search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரமலான்"

    நோன்பு ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு பயிற்சி அளிப்பதோடு மனித நேயத்தையும் கற்றுத் தருகிறது.

    ரமலானில் உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்கின்றனர். ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, அறிஞர், பாமரர், ஆள்வோர், ஆளப்படுவோர் என்று அனைவரும் நோன்பு நோற்கின்றனர். உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே மாதத்தில் நோன்பு நோற்கின்றனர் என்ற எண்ணம் சமத்துவம், சகோதரத்துவ உணர்வை உண்டாக்குகிறது.

    நோன்பு காலத்தில் பசியின் கொடுமைகளை மனிதன் உணர்வதால், கதியற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிலையை உண்டாக்குகின்றது. வறுமை, நோய், கொடுமை, அநீதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இதுபோன்ற நிலை எவருக்கும் வரக்கூடாது என்றும், இதுபோன்ற நிலை வந்தோருக்கு உதவ வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் அமைப்புகளையும் ஏற்படுத்துகின்றனர். நோன்பாளிகளும் இத்தகைய மனிதநேய உணர்வைப் பெற்று ஏழைகளுக்கு உதவத் தொடங்கிவிடுகின்றனர்.

    மேலும் ரமலான் மாதத்தில் தானம் அளிப்பதால் இறைவனிடமிருந்து பல மடங்கு கூலி கிட்டும் என்ற நபிமொழியை மனதில் கொண்டு ஏழைகளுக்கு தாராளமாகவே வழங்குகின்றனர். இதன் காரணமாகவே சமூகத்தில் பல அறநிறுவனங்கள், ரமலான் மாதத்தில் அதிக நன்கொடைகளை பெறுகின்றன. இது நோன்பு ஏற்படுத்திய தாக்கமாகும். மேலும் ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடை அளிப்பதில் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி மக்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளார்கள்.

    நபிகளாரைப் பற்றி அவரது தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதைக் கவனியுங்கள். “அண்ணல் நபி (ஸல்) கொடை வள்ளலாகவும் மற்றவருக்கு தாராளமாக வாரி வழங்குபவராகவும் திகழ்ந்தார்கள். இருப்பினும் ரமலான் மாதம் வந்துவிட்டாலோ அண்ணலாரின் கொடை இன்னும் அதிகமாகிவிடும். வேகமாக வீசும் காற்றைப்போல் அவர்களின் கொடை மேலும் அதிகமாகிவிடும்.”

    ஒருபுறம் பசிக் கொடுமையை உணர்ந்ததால் ஏற்பட்ட தாக்கம். இன்னொருபுறம் நபிகளாரின் முன்மாதிரி, ஏழைகளுக்கு வழங்கும் ஆர்வத்தை நோன்பாளிகளிடம் ஏற்படுத்திவிடுகிறது. நபிகளார் ரமலானை கருணையின் மாதம் (முவாஸத்), அதாவது ஏழைகள் மற்றும் தேவையுடையோர் மீது அனுதாபம் கொள்ளும் மாதம் ஆகும் என்றார்கள்.

    எனவே ரமலானில் இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை என்று கூறாது வாரி வழங்குவோம்.
    பகலில் பசித்திருத்தல், இரவில் விழித்திருந்து, தனித்திருந்து பிரார்த்தனை, வழிபாடுகள், திருக்குர் ஆன் ஓதுதல் என்பன ரமலானில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
    இறைவனை அஞ்சுகின்ற, ஒழுக்கமுள்ள மனிதனை உருவாக்குவதே நோன்பின் நோக்கம். நோன்பு எப்படி ஒழுக்கமுள்ள மனிதனாக ஒருவரை உருவாக்கும் என்ற கேள்வி எழுகின்றது.

    “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” இது ஆன்மிகத்திற்கான பயிற்சிகளாகக் கருதப்படுகின்றது. ரமலானின் இம்மூன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றது. பகலில் பசித்திருத்தல், இரவில் விழித்திருந்து, தனித்திருந்து பிரார்த்தனை, வழிபாடுகள், திருக்குர் ஆன் ஓதுதல் என்பன ரமலானில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    ‘‘ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம்” என்பார்கள். ரமலானின் பகலில் உணவு, நீர், இச்சை ஆகியவற்றை துறப்பதால் ஆன்மிக உணர்வு கூர்மை பெறுகின்றன. பார்வை தெரியாதவர்களுக்கு தொடு உணர்ச்சியும், கேட்கும் திறனும் அதிகப்படுவதுபோல் உணவு, இச்சைகளைத் துறப்பவர்களுக்கு இறை சிந்தனை, பக்தி, உளத்தூய்மை ஏற்படுகின்றது.

    நோன்பின்போது தீமைகளைச் செய்வதை நோன்பாளிகள் தவிர்க்கின்றனர். நோன்பின்போது பயிற்சியாகப் பெற்றதை பின்னர் அவர்களின் பழக்கமான, இயல்பாக மாறிவிடுகிறது.

    நோன்பு எவருக்கும் வெளிப்படையாகவே தெரியாமல் செய்யும் வணக்கமாகும். தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை பிறர் அறியும் வாய்ப்பு உண்டு. ஆனால் நோன்பின்போது இறைவன் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வே மறைவிடத்திலும் உண்ணுவதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் அவனை தடுக்கிறது. எனவே இம்மாதத்தில் இறை உணர்வு இன்னும் வலுப்பெறுகிறது. பகட்டுக்காக அன்றி படைத்தவனின் திருப்திக்காகவே ஒரு செயலை செய்ய பயிற்சி அளிக்கின்றது. உளத்தூய்மை தருகின்றது.

    நோன்பு பொறுமையையும், கட்டுப்பாட்டையும் கற்றுத்தருகிறது. பசி, தாகத்தை அடக்குதல், சினத்தை கட்டுப்படுத்துதல், நாவை பேணுதல், உணர்ச்சிவசப்படாதிருத்தல் ஆகியவை நோன்பின் மூலம் கிட்டுகின்றன.

    இவ்வாறு பயிற்சி பெற்றவர் வாழ்க்கையில் நெருக்கடிகளையும், சிரமங்களையும் எளிதாகத் தாங்கிக் கொள்ளும் பண்பைப் பெறுகிறார். ஒரு மாதத்திற்கு பிறகும் இப்பண்புகள் தொடருமானால் முழுமையான மனிதராக அவர் மாறி விடுவார். எனவே நோன்பு என்பது வெறும் பட்டினியும், தாகமும் அல்ல. ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதற்கான பயிற்சித் திட்டம். இத்தகைய பயிற்சியைப் பெறாதவர் நோன்பின் முழுப்பலனையும், நிறைவான கூலியையும் பெறமாட்டார். பயிற்சி பெறாத  நோன்பாளிகளைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை கவனியுங்கள்

    “எத்தனையோ நோன்பாளிகள் உள்ளனர். அவர்களுக்கு நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை. (நோன்பிற்கான கூலி கிட்டுவதில்லை.)” (தாரமி). எனவே நோன்பாளிகள் ஒழுக்கப் பயிற்சி பெறுவதில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்.
    சினாய் பகுதியில் நடந்த தாக்குதலை அடுத்து நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கும் காசா எல்லைப்பகுதியை ரமலான் மாதம் முழுவதும் திறந்து வைக்க எகிப்து பிரதமர் அல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.#Gaza #Ramadan
    கெய்ரோ:

    எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமலான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காசா எல்லையில் உள்ள சகோதரர்களின் சுமையை குறைக்கவே இந்த முடிவு எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், காசா எல்லைப்பகுதி திறக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு எப்போதும் மூடப்பட்டிருக்கும் காசா எல்லை, 1 மாத காலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Gaza #Ramadan
    நோன்பு ஒரு பட்டினியா? தன்னைத் தானே வருத்தும் செயலா? நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை? அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.
    நோன்பு ஒரு பட்டினியா? தன்னைத் தானே வருத்தும் செயலா? நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை? அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.

    தன்னைத் தானே வருத்திக்கொள்ளுதல் என்ற ஒரு கோட்பாடு இஸ்லாத்தில் இல்லை. ஆனால் அதே வேளையில் எந்தத் துறையிலும் ஒரு சில பயிற்சிகளையும் கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளும்போது சில சிரமங்களை  சந்திக்க நேரிடும். ஆனால் அந்தச் சிரமங்கள் மனிதனை துன்புறுத்துவதாகவோ, இயற் கைக்கு எதிரானதாகவோ, அவரால் தாங்கிக் கொள்ள முடியாததாகவோ இருக்கக் கூடாது.

    நோன்பின் நோக்கம் ஒரு ஒழுக்கமான, கட்டுப்பாடான, தயாள சிந்தனை, சமூக உணர்வுடைய மனிதனை உருவாக்குவதே ஆகும். நோன்பின் நோக்கம் ஒழுக்கமே என்கிறது திருக்குர்ஆன்.

    நோன்பு மட்டுமல்ல. இஸ்லாம் கடமையாக்கியுள்ள அனைத்து வழிபாடுகளின் நோக்கமும் இதுவேயாகும். திருக்குர்ஆன் ஒழுக்கத்திற்கு - இறையச்சம், இறை உணர்வு (தக்வா) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. “இறையச்சம்” என்பது இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான், அவன் பார்வையிலிருந்தும், பிடியிலிருந்தும் எவரும் தப்ப முடியாது. சட்டத்தையும் சமூகத்தையும் ஏமாற்றலாம். இறைவனை ஏமாற்ற முடியாது என்பதே ஆகும்.
    உலகில் மாற்றங்களை கொண்டு வர விரும்புவோர் ஒழுக்கமுள்ள ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்.

    “எவர் (நோன்பு நோற்ற நிலையில்) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் பற்றி இறைவனுக்கு எந்த அக்கறையுமில்லை” என்கிறார் நபிகள் நாயகம் (ஸல்). (புகாரி) நோன்பாளிகள் பொய்யர்களாக இருக்கலாகாது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

    ரமலானில் பள்ளிவாசலில் இரு தோழர்கள் புறம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) “உங்கள் நோன்பு வீணாகிவிட்டது. அதற்கு பகரமாக புதிய நோன்பு ஒன்றை நோற்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். புறம் பேசினால் நோன்பு முறியும் என்பது இங்கு புலப்படுகிறது.

    “நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் நாவால் கெட்ட சொற்களை பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம். நோன்பாளியிடம் எவராவது வசை மொழி கூறினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை அவர் நினைவில் கொள்ளட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) இங்கு நாவை பேணும் பயிற்சி நோன்பாளிக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நோன்பு ஒவ்வொரு உறுப்பிற்கும் பயிற்சி அளிக்கின்றது.

    நோன்பு ஒரு சடங்கல்ல. ஒழுக்கத்தை வளர்க்கும் பயிற்சித் திட்டமாகும்.
    நோன்பென்றால் என்ன என்பதை முழுமையாக உணர்ந்து அதனை நோற்பதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நல்வழிபாடாக இருக்க முடியும். ரமலான் வாழ்த்துகள்.
    உலகம் முழுவதும் பரந்து வாழும்‌ இசுலாமியர்கள் புனித ரமதான் மாதம் வந்து விட்டால் சூரியன் உதிப்பதற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை தங்களைப் படைத்த ஏக இறைவனுக்காக பசி, தாகம் மறந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதே நோன்பாகும்.

    "நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது" என்கிறது திருக்குர்ஆன் (2:183-185).

    இறைநம்பிக்கையுடையவர்கள் இறைவனுக்காகத் தமது பசியையும் தாகத்தையும் மறந்தால் மட்டும் போதுமா என்றால் இல்லை. அவர்கள் தம் உணர்வுகளையும் இச்சைகளையும் கட்டுப்படுத்திக் கொள்வதே நோன்பின் சிறப்பு.

    கட்டுப்பாடு என்பது என்ன? வாய்ப்புகள் இருந்தும் வசதிகளிருந்தும் நம் தேவைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்வது என்பது சுலபமான கட்டுப்பாடா? ரமதான் மாத நோன்பு வாய், எண்ணம், உடல், மனது என்று எல்லாவிதமான சுயக் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியவை. இந்த ஒரு மாத கால கட்டுப்பாடே வாழ்வியல் பயிற்சி. இந்தப் பயிற்சியைத் தொடர வேண்டுமென்பதற்காகவே இந்த ரமதான் நோன்பு இஸ்லாத்தின் மூன்றாவது தூணாகக் கடமையாக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் இறையச்சம் விளைந்தால் தவறான பாதையில் செல்லவோ, சிறு தவறுகள் செய்யவோ மனம் யோசிக்கச் செய்யும் என்பதற்கான ஏற்பாடு. தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்பதற்கு ரமதான் நோன்பு மிகப் பொருத்தம்.

    ரமதான் என்பது ரமிதா அல்லது அர்ரமாத் அல்லது ரம்தா என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். பொருள் சுட்டெரிக்கும் அனல், உலர்ந்த தன்மை, கொதிக்கும் மணல் என்று பொருட்படுவதைப் பசியாலும் தாகத்தாலும் நாம் உள்ளெரிவதையோ, உலகத்திலேயே பாவத்தை எரிக்கும் முயற்சியென்றோ தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.

    ‘நோன்பைப் பாவங்களின் கேடயம்’ என்றும் ‘யாருடனும் சண்டை போடக் கூடாது. ‘யாரேனும் வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்தாலும் “நான் நோன்பாளி” என்று சொல்லி ஒதுங்கி இருக்க வேண்டும்’ என்றும், ‘பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’ என்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) சொல்லியதிலிருந்து சாப்பிடாமல், பருகாமல் இருப்பது மட்டும் நோன்பல்ல என்பது திண்ணம்.

    'நோன்பு இருப்பது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? காலையில் எழுந்து சாப்பிடத்தானே செய்கிறீர்கள்' என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. ரமதான் உணவிற்கான மாதமல்ல. காலையில் தூக்கத்தைவிட்டு எழுந்து நான்கு மணிக்கு முன்பாக ஏதாவது சாப்பிடுவது பருகுவது மிகவும் கடினமான காரியம் என்று நோன்பிருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதே போல் மாலையில் நோன்பு திறந்த பிறகு அதிகமாக உட்கொள்ளவும் இயலாது என்பதே உண்மை.

    திருக்குர்ஆன் அருளப்பட்டது புனித ரமதான் மாதத்தில்தான். இப்புனித மாதத்தில் இறைவனை அதிகம் நினைத்து தியானிக்க வேண்டும். நமக்கு வழிகாட்டியாக அருளப்பட்ட திருக்குர்ஆனை ஓத வேண்டும். பாவமன்னிப்புக் கோர வேண்டும்.

    இந்த மாதத்தில் அதிகமாகத் தர்மம் செய்ய வேண்டும். அதனாலேயே நோன்பு நாட்கள் முடிந்து வரும் பெருநாளை 'ஈத் ஃபித்ர்' என்கிறோம் அதாவது ஈகைத்திருநாள். பெருநாள் அன்று பள்ளிக்குத் தொழுகைக்கு முன்பாகக் கட்டாயத் தர்மத்தை நிறைவேற்றிய பிறகே ஈத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாளில் நோன்பிருக்கக் கூடாது. காலையில் பசியாறியப் பிறகே பள்ளிக்குத் தொழச் செல்ல வேண்டும்.

    நோன்பென்றால் என்ன என்பதை முழுமையாக உணர்ந்து அதனை நோற்பதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நல்வழிபாடாக இருக்க முடியும். ரமதான் வாழ்த்துகள்.

    - ஜெஸிலா பானு.
    ரமலானில் இதுவும், இன்னும் பல நன்மைகளும், ஆன்மிக, ஒழுக்கப் பயிற்சிகளும் நிரம்பி இருப்பதாலும் இறைவனின் அருள் பொழியப்படுவதாலும் மக்கள் ரமலானை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.02 மணி
    இப்தார்: மாலை 6.33 மணி

    ரமலானின் வருகைக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ரமலானுக்கான ஏற்பாடுகளையும் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிடுவார்கள். சிறப்பு தொழுகைக்காகவும் நோன்பு திறப்பதற்காகவும் ஏற்பாடுகள் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவார்கள். ரமலானில் முழுக்கவனத்தையும், வழிபாடுகளிலும், குர்ஆன் ஓதுதல், பாவமன்னிப்புக் கோருதல், தானதர்மம் வழங்குதல் ஆகியவற்றில் செலுத்த வேண்டியதிருப்பதால் ரமலானுக்கு முன்னரே முக்கிய வேலைகளை முடித்து வைப்பார்கள்.

    ரமலானை எவரும் சுமையாக, கடினமாகக் கருதுவதில்லை. ஆழ்ந்து உறங்கும் இரவின் பின்பகுதியில் நோன்பு வைப்பதற்காக எழுந்து உணவருந்துதல், பகல் முழுவதும் உண்ணாதிருத்தல், இரவில் நீண்ட வழிபாடுகள், இவற்றுக்கிடையே அன்றாட அலுவல்கள் என்றிருந்தாலும் எல்லோரும் ரமலானை விருப்பமுடன் செய்வர்.

    நோன்பு வைக்காதிருப்பவர்கள் மிகக் குறைவாகவே இருப்பர். குழந்தைகள், சிறார்கள், முதியோர், பெண்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் நோன்பு வைப்பதிலிருந்து ரமலானின் மீது மக்கள் காட்டும் ஆர்வம் தெளிவாகிறது.

    ரமலானின் மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம். பிற மாதங்களைவிட ரமலானுக்கு ஏன் இப்படி மரியாதை, சிறப்பு? இதற்கான விடையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தருகின்றார்கள்.

    ‘மக்களே! மகத்துவமும் அருள்வளமும் மிக்க மாதம் உங்களை நெருங்கிவிட்டது. அந்த மாதத்தின் ஓர் இரவு (குர்ஆன் அருளப்படத் தொடங்கிய இரவு) ஆயிரம் மாதங்களைவிட சிறந்தவையாகும். இம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கி உள்ளான். இம்மாதத்தில் இரவுகளில் தொழுவது உபரிக் கடமையாக ஆக்கியுள்ளான். எவர் இந்த மாதத்தில் ஒரு உபரியான (கட்டாயமாக்கப்படாத) ஒரு நற்செயலைச் செய்கின்றாரோ அவர் ஒரு கட்டாயக் கடமையைச் செய்த நன்மையைப் பெறுவார். எவர் கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்ட ஒரு நற்செயலைச் செய்கின்றாரோ அவர் எழுபது நற்செயலை நிறைவேற்றியவர் போல் ஆவார்’.

    ‘இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி சுவனமாகும். மேலும் இம்மாதம் சமூகத்திலுள்ள ஏழைகள், தேவையுடையோர் மீது அனுதாபப்பட்டு பரிவுடன் நடத்த வேண்டிய மாதமாகும். ஒருவர் இறைநம்பிக்கையுடனும், மறுமையில் நற்கூலியை பெறும் எண்ணத்துடனும் நோன்பு நோற்பாராயின் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை இறைவன் மன்னித்துவிடுவான்’. (நூல் : புகாரி, முஸ்லிம்)

    ரமலானில் இதுவும், இன்னும் பல நன்மைகளும், ஆன்மிக, ஒழுக்கப் பயிற்சிகளும் நிரம்பி இருப்பதாலும் இறைவனின் அருள் பொழியப்படுவதாலும் மக்கள் ரமலானை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    ×