search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109311"

    உத்தரபிரதேசத்தில் சிறுமியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    முசாபர்நகர்:

    உத்தரபிரதேச மாநிலம் பசாயத் கிராமத்தில் 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அங்கு அதே ஊரைச் சேர்ந்த வீரேந்திர குமார் (26) என்பவர் வந்தார். பின்னர் அவளை மிரட்டி கடத்தி சென்று கற்பழித்தார்.

    எனவே அவரை கைது செய்த போலீசார் சிறப்பு போஸ்கோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராம்சுத்சிங் குற்றம் சாட்டப்பட்ட வீரேந்திரகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தார். அதில் பாதி தொகையை கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார். #tamilnews
    ஆந்திர மாநிலம் மதனப்பல்லி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மதனப்பல்லி அடுத்த கோலபையிலு கிராமத்தை சேர்ந்தவர் 4 வயது சிறுமி. இவர் தனது தாய், தந்தையுடன் தர்பார் சிவாஜி பாஷா என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். தாபார் சிவாஜி பாஷா (20) மதனப்பல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று 4 வயது சிறுமிக்கு பாடம் கற்று கொடுப்பதாக அழைத்து சென்று உள்ளார். பின்னர் தன்னுடைய அறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமி அலறி கூச்சலிட்டதால் சிறுமியின் தாயார் மற்றும் பொதுமக்கள் சென்று கதவை திறக்குமாறு கூறினர்.

    ஆனால் தர்பார் சிவாஜி பாஷா கதவை திறக்காததால் கதவை உடைத்து அறையின் உள்ளே சென்று சிறுமியை மீட்டனர். இதுகுறித்து மதனப்பல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சிறுமியை சிகிச்சைக்காக மதனப்பல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மதனப்பல்லி எம்.எல்.ஏ. தேசாய் சிப்பாரெட்டி ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியின் உடல் நலன் குறித்து விசாரித்தார். மேலும் சிறுமிக்கு தேவையான வசதிகள் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை உடனடியாக கைது செய்ய கோரி சிறுமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து மதனபல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருக்கோவிலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயி மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவள் 11 வயது சிறுமி. அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவர் கடைக்கு சென்ற சிறுமியை திருக்கோவிலூர் அடுத்த ஆலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம்(வயது 59) என்பவர், வழிமறித்து அருகில் வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி சண்முகம் மீது சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கொடைக்கானலில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். #pocso
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகில் உள்ள பெருமாள்மலை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சிலம்பரசன் (வயது24). இவர் வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே கைவினை பொருட்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    அதே குடியிருப்பில் வசித்து வந்த 12 வயதான தனது சித்தி மகளுடன் சிலம்பரசன் நெருக்கமாக பழகி வந்தார். அவரது பெற்றோர்களும் அண்ணன் உறவுமுறை என்று கண்டுகொள்ளவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சிலம்பரசன் சம்பவத்தன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து பெற்றோர்கள் அவர் கர்ப்பம் அடைந்திருந்ததை உறுதி செய்தனர்.

    மேலும் இதற்கு காரணமான சிலம்பரசன் மீது கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிலம்பரசன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #tamilnews
    ஆன்லைன் மூலம் நட்பாக கிடைத்த தோழி தன்னை காதலிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த சிறுவன் சுமார் 6 ஆயிரம் கி.மீட்டருக்கு அப்பால் உள்ள காதலியை தேடிப்பிடித்து கொலைசெய்துள்ளான். #Russia #SocialMediaKills
    மாஸ்கோ:

    பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சமூக வலைதளங்கள் மூலம் பல சாதகமான விஷயங்கள் நடந்தாலும், உயிருக்கு பாதகமான நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

    ரஷ்யாவைச் சேர்ந்த கிரில் வொல்ஸ்கி என்ற 16 வயது சிறுவன், ஆன்லைன் மூலம் மாஸ்கோவில் உள்ள கிறிஸ்டினா என்ற சிறுமியுடன் நட்புடன் பழகிவந்துள்ளான். நாளடைவில் இவனுக்கு கிறிஸ்டினா மீது காதல் வர, இவனது காதலை கிறிஸ்டினா ஏற்க மறுத்துள்ளார்.



    இதனால் ஆத்திரமடைந்த கிரில் தனது சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பெற்றோருக்கு தெரியாமல் மாஸ்கோ பயணித்துள்ளான். 6 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் தூரம் பயணித்த கிரில், சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். மேலும், யாரும் கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக கழிவுநீர் தொட்டியில் சிறுமியின் உடலை மூழ்கச்செய்துள்ளான்.

    சிறுமி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஆப் மூலம் ஏற்பட்ட நட்பு இரண்டு சிறுவர்களின் வாழ்வை சூறையாடியிருப்பது சற்றே சிந்திக்க வைக்கிறது. #Russia #SocialMediaKills
    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கடலூர்:

    நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அண்ணாநகரை சேர்ந்தவர் அபோன்ராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 22). கடந்த 4.8.2016 அன்று இரவு மின் தடை ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மணிகண்டன், பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமி சத்தமிட்டதால் பெற்றோர் எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், மணிகண்டனை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் இது பற்றி சிறுமியின் தாய் நெய்வேலி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார். #tamilnews
    சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ளது காடுஉத்தனப்பள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் திம்மப்பா (வயது 65). கூலித்தொழிலாளி. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் அதே ஊரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி திம்மப்பாவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட திம்மப்பாவிற்கு சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறையும், அதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டிய குற்றத்திற்காக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.  #tamilnews
    வேலூரில் விபசாரத்தில் ஈடுபட மறுத்த சிறுமியை நடுரோட்டில் அடித்து உதைத்த வங்காளதேச பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வங்காளதேசத்தை சேர்ந்தவர் முஸ்கானா (வயது 30). இவர் அங்குள்ள 16 வயது சிறுமியை வேலை வாங்கி தருவதாக கூறி வேலூருக்கு அழைத்து வந்தார்.

    வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்ற போகிறோம் என்ற ஆசையில் வேலூர் வந்த சிறுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    சிறுமியை வேலூரில் உள்ள லாட்ஜில் தங்க வைத்த முஸ்கானா சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த வற்புறுத்தினார்.அதற்கு சிறுமி மறுத்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்காடு ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபட மிரட்டினார். அங்கிருந்து தப்பிய சிறுமி கிருஷ்ணா தியேட்டர் அருகே ஓடி சென்றார்.

    அவரை பின் தொடர்ந்து சென்ற முஸ்கானா சிறுமியை மடக்கி பிடித்து நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்தார். இதனை கண்ட பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டனர்.

    இதுபற்றி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முஸ்கானாவை கைது செய்தனர்.

    மேலும் அவரது பாஸ்போர்ட் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    உடுமலையில் 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மைவாடி கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முருகசாமி(48).தொழிலாளி. இவர் சம்பவத்தன்று குடிபோதையில் பள்ளி சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரிடமிருந்து தப்பித்து வந்து நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளி முருகசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை உடுமலை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    பீகார் மாநிலத்தில் வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HinduBiy #MuslimGirl #Nawada
    பாட்னா:

    பீகார் மாநிலம் நவாடா பகுதியில் உள்ள ஜோகியா மாரன் கிராமத்தை சேர்ந்த சிறுமி வேறு சாதி வாலிபரை காதலித்தாள். அதை அறிந்த பெற்றோர் அவளை கண்டித்தனர்.

    இந்த நிலையில் அவள் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த அவளது தந்தையும் ஜோகியா மாரன் கிராம மக்களும் சேர்ந்து அந்த சிறுமியை தேடிப்பிடித்து இழுத்து வந்தனர்.



    பின்னர் கிராமத்தினர் கூடி கட்ட பஞ்சாயத்து பேசினர். முடிவில் அந்த சிறுமியை ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்தனர். கிராம மக்களுடன் சிறுமியின் தந்தையும் அவளை தாக்கினார்.



    இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கிராமத்தினரின் பிடியில் இருந்து 5 மணி நேரத்துக்கு பிறகு சிறுமியை மீட்டனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #HinduBiy #MuslimGirl #Nawada
    தேனி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின், மற்றும் குமரேசன் ஆகியோர் மீதான குற்றம் நீரூபிக்கப்பட்டு அவர்களுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    ராமநாதபுரம் மாவட்டம் அருகே ஆதரவின்றி உறவினர் வீட்டில் தங்கிய சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் 2 சிறுமிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி திரிந்தனர். இதனை பார்த்தவர்கள் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் 2 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

    இதில் 15-வயது சிறுமி கர்ப்பமாக இருந்தார். அவரிடம் அமைப்பினர் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். தனது உறவினர் தன்னை கட்டாயபடுத்தி கற்பழித்ததால் கர்ப்பமடைந்ததாக கூறினார்.

    பின்னர் இது குறித்து சிறுமி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது.

    எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை மீனவர் கிராமம். எனது தாய் தற்கொலை செய்து கொண்டார். தந்தை குடிகாரர். எனது அக்காள் எங்களை பராமரித்து வந்தார். அவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட தகராறால் என்னையும் எனது தங்கையையும் அதே பகுதியில் உள்ள எனது தாய் மாமா செல்வராஜின் வீட்டில் விட்டு விட்டு கோவைக்கு புறப்பட்டு வந்து விட்டார். நான் எனது மாமா வீட்டில் இருந்த போது மாமாவின் மகன் அருநேசன் என்னை பலமுறை கட்டாயபடுத்தி கற்பழித்தார். இதில் நான் கர்ப்பமானேன். இதனை தெரிந்து அவரது குடும்பத்தினர். என்னையும் எனது தங்கையையும் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு கையில் ரூ. 500 பணத்தை கொடுத்து வீட்டுக்கு வரக்கூடாது என கூறிவிட்டு சென்று விட்டனர்.

    பின்னர் நாங்கள் இங்கு புறப்பட்டு வந்து விட்டோம். எனவே என்னை கற்பழித்த அருநேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகா அளித்தார்.

    சிறுமி கொடுத்த புகாரின் பேரில் கட்டாயபடுத்தி கற்பழித்த அருநேசன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சம்பவம் நடந்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இந்த வழக்கை மாற்றி அனுப்பி வைத்தனர். #tamilnews
    ×