search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியாணி"

    வெஜ், சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் கொத்துக்கறியை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கொத்துக்கறி - 250 கிராம்
    சீரக சம்பா அரிசி - 300 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்
    புதினா - சிறிதளவு
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
    பிரிஞ்சி இலை - ஒன்று
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - தேவையான அளவு
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
    நெய் - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:


    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து சேர்த்து தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து, தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அரிசி முக்கால் பதம் வரும் வரை வேகவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நெய் விட்டு நன்கு புரட்டவும்.

    பின்னர் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால்... கமகம மட்டன் கொத்துக்கறி பிரியாணி ரெடி.

    குறிப்பு: சீரக சம்பா அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்துக் களையவும். அரிசி ஒரு பங்குக்கு, 2 பங்கு தண்ணீர் போதுமானது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அமித்ஷாவுக்கு மாட்டுக்கறி பிரியாணி அனுப்ப வேண்டும் என சந்திரசேகரராவுக்கு ஒவைசி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். #AsaduddinOwaisi #AmitShah #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    சந்திரசேகராவின் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி, பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஆதிலாபாத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பேசும் போது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியை கடுமையாக சாடினார். அக்கட்சியுடன், சந்திரசேகரராவின் கட்சி ரகசியமாக நட்பு வைத்து உள்ளது. மஜ்லிஸ் கட்சியினருக்கு சந்திரசேகரராவ் பிரியாணியை அனுப்புகிறார் என்று கூறினார்.

    இதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

    குகட்பாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒவைசி பேசியதாவது:-

    பிரியாணி மீது உங்களுக்கு (பா.ஜனதா) திடீரென்று பாசம் ஏன் வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. சந்திரசேகரராவிடம் டெலிபோனில் பேசி அமித்ஷாவுக்கு மாட்டுக்கறி பிரியாணி அனுப்ப கேட்டுக்கொள்வேன்.



    பிரதமர் மோடி திடீரென்று பாகிஸ்தானுககு சென்று முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    மோடியை நவாஸ்செரீப் விருந்துக்கு அழைக்கவில்லை. ஆனால் நவாஸ்செரீப் கையை பிடித்தபடி அவரது வீட்டுக்குள் மோடி சென்றார். அப்போது அங்கு என்ன சாப்பிட்டார் என்பதை அமித்ஷாவிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #AsaduddinOwaisi #AmitShah #ChandrasekharRao
    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான இறைச்சி என்பது இன்று மாலை தெரிய வரும். #DogMeat #DogMeatinChennai
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் 2190 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பார்சலில் அனுப்பப்பட்டிருந்த இந்த இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது அது அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதனை தொடர்ந்து இறைச்சி அனைத்தையும் கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர்.

    எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பார்சல்களில் இருந்தவை தோல் உரிக்கப்பட்ட நாயின் தோற்றத்தில் நீண்ட வாலுடன் காணப்பட்டது. இதையடுத்து வெளி மாநிலத்தில் இருந்து நாய்களை அடித்து கொன்று அதனை பார்சலில் சென்னைக்கு அனுப்பி வைப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

    இந்த நாய் இறைச்சி சென்னையில் உள்ள ஓட்டல்களில் ஆடு மற்றும் மாட்டுக் கறியுடன் கலந்து சமைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

    சென்னைவாசிகளை பொருத்தவரையில் பெரும்பாலானோர் வார இறுதி நாட்களில் அசைவ ஓட்டல்களுக்கு சென்று சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாகவே வைத்துள்ளனர். குறிப்பாக மட்டன் பிரியாணியை ஓட்டல்களில் பலர் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரத்தில் மாட்டுக் கறி உணவும் சென்னையில் விருப்ப உணவு போலவே ஆகிவிட்டது.

    துரித உணவகங்களிலும், ஓட்டல்களிலும் மாலை நேரங்களில் மாட்டுக்கறியை (சில்லி பீப்) விரும்பி சாப்பிடுவர்கள் அதிகம். இதுபோன்ற அசைவ பிரியர்களுக்கு நாய்கறி பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக இனி, அசைவ ஓட்டல்களில் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்குதானோ? என்கிற எண்ணமும் மக்கள் மனதில் பரவலாக தோன்றி உள்ளது.

    சென்னையில் நாய் இறைச்சி பிடிபட்டதாக வெளியான தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் பரபரப்பாகவே பரப்பப்பட்டு வருகிறது. இது பொது மக்கள் மத்தியில் ஓட்டல்களில் பரிமாறப்படுவது நாய்கறி தானோ? என்கிற சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. மட்டன் பிரியாணியில் தெரியாத அளவுக்கு நாய் கறி கலக்கப்படுவதாகவும், இதனால் அது வெளியில் தெரிய வாய்ப்பு இல்லை என்றும் பேசப்படுகிறது.

    பொது மக்கள் மத்தியில் நிலவும் இந்த அசைவ உணவு சந்தேகங்களையும், அச்சத்தையும் போக்கும் வகையில் எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதன் முடிவு இன்று மாலையில் வர இருப்பதாகவும் அதன் பின்னரே பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான இறைச்சி என்பது தெரிய வரும் என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


    பொது மக்கள் மத்தியில் நாய் கறி தொடர்பான பீதி நிலவுவதால், எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகை இறைச்சி? என்பது பற்றி சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரிவான அறிக்கையை அளிக்க உள்ளனர்.

    அதில் பொது மக்களின் பீதியை அடக்கும் வகையில் தகவல்கள் இருக்குமா? இல்லை நாய் இறைச்சி தான் என்று உறுதி செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இன்று வெளியாக உள்ள அறிக்கையில் அதற்கான விடை கிடைத்து விடும்.

    இதற்கிடையே நாய்க்கறி தொடர்பாக சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுடன் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகிறது. #DogMeat #DogMeatinChennai
    உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். #DogMeat #DogMeatinChennai
    சென்னை:

    “பிரியாணி”.. இந்த மந்திர வார்த்தைக்கு மயங்காத அசைவப் பிரியர்கள் யாருமே இருக்க முடியாது. விசேஷம் என்றால் பிரியாணி, விருந்து என்றாலும் பிரியாணி என்று மொகலாயர்களின் சிறப்பு உணவு வகையான பிரியாணி, இன்று தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பட்டியலில் ஒரு அங்கமாக இடம்பிடித்து விட்டுள்ளது.

    முன்னர் முஸ்லிம்கள் வீட்டு திருமணங்கள் மற்றும் ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டும் அதிகமாக பிரியாணியின் நறுமணத்தை பலர் ரசித்து வந்தனர். ‘மிலிட்டரி ஹோட்டல்’ எனப்படும் முனியாண்டி விலாஸ் போன்ற ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி மிகவும் பிரசித்தியாக இருந்தது.

    ஆனால், சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளாக இன்று ஒரு தெருவுக்கு நான்கு பிரியாணி கடைகள் என்னும் அளவுக்கு நமக்கு பிரியாணி மேல் இருக்கும் பிரியம் அதிகரித்து வருகிறது. ஒரு பிளேட் பிரியாணி இவ்வளவு விலை என்பதுபோக ஒரு கிலோ பிரியாணி இன்று எடைபோட்டு விற்கப்படுகிறது.

    இப்படி தெருவுக்குத்தெரு முளைத்துள்ள பிரியாணி கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சியின் தரம் பற்றி நம்மில் பலருக்கு அக்கறை இல்லை. சிக்கன் பிரியாணியில் கோழிக்கறிக்கு பதிலாக காக்கை கறி சேர்க்கப்படுவதாக முன்னர் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

    பின்னர், மட்டன் பிரியாணி என்ற பெயரில் வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் வரும் செத்த ஆடுகளின் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதற்காக அனுப்பப்பட்ட பல ஆயிரம் கிலோ அளவிலான கெட்டுப்போன ஆட்டிறைச்சியை சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அவற்றை அழித்தனர்.

    இந்நிலையில், சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.



    ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இருந்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட்ட இந்த நாய்க்கறியை பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியை கண்டுபிடித்துள்ள சென்னை நகர போலீசார், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

    இந்த விசாரணையில் எந்தெந்த உணவகங்களில் மட்டன் பிரியாணி என்ற பெயரில் நாய்க்கறி பரிமாறப்பட்டது என்னும் விபரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், இன்று பறிமுதல் செய்யப்பட்ட நாய்க்கறியை புதைத்து அழிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  #DogMeat #DogMeatinChennai 
    இடியாப்பத்தை வைத்து வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். இன்று இடியாத்துடன் சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 300 கிராம்
    இடியாப்பம் - 3 கப்
    பட்டை - இரண்டு
    லவங்கம் - இரண்டு
    ஏலக்காய் - இரண்டு
    பிரிஞ்சி இலை - ஒன்று
    வெங்காயம் - இரண்டு
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - இரண்டு
    தக்காளி - ஒன்று
    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    தண்ணீர் - அரை டம்ளர்
    உப்பு - தேவைகேற்ப
    கொத்தமல்லி - சிறிதளவு
    புதினா - சிறிதளவு
    நெய் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லிபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் கடாயில் சேமியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

    அதே கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் கலந்த பின்னர் சிக்கன், தண்ணீர் அரை கப் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    தண்ணீர் வற்றி சிக்கன் நன்றாக வெந்ததும் வறுத்த சேமியாவை அதில் சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து சமைக்கவும்.

    கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடங்கள் தம்மில் வைக்கவும் பிறகு பரிமாறவும்.

    சூப்பரான இடியாப்பம் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக, சைவ பிரியாணியில் வித்தியாசம் காட்டுவது சற்று சிரமம். இன்று கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி சாதம் - 1 கப்
    கொண்டைக்கடலை - 1 கப்
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 2
    நெய் - 2 ஸ்பூன்
    தக்காளி சாஸ் - ½ கப்
    கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
    புதினா - 1 கைப்பிடி
    இஞ்சி பேஸ்ட் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
    கரம் மசாலா - 1 ஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

    பாசுமதி அரிசி நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பச்சை வாசனை போனவுடன் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    எல்லாம் சேர்த்து வரும் போது உதிரியாக வடித்த சாதம் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேகவைத்து பரிமாறவும். 

    சூப்பரான ஆலு சுண்டல் பிரியாணி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்ற செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மதியம் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி - 1 கப்
    பட்டாணி - 1/2 கப்
    வெங்காயம் - 1
    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
    தண்ணீர் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    புதினா - 1/2 கப்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    வரமிளகாய் - 2
    துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 10 பற்கள்

    தாளிப்பதற்கு...

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2 ஏலக்காய் - 1



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.

    பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.

    பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான கராசாரமான பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பென்னே பாஸ்தா - 200 கிராம்,
    குடைமிளகாய் - 1
    கேரட், பீன்ஸ் - 1/4 கப்,
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    கொத்தமல்லி - 1/2 கட்டு
    புதினா - 1/2 கட்டு
    தயிர் - 2 கப்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
    கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்,
    தனியா தூள் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.

    தாளிக்க…

    எண்ணெய் - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    சோம்பு - 2 டீஸ்பூன்,
    பட்டை - 2,
    கிராம்பு - 2,
    பிரிஞ்சி இலை - 2.



    செய்முறை :


    குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அப்போது தான் பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

    இப்போது மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

    காய்கள் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.

    மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வெந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

    சூப்பரான பாஸ்தா பிரியாணி ரெடி.

    சிப்ஸ், பச்சடியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முன்னணி நடிகைகளாக வலம் வரும் காஜல் அகர்வால், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர் பிரியாணிக்கு அடிமையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Kajal #Trisha #AishwaryaRajesh
    தென்னிந்திய நடிகைகளுக்கு சாப்பாட்டு வி‌ஷயத்தில் என்னென்ன பிடிக்கும் என்று பட்டியல் எடுத்தோம். அனுஷ்காவுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சமீபகாலமாக ஏறிய உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவதால் சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தி இருக்கிறார்.

    தமன்னாவுக்கு வறுத்த உணவுகள் என்றால் பிரியம். வீட்டில் இருக்கும்போது டால் செய்து குடும்பத்தினருக்கு கொடுப்பார். லட்சுமி மேனனுக்கு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும். காஜல் அகர்வாலுக்கு ஐதராபாத் பிரியாணி என்றால் விருப்பம். தென் இந்தியா பக்கம் வந்தால் காரசாரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். மும்பையில் இருக்கும்போது அந்தேரியில் இருக்கும் பானிபூரி கடைக்கு மாலையில் தவறாமல் சென்று சாப்பிடுவார். நன்றாக சமைப்பார்.



    காஜல் செய்யும் தளி சாப்பாடுக்கு அவரது நண்பர்கள் அடிமை. பிரியா ஆனந்துக்கும் பிரியாணி தான் பிடிக்கும். திரிஷா 15 ஆண்டுகளாக ஒரே உடல் அமைப்பை வைத்திருந்தாலும் சாப்பாட்டு வி‌ஷயத்தில் எந்த கட்டுப்பாடும் கடைபிடித்ததில்லை. பிரியாணி வகை உணவுகளை ஒருபிடி பிடிப்பார். ஐஸ்வர்யா ராஜேசுக்கும் பிரியாணி என்றால் பிடிக்கும். நடு இரவு ஒரு மணிக்கு பிரியாணி கொடுத்தால் கூட சாப்பிடுவேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
    உணவு வகையில் பிரியாணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரையும் கவரும் ஒரு உணவாக இருக்கிறது. இன்று சாமை அரிசியில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சாமை அரசி - 1 கப் (200 கிராம்),
    பூண்டு - 8 பல்,
    இஞ்சி துண்டு - 2 அங்குல,
    பச்சை மிளகாய் - 5
    தயிர் - கால் கப்,
    புதினா - ஒரு கைப்பிடி,
    மல்லி - ஒரு கைப்பிடி,
    கேரட், பீன்ஸ், குடை மிளகாய், நூக்கல், உருளை, பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள் - தேவையான அளவு (காய்கறிகளுடன் மஷ்ரூம், பனீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்).
    வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    பட்டை இலை - சிறிதளவு,
    எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாயை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    சாமை அரிசியை நன்கு கழுவி, 1½ கப் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.

    குக்கரில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய்ந்த பின் பட்டை மற்றும் பிரிஞ்சி இலையை போட்டு சிவந்தவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் லேசாக சிவந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதையும், புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் அதில் கொத்தமல்லி சேர்த்து பின்பு காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

    மேலும் இவற்றுடன் தக்காளி தயிர் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.

    பின்பு சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்க வேண்டும்.

    ஒரு கப் சாமைக்கு ஒன்றரை கப் தண்ணீர் போதுமானது. எனவே நாம் வதக்கிய காய்கறிகளில் தண்ணீர் இருக்குமானால் அந்தளவு தண்ணீரை அரிசியில் இருந்து வடித்து விட வேண்டும்.

    அரிசியை போட்ட பின் அடுப்பை முழுதாக வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து குக்கரை மூடி விட வேண்டும். ஆனால் வெயிட் வைக்கக்கூடாது. 15 முதல் 20 நிமிடம் ஆன பின் அடுப்பை அணைத்து லேசாக கிளறி விட வேண்டும்.

    சாமை பிரியாணி இப்பொழுது சாப்பிட தயாராக இருக்கும்.

    இதற்கு தொட்டுக் கொள்ள வழக்கமாக பிரியாணியுடன் சாப்பிடும் தயிர் வெங்காயம் பச்சடி போன்ற எதையும் வைத்துக் கொள்ளலாம்.

    வழக்கமான அரிசி பிரியாணியை விட இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சாமை மிகச்சிறிய அளவில் இருக்கும் என்பதால் பிரியாணி உதிர்வதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாப்பிடும் போது அதன் சுவையுடன் ஒப்பிடுகையில் அது ஒரு குறையாக தெரியாது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஜீரக சம்பா, பாஸ்மதி அரிசியில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை ரவையில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - கால் கிலோ
    கோதுமைக் குருணை - 2 கப்
    நெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
    பட்டை - ஒன்று
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 3
    பிரிஞ்சி இலை - ஒன்று
    சின்னவெங்காயம் - அரை கைப்பிடி
    பெரியவெங்காயம் - ஒன்று
    இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
    பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பச்சைமிளகாய் - 4 (கீறியது)
    தக்காளி - 2
    புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
    தேங்காய்ப்பால் - 4 கப்
    முந்திரிப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

    ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து இரண்டரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இத்துடன் சின்னவெங்காயம், பெரியவெங்காயம், இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் முக்கால் பாகம் புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கி போதுமான அளவு உப்பைச் சேர்க்கவும்.

    சிக்கனில் இருந்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.

    இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் மல்லித்தூள் (தனியாத்தூள்) சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி, சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்ததும் கோதுமைக் குருணையைச் சேர்த்து 5 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

    கோதுமையும் கறி, தேங்காய் பால் சேர்ந்து கெட்டியானதும் தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் மூடி தம்மில் வைக்கவும்.

    கலவை உப்புமா பக்குவத்துக்கு வந்தவுடன், புதினா, கொத்தமல்லித்தழை, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை ரவை சிக்கன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரைநோயாளிகளுக்கு உகந்த கோதுமை சேமியாவை வைத்து எளிய முறையில் சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை சேமியா - 250 கிராம்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    தக்காளி - ஒன்று ,
    பீன்ஸ் - 3,
    கேரட் - ஒன்று,
    பிரிஞ்சி இலை - ஒன்று,
    பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு,
    காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்),
    உருளைக்கிழங்கு - ஒன்று,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும்.

    உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுதுது கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

    பிறகு, கோதுமை சேமியா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.

    வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை சேமியா பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×