முடியவில்லை. பாஸ்போர்ட் காணாமல் போனது என்பதை ஒரு காரணமாக சொல்கிறார். இன்று இருக்கும் டெக்னாலஜிக்கு ஒரு சில நிமிடங்களிலேயே நாம் எந்த நாட்டுக்கு எப்போது போனோம் என்பதை கூற முடியும்.

    சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது. இதுபோன்ற வி‌ஷயங்களுக்கு சங்கத்தில் பொறுப்புகளில் இருக்கும் விஷால் முன்வர வெண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் சினிமா என்றாலே இப்படித் தான் என்று ஆகிவிடும். மீடூவை வைத்து பிளாக் மெயில் பண்ண தொடங்கிவிடுவார்கள். இப்போதே தொடங்கி விட்டார்கள். உடனடி நடவடிக்கை வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார். #MeToo #TimesUp #RadhaRavi #ChinmayiSripada

    சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். #BJP #HRaja #Vairamuthu
    மதுரை:

    மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச்செயலாளர் எச்.ராஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளாவில் இடதுசாரி அரசும், மக்கள் விரோத சக்தியும் இந்துத்துவ விரோத சக்திகளும் ஒருங்கிணைந்து சபரிமலை புனிதத்தை கெடுத்து விட வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படுகின்றன.

    இது 6 மாதத்திற்கு முன்பு கேரளாவில் இரு பிரிவினர் ஒரு தேவாலயத்திற்கு உரிமை கொண்டாடினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் தரப்பினர் பேரணி போராட்டம் நடத்தினர். உடனே பினராயி விஜயன் அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தினால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். எனவே கால அவகாசம் வேண்டுமென கோரியது.


    இதே நடைமுறையை சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு ஏன் பின்பற்றவில்லை? இந்துக்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றாமல் ஆபாசமான புகைப்படங்களை பதிவிட்ட ரெஹனா பாத்திமா என்பவர் கமாண்டோ உடையணிந்து சபரிமலை வரை சென்றுள்ளார். இது கேரள முதல்வரின் கீழ்த்தரமான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    கேரள அரசை கண்டித்து வருகிற 30-ந்தேதி பா.ஜ.க. சார்பில் அய்யப்பன் நாமசங்கீர்த்த யாத்திரை நடக்கிறது. சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தாய் ஆண்டாளை பழித்த வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja #Vairamuthu #Chinmayi
    சின்மயிக்காக குரல் கொடுப்பவர் ஸ்ரீரெட்டிக்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று நடிகர் சித்தார்த்துக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். #Seeman #Siddharth
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘மீ டூ’ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த், டுவிட்டரில் பதில் அளித்தார்.

    அதில் “மீ டூ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக சீமான் கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்து என்றும் விமர்சிக்கிறார். வெறுப்பாளர்களும், சின்ன மனதுக்காரர்களும் அரசியலில் எல்லா பக்கத்திலும் இருக்கிறார்கள் எனக்கு இப்போது புரிகிறது. சீமானின் கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன். அவரது கருத்து மரியாதைக் குறைவானது. போலித்தனமானது. கூடவே பெண் வெறுப்புத்தன்மையுடையது என்று கூறினார்.

    சித்தார்த்தின் கண்டனத்துக்கு சீமான் பதிலளித்துள்ளார். ‘‘இன்று சின்மயிக்காக குரல் கொடுப்பவர் ஸ்ரீரெட்டிக்காகவும் குரல் கொடுக்க வேண்டுமல்லவா? காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது உங்கள் குரல்வளை எங்கிருந்தது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மீது தனது மகளை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்த தந்தை கொல்லப்பட்டார். அப்போது ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை. எல்லா கற்களும், அம்புகளும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன்?” என கேட்டுள்ளார். #Seeman #Siddharth
    பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களில் பாடகி சின்மயி பிரச்சனையால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக சரத்குமார் கூறினார். #SamathuvaMakkalKatchi #Sarathkumar #MeToo
    கரூர்:

    கரூரில் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா மற்றும் உடல்நல விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என ஆகமவிதி இருக்கிற போது, பாலின சமத்துவத்தை சுட்டிக்காட்டி பெண்களை அங்கு அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஏற்புடையதல்ல.

    சபரிமலைக்கு என புனிதம் இருக்கிறது. அதனை காத்திட வேண்டும். சில கோவில்களில் ஆண்கள் சட்டையை கழற்றி விட்டுத் தான் செல்ல வேண்டும் என கூறுவார்கள். அங்கு சட்டையுடன் தான் செல்வேன் என கூற முடியுமா? எனவே கோவில்களுக்கு என்று வகுக்கப்பட்ட நம்பிக்கையை நாம் கடைபிடித்து தான் ஆகவேண்டும். எனவே பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது.

    ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிற போது, அதில் குறைகள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதனை மத்திய அரசுக்கு எடுத்து சொல்பவராக தான் கவர்னர் இருக்க வேண்டும். இதை விடுத்து கவர்னர் ஆய்வுக்கு செல்லக் கூடாது. அப்படியெனில் பிரதமர் மோடி செல்ல வேண்டிய இடத்திற்கு, ஜனாதிபதி ஆய்வுக்கு செல்ல முடியுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    சிங்கப்பூரில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறார்கள். எனவே வரும் காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை பாதுகாப்பது, மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து ஆஸ்க் சரத்குமார் என்கிற செயலி மூலம் நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருக்கிறோம்.

    மீண்டும் மோடி பிரதமர் ஆவாரா? இல்லையா? என ஜோசியம் சொல்ல முடியாது. ஆனால் ஆக மாட்டார் என்பது எனது ஆழமான கருத்து.

    கூட்டணி குறித்து பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருகிற போது எனது நிலைபாட்டை அறிவிப்பேன். ஸ்டெர்லைட் விவகாரத்தில் சிக்கிய வேதாந்தா நிறுவனத்திற்கு மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

    பெண்களை மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். எந்த விதத்திலும் துன்பப்படுத்தக்கூடாது. அது நமது கடமை. பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களில் பாடகி சின்மயி பிரச்சனையால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எந்த தவறு நடந்தாலும் தைரியமாக சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இனி வரும் காலங்களில் பெண்கள் காலதாமதம் செய்யக்கூடாது. எப்போதோ செய்த தவறை பல ஆண்டுகள் கழித்து சொல்லும் போது அந்த மனிதன் மட்டுமல்ல அவனை சார்ந்த குடும்பமும் அசிங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #SamathuvaMakkalKatchi #Sarathkumar #MeToo
    அவதார வேட்டை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, சின்மயி மற்றும் மீடூ விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார். #RadhaRavi #Chinmayi
    அவதார வேட்டை என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கம் ஒன்றில் நடைபெற்றது. வி.ஆர்.வினாயக், மீரா நாயர், ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ் கான், சோனா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டார் குஞ்சுமோன் இயக்கி உள்ளார். நிகழ்ச்சியில் ராதாரவி பேசியதாவது:-

    ‘சமீபகலாமாக திரைத்துறை பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. நடிகைகளுக்கு மேக்கப் நடுரோட்டிலா போட முடியும்? தனியறையில் தான் போட முடியும். தப்பித்தவறி அந்த அறைக்குள் இயக்குனர் வந்தால் அவரது கதை அவ்வளவுதான். இடுப்பை கிள்ளினார் என்று செய்தி வந்துவிடும். இவை எல்லாம் இப்போது நமக்கு பரபரப்பான செய்திகள் ஆகிவிட்டன.

    இதுபோன்ற செய்திகளுக்கு சட்டமே ஆதரவு தருகிறது. இயக்குனர்கள் மிகவும் சிரமப்பட்டு சினிமாவுக்குள் வருகிறார்கள். அவர்கள் மீது இதுபோன்ற அபாண்டங்களை சுமத்தாதீர்கள். சினிமா என்ற தொழிலை கெடுத்து விடாதீர்கள்.

    இந்த குற்றசாட்டுகளுக்கு ஏதாவது தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்கள். என் மீது கூட வந்தது. நான் இதையெல்லாம் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. என்னை பற்றி இப்போதுதான் புகாரே வந்துள்ளது. சினிமாக்காரர்கள் வீடுகளில் காலாவதியான செக்குகளே மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

    நமக்கு குடும்பமே இல்லை. 30 நாட்கள், 40 நாட்கள் என்று எங்கேயோ சென்று தங்குகிறோம். அப்போது நாம் எல்லோருடனும் தான் பேசுவோம். ஒரு குடும்பமாக இருந்த சினிமா மாறி ஒருவரிடம் மற்றொருவர் பேசவே பயப்படும் நிலை உருவாகி விட்டது.

    ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் படம் சரியாக வராது. ஒற்றுமையாக இருங்கள். ‘மீ டூ’ போன்ற ஆங்கில கலாசாரங்களை இங்கே கொண்டு வர வேண்டாம். நமக்கும் மீடூவுக்கும் தொடர்புஇல்லை.

    அதெல்லாம் பெரிய இடங்களோடு பெரிய மனிதர்களோடு தொடர்புடைய விவகாரம். நமக்கு எதுக்கு அதெல்லாம்? சாலையில் ஆடையுடன் செல்ல வேண்டும் என்பது தான் சட்டம். குளியலறையை எட்டி பார்த்துவிட்டு அந்த சட்டத்தை பிரயோகிக்கக்கூடாது.

    சித்தார்த் தான் சரியான கருத்தை கூறி இருக்கிறார். ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி இருக்கிறார். விஷாலும் சரியான கருத்தை கூறி இருக்கிறார். நடந்ததை அப்போதே சொல்லி இருந்தால் அதற்கு தீர்வு கிடைக்குமே? 10 ஆண்டுகள் கழித்து சொன்னால் எப்படி சரிசெய்ய முடியும்? இதை எல்லாம் பேசுவது சினிமாவுக்கு அசிங்கம்.

    எங்கள் குடும்பமே வில்லன் குடும்பம். எனவே எங்களை பற்றி இதுபோன்ற புகார் வந்தால் மக்கள் எளிதில் நம்பிவிடுவார்கள். நான் இது தொடர்பாக கோர்ட்டுக்கே செல்லக்கூட தயாராக இருக்கிறேன். சாமியார்களிடம் போய் கெட்டுபோய் வருபவர்கள் தான் வெளியில் வந்து மற்றவர்களை புகார் சொல்கிறார்கள்.

    சின்மயி உள்பட அனைவருக்கும் ஒரு கோரிக்கை. புகார் சொல்வதால் உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். எப்போதோ நடந்ததை இப்போது வெளிபடுத்தினால் அது உங்களுக்கு தான் பாதிப்புகளை ஏற்படுத்தும். புகார் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறும் வரை யாரும் குற்றவாளி இல்லை’.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×