search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரான்ஸ்"

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #WorldCup2018 #FRACRO
    ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.



    சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை.

    உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடினர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவரில் திரளான ரசிகர்கள் திர்ண்டனர். பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதை கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.



    இதேபோல், நேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியை உலகின் பல்வேறு பகுதிகளில் பெரிய திரைகள் அமைத்து ரசிகர்கள் கண்டு களித்தனர். #WorldCup2018 #FifaWorldCup2018
    உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராமநாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். #WorldCup2018 #France #RamnathKovind #PMModi #Trump
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியினருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.  

    பிரதமர் நரேந்திர மோடியும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறுகையில், உலக கோப்பையை வென்றதற்காக பிரான்சுக்கு வாழ்த்துக்கள். உலக கோப்பை இறுதிப்போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். இறுதிப் போட்டியில் உற்சாகமாக விளையாடிய குரோசியாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையில் அவர்களின் செயல்திறன் வரலாற்று சாதனை என பதிவிட்டுள்ளார்.



    இதேபோல், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பும் உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #WorldCup2018 #France #RamnathKovind #PMModi #Trump
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. #WorldCup2018 #FRACRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இரண்டாவது இடம் பிடித்துள்ள குரோசியா அணிக்கு 188 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

    இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தியதன் மூலம் தோல்வியையே சந்திக்காமல் கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது பிரான்ஸ் அணி. #WorldCup2018 #FRACRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் இன்றுடன் நிறைவடைகிறது. லீக், நாக் அவுட் சுற்றுகள், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்து இறுதி ஆட்டம் நடந்தது.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia
    பிரான்சின் முன்னணி வீரர்கள் கைலியன் பாப்பே, கிரிஸ்மான் ஆகியோரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவோம் என குரோஷியா பயிற்சியாளர் சவால் விடுத்துள்ளார். #FIFA2018 #Croatia #France
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் நாளை (இரவு 8.30 மணி) மாஸ்கோவில் மோத உள்ளன. தொடர்ந்து 4-வது முறையாக ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஒரு அணி மகுடம் சூடப்போகிறது.

    பிரான்சை எதிர்கொள்வது குறித்து குரோஷிய அணி பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் கூறும் போது, ‘குரோஷிய அணியால் இதை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். பிரான்ஸ் அபாயகரமான ஒரு அணி. ஆனால் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), எரிக்சன் (டென்மார்க்), ஹாரி கேன் (இங்கிலாந்து) ஆகியோரை எங்களால் கட்டுப்படுத்த முடிகிறது என்றால், அதே வழியில் பிரான்சின் முன்னணி வீரர்கள் கைலியன் பாப்பே, கிரிஸ்மான் (தலா 3 கோல் அடித்துள்ளனர்) ஆகியோரின் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்த முடியும். அவர்களை கண்டு எங்களுக்கு பயமில்லை’ என்றார்.

    இதற்கிடையே, இறுதிப் போட்டிக்கான நடுவராக அர்ஜென்டினாவின் 43 வயதான நெஸ்டர் பிட்டானா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்த உலக கோப்பையில் 4 ஆட்டங்களில் நடுவராக செயல்பட்டு உள்ளார். #FIFA2018 #Croatia #France
    உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இந்த அணி இறுதிப் போட்டியில் குரோஷியா அல்லது இங்கிலாந்தை சந்திக்கிறது. #FifaWorldCup2018 #France
    செயின்ட்பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது.

    இதன் முதல் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு நடந்தது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது.

    ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் பெல்ஜியம் கேப்டன் ஈடன் ஹசாட் கோல் வாய்ப்பை தவற விட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்தை விட்டு சற்று வெளியே சென்றது.

    அடுத்த 4-வது நிமிடத்தில் அவர் அடித்த வேகமான ஷாட்டை பிரான்ஸ் பின்கள வீரர் ரபெல் வரேல் தடுத்து விட்டார். 22-வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அருமையாக தடுத்து பெல்ஜியத்துக்கு ஏமாற்றம் கொடுத்தார். டோபி ஆல்டர் அடித்த ஷாட்டை அவர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார்.

    இதே போல பிரான்ஸ் அணியும் சில வாய்ப்புகளை தவற விட்டது. 39-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் பவார்ட் அடித்த பந்தை பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டஸ் தடுத்து விட்டார்.

    முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக கோல் அடிக்க போராடின. ஆனால் அது பலன் இல்லாமல் போனது. இதனால் முதல் பாதியில் 0-0 என்ற நிலை இருந்தது.

    2-வது பகுதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பிரான்ஸ் கோல் அடித்தது. 51-வது நிமிடத்தில் அந்த அணிக்கு ‘கார்னர் கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிரீன்ஸ்மேன் அடித்த பந்தை பின்கள வீரரான சாமுவேல் உமிட்டி தலையால் முட்டி மிகவும் அருமையாக கோலாக்கினார். இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.



    கோல் வாங்கியதால் சமன் செய்ய பெல்ஜியம் போராடியது. ஆனால் அந்த அணியின் முயற்சி எடுபடாமல் போனது. 61-வது நிமிடத்தில் டி புருயன் வாய்ப்பை தவற விட்டார். 65-வது நிமிடத்தில் மெர்டன்ஸ் அடித்த பந்தை பிரான்ஸ் கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். அதற்கு அடுத்த நிமிடத்தில் பெலானி தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தை விட்டு சற்று விலகி சென்றது.

    81-வது நிமிடத்தில் விஸ்டல் அடித்த அதிரடியான ஷாட்டை பிரான்ஸ் கோல்கீப்பர் தடுத்தார். மேலும் முன்னணி வீரரான லுகாகுவும் சில நல்ல வாய்ப்புகளை தவறவிட்டார். பெல்ஜியத்தின் கடும் போராட்டத்துக்கு பலன் இல்லாமல் போனது.



    அதே நேரத்தில் பிரான்ஸ் 2-வது கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகளை நழுவவிட்டது. ஜிரவுட், கிரீன்ஸ்மேன், டோலிகோ ஆகியோர் கோலாக்க தவறினர். ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    பிரான்ஸ் கடந்த 20 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்றது. இதற்கு முன் 1998, 2006-ல் அந்த அணி தகுதி பெற்று இருந்தது.

    இதில் 1998-ல் சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பிரேசிலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது. 2006-ல் இத்தாலியிடம் பெனால்டி ஷூட்டில் தோற்று கோப்பையை இழந்தது.

    பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் குரோஷியா அல்லது இங்கிலாந்தை சந்திக்கிறது.

    பெல்ஜியம் சிறப்பாக ஆடியும் கோல் அடிக்க முடியாமல் போனது அதிர்ஷ்டம் இல்லாததே காரணம். இந்த தொடரில் அபாரமாக ஆடிய அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றமே.

    பெல்ஜியம்அணி 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இன்றைய 2-வது அரை இறுதியில் தோற்கும் அணியுடன் விளையாடும். 3-வது இடத்துக்கான ஆட்டம் 14-ந் தேதியும், இறுதிப்போட்டி 15-ந் தேதியும் நடக்கிறது. #FifaWorldCup2018 #France
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.

    ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.



    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRABEL #BELFRA #FrancevBelgium
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகிக்கிறது. #WorldCup2018 #FRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.



    ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRABEL #BELFRA #FrancevBelgium
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #FIFA2018 #WorldCup2018 #france #belgium
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

    இதில் முதலாவது அரைஇறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய நேரப்படி நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி, 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

    1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 3-வது முறையாக உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் உள்ளது. அந்த அணி 2006-ம் ஆண்டில் 2-வது இடம் பெற்று இருந்தது.

    பெல்ஜியம் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் தாகத்துடன் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடம் பெற்றதே அந்த அணியின் சிறந்த நிலையாக உள்ளது.

    பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் நடப்பு உலக கோப்பை போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் அரைஇறுதிக்குள் தடம் பதித்து இருக்கின்றன. பிரான்ஸ் அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (2-1), பெரு (1-0) அணிகளை வென்றது. டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி டிரா கண்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை (4-3) வெளி யேற்றியது. கால் இறுதியில் 2 முறை சாம்பியனான உருகுவே (2-0) அணியை வீழ்த்தியது.

    பெல்ஜியம் அணி லீக் ஆட்டங்களில் பனாமா (3-0), துனிசியா (5-2), இங்கிலாந்து (1-0) அணிகளை தோற்கடித்தது. 2-வது சுற்று ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீட்டுக்கு அனுப்பியது. கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான பிரேசிலை சாய்த்தது. பெல்ஜியம் அணி தனது முதல் 5 ஆட்டங்களில் 14 கோல்கள் அடித்து முன்னிலை வகிக்கிறது.

    பெல்ஜியம் அணியில் ரோம்லு லுகாகு (4 கோல்), கேப்டன் எடன் ஹசார்ட் (2 கோல்), கெவின் டி புருனே, நாசெர் சாட்லி, மரோன் பெல்லாய்னி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அந்த அணியின் கோல் கீப்பர் கோர்ட்டோஸ் தடுப்பு அரணாக செயல்படுவதில் வல்லவர். அவரது சிறப்பான செயல்பாடு தான் கால்இறுதியில் வலுவான பிரேசில் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தது.

    பிரான்ஸ் அணியில் கைலியன் பாப்பே (3 கோல்), அன்டோன் கிரிஸ்மான் (3 கோல்), பால் போக்பா, ஆலிவர் ஜீருட் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக ஜொலிக்கிறார்கள். இரு அணிகளின் தாக்குதல் ஆட்டமும், தடுப்பு ஆட்டமும் சிறப்பாக இருந்து வருகிறது. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்க போவது யார்? என்பதை கணிப்பது எளிதான காரியம் அல்ல. எந்த அணி முதலில் கோல் அடிக்கிறதோ? அந்த அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 2 ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணி தான் வென்றுள்ளது. அதாவது பிரான்ஸ் அணி 1938-ம் ஆண்டில் முதல் சுற்று ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ம் ஆண்டில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது. தற்போது 3-வது முறையாக உலக கோப்பையில் சந்திக்கின்றன. இறுதிப் போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் நிச்சயம் கால்பந்து ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக இருக் கும் என்பதில் அய்யமில்லை.

    இன்றைய போட்டி குறித்து பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர் ரபெல் வரானே கருத்து தெரிவிக்கையில், ‘பெல்ஜியம் அணி இளம் வீரர்களை அதிகம் கொண்டது. இருப்பினும் அவர்கள் முதிர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆட்டம் கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். தரமான வீரரான ரோம்லு லுகாகு உடல் ரீதியாக எந்தவொரு அணியின் தடுப்பு ஆட்டத்துக்கும் பிரச்சினை அளிப்பார். அவரது இந்த முயற்சிக்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். எடன் ஹசார்ட் பந்தை நன்றாக கடத்தி செல்லக்கூடியவர். அவருக்கு நாங்கள் இடம் அளிக்காத வகையில் விளையாடுவோம். அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்’ என்றார்.

    பெல்ஜியம் அணியின் நடுகள வீரர் கெவின் டி புருனே அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை போட்டியில் அரைஇறுதி ஆட்டத்துக்குள் வந்த பிறகு ஒருபோதும் சாதாரண எதிரணியை எதிர்பார்க்க முடியாது. பிரான்ஸ் அணிக்கு எதிராக நாங்கள் கடுமையாக மல்லுக்கட்டுவோம். அந்த அணிக்கு எதிராக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். முடிவில் களத்தில் யார் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்படுகிறார்களோ? அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். அது தான் கால்பந்து ஆட்டம்’ என்று தெரிவித்தார். #FIFA2018 #WorldCup2018 #france #belgium
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் பெல்ஜியம் அணியும் நாளை மோதுகின்றனர். #FIFA2018 #WorldCup2018
    செயின்ட்பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 1998-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ், கோப்பையை வெல்லாத பெல்ஜியம், குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    முதல் அரை இறுதி ஆட்டம் நாளை (10-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரான்ஸ் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.

    பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாக இருக்கிறது. அந்த உலக கோப்பையில் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது.

    உலக தர வரிசையில் 7-வது இடத்தில் பிரான்ஸ் அணி முன்களம், நடுகளம், பின்களம் ஆகியவற்றில் சமபலத்துடன் இருக்கிறது. எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.

    அர்ஜென்டினாவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் 19 வயதான எம்பாப்வே சிறப்பாக ஆடி 2 கோல்களை பதிவு செய்தார். பெல்ஜியத்தின் பின்கள பலவீனத்தை பயன்படுத்தி அவர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதே போல கிரீஸ்மேன் கால் இறுதியில் ஒரு கோல் அடித்து அணிக்கு உதவியாக இருந்தார். இருவரும் இந்த தொடரில் 3 கோல்களை அடித்துள்ளனர்.

    போக்பா, நிக்கோலா காண்டே ஆகியோர் நடுகளத்தில் சிறப்பாக விளையாட கூடியவர்கள். தோல்வி எதையும் சந்திக்காத அந்த அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் டிரா செய்தது.

    பெல்ஜியம் தான் ஆடிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. அந்த அணி முன் களத்தில் மிகவும் வலுவாக இருக்கிறது. பதிலடியான தாக்குதல் ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

    கேப்டன் ஈடன் ஹசாட், லுகாகு, டிபுருயன் ஆகியோரது கூட்டணி முன்களத்தில் பலம் பெற்று திகழ்கிறது. இதில் லுகாகு 4 கோல்கள் அடித்து உள்ளார். பிரேசிலுக்கு எதிராக அவர் கோல் அடிக்க உதவியாக இருந்தார். புருயன் பிரேசிலுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹசாட் அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதில் திறமை பெற்றவராக இருக்கிறார்.

    இது தவிர பெலானி, விஸ்டல், கோம்பேனி, நாசெர் சாதிலி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். அந்த அணியின் சிறந்த பின்கள வீரரான தாமஸ் மினுயர் கிரானி 2 முறை மஞ்சள் அட்டை பெற்றதால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் விளையாட இயலாது. பெல்ஜியம் அணியின் பலவீனமே பின்களம்தான். அதை சரி செய்வது அவசியம். ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது.

    இரு அணிகளும் நாளை மோத இருப்பது 74-வது போட்டியாகும். இதுவரை நடந்த 73 ஆட்டத்தில் பிரான்ஸ் 24-ல், பெல்ஜியம் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 19 போட்டி ‘டிரா’ ஆனது.

    உலக கோப்பையில் இரு அணிகளும் 32 ஆண்டுகளுக்கு பிறகு மோத இருக்கின்றன. ஏற்கனவே 2 முறை மோதி உள்ளன. இந்த இரண்டிலும் பிரான்சே வெற்றி பெற்றது. 1938-ம் ஆண்டு லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ல் 3-வது இடத்துக்கான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது.

    இரு அணிகளும் கடைசியாக 2015-ம் ஆண்டு காட்சி போட்டியில் மோதின. இதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

    பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் இறுதிப் போட்டியில் நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. #FIFA2018 #WorldCup2018
    உலகக் கோப்பை அரையிறுதியில் பிரான்ஸ் விளையாடினால், அந்த போட்டியை காண ரஷியாவுக்கு வருவேன் எனக்கூறிய பிரான்ஸ் அதிபர் மெக்ரான் முடிவை ரஷியா வரவேற்றுள்ளது. #WorldCup2018 #URUFRA #EmmanuelMacron
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் முதல் காலிறுதி போட்டி நேற்று ரஷியாவில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மற்றும் உருகுவே அணிகள் மோதின.

    கிரிஸ்மான் உதவியால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

    இதற்கிடையே, உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி விளையாடும் பட்சத்தில் போட்டியை காணரஷியாவுக்கு வருவேன் என பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.   

    இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் முடிவை வரவேற்பதாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் கூறுகையில், உலக கோப்பை போட்டியை காண வரும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் முடிவை ரஷியா வரவேற்கிறது என தெரிவித்துள்ளார். #WorldCup2018 #URUFRA #EmmanuelMacron
    இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது. இதன் முதல் கால் இறுதி ஆட்டத்தில் உருகுவே அணியும் பிரான்ஸ் அணியும் மோதுகின்றனர். #FIFA2018 #Uruguay #France
    நோவாகிராட்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி விட்டது.

    இதன் கால்இறுதிக்கு போட்டியை நடத்தும் ரஷியா, முன்னாள் சாம்பியன்களான பிரேசில், உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சுவீடன், பெல்ஜியம், குரோஷியா ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

    இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் நாளை (6-ந்தேதி) தொடங்குகிறது. நோவா கிராட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் உருகுவே-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரண்டு முறை உலக கோப்பையை வென்ற (1930, 1950) உருகுவே அணி இந்தப் போட்டித் தொடரில் தோல்வி எதையும் தழுவவில்லை. லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் எகிப்தையும், 1-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவையும், 3-0 என்ற கணக்கில் ரஷியாவையும் தோற்கடித்து இருந்தது. 2-வது சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி இருந்தது.

    உருகுவே அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களாக கவானி, சுராஸ் உள்ளனர். கவானி 2-வது சுற்றில் 2 கோல் அடித்தார். இந்தப் போட்டித் தொடரில் அவர் 3 கோல்கள் அடித்து உள்ளார். உடல் தகுதி அவருக்கு பிரச்சினையாக இருக்கிறது.

    2-வது சுற்றில் கவானி காயத்தால் பாதியில் விலகினார். நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் ஆடுவதில் சிக்கல் இருக்காது என்றே கருதப்படுகிறது. இதே போல சுராஸ் பந்தை கடத்தி செல்வதில் வல்லவர். மேலும் பின்களத்தில் அந்த அணி வீரர்கள் மிகுந்த பலத்துடன் உள்ளனர்.

    பலம் வாய்ந்த பிரான்சை வீழ்த்தி 6-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்துடன் உருகுவே உள்ளது. கடந்த உலக கோப்பையில் அந்த அணி 2-வது சுற்றில் கொலம்பியாவிடம் தோற்று இருந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதியில் நுழையும் வேட்கையில் உள்ளது.

    உலக கோப்பையில் பிரான்சிடம் இதுவரை உருகுவே தோற்காததால் நம்பிக்கையுடன் உள்ளது. 3 முறை மோதி இருக்கிறது. இதில் 1 தடவை வென்றது. 2 ஆட்டம் டிரா ஆனது. 1966-ல் லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. 2002 மற்றும் 2010 உலக கோப்பையில் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    உருகுவேவை போலவே பிரான்ஸ் அணி தோல்வி அடையவில்லை. லீக் ஆட்டங்களில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், 1-0 என்ற கணக்கில் பெருவையும் வீழ்த்தி இருந்தது. டென்மார்க்குடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது.

    அந்த அணியில் எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, கிரவுட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 1998-ம் ஆண்டு சாம்பியான பிரான்ஸ் அணி 6-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. கடந்த முறை அந்த அணி கால் இறுதியில் ஜெர்மனியிடம் தோற்று இருந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அரை ஈறுதி வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளன. இதில் பிரான்ஸ் 1 தடவைதான் வெற்றி பெற்றுள்ளது. உருகுவேயிடம் 3 முறை தோற்றுள்ளது. 4 ஆட்டம் டிரா ஆனது.

    பிரான்சும், உருகுவேயும் சம பலத்துடன் திகழ்வுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #FIFA2018 #Uruguay #France
    ×