search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.வி.பிரகாஷ்குமார்"

    எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஈஷா ரெபா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #GVPrakashKumar #Ezhil
    ரமேஷ்.பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தை எழில் இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஈஷா ரெபா தமிழில் அறிமுகமாகிறார்.

    காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலியில் நடந்து வருகிறது. நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நேற்று படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். இதில் ஜி.வி.பிரகாஷ், நகைச்சுவை நடிகர்கள் சதிஷ், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா ஆகியோர் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டன. 


    படப்பிடிப்பை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சி.சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #GVPrakashKumar #Ezhil

    விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற தலைப்பில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப்படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thalaivi #KanganaRanaut
    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார்.

    இதில் விஜய் இயக்கும் படத்திற்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகி உள்ளார்.

    இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, “இந்தியாவின் முக்கியமான தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக்குவது பெருமையாக இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பது மேலும் சிறப்பானது” என்றார்.



    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

    தென்னிந்திய படத்தில் நடிக்க எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. கங்கனா தற்போது ‘பங்கா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் தலைவி படப்பிடிப்பில் இணையவிருக்கிறார். படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவிருக்கிறது. #Thalaivi #KanganaRanaut

    விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் ஜெயலலிதாகவாக நடிக்கும் கங்கனா ரனாவத், தனது வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic
    தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகிறது. இந்த படத்தை ‘மதராசப்பட்டினம்‘, ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார்.

    இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உள்ள முன்னணி நாயகிகளிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் மற்றும் கங்கனா ரணாவத் ஆகிய மூவரில் ஒருவர் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கங்கனா தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார். 



    விஜய் இந்த படத்தை ஒரே நேரத்தில் இந்தியிலும் இயக்கி வருகிறார். இந்தியில் இந்த படத்திற்கு ‘ஜெயா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்தி நடிகை கங்கணா ரணாவத் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெண் ஜெயலலிதா. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். பின்னர் அவர் ஒரு பிரபலமான அரசியல்வாதியாகவும் மாறினார். இதையே ‘ஜெயா’ திரைப்படம் பேசுகிறது. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் நான் ஜெயலலிதாவாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் எனக்கும் முக்கியப் பங்கு இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை எப்போதுமே விரும்புவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக தயாராகி வந்தேன்.

    ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அப்படியே என் வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது. கதையை கேட்டபோது இது எனக்கு புரிந்தது. படத்துக்காக தமிழ் கற்று வருகிறேன்’’.

    இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay

    தமிழில் பிசியான நடிகராகியிருக்கும் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை இயக்குநர் எழில் இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்கள். #GVPrakashKumar #Ezhil
    ரமேஷ்.பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சசி இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தையும் அதே நிறுவனமே தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

    இந்த படத்தின் துவக்க விழா எளிமையாக கோவில் ஒன்றில் நடைபெற்றது. காமெடி படமாக உருவாகும் இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார்.



    மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. மார்ச்சில் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #GVPrakashKumar #Ezhil

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகும் ’அசுரன்’ படத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Asuran #Dhanush #ManjuWarrier
    `வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கிய  பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். அவரது காட்சிகள் படமாகி வருவதாகவும், அவரது பெரும்பாலான காட்சிகள் தனுசுடன் இணைந்து வரும்படி உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. அவர் வில்லனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய `வட சென்னை' படத்தில் அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    எழுத்தாளர் பூமணியின் `வெக்கை' புத்தகத்தை தழுவி, இடம் கையகப்படுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. #Asuran #Dhanush #ManjuWarrier #BalajiSakthivel

    தனுஷ் நடிப்பில் `அசுரன்' படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், பிரபல நடிகர் ஒருவரின் மகன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Asuran #Dhanush #ManjuWarrier
    வட சென்னையை தொடர்ந்து ’அசுரன்’ படப்பிடிப்பை தொடங்கி உள்ளது தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி. இந்த படத்தில் நாயகியாக மலையாள திரையுலகின் பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். அவருக்கு இது முதல் நேரடி தமிழ்ப்படம்.

    முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாசை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்தவர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது.



    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Asuran #Dhanush #ManjuWarrier #KenKarunas

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகும் `அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. #Asuran #Dhanush #ManjuWarrier
    `வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் இணையும் `அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

    படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில் தனுஷ் கையில் வேல் கம்புடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று வெளியான மற்றொரு போஸ்டரில் தனுஷ் - மஞ்ச வாரியர் இருவரும் 1980-களில் இருப்பது போன்ற தோற்றம் வெளியாகி உள்ளது.


    கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜாக்கி கலை பணிகளை மேற்கொள்கிறார். #Asuran #Dhanush #ManjuWarrier

    வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், தனுசுடன் நடிப்பதை எதிர்நோக்கி உற்சாகமாக உள்ளதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். #Asuran #Dhanush #ManjuWarrier
    மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் மஞ்சு வாரியர், தனுஷின் `அசுரன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் இயக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    இந்த படத்துக்கான கதாநாயகியாக பலரை பரிசீலித்து தற்போது மஞ்சு வாரியரை படக்குழு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த கருத்தை குறிப்பிட்டு, மஞ்சு வாரியர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    `இது தான் எனது முதல் தமிழ் திரைப்படம். இதைவிட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும். தனுஷ், வெற்றிமாறனுக்கு நன்றி. நானும் உற்சாகமாக உள்ளேன்'


    இவ்வாறு கூறியுள்ளார்.

    படப்பிடிப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 26-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. முதற்கட்ட திருநெல்வேலியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. #Asuran #Dhanush #ManjuWarirer

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் `அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கிறார். #Asuran #Dhanush #ManjuWarrier
    `வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் `அசுரன்' படத்தில் இணைந்திருக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு குடியரசு தினத்தன்று துவங்கவிருக்கிறது.


    இந்த நிலையில், இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுவே மஞ்சு வாரியர் நடிக்கும் முதல் தமிழ் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது.



    நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - வெற்றிமாறன் இணையும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Asuran #Dhanush #ManjuWarrier

    ஆடுகளம் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் `அசுரன்' படத்திற்கு தான் இசையமைப்பதை ஜி.வி.பிரகாஷ் உறுதிப்படுத்தியுள்ளார். #Asuran #Dhanush #GVPrakashKumar
    இசையமைப்பாளராக அறிமுமகாகி நாயகனாக பிசியாகி இருக்கும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக சர்வம் தாளமயம் ரிலீசாக இருக்கிறது. அடுத்ததாக 100% காதல், வாட்ச்மேன், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், குப்பத்து ராஜா என அடுத்தடுத்தது படங்கள் ரிலீசாக இருக்கிறது. மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அதேநேரத்தில் இசையமைப்பதிலும் பிசியாக இருக்கிறார். 

    மயக்கம் என்ன படத்தின் போது ஏற்பட்ட சிறிய மனகசப்பால் தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் இணையாமல் இருந்தார்கள். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும், ஜெயில் படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியதன் மூலம் மீண்டும் இருவரும் இணைந்தார்கள். அதன்பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் `அசுரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது ஜி.வி. அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.



    தனுசை சந்தித்ததே பெரிய செய்தியாகி விட்டது. எப்போது மீண்டும் இணைகிறீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, ஆமாம். `அசுரன்' படத்துக்கு இசை அமைக்கிறேன். ஆடுகளம் படத்துக்கு பின் வெற்றிமாறன், தனுஷ், நான் மூவரும் இணைகிறோம். மிக சுவாரசியமான படமாக இருக்கும். சில வி‌ஷயங்கள் அதுவாக நடந்தது. மகிழ்ச்சி. என்றார். #Asuran #Dhanush #GVPrakashKumar

    ×