என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சின்மயி"
Karthik Kumar
— Chinmayi Sripaada (@Chinmayi) October 14, 2018
Thank you! I have lived with these stories of the fictitious ‘4 abortions’, ‘adjusting for my career’ and threat of a ‘video’ that doesn’t exist for over a year.
I am grateful. It lifts the weight off.
Thank you. pic.twitter.com/mYTBE8D9UD
கவிஞர் வைரமுத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி கூறியதாவது:-
வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஏதாவது கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாரா? இல்லையே. பணத்துக்காக பாடல் எழுதுபவர் தானே? பிறகு ஏன் அவரை விசாரிக்க கூடாது?
வைரமுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் என்கிறார். காலமா சின்மயிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தது? இப்படி ஒரு பதிலை சொல்லிவிட்டு ஒதுங்கலாமா? சம்பந்தப்பட்டவர்கள் தானே பதில் சொல்லவேண்டும்?
இது இன்னும் வழக்காக மாறாமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சின்மயி தாமதமாக புகார் சொல்வதை குறை சொல்ல முடியாது. சம்பவம் நடந்தபோது அவருக்கு 17, 18 வயது தான். அந்த சூழலில் அவர் குழப்ப நிலைக்கு தான் சென்றிருப்பார். இப்போது அவருக்கு வயது காரணமாக பக்குவம் வந்திருக்கலாம்.
பெண்ணுக்கு தீங்கு நடக்கும்போது அவள் அதை சத்தமாக வெளியில் கொண்டு வரவேண்டும். இதில் வெட்கப்பட வேண்டியவர் அந்த குற்றத்தை செய்தவர்தானே தவிர பாதிக்கப்படும் பெண்கள் அல்ல என்பது புரிய வேண்டும். சமூக வலைதளங்களில் இதை பகிர்வதால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அரசாங்கமும் இதற்கு இன்னும் உதவ வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற புகார்களை எடுத்து சென்று இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருப்பார்.
இவ்வாறு திலகவதி கூறி உள்ளார். #Thilagavathi #Vairamuthu #MeToo #Chinmayi
சேலத்தில் நடிகை ஸ்ரீபிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-
இதனால் வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் குறையும். திரைத்துறை மட்டுமல்ல, எந்த இடத்தில் பெண்களுக்கு தொல்லைகள் நேர்ந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Sripriya #Vishal
மும்பை:
பெண்கள் மீதான பாலியல் தொல்லை குறித்த புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
‘மீ டூ’ என்ற டுவிட்டர் பக்கத்தில் பிரபலங்கள் மீது பெண்கள் பலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வருகிறார்கள்.
பிரபல இந்தி நடிகர் நானேபடேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா அளித்த புகாரை அடுத்து பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது புகார்கள் கூறப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, மலிங்கா ஆகியோர் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியான ராகுல்ஜோரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் மீ டூ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் ராகுல்ஜோரியை வேலைவாய்ப்பு விஷயமாக சந்தித்தபோது அவர் பாலியல் ரீதியாக பேசி அழைத்தார் என்று தெரிவித்துள்ளார். புகார் கூறிய பெண்ணின் பெயர் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ராகுல்ஜோரி 2016-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்பு அவர் பிரபல நெட்வொர்க் நிறுவனத்தில் துணைத் தலைவராக வேலை பார்த்து வந்தார். #RahulJohri #metoo
சென்னை:
பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறல் குறித்தும் அடையாளம் காட்டும் வகையில் ‘மீ டூ’ (நானும் தான்) என்ற தலைப்பில் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக ‘மீ டூ’ என்ற பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதுவே தற்போது டுவிட்டரில் பிரசாரமாக உருவெடுத்துள்ளது.
பாலியல் அத்துமீறலை அம்பலப்படுத்தும் விதமாக தொடங்கிய இந்த பிரசாரம் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பெண்களால் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, படப்பிடிப்பின் போது நடிகர் நானா படேகர் தன்னிடம் அத்துமீறியதாக புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய மந்திரி அக்பர் உள்பட பலருக்கு எதிராக மீ டூ பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
அரசியல், திரை உலகம் என பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்கள் இப்போது வெளிஉலகுக்கு தெரியவருகிறது.
தமிழகத்தில் பிரபல திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து மீது பத்திரியாளர் சந்தியா மேனன் மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் அடுத்தடுத்து ‘மீ டு’ ஹேஸ்டேக்கில் புகார் தெரிவித்தது தற்போது பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த வைரமுத்து அறியப் பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரீகம் நாடு எங்கும் இப்போது நாகரீகமாகி வருகிறது.
சமீப காலமாக நான் தொடர்ச்சியா அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அதில் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை. உண்மையை காலம் சொல்லும் என்று தெரிவித்தார்.
பாடகி சின்மயி கருத்துக்கு திரைப்பட பிரபலங்களான சமந்தா, சித்தார்த், வரலட்சுமி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ‘மீ டூ’ பிரசாரத்துக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மீடு பிரசாரம் இன்னும் பல விவாதங்களை காண வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உண்மையை இந்த உலகுக்கு சொல்ல வேண்டும். பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முயற்சியை ஆதரிப்போம். முகமூடிக்கு பின் ஒளிந்திருக்கும் முகங்களை பெண்கள் அடையாளம் காட்டட்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று கூறி உள்ளார். #kanimozhi #metoo
Heartbreaking story.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 10, 2018
Dance Master Kalyan.
Your #TimesUPpic.twitter.com/1BbWgVI2tc
The staff at Vairamuthu sir’s office KNOW. His closest confidants know. They are also his enablers.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
Vairamuthu sir, you KNOW what you did.
With due respect your #TimesUp
I dont care if I ever sing or dub in this industry ever.
This is my story. And this is the truth.
LIAR! https://t.co/osvaGLb4mQ
— Chinmayi Sripaada (@Chinmayi) October 10, 2018
@Chinmayi Respect ! May God be with you....Actually thank you ! #metoo
— Ghibran (@GhibranOfficial) October 10, 2018
Dear @23_rahulr and @Chinmayi I know the both of you for ten years now . I don’t know two more brutally honest people .It is this attribute of yours that I value most in our friendship . I love you with all my heart and what you say is the TRUTH !! #istandwithchinmayi
— Samantha Akkineni (@Samanthaprabhu2) October 10, 2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்