search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்மயி"

    கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டத்தற்கு இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கருத்து கூற மறுத்து விட்டனர். #Vairamuthu
    கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாடகி சின்மயி குற்றம் சாட்டி வருகிறார். தமிழ் சினிமாவிலும் பொதுவெளியிலும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த குற்றசாட்டுகளுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்துள்ளன.

    கவிஞர் வைரமுத்துவுடன் இணைந்து பயணித்தவர்கள் டைரக்டர் பாரதிராஜாவும், இசையமைப்பாளர் இளையராஜாவும். பல வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி பிரிந்தது.

    இலங்கை நாட்டில் கிளி நொச்சியில் ஒளிப்படப் பிடிப்பாளர் சங்கம் நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் மூத்த ஒளிப்படப் பிடிப்பாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    இலங்கை எம்.பி.சி.சிறிதரனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து மீதான ‘மீ டூ’ பாலியல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பாரதிராஜா “என் தொழில் தொடர்பாக சினிமா தொடர்பாக எது கேட்டாலும் பதில் சொல்வேன். டூ மீட் மீ ஐ மீட் யூ அவ்வளவுதான்” என பதில் அளித்தார்.

    ‘ஒரு இயக்குனராக பாலியல் புகார்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?’ என பாரதிராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாரதிராஜா “மீ டூ என்றால் என்ன? சொல்லு. மீ டூன்னா என்னா? என்ன பிரச்சனை? என்ன பிரச்சினை” என கேள்வி கேட்டவரிடம் கோபப்பட்டார்.

    மற்றொரு பத்திரிகையாளர், ‘வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்படுகிறதே?’ என கேள்வி எழுப்ப “நீ பார்த்தியா? நீ பார்த்தியா? கேள்விப்பட்டிருக்கிறே... கேள்விபட்டதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆதாரம் இருந்தால் பதில் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாக முடித்துக் கொண்டார்.

    இளையராஜாவின் 75 வது பிறந்தநாள் நேற்று தனியார் கல்லூரி ஒன்றில் கொண்டாடப்பட்டது.

    இதில் கலந்துகொண்ட இளையராஜா நிகழ்ச்சி முடிந்ததும் பேட்டி அளித்தார். அப்போது மீடூ பற்றி கேள்வி கேட்டதற்கு ’ரொம்ப நன்றாக கேள்வி கேட்கிறாய்’ என்று சொல்லி விட்டு பதில் அளிக்காமல் மறுத்து சென்றுவிட்டார்.
    பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள சின்மயியிடம் சுசிலீக்ஸ் சர்ச்சை பற்றி பலரும் விளக்கம் கேட்ட நிலையில், வீடியோ வடிவில் சின்மயி தனது விளக்கத்தை தெரிவித்திருக்கிறார். #MeToo #Chinmayi
    பாலிவுட்டில் மீடூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தெரிவித்தார். அவர் ஆதாரம் இல்லாமல் விளம்பரம் தேட பொய் புகார் தெரிவிப்பதாக சிலர் விமர்சித்தனர்.

    சமூக வலைத்தளத்தில் பாடகி சுசித்ரா, சுசி லீக்ஸின் ஒரு பகுதியாக சின்மயி குறித்து தெரிவித்ததை தேடிக் கண்டுபிடித்தனர்.

    2016-ம் ஆண்டில் பாடகி சின்மயி 4 முறை கருவை கலைத்ததாக சுசித்ரா டுவீட் செய்திருந்தார். சின்மயி அட்ஜெஸ்ட் செய்து வாய்ப்புகள் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். சின்மயி குறித்து சுசித்ராவின் டுவீட்டுகள் மற்றும் வீடியோவை தேடிக் கண்டுபிடித்த சமூகவலைதளவாசிகள் முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டனர்.

    நெட்டிசன்கள் தன்னை தொடர்ந்து கேவலமாக விமர்சித்ததை பார்த்த சின்மயி சுசிலீக்ஸ் பற்றிய உண்மையை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவுசெய்து பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் 4 முறை கருகலைப்பு எல்லாம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் சின்மயி.
    சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை பற்றி தவறாக பேசினார். அதில் உண்மை இல்லை. அதற்காக அவர் இமெயில் மூலம் மன்னிப்பு கேட்டார். அந்த இமெயிலை பப்ளிக்காக வெளியிட வேண்டும் என்று தோன்றவில்லை. இன்று சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் ஒரு டுவீட்டுக்கு பதில் அளித்துள்ளார். சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லாதபோது அவர் சின்மயி மீது புகார் தெரிவித்தார் என்று கார்த்திக் டுவீட் செய்துள்ளார் என்று சின்மயி குறிப்பிட்டு கூறுயுள்ளார். #MeToo #Chinmayi #SuchiLeaks

    சின்மயி வெளியிட்ட வீடியோவை பார்க்க: