search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108740"

    மூல முதல் கடவுள் என்று போற்றப்படும் கணபதியை வழிபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரை வழிபடுவதற்காகவே சில விரதங்கள் இருக்கின்றன.
    மூல முதல் கடவுள் என்று போற்றப்படும் கணபதியை வழிபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரை வழிபடுவதற்காகவே சில விரதங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

    * வெள்ளிக்கிழமை விரதம்

    * செவ்வாய்க்கிழமை விரதம்

    * சதுர்த்தி விரதம்

    * குமார சஷ்டி விரதம்

    * தூர்வா கணபதி விரதம்

    * சித்தி விநாயகர் விரதம்

    * துர்வாஷ்டமி விரதம்

    * நவராத்திரி விரதம்

    * வெள்ளிப் பிள்ளையார் விரதம்

    * செவ்வாய்ப் பிள்ளையார் விரதம்

    * சங்கடஹர சதுர்த்தி விரதம்
    விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார்.
    விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார். இது 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்.

    இந்தக் கோவிலுக்கு அருகில் இருந்த மணலால் ஆன குளத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாகவும், அந்த சுவையான நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. அதனால்தான் இவருக்கு ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இவருக்கு ‘வெள்ளைக்கார பிள்ளையார்’ என்ற பெயரும் உண்டு.

    வெள்ளைக்காரர்களால் கடலில் வீசப்பட்ட இந்த ஆலயத்தின் விநாயகர் சிலை, மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்ததால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கிழக்குப் பார்த்த சன்னிதியில் கடற்கரையோரம் உள்ள சிறிய ஆலயத்தில், நான்கு கரங்களுடன் இந்த விநாயகர் அருள்புரிகிறார். ஆலயத்தின் உட்புறச் சுவர்களில், விநாயகரின் புராணங்கள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. இவரை வழிபட்டால் காரியத்தடை விலகும். அன்பும், அமைதியும் பெருகும்.
    இந்து சமயத்தில் பல தெய்வ வழிபாட்டு முறை இருந்தாலும், அவற்றில் விநாயகர் மூல முதற்கடவுளாக வணங்கப்படுகிறார். பிள்ளையார்பட்டியில் பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம் உள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி எனும் ஊரில் உள்ளது, பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயம் வடக்கு பார்த்த சன்னிதியில் குடவரைக் கோவிலாக விளங்குகிறது.

    ஆறு அடி உயரம் கொண்ட விநாயகர், சிறு குன்று போன்ற பாறையில் குடைந்த புடைப்புச் சிற்பமாக அர்த்த பத்மாசனத்தில் பிரமாண்ட உருவமாக காட்சி தருகிறார். விநாயகரின் தும்பிக்கை, வலதுபுறம் திரும்பி ‘வலம்புரி விநாயகராக’ அருள்புரிகிறார். இங்கு அம்பாள் ‘வாடாமலர்’ என்ற பெயருடனும், ஈசன் ‘அர்ச்சுனவனேஸ்வரர்’ என்ற பெயருடனும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.

    இங்கு புதுக் கணக்கு பூஜை போடவும், புதிய செயல் தொடங்கவும் வரும் பக்தர்கள் ஏராளம். ஆயுள் விருத்தி பூஜை, சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் செய்துகொள்வதும் சிறப்பு என்பதால், இந்த ஆலயத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
    விநாயகர் மாம்பழ விநாயகராகக் காட்சியளிக்கும் திருக்கோலம், புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கிவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கிறது.
    ஞானப் பழத்தைப் பெறுவதில் விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கும் போட்டி நிலவியது. அவர்கள் இருவருக்கும் பிரச்சினையின்றி அந்தப் பழத்தை வழங்க சிவபெருமான் முடிவு செய்தார். அதனால் இந்த உலகத்தை முதலில் யார் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் பழம் என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள்.

    அந்த முடிவைக் கேட்ட முருகப் பெருமான், மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். ஆனால் அவர் வருவதற்குள் பெற்றோரை வலம் வந்து, பெற்றோரைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியதற்கு சமம் என்று கூறி விநாயகப் பெருமான் ஞானப்பழத்தைப் பெற்று விட்டார்.

    அங்ஙனம் மாம்பழ விநாயகராகக் காட்சியளிக்கும் திருக்கோலம், புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கிவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கிறது. இந்த மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும்.
    வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர் பரத்வாஜ முனிவர். இவர், நர்மதை நதிக்கரையில் தவம் செய்து வந்தார். ஒருநாள்… நர்மதையில் நீராடிக்கொண்டிருந்த தேவ மங்கை ஒருத்தியைக் கண்டு மோகித்த பரத்வாஜர், அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று, இல்லறம் நடத்திவந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததும் அந்தப் பெண் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ முனிவரும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு, நர்மதைக் கரைக்குச் சென்று தவத்தைத் தொடர்ந்தார்.

    இதையடுத்து, அந்தக் குழந்தையை பூமாதேவி அரவணைத்து வளர்த்தாள். குழந்தையின் மேனி, செந்நிறத்துடன் அக்னி போல் பிரகாசித்ததால், அவனுக்கு ‘அங்காரகன்’ என்று பெயர் சூட்டினாள்.

    அங்காரகனுக்கு ஏழு வயதானது. ஒருநாள், ‘`அம்மா, என் தந்தை யார்? அவரைக் காண ஆவலாக உள்ளது!’’ என்று பூமாதேவியிடம் கேட்டான். உடனே, ‘`குழந்தாய்… உன் தந்தையின் பெயர் பரத்வாஜர்; மகரிஷிகளில் மகிமை பெற்றவர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்!’’ என்ற பூமாதேவி, அவனுடன் பரத்வாஜரது ஆசிரமத்தை அடைந்தாள்.

    அங்கு முனிவரைச் சந்தித்தவள், ‘’முனிவரே, இவனே தங்களின் மகன். உங்களைக் காண விரும்பியதால் இவனை இங்கு அழைத்து வந்தேன். தாங்கள் இவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்!’’ என வேண்டினாள். மிகவும் மகிழ்ந்த பரத்வாஜர், அன்புடன் தன் மகனை அணைத்துக்கொண்டார்.

    அங்காரகன் தகுந்த வயதை அடைந்ததும், முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்துவைத்து வேத அத்யயனத்தையும் ஆரம்பித்து வைத்தார் பரத்வாஜர். சதுர்வேதங்களை மிகக் குறுகிய காலத்திலேயே கசடறக் கற்றுத் தேர்ந்த அங்காரகன், இன்னும் பல கலைகளிலும் சிறந்து விளங்கினான்.

    இதன் பிறகு… தான் சர்வ வல்லமை பெற விரும்புவதாகவும், தகுந்த வழி காட்டுமாறும் தந்தையிடம் பிரார்த்தித்தான். ‘தவமே சிறந்த வழி’ என்ற பரத்வாஜர், விநாயகரைக் குறித்து தவம் இருக்கும்படி அங்காரகனைப் பணித்தார். உரிய மந்திரங்களையும் அவனுக்கு உபதேசித்து அனுப்பி வைத்தார். அவந்தி நகரை அடுத்த அடர்ந்த வனத்தில் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நன்னாளில் தனது தவத்தைத் துவக்கினான். பல நூறு ஆண்டுகள் நீடித்த அங்காரகனின் தவத்துக்கு பலன் கிடைக்கும் காலம் கனிந்தது.

    மாசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில், அங்காரனுக்கு தரிசனம் தந்தார் ஆனைமுகத்தோன். அவரது பாதக் கமலங்களை பணிந்த அங்காரகன், விநாயகரை பலவாறு துதித்துப் போற்றியதுடன், சில வரங்களையும் வேண்டினான்.

    ‘`விக்னராஜனே… நான், அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வமங்கலமான திருவுருவோடு தங்களைத் தரிசித்த என்னை எல்லோரும், ‘மங்களன்’ என்று அழைக்க வேண்டும். அத்துடன், தங்களது திவ்விய தரிசனம் கிடைத்த இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந்நாளில் உம்மை வணங்கும் அடியவர்களது இன்னல்களை நீக்கி அருள வேண்டும். என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும்!’’ என்று பல வரங்களைக் கேட்டான் அங்காரகன்.

    அவனை கனிவுடன் நோக்கிய கணபதி, ‘’அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன், என்னிடம் நீ அனுக்கிரகம் பெற்ற இந்த நாள், ‘அங்காரக சதுர்த்தி’யாகப் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வணங்குபவர்களது விக்னங்களை அடியோடு விலக்குவேன்!’’ என்று அருளி மறைந்தார்.

    விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்தப் புனித இடத்தில், கணேசர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அல்லும் பகலும் அவரை வழிபட்டு வந்தான் அங்காரகன். இதனால் அந்த விநாயகருக்கு, ‘மங்கள விநாயகர்’ என்ற பெயர் வந்தது.

    இதன் பிறகு, விநாயகப் பெருமானின் அருளால், தேவலோகம் அடைந்த அங்காரகன், அங்கு அமிர்தம் பருகியதுடன்… விரைவிலேயே, நவகிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். அவனுக்கு உகந்த தினம் செவ்வாய்.

    எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; விநாயகருக்கு மிக உகந்தது. இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும். எனவே இந்த புனித தினம், சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்றது. 
    விநாயகரை ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம். ஆற்றங்கரையிலும், அரச மரத்தடியிலும் கண்டு வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்தாலும் கைகூப்பித் தொழுபவரை கணபதி காப்பாற்றுவார்.
    உலகத்திலேயே பிள்ளையாருக்காக முதன் முதலில் தனியாக அமைக்கப்பட்ட குடவரைக் கோவில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் உள்ள கோவில்தான். பிள்ளையாரின் பெயரைக் கொண்ட ஊராகவே அது அமைந்திருப்பது இன்னும் விசேஷம்.

    அந்த வகையில் எல்லோருக்குமே பலன் தரும், மூல முதற்கடவுள் பிள்ளையார். அவரை ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம். ஆற்றங்கரையிலும், அரச மரத்தடியிலும் கண்டு வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்தாலும் கைகூப்பித் தொழுபவரை கணபதி காப்பாற்றுவார்.

    திருச்சியில் உச்சிப் பிள்ளையார், மலையின் உச்சியில் இருக்கிறார். காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரில் சொற்கேட்ட விநாயகராக காட்சி தரு கிறார். செல்வ விநாயகர் என்றும், சித்தி விநாயகர் என்றும், வல்வினைகள் போக்கும் வல்லபகணபதி என்றும், லட்சுமியோடு இணைந்து லட்சுமி கணபதி என்றும் அழைக்கப்படுகிறார். இப்படி ஊர் தோறும் உன்னதமாகக் காட்சி தரும் பிள்ளையார் மஞ்சளிலே பிடித்து வைத்தாலும், மண்ணிலே செய்தாலும், சாணத்தில் செய்தாலும், சந்தனத்தில் செய்து வைத்து வணங்கினாலும், அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசச் செய்வார்.

    ஆலயங்களில் உள்ள பிள்ளையார்கள் பெரும்பாலும் மரங்களின் கீழே வீற்றிருப்பதை நாம் காண முடியும். அந்தப் பிள்ளையாரை எல்லாம், அரச மரத்தடிப் பிள்ளையார், வேப்ப மரத்தடி பிள்ளையார், வன்னி மரத்தடிப் பிள்ளையார் என்றெல்லாம் சொல்லி அழைத்து வழிபாடு செய்வார்கள். தாவரங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையாரிடம், “தா! வரம்” என்று கேட்டால், உடனடியாக தந்து விடுவார். நாவால் பாடி துதித்தால் நற்பலன்களை அள்ளி வழங்குவார். மரத்தடி விநாயகருக்குப் பொங்கல் வைத்து (சர்க்கரைப் பொங்கல்), அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்தால், இல்லத்தில் அன்பு பொங்கும், ஆற்றல் பொங்கும், இன்பம் பொங்கும்.

    எந்த மரத்தடியில் பிள்ளையார் இருக்கின்றாரோ, அந்த மரத்திற்குரிய நட்சத்திரம், நாள் பார்த்து அன்றைய தினம் யோகபலம் பெற்ற நேரத்தில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு வஸ்திரமும், மாலையும் அணிவித்து, அவல், பொரி, கடலை, அப்பம், மோதகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறும்.

    அரச மரத்தடிப் பிள்ளையாரை எப்பொழுது வணங்கினாலும் உடனடியாக நற்பலன் கிடைக்கும். மேலும் மூல நட்சத்திரமன்று மோதகம் படைத்து, குறிப்பிட்ட அளவில் வலம் வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும். சந்தோஷங்கள் வந்துசேரும்.

    வேப்ப மரத்தடிப் பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் கன்னிப் பெண்ளுக்கு கவலை தீரும். வணிகர் களுக்கு வளர்ச்சி கூடும். தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து, பக்தர் களுக்கு வழங்கினால் கடன் தொல்லை அகலும்.

    வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். ஆலமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்வு அமையும். பரணி நட்சத்திரம் அன்று நெல்லி மரத்தடிப் பிள்ளையாரை வழிபட்டால் நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும்.

    நாவல் மரத்தடி விநாயகரை வழிபாடு செய்தால் குடும்ப ஒற்றுமை கூடும். மகிழ மரத்தடிப் பிள்ளையார் வெளிநாட்டுத் தொடர்புக்கு வித்திட்டவர். அருகம்புல் மாலையை ஆனைமுகனுக்குச் சாத்தி வழிபட்டால் பொன், பொருள் பெருகும் என்பதை அனுபவித்தில் அறிந்து கொள்ளலாம். மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை மனமுருகி வழிபட்டால் மகிழ்ச்சி பெருகும். மன அமைதி கூடும்.

    “அருகம் புல்லையள்ளி ஆனைமுகன் உனக்களிக்கப்

    பெருகும் பொன்னையள்ளிப் பெருமையுடன் தருபவன் நீ!

    உருகி மனமுருகி உனைத்தொழுது போற்றுகின்றேன்!

    அருகில் வந்தெம்மை ஆதரிப்பாய் கற்பகமே!”

    என்ற பாடலை பாராயணம் செய்து, விநாயகரை வழி படுங்கள். அவர் உங்களுக்கு உன்னதமான வாழ்வைத் தருவார்.
    பணம் சம்பந்தமான விவகாரங்களில் நமக்கு அதிர்ஷ்டத்தை தருபவர் விநாயகர் பெருமான். அவருக்குரிய இந்த துதியை தினமும் படிப்பதால் நன்மைகள் உண்டாகும்.
    கணேசர் துதி ஓம் செல்வ விநாயகனே சரணம்
    சரணம் ஓம் சக்தி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் சித்தி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் அரசமர விநாயகனே சரணம் சரணம்
    ஓம் ஆதி நந்தி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் வெள்ளெருக்கு விநாயகனே சரணம் சரணம்
    ஓம் ஸ்ரீசக்ர விநாயகனே சரணம் சரணம்
    ஓம் கமல விநாயகனே சரணம் சரணம்
    ஓம் ஷண்முக விநாயகனே சரணம் சரணம்
    ஓம் வெற்றி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் வக்ரதுண்ட விநாயகனே சரணம் சரணம்
    ஓம் சுந்தர விநாயகனே சரணம் சரணம்
    ஓம் கமல விநாயகனே சரணம் சரணம்
    ஓம் வெங்கடேச விநாயகனே சரணம் சரணம்
    ஓம் பிரசன்ன விநாயகனே சரணம் சரணம்
    ஓம் ரத்ன விநாயகனே சரணம் சரணம்
    ஓம் கற்பக விநாயகனே சரணம் சரணம்
    ஓம் லக்ஷ்மி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் பம்பா விநாயகனே சரணம் சரணம்
    ஓம் நவசக்தி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் வினைதீர்த்த விநாயகனே சரணம் சரணம்

    விண்ணின் நாயகனாகிய கணேசர் எனப்படும் விநாயகர் பெருமானுக்குரிய துதி இது. இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்து விட்டு வெளியில் செல்வதற்கு முன்பு 3 முறை துதித்து விட்டு செல்வது நல்லது. செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று, விநாயகருக்கு தீபமேற்றி இந்த துதியை 27 முறை படிப்பதால் உங்களின் மனக்கவலைகள் தீரும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சீக்கிரம் முடிவிற்கு வரும். பணம் சம்பந்தமான விடயங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும். வளமை பெருகும். மன அமைதி உண்டாகும்.

    மனித வாழ்க்கையில் பணம் என்பது ஒரு இன்றியமையாத இடத்தை பெறுகிறது. மனிதர்களின் மனக்கவலைகள் 90 சதவீதம் இந்த பணத்தை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. இப்படி வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்கான முயற்சிகளில் பெரும்பாலானோருக்கு ஏதேனும் தடை, தாமதங்கள் ஏற்படுகின்றன. இவற்றை எல்லாம் போக்கி பணம் சம்பந்தமான விவகாரங்களில் நமக்கு அதிர்ஷ்டத்தை தருபவர் விநாயகர் பெருமான். அவருக்குரிய இந்த துதியை தினமும் படிப்பதால் நன்மைகள் உண்டாகும்.
    எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும்.
    விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது, கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும் கூட கணபதியை வணங்கிய பிறகே, எந்த செயலையும் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் தான், இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்ததாக சொல்லும் இடமே தற்போது ‘அச்சிறுபாக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. செங்கல்பட்டு அருகே இந்த ஊர் இருக்கிறது.

    எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் செய்வதற்கு முன்பாகவும் கணபதி ஹோமம் செய்வார்கள். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் கூட கணபதி ஹோமம் செய்யலாம்.

    கணபதி ஹோமத்தை `விநாயகர் வேள்வி' என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் சொல்லி, அவரை புகழ்ந்து பக்திப் பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருப்பினும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பான பலனைத் தரும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி, மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பு.
    பல்வேறு ஊர்களில் ஆனைமுகன் வித்தியாசமான உருவில் காட்சி தருகிறார். எந்த ஊரில் எந்த வடிவில் காட்சி தருகிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
    விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் ஆலயம் இருக்கிறது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள விநாயகரை ‘நெற்குத்தி விநாயகர்’ என்றும் அழைப்பார்கள். பொய் சொல்பவர்களை தண்டிப்பவர் என்பதால் ‘பொய்யாமொழி விநாயகர்’ என்று பெயர் பெற்றார். இங்குள்ள லிங்கம் போன்ற பாணத்தில் கணபதியின் உருவம் கொண்டிருப்பது விசேஷமான அமைப்பாகும்.

    திருநெல்வேலி காரையாரில் உள்ள அருவிக்கரையில், தன் அன்னையாரான கங்காதேவி மற்றும் பார்வதி தேவி ஆகியோருடன் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமானை தரிசிக்கலாம்.

    கங்கைகொண்ட சோழபுரம் சிவாலயத்தில் உள்ள விநாயகருக்கு ‘கணக்கு விநாயகர்’ என்று பெயர். இந்த ஆலயத்தின் திருப்பணி நடைபெற்றபோது, திருப்பணியை மேற்பார்வை செய்து வந்த கணக்குப் பிள்ளையிடம் மன்னன், சந்தேகத்தோடு கணக்கு கேட்டு கெடு விதித்தான். அதுவரையிலும் கணக்கு எழுதி வைக்காத கணக்கர், விநாயகரிடம் வேண்டிக்கொள்ள, துல்லியமான கணக்கை அவருக்கு அளித்தாராம் இந்த விநாயகர். இதனால் இந்த பெயர் வந்திருக்கிறது.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நவக்கிரக சன்னிதியில் நெல்லிக்காய் பிள்ளையார் அருள்புரிகிறார். தன்னுடைய கழுத்தில் நெல்லிக்காய் மாலை அணிந்திருப்பதால் இவருக்கு இந்த திருநாமம் ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு நெல்லிக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால், நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது சிறப்பை தரும். இன்றுவித்தியாசமான வடிவில் காட்சி தரும் விநாயகர் ஆலயங்களை அறிந்து கொள்ளலாம்.
    * மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் ஆடுதுறையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடி கிராமம். இங்குள்ள ஐராவதேஸ்வரர் கோவிலில் விருச்சிகப் பிள்ளையார் அருள்புரிகிறார். தேளுக்கு இருப்பது போல் வரி வரியாக கோடுகள் கொண்டவர் என்பதால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வந்து ஈசனையும், பிள்ளையாரையும் வணங்கினால் இன்னல்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    * விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காளியம்மன் கோவில் அருகே உள்ளது, பழிக்கு அஞ்சிய விநாயகர் ஆலயம். இங்குள்ள விநாயகரை வழிபட்டால், அவர்கள் பழிக்கு அஞ்சும்படி செய்வார் என்பதால் இந்தப் பெயர். ஏதாவது தவறு செய்து விட்டவர்கள், தவறுக்கு வருந்துவதுடன் இங்கு வந்து இந்த பிள்ளையாரை வழிபட்டால் மேற்கொண்டு வீண் பழிகள் நேரிடாமல் காப்பார். மேலும் எந்த குற்றங்கள் செய்யாமலும், செய்த தவறால் ஏற்பட்ட குற்ற உணர்வை தவிர்த்தும் மன ஆறுதல் தருவார் என்று சொல்லப் படுகிறது.

    * தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கூத்தூரில் சாஸ்தா விநாயகர் என்ற திருப்பெயருடன் விநாயகர் அருள்புரிகிறார். ஆதியில் இங்கு விநாயகர் கோவில் மட்டும் தான் இருந்ததாம். ஒரு முறை வணிகர்கள் சிலர் மலையாள தேசம் சென்று ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை கொள்முதல் செய்து கொண்டு, கூடவே பூரண-புஷ்கலை சமேத அய்யனார் சிலையையும் எடுத்து வந்தனர். அவர்கள் இந்த ஊரில் தங்கி மறுநாள் கிளம்பும் போது, அய்யனார் சிலையை மறந்து வைத்து விட்டுச் சென்று விட்டனர். அய்யனார், தான் தங்குவதற்கு இடம் அளிக்கும்படி விநாய கரிடம் வேண்டிக்கொள்ள, விநாயகரும் சற்று நகர்ந்து இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் சாஸ்தா விநாயகர் என்று பெயர் பெற்றார்.
    பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி பிரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்சனைகள் யாவும் நீங்கும்.
    ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்rனைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.

    சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
    முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
    காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
    தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)

    திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்
    திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்
    கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
    உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!

    பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
    கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
    கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
    விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக

    மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
    காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
    சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
    தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!

    பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
    தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
    சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!
    எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!

    சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
    இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
    குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
    கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!
    தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!
    ×