search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜீப்"

    ஜீப் இந்தியாவின் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Jeep



    ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. டிரெயில்ஹாக் வேரியண்ட் ஜீப் காம்பஸ் காரின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருக்கிறது. இந்தியாவில் இந்த கார் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஜீப் பிரியர்கள் மற்றும் ஆஃப்-ரோடர்களுக்கு டிரெயில்ஹாக் வேரியண்ட் பிடித்தமான காராக இருக்கும். இந்தியாவில் ஜீப் காம்பஸ் கார் 2017 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு அறிமுகமானது முதல் ஜீப் காம்பஸ் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

    தொடர்ந்து இந்த காரின் விற்பனையை அதிகரிக்க ஜீப் இந்தியா புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜீப் காம்பஸ் டிரெயிட்ஹாக் வேரியண்ட் பூனேவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் புதிய ஜீப் கார் உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பது தெளிவாக கவனிக்க முடிகிறது.



    ஜீப் காம்பஸ் மற்ற வேரிண்ட்களை போன்றே டிரெயில்ஹாக் வேரியண்ட் காட்சியளிக்கிறது. இதனை வித்தியாசப்படுத்தும் ஒரே அம்சமாக இதன் வீல்பேஸ் உயரம் மற்றும் டிரெயில்ஹாக் பேட்ஜ் உள்ளிட்டவற்றை கூறலாம். சோதனை செய்யப்படும் டிரெயில்ஹாக் மாடலில் டூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

    இத்துடன் புதிய காரின் பம்ப்பர் மாற்றப்பட்டிருப்பது தெரிகிறது. பின்புற பம்ப்பரில் டோ செய்வதற்கென ஹூக் காணப்படுகிறது. சோதனையில் சிக்கிய டிரெயில்ஹாக் எஸ்.யு.வி. டூயல்-டோன் வேரியண்ட் ஆகும். இதன் உள்புறங்கள் காம்பஸ் காரின் மற்ற வேரியண்ட்களை போன்று காட்சியளிக்கிறது. 

    ஜீப் காம்பல் டிரெயில்ஹாக் பெரிய MID மற்றும் குரூஸ் கண்ட்ரோல் வசதிகளை கொண்டிருக்கும். இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட்டில் இருந்து எடுக்கப்படுகிறது. இதன் 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய காரில் டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    புதிய டிரெயில்ஹாக் கார் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 170 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டிரெயில்ஹாக் மாடலில் இந்த என்ஜின் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

    புகைப்படம் நன்றி: Zigwheels
    படைகளுக்கு ஜீப் வாங்கியது தொடங்கி ஹெலிகாப்டர் வாங்கியது வரை ஊழல் மயம் தான் என்று முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடி வலைப்பக்கத்தில் எழுதி உள்ளார். #PMModi #BJP #Congress
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வருகிற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைத்தளங்களையும் பிரசாரத்துக்காக பயன்படுத்தி வருகிறார்.

    நேற்று அவர் தனது வலைப்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி அவர் கூறி இருப்பதாவது:-

    நீங்கள் வாக்கு அளிக்க செல்கிறபோது கடந்த காலத்தை அதுவும், ஒரு குடும்பத்தின் ஆட்சி அதிகார ஆசையால், இந்த நாடு அதற்காக கொடுத்துள்ள விலையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    புத்திசாலித்தனமாக சிந்தியுங்கள். ஊடகங்கள் தொடங்கி நாடாளுமன்றம் வரை, அரசியல் சாசன சட்டம் தொடங்கி கோர்ட்டு வரை, அரசு அமைப்புகளை அவமதிப்பது என்பது காங்கிரசின் வழி.

    எப்பொதெல்லாம் குடும்ப அரசியல் பலம் வாய்ந்ததாக இருந்ததோ, அப்போதெல்லாம் அரசமைப்புகளுக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது.

    தற்போதைய மக்களவை 85 சதவீதம் செயல்பட்டிருக்கிறது. எப்போது குடும்ப அரசியல் இல்லாத கட்சி, நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்றிருக்கிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் நல்லமுறையில் செயல்பட விருப்பம் கொண்டிருந்ததை பார்க்க முடிந்திருக்கிறது. அப்போது நாடாளுமன்றம் இயங்க விடாமல் இடையூறு செய்வது யார், எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

    குடும்ப அரசியல் நடத்துகிற கட்சிகள் ஒருபோதும், ஊடகங்கள் சுதந்திரமாகவும், துடிப்பாகவும் செயல்படுவதை வசதியாக கருதியது இல்லை. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த முதல் அரசியல் சாசன திருத்தமே, பேச்சு சுதந்திரத்தை குறைக்கத்தான்.

    நெருக்கடி நிலையை காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததே, அவர்களின் குடும்ப நலன் களை பாதுகாக்கத்தான். 356 என்ற அரசியல் சாசன பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை அவர்கள் 100 முறையாவது கலைத்து இருப்பார்கள். இந்திராகாந்தியே இதை 50 முறை செய்திருப்பார். அவர்களுக்கு ஒரு மாநில அரசோ, அதன் முதல்-மந்திரியோ பிடிக்கவில்லை என்றால் ஆட்சியை நீக்கி விடுவார்கள்.

    கோர்ட்டு அவமதிப்பு என்பதுவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்து வருகிற ஒன்றுதான். அரசியல் சாசனத்தை விட ஒரு குடும்பத்துக்குத்தான் கோர்ட்டுகளும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று இந்திரா காந்தி நீதித்துறையை ஆக்கி இருக்கிறார்.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகள் நியமனத்தின்போது, மரியாதைக்குரிய பல மூத்த நீதிபதிகளை புறந்தள்ளி இருக்கிறார்கள்.

    காங்கிரசின் செயல்முறை எளிதானது. நிராகரிக்க வேண்டும்; இழிவுபடுத்த வேண்டும்; அச்சுறுத்த வேண்டும் என்பதுதான்.

    தலைமை கணக்கு தணிக்கையாளர் தொடங்கி திட்ட கமிஷன் வரை காங்கிரஸ் ஒரு போதும் அரசு அமைப்புகளை மதித்தது இல்லை. டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான திட்ட கமிஷனை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஜோக்கர்களின் கூட்டம் என்றார். அவர்களது ஆட்சியில் சி.பி.ஐ. காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேசன் (காங்கிரஸ் புலனாய்வு அமைப்பாக) என்ற நிலையில் இருந்தது.

    உளவுத்துறையிலும் (ஐ.பி.), வெளிநாட்டு உளவுத்துறையிலும் (ரா) வேண்டுமென்றே பதற்றம் உருவாக்கினார்கள்.

    மத்திய மந்திரிசபை எடுத்த முடிவை, மந்திரிசபையில் இடம் பெற்றிராத ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சுக்கல் நூறாக கிழித்து எறிந்தார்.

    பாதுகாப்புத்துறையை வருமானத்துக்கான ஆதாரமாகத்தான் காங்கிரஸ் கட்சி எப்போதுமே பார்த்து வந்துள்ளது. எனவேதான் பாதுகாப்பு படைகள், தங்களுக்கு உரித்தான மரியாதையை ஒருபோதும் பெற்றது கிடையாது.

    1947-ம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் அரசில் பாதுகாப்புத்துறையில் பல ஊழல்கள் அரங்கேறி இருக்கின்றன. ஜீப் வாங்கியது தொடங்கி துப்பாக்கி, நீர்மூழ்கி கப்பல், ஹெலிகாப்டர் வாங்கியது வரை எல்லாவற்றிலும் ஊழல்தான். தரகர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு குடும்பத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் ஆவார்கள்.

    பயங்கரவாதிகள் மீது நமது படையினர் தாக்குதல் நடத்துகிறபோது, காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியின் தலைமையில் உள்ளவர்களை குற்றம் சட்டுகின்றனர். பயங்கரவாதிகள் மீது நமது விமான படையினர் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் அதன்மீதும் காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது.

    ஆனால் அந்தக் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் கிடையாது. கட்சியின் தலைவர் ஒருவர், தலைமைப் பொறுப்புக்கு வர விரும்பினால், அவரை தூக்கி எறிந்து விடுவார்கள்.

    இவ்வாறு அதில் பிரதமர் நரேந்திர மோடி எழுதி உள்ளார்.
    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரில் ஜீப் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Accident #MadhyaPradesh
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரில் இன்று அதிகாலை டிராக்டர் ஒன்று ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளாதாகவும், மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதிகாலையில் நடைபெற்ற இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #Accident #MadhyaPradesh
    காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய ஜீப் தார் மாடலை அருங்காட்சியகத்தில் வைக்க மஹேந்திரா முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மஹேந்திரா நிறுவனத்தின் தார் ஆஃப் ரோடர் மாடலுக்கு காலா திரைப்படம் சிறப்பான விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில், காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய மஹேந்திரா தார் ஆஃப்-ரோடர் காரினை மஹேந்திரா நிறுவன அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. 

    இதற்கென ரஜினிகாந்த் பயன்படுத்திய காரினை மஹேந்திரா நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதனை ஆனந்த் மஹேந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து காலா திரைப்படத்தில் ரஜினி மஹேந்திரா தார் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தினசரி நாளேடுகளில் விளம்பரம் செய்துள்ளது.



    மஹேந்திரா தார் ஆஃப்-ரோடர் ஜீப் DI மற்றும் CRDe என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் DI வேரியன்ட் டைரக்ட் இன்ஜெக்ஷன் என பொருள்படுகிறது, இந்த மாடல் ஊரகம் மற்றும் ஊராட்சி சார்ந்த நகர பகுதிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதனை மக்கள் பயன்பாடு, விவசாய பணிகள் மற்றும் பொது பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கு ஏற்றதாக இருக்கிறது.

    தார் ஆஃப் ரோடர் DI வேரியன்ட் 8 பேர் அமரக்கூடியதாகும். இந்த ஜீப் 2.5 லிட்டர், 4 சிலிண்டர் M2DICR டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இது 63 பிஹெச்பி பவர், 180 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதில் பவர் ஸ்டீரிங் விரும்புவோர் தேர்வு செய்யக்கூடிய ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    மஹேந்திரா தார் DI மாடலில் ரியர் வீல் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் அனைத்து வேரியன்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.6.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.



    தார் CRDe வேரியன்ட் நகரவாசிகளுக்கு ஏற்ற வகையில், கிளாசிக் தோற்றம் கொண்ட ஜீப் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையிலான இன்டீரியர், சீட் மற்றும் சக்திவாய்ந்த டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கபக்பட்டுள்ளது. இந்த மாடலில் 4-வீல் டிரைவ் ஸ்டேன்டர்டு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. 

    இத்துடன் CRDe மாடலில் ஏசி வசதி, பவர் ஸ்டீரிங் உள்ளிட்டவை ஸ்டேன்டர்டு ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது இதன் 2.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜின் 105 பிஹெச்பி பவர், 247 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடலிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8-பேர் அமரக்கூடிய சீட்டிங், DI வேரியன்ட்-ஐ விட சிறப்பான இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. 

    தலைசிறந்த அம்சங்களை போன்றே மஹேந்திரா தார் CRDe வேரியன்ட் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.9.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×