search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108997"

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் யார்டில் இன்றும், நாளையும் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் யார்டில் இன்றும், நாளையும் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4 ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒருசில ரெயில்கள் வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

    ரெயில் (எண்.66051) மூர் மார்க்கெட்டில் இருந்து பகல் 2.05 மணிக்கு ஆவடிக்கு புறப்படும் மின்சார ரெயில், ஆவடியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு பகல் 2.50 மணிக்கு புறப்படும் (எண்.66052) மின்சார ரெயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மூர் மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் மின்சார ரெயில் (எண். 42001) கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு அதிகாலை 2.45 மணிக்கு புறப்படும் எண்.42002 மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொன்னேரியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு இயக்கப்படும்.

    மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி செல்லக்கூடிய மின்சார ரெயில் பொன்னேரி -கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் மூர்மார்க்கெட் -பொன்னேரி இடையே இயக்கப்படும். இன்று ஒருநாள் மட்டும் இந்த 2 மின்சார ரெயில்கள் ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய மின்சார ரெயில் (எண்.42004) கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடையே நாளை (7-ந்தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் பொன்னேரி- சென்ட்ரல் மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும்.

    சென்ட்ரலில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு விஜயவாடா செல்லக் கூடிய பினாசினி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமான நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். நெல்லூரில் இருந்து காலை 10 மணிக்கு சூலூர்பேட்டை புறப்படக் கூடிய மின்சார ரெயில் (66030) 1½ மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு புறப்படும்.

    சூலூர்பேட்டையில் பகல் 12 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் (66026) 1½ மணி நேரம் தாமதமாக பகல் 1.30 மணிக்கு புறப்படும்.

    மேற்கண்ட 3 ரெயில்களும் இன்றும், நாளையும் மாற்றியமைக்கப்பட்ட நேரத்தில் புறப்பட்டு செல்லும்.

    விஜயவாடா- சென்னை பிளாகினி எக்ஸ்பிரஸ், தானாபூர்- கே.எஸ்.ஆர். பெங்களூர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், சாப்ரா- சென்ட்ரல் கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றும், நாளையும் தாமதமாக வந்து செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #ElectricTrain
    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உரிய மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் உரிய மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து கவரப்பேட்டையில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார நலப்பணிகளுக்கான இணை இயக்குனர் தயாளன் தலைமையில் மருத்துவ அதிகாரிகள், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ராஜா தெருவில் ஆர்.கே.கிளினிக் என்ற பெயரில் இயங்கி வந்த ஆஸ்பத்திரியை கல்பாக்கம், பல்லவன் நகரைச் சேர்ந்த சேகர் என்கிற சேகர் ராவ் நடத்தி வந்ததும், லேப் டெக்கினீசியன் மட்டுமே படித்த அவர் டாக்டர் என்று நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.

    அவர் கடந்த 2½ ஆண்டுகளாக ஆஸ்பத்திரி நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து போலி டாக்டர் சேகர் பற்றி மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குனர் தயாளன், கவரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் சேகரை கைது செய்தார்.

    மேலும் அவரிடம் இருந்து ஆங்கில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் குறிப்பாக கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இத்தகைய ஆய்வு நடவடிக்கை தொடரும்’ என்றார்.

    இந்த நிலையில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் நேற்றும், இன்றும் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்பூரில் மாதா கோவில் விழாவில் பட்டாசு வெடித்து மாணவி உள்பட 7 பேர் உடல் கருகினர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்பூரில் மாதா கோவில் உள்ளது. நேற்று ஆலயத்தில்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு மாதா சிலை ஊர்வலம் நடந்தது.

    இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது லோடு ஆட்டோவில் வைத்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அந்த ஆட்டோவில் சிறுவர்கள் ஏராளமானோர் அமர்ந்து இருந்தனர். ஒரு பட்டாசு வெடித்து சிதறிய போது அதன் தீப்பொறி லோடு ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதனால் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.

    இதில் அருகே நின்ற சென்னை அண்ணாநகரை சேர்ந்த அக்காள்- தம்பியான காவியா (9), சஞ்செய் (8) மற்றும் போந்தவாக்கம் தர்ஷினி (10), தோக்கம்பூர் அர்ஜூன் (11), ஜோசப் (5), ஹரீஸ்பாபு (6), கல்லூரி மாணவி பர்வீனா (21) ஆகிய 7 பேர் உடல் கருகினர்.

    உடனடியாக அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர்களில் தர்ஷினி, அர்ஜூன், ஹரீஸ் பாபு ஆகியோரது நிலைமை மோசமாக உள்ளது. #Tamilnews
    ×