search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்கரத்தாழ்வார்"

    ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

    ஓம் சுதர்ஸனாய வித்மஹே
    ஜ்வாலா சக்ராய தீமஹி
    தன்னோ: சக்ர ப்ரசோதயாத்
    திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் கோவிலில் நாளை சுதர்சன ஹோமம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.
    மதுரையை அடுத்த திருமோகூரில் உள்ள காளமேகப்பெருமாள் கோவில் வளாகத்தில் சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது. தென்மாவட்ட அளவில் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் சக்கரத்தாழ்வார் கோவிலில் சுதர்சன ஹோமம் 30-வது ஆண்டு விழா மற்றும் திருமஞ்சனம், திவ்ய நாம பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை அனுக்ஞை, புண்யாக வாசனம், கும்ப பூஜை தொடங்கி நடைபெறும்.

    தொடர்ந்து 10.30 மணிக்கு சுதர்சன ஹோமம் நடைபெறும். அதனுடையே நரசிம்மர் ஹோமமும், சக்த ஹோமமும் நடைபெற உள்ளது. இதையடுத்து மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை சுதர்சன ஹோம பூர்ணாகுதி அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருவாராதனம் நடைபெற இருக்கிறது. விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரம் ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கும் சுதர்சனரை ‘சக்கரத்தாழ்வார்’ என்பார்கள்.
    மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரம் ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சுதர்சன சக்கரத்திற்கு பெருமாள் ஆலயங்களில் தனி சன்னிதி இருக்கும். தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கும் சுதர்சனரை ‘சக்கரத்தாழ்வார்’ என்பார்கள்.

    சுதர்சன பெருமாளை வழிபட, சித்திரை நட்சத்திரம் வரும் தினங்கள் சிறப்பானவை. சித்திரை சுதர்சனருக்குரிய நட்சத்திரம் ஆகும். சுவாமி தேசிகன் இயற்றிய ‘சுதர்சனாஷ்டகம்’, ‘ஹோட சாயுத ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வந்தால், எளிதில் சுதர்சனரின் அருளைப் பெறலாம்.

    சக்கரத்தாழ்வாரை, ‘திருவாழியாழ்வான்’ என்று ஆழ்வார்கள் போற்றுகின்றனர். சுவாமி தேசிகன் சக்கரத்தாழ்வாரை ‘சக்ர ரூபஸ்ய சக்ரிண’ என்று போற்று கிறார். இதற்கு ‘திருமாலுக்கு இணையானவர்’ என்று பொருள்.

    கும்பகோணம் சக்கரபாணி ஆலயத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் தான், பிரம்மதேவன் நீராடி யாகம் செய்தார். உடனே பாதாளத்தில் இருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் இருந்து, பிரம்மனுக்கு காட்சி தந்த நாராயணன்தான், இன்று நாம் வணங்கும் சக்கரபாணி ஆவார்.

    சாளக்கிராமங்களில் சுதர்சன சாளக்கிராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்கிராமம் சுதர்சனம் ஆகும். திருமாலின் சக்கராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

    சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள நரசிம்மரையும் வணங்கி வலம் வந்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

    நரசிம்ம அவதாரத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் இரண்யகசிபுவை நரசிம்மர் அழித்தார். அப்போது அவரது நகங்களாக விளங்கியவர் சுதர்சனரே.

    வாமன அவதாரத்தில், சுக்ராச்சாரியாரின் கட்டளையை மீறி வாமனருக்குத் தானம் கொடுக்க மகாபலி சக்கரவர்த்தி முன்வந்தான். அப்போது நீர் வார்க்கும் கமண்டலத்தின் நீர் பாதையை வண்டாக மாறி சுக்ராச்சாரியார் அடைத்தார். உடனே வாமனர் ஒரு தர்ப்பையை எடுத்து, நீர்பாதையை உடைத்தார். இதில் தர்ப்பை பட்டு, சுக்ராச்சாரியாரின் கண் பார்வை பறி போனது. இங்கு தர்ப்பை புல்லாக இருந்தது சுதர்சனரே ஆவார்.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரமோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது.

    8-வது நாளான நேற்றிரவு குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று காலை கோவில் அருகேயுள்ள பஞ்சமி தீர்த்த தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    இதற்காக திருமலை ஏழுமலையான் கோவிலில் இருந்து மஞ்சள், குங்குமம் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரியை கான நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்ததும் கோவில் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.

    கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும், குற்ற சம்பவங்கள் தடுக்கவும் திருப்பதி எஸ்.பி.அன்புராஜன் தலைமையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 15 டி.எஸ்.பி.க்கள், 55 இன்ஸ்பெக்டர்கள் என 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

    சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்? திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை ‘சக்கரத்தாழ்வார்’ என்பர். பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை ‘அவசரத் திருக்கோலம்’ என்பர்.

    ‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு. இதன் அடிப்படையில் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள்.

    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா தொடங்கியது. மகா புஷ்கர விழாவையொட்டி, நெல்லை ஜடாயு படித்துறையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    நெல்லை பகுதியில் கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்தக்கட்ட படித்துறை, மேலநத்தம் அழியாபதீசுவரர் கோவில் படித்துறை, ராஜவல்லிபுரம் செப்பறை கோவில் படித்துறை, பாலாமடை படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் தமிழகம், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சாமியார்கள் புனித நீராடி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சென்றனர்.

    நெல்லை அருகன்குளத்தில் ஜடாயு துறையில் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி ஆற்றங்கரையில் 144 அடி நீளத்துக்கும், 16 அடி அகலத்துக்கும் கருங்கற்களால் புதிய படித்துறை கட்டப்பட்டு உள்ளது. நேற்று காலை அந்த படித்துறைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தேனி ஓம்காரனந்தா சுவாமி சிறப்பு பூஜை நடத்தி புனிதநீர் ஊற்றினார்.

    எட்டெழுத்து பெருமாள் தருமபதி அறக்கட்டளை நிர்வாகி ராமலட்சுமி தேவி புதிய படித்துறையை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் அங்கு வரதராஜ பெருமாள் சுவாமி தலைமையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அங்கு வெற்றிலையில் கற்பூர ஜோதி ஏற்றி பெண்கள் ஆற்றில் விட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் இந்த படித்துறையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆரத்தி பூஜையை தொடங்கி வைத்தார்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கிருந்து மேளதாளம், வேதமந்திரங்கள் முழங்க கொடிமரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தைப்பூச மண்டபத்தின் முன்பு சிறப்பு பூஜை நடத்தி கால் நாட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், லட்சுமணன் எம்.எல்.ஏ., அமைப்பாளர்கள் உஷா ராமன், நிர்மலா ராமரத்தினம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    தினமும் சக்கரத்தாழ்வாரை வழிபடும் போது, கீழ்கண்டதை மனதுக்குள் சொல்லி, தியானித்து வழிபாடு செய்தால் அவரது அருளை எளிதில் பெறலாம்.
    சக்கரத்தாழ்வாரை வழிபடும்போது, கீழ்கண்டதை மனதுக்குள் சொல்லி, தியானித்தால் அவரது அருளை எளிதில் பெறலாம்...

    ஒளி வீசக்கூடிய உடல் அமைப்புக் கொண்டவரும், மின்னல் போன்ற கண்களைப் பறிக்கும் ஆடைகளை அணிந்தவரும், விசாலமான கண்களைப் பெற்றவரும், என்றென்றும் இளமையுடன் திகழ்பவரும், மிகவும் அழகானவரும், பாஞ்ச ஜன்யம், கௌமோதகி, சாரங்கம் என்ற ஆயுதங்களை நட்பாகக் கொண்டவரும்,

    ஆதிசேஷனுக்குப் பிரியமானவரும், சங்கு, சக்கரம், வாள், பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏற்றியவரும், தன்னை எரித்தவர்களை வதம் செய்பவரும், திருட்டுப் பயத்தையும், அரசாங்கத்தாரால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களையும், எதிரிகளால் ஏற்படக்கூடிய அபாயங்களையும் போக்குபவரும், ஸ்ரீ சுதர்ஸனர் என்ற பெயர் கொண்டவரும், கோபம் அடைந்தவரும், பிரளய காலாக்னி போன்ற ஜ்வலிக்கக்கூடிய பேரொளி பெற்றவரும், அழகிய பட்டுப் பீதாம்பரங்களைத் தரித்தவரும்,

    திருமண்ணால் நிரப்பப்பட்டு உடல் அமைப்பினைக் கொண்டவரும், நினைத்தவுடன் நினைத்த இடத்துக்குச் சஞ்சாரம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவரும்,

    அழகான திருக்கைகள் ஆறினைப் பெற்றவரும், தீட்சண்யமான தன் பார்வையின் ஒளியினால் முதலையாகி வந்த கந்தர்வனை சம்ஹரித்தவரும், மஹா வீரரும்,

    மந்திர கோஷங்களில் நிறைந்திருப்பவரும், ஸ்ரீ ராமாவதாரக் காலத்தில் பரதனாகத் திருவவதாரம் செய்தவரும், இராவணன் போன்றவருக்குப் பீதியை அளித்தவரும், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் என்ற நாம தேயத்துடன் பகவான் ஸ்ரீ ஹரிவிஷ்ணுவின் தாசானுதாசனாக மாறி நிற்பவருமான ஸ்ரீ சுதர்ஸனரே, உம்மைத் தியானிக்கிறேன்.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறையில் சித்திரரத வல்லப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம்.

    இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார். சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவிலில் ஸ்ரீசக்கரத்தாழ்வார்க்கென்று தனி சந்நதி உள்ளது. திருமாலின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான ஸ்ரீசுதர்ன சக்கரத்தின் அம்சமான ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16 விதமான ஆயுதங்களை 16 கைகளில் தாங்கி வீறுகொண்டு எழும் தோற்றத்துடன் ஆறுகோண சக்கரத்தில் பின்பக்கத்தில் யோக நரசிம்மராகவும், முன்பக்கத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாராகவும் எழுந்தருளி உள்ளார்.

    இங்கு பெருமாளுக்கு செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சக்கரத்தாழ்வாருக்கு செய்யப்படுகிறது. இவரை வழிபடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓடி எடுத்து வைத்தால், அவர் இரண்டடி முன் வைத்து பிரச்சினைகளையும் துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதி.

    சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும். இங்கு நெய் விளக்கு ஏற்ற ஓம் நமோ பகவதே மகா எதிர்னாய நம என வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

    ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் நாளான வியாழன் அன்று சிவப்பு, மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும், வாழ்வில் சுபீட்சம் காணலாம். திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். சுமங்கலிகள் சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

    புதன், சனிக்கிழமைகளில் துளசி சாற்றி துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால், பிரார்த்தனை வேண்டுதல்கள் நிறைவேறும். இங்கு கிருத்திகை தோறும் நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேற வழிபாடு செய்கின்றனர். 
    பலன் தரும் இந்த ஸ்ரீ சுதர்சன அஷ்டோத்தரத்தை தினமும் சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்து வந்தால் நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்.
    பானபத்திரம், முஸலம், மழு, கதை, வஸ்ராயுதம், அக்னி, குந்தம், கேடயம், ஹலம் போன்ற இன்னும் பற்பலவிதமான சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும் ஆன அந்த சக்கரத்தாழ்வார் வாக்கு, மனம், புத்தி, அகங்காரம் ஞானம், அக்ஞானம் இவற்றால் ஜன்ம ஜன்மாந்திரங்களில் செய்த அநேக பாவங்களைப் போக்கி எங்கும் எப்போதும் பாதுகாக்க வேண்டுகிறேன்.

    ஓம் உதய சூரியனுக்கு சமமானவரே  போற்றி
    ஓம் உதாரமான புஜபலம் உள்ளவரே  போற்றி
    ஓம் கோடி மன்மதனைப் போன்றவரே போற்றி
    ஓம் ஸ்ரீவிஷ்ணுவின் இதய ஆனந்தமே போற்றி
    ஓம் பக்தர்களின் கற்பத விருட்சமே போற்றி
    ஓம் அபய வரத ஹஸ்தம் உள்ளவரே போற்றி
    ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி
    ஓம் அண்ட சராசரத்தை தாண்டுபவரே போற்றி
    ஓம் தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரே போற்றி
    ஓம் துக்க நெருப்பைத் தகிப்பவரே போற்றி

    ஓம் சுசிபாலனை வதைத்தவரே போற்றி
    ஓம் கைகேயியின் திருக்குமாரரே போற்றி
    ஓம் பாலசூரியனைப் போன்றவரே போற்றி
    ஓம் மிகச் சிறந்த நீதிமானே போற்றி
    ஓம் தேவர்களைக் காப்பவரே போற்றி
    ஓம் தேவ எதிரிகளை வதைப்பவரே போற்றி
    ஓம் மூம்மூர்த்திகளின் முதல்வரே போற்றி
    ஓம் மிகப்பெரும் கீர்த்தி உள்ளவரே போற்றி
    ஓம் திக்குகளைப் பிரகாசிக்க வைப்பவரே போற்றி
    ஓம் சுக்ரீவன் போன்ற வானரர்களுக்கு பிரியரே போற்றி

    ஓம் தத்துவ ஞான ஆசை கொண்டவரே போற்றி
    ஓம் உதய சூரியனைப் போன்ற விழியுடையவரே போற்றி
    ஓம் பட்டுப் பீதாம்பரம்அணிந்தவரே போற்றி
    ஓம் மஹா விஷ்ணுவிற்குப் பிரியமானவரே போற்றி
    ஓம் கோடி சூர்யப் பிரகாசம் உடையரே போற்றி
    ஓம் மௌஞ்சி தரித்திருப்பவரே போற்றி
    ஓம் யக்ஞோப வீதம் தரித்திருப்பவரே போற்றி
    ஓம் பல ஆபரணம் பூண்டவரே போற்றி
    ஓம் தெய்வீகக் களையுள்ளவரே போற்றி
    ஓம் குண்டலங்களை அணிபவரே போற்றி

    ஓம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்பவரே போற்றி
    ஓம் விரும்பியதைத் தருபவரே போற்றி
    ஓம் முனிவர்களாலும் வணங்கப்படுபவரே போற்றி
    ஓம் வேத த்வனிகளால் மகிழ்ச்சியடைபவரே போற்றி
    ஓம் வைரம் பாய்ந்த அங்கமுடையவரே போற்றி
    ஓம் பிங்கள வண்ண உரோமமுடையவரே போற்றி
    ஓம் ககன மார்க்கப் பிரயாணியே போற்றி
    ஓம் இரண்டு கைகளை யுடையவரே போற்றி
    ஓம் நான்கு கைகளைப் பெற்றவரே போற்றி
    ஓம் எட்டுக் கைகள் உடையவரே போற்றி

    ஓம் பதினெட்டுக் கைகள் உடையவரே போற்றி
    ஓம் தங்கக் குண்டலமணிந்தவரே போற்றி
    ஓம் அம்பரிஷனைக் காத்தவரே போற்றி
    ஓம் கூப்பிய கைகள் உடையவரே போற்றி
    ஓம் மஹாவிஷ்ணுமுன் நிற்பவரே போற்றி
    ஓம் ஆனந்தக் கண்ணீர் சொரிபவரே போற்றி
    ஓம் காதயுதம் தரித்தவரே போற்றி
    ஓம் சங்காயுதத்தைப் பெற்றவரே போற்றி
    ஓம் சக்கராயுதத்தை அடைந்தவரே போற்றி
    ஓம் வாள் ஆயுதம் உடையவரே போற்றி

    ஓம் எமனின் பாசாயுதம் கொண்டவரே போற்றி
    ஓம் பிரளய காலர்க்னி ஏந்தியவரே போற்றி
    ஓம் விரலாயுதத்தை உடையவரே போற்றி
    ஓம் வஜ்ராயுதம் தரித்தவரே போற்றி
    ஓம் சூலாயுதம் ஏந்தியவரே போற்றி
    ஓம் பராசக்தியின் திரிசூலம் ஏந்தியவரே போற்றி
    ஓம் குந்தாயுதத்தைப் தரித்தவரே போற்றி
    ஓம் முஸலத்தைக் கையில் பெற்றவரே போற்றி
    ஓம் பரசுவைக் கையில் ஏந்தியவரே போற்றி
    ஓம் கேடயத்தைத் தரித்தவரே போற்றி

    ஓம் பிரகாசிக்கும் கேசத்தை உடையவரே போற்றி
    ஓம் முக்கண்களை உடையவரே போற்றி
    ஓம் உறுதி வாய்ந்த தோள் வலிமையரே போற்றி
    ஓம் தண்டம் போன்ற கையரே போற்றி
    ஓம் ராட்சச சம்ஹாரியே போற்றி
    ஓம் விஷ்ணு பக்தரே போற்றி
    ஓம் ருத்ரப் பிரியரே போற்றி
    ஓம் பிங்கள வர்ணக் கண்கள் உடையவரே போற்றி
    ஓம் மஹா வீரரே போற்றி
    ஓம் அசுரர்களின் கொழுப்பகற்றுபவரே போற்றி

    ஓம் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி
    ஓம் மஹா தேஜஸ்வீயே போற்றி
    ஓம் புஜங்களை ஆயுதமாக உடையவரே போற்றி
    ஓம் மஹா ப்ரபஞ்சரே போற்றி
    ஓம் சிவப்ரியரே போற்றி
    ஓம் மஹா பலரே போற்றி
    ஓம் சூரியனுக்கு இணையானவரே போற்றி
    ஓம் அளவில்லா ஆற்றல் உடையவரே போற்றி
    ஓம் மஹா சூரரே போற்றி
    ஓம் ஆத்ம ஸ்வரூபியே போற்றி

    ஓம் தர்மத்தை ஆராதனை செய்பவரே போற்றி
    ஓம் தர்மராஜரே போற்றி
    ஓம் சமத்துவமுடையவரே போற்றி
    ஓம் தண்டதரரே போற்றி
    ஓம் தபஸ்வியே போற்றி
    ஓம் ஜிதேந்த்ரியரே போற்றி
    ஓம் சர்வக்ஞரே போற்றி
    ஓம் புண்ணிய மித்திரரே போற்றி
    ஓம் பிரும்ம அம்சமுடையவரே போற்றி
    ஓம் மிக பயங்கர வாதியே போற்றி

    ஓம் சம்ஹா மூர்த்தியே போற்றி
    ஓம் நம்பினோர்க்கு உபகாரியே போற்றி
    ஓம் பாவிகளின் எமனே போற்றி
    ஓம் விசாலமான கண்கள் உள்ளவரே போற்றி
    ஓம் சுலபமாய் தரிசிக்க முடியாதவரே போற்றி
    ஓம் காலத்தை கண்காணிப்பவரே போற்றி
    ஓம் கோரமானவரே போற்றி
    ஓம் பயங்கரரே போற்றி
    ஓம் திருப்தியுற்றவரே போற்றி
    ஓம் ஸம்ஹாரியே போற்றி

    ஓம் குளிரச் செய்பவரே போற்றி
    ஓம் சந்தோஷத்தைத் தருபவரே போற்றி
    ஓம் அமைதி நிறைந்த ஞானியே போற்றி
    ஓம் வேண்டிய வரம் தரும் சுதர்ஸனரே  போற்றி  போற்றி.
    பெரிய பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும், வீட்டிலும் சத்ரு பயத்தை விரட்ட பிரமாண்ட அளவில் சுதர்சன ஹோமம் நடத்தப்படும்.
    நமது வீடுகளில் நடக்கும் கிரகப்பிரவேசம், ஆயுஷ்ய ஹோமம் போன்ற எந்த ஒரு விசேஷத்தின் போதும் குடும்ப ஐஸ்வர்யம் கருதி ஸ்ரீசுதர்சன ஹோமத்தையும் சேர்த்தே நடத்துவார்கள்.

    அதேபோல் பெரிய பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் சத்ரு பயத்தை விரட்ட பிரமாண்ட அளவில் சுதர்சன ஹோமம் நடத்தப்படும்.
    வீட்டில் நடத்தப்படும் சுதர்சன ஹோம - தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-

    சூரியனின் பிரகாசத்தை மிஞ்சுபவரும், பயங்கரக் கண்கள் கொண்டவரும் சத்ருக்களை சம்ஹாரம் பண்ணுபவரும் பலமான - பயம் தரும் சிரிப்புக் கொண்டவரும், வலுவான பல் உடையவரும், பெரிய வாய் உள்ளவரும், செப்பு நிறத் தலைமுடி வாய்த்தவரும், கைகளில் சக்கரம் - கதை - சங்கு - தாமரைப்பூ - உலக்கை - பாசம் - அங்குசம் - தர்ஜணி போன்ற ஆயுதங்கள் பெற்றவரும், சத்ருக்களுக்கு பயம் தரும் ஆதிமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீசுதர்சனரை வணங்குகிறேன்.

    அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் பிரமாண்டமாக நடத்தப்படும் சுதர்சன ஹோம, தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-

    சங்கு, சக்கரம், வில், மழு, வாள், அம்பு, சூலம், கயிறு, அங்குசம், கேடயம், கலப்பை, இரும்பு உலக்கை, அக்னி, கவசம், கதை, மூன்று முனைகள் கொண்ட சூலம் போன்ற ஆயுதம் ஆகியவற்றுடன் திகழும் பதினாறு கைகள் கொண்டவரும், பலமான பல் பெற்றவரும், மஞ்சள் நிறத் தலைமுடி உடையவரும், மூன்று கண்களுடன் தங்க நிற சரீரம் பெற்றிருப்பவரும், சகல சத்ருக்களின் உயிர்களை எடுப்பபவரும், அதி கயங்கரத் தோற்றம் உடையவருமான ஸ்ரீசுதர்சனரை ஷட்கோணத்தில் அமர வைத்துப் பிரார்த்திக்கிறேன்.

    சுதர்சன ஹோமத்தின் போது, சக்தி வாய்ந்த பல மந்திரங்கள் சொல்லி ஹோமப் பொருட்களை அக்னி பகவானுக்குச் சமர்ப்பிப்பார்கள். இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஸ்ரீசுதர்சன காயத்ரி, ஸ்ரீசதர்சன மாலா மந்திரம், ஸ்ரீநரசிம்ம மந்திரம், ஸ்ரீநரசிம்ம காயத்ரி, ஸ்ரீவிஷ்ணு காயத்ரி, ஸ்ரீலட்சுமி காயத்ரி, ஸ்ரீலட்சுமி மந்திரம், ஸ்ரீதன்வந்திரி மந்திரம், பஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வதால் பலன் அதிகமாக கிடைக்கும்.

    ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்து ஒருவர் ஹோமம் செய்தால் இந்த மந்திரத்துக்கு உண்டான பலன் கிடைக்கும். எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயாசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மந்திரத்தை உளமார உச்சரித்து ஜெபிக்க வேண்டும். முழுமனதோடு மிகுந்த முயற்சியுடள் செயல்பட்டால்தான் கிடைக்கிற பலன் முழு அளவில் இருக்கும்.

    ஹோமங்களை எந்த அளவுக்கு நாம் சிரத்தையாகப் செய்கிறோம் என்பதை வைத்து பகவான் அனுக்கிரஹம் செய்வார். பகவத் கீதையில் நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன் என்கிறார் பகவான்.

    எனவே வாழ்வில் பல நன்மைகளை பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம்.

    ஆடுதுறை ஸ்ரீஜெகத்ரட்சக பெருமாள் தலத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
    கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது ஆடுதுறை ஸ்ரீஜெகத்ரட்சக பெருமாள் கோவில். தமிழில் வையம் காத்த பெருமாள் என அழைக்கின்றனர்.

    தாயாரின் பெயர் - ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார். பிரிந்த தம்பதியர், நிம்மதியின்றித் தவிக்கும் தம்பதியர் ஆகியோர் தொடர்ந்து 16 நாட்கள் அல்லது 16 சனிக்கிழமைகள் இங்கு வந்து வெள்ளை மலர் சார்த்தி, கற்கண்டு நைவேத்தியம் செய்து, 16 முறை பிரகார வலம் வந்தால், பிரிந்தவர்கள் விரைவில் ஒன்று சேருவர் என்பது ஐதீகம்.

    இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரை மிகுந்த விசேஷமானவர் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். வடக்கு திசை நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை, செவ்வாய்க்கிழமைகளில் 16 நெய் தீபமேற்றி, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சித்து, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். நஷ்டத்தில் இருந்த தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.

    நல்ல வேலை, பதவி உயர்வு ஆகியவை வேண்டுவோர் பால் பாயசம் அல்லது சுண்டல் நைவேத்தியம் செய்து, வெள்ளை வஸ்திரம் மற்றும் முல்லை முதலான வெண்மை நிற மலர்கள் சார்த்தி வழிபட்டால்... விரைவில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம்.
    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.
    1. சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.

    2. சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம்.

    3. சக்கரத்தானை திருவாழியாழ்வான்” என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள்.

    4. சுவாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண” என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள்.

    5. கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத நீராடல் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக காட்சி தருகிறார்.

    6. சாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

    7. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு...!

    8. நரசிம்ம அவதாரத்தில் அரக்கனின் வரத்தையட்டி எந்த ஆயுதமும் இல்லாமல் ஹிரண்யகசிபுவை நரசிம்மர் அழித்தபோது, அவரது நகங்களாக விளங்கியவர் சுதர்சனரே.

    9. வாமன அவதாரத்தில், சுக்ராச் சாரியாரின் கட்ட ளையை மீறி மகாபலி வாமனனுக்குத் தானம் கொடுக்க தாரைவார்த்தபோது, சுக்ராச்சாரியார் வண்டாக வந்து கமண்டல நீர்ப்பாதையை அடைத்தார். அப்போது திருமால் பவித்திரத்தால் கிளற, சுக்ராச்சாரி யார் தன் கண்ணை இழந்தார். அங்கு பவித்திரமாக வந்தவர் சுதர்சனரே.

    10. சக்கரத்தாழ்வார் பல பழமையான திருக்கோவில்களில் தனிச்சந்நிதி கொண்டு காட்சியளிப்பதைக் காணலாம். (குறிப்பாக ஸ்ரீரங்கம், காஞ்சி வரதர்கோவில், திருமாலிருஞ் சோலை (கள்ளழகர்) கோவில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர்.) தற்போது இவரின் மகிமையைப் புரிந்துகொண்டு பல திருத்தலங்களில் இவருக்குத் தனிச்சந்நிதி அமைக்கப் பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

    11. சக்கரத்தாழ்வாரின் பின்புறம் உள்ள யோக நரசிம்மரையும் பல இடங்களில் தரிசிக்கலாம். இவரை சுதர்சன நரசிம்மர் என்று போற்றுவர்.

    12. சக்கரத்தாழ்வாரைப் பற்றி பல சுலோகங்கள் உள்ளன. ஸ்ரீரங்கம் கூரநாராயண ஜீயர் சுதர்சன சதகத்தை அருளியுள்ளார். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்தி பெற்ற சுலோகமாகப் பிரபலமாகியுள்ளது.

    13. ஸ்ரீ சுதர்ஸனாழ்வார்,ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என ‘ஆழ்வார் ‘என்ற அடைமொழி இவர்கள் மூவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.ஸ்ரீ பகவானால் ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும்.

    14. ஜீவாலா கேசமும், திரிநேத்ரமும்,16 கரங்களும் பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் கெடுதிகள் யாவும் நீங்கும்.

    15. மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்,கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் போன்ற திருத்தலங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் விசேஷமானவர்.

    16. முன்புறத்தில்ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும்,அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

    17. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும்,இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது.

    18. ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி,”ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம “என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும்.

    19. வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

    20. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

    21. திருமாலுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சுதர்சனருக்கும் செய்வது என்பது நடைமுறையில் உள்ளது.

    22. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

    23. திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற் கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.

    24.பொதுவாக சக்கரம் திருமாலின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம்.

    25. திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.

    26. பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. திருமால் கோவிலில் உள்ள சுதர்சனர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்; சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

    27. பிரம்மோத்ஸவம் மற்றும் பெருமாள் கடலுக்குச் சென்று தீர்த்தவாரி மேற்கொள்ளும் சமயங்களிலும் சுதர்சனருக்கு முக்கியப் பங்கு உண்டு.

    28. சுதர்சனர் எனப்படும் சக்கரத்தாழ் வாருக்கென்று விசேஷமான ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆராதனைகள் விகசை என்ற மகாமுனியால் ஏற்படுத்தப்பட்டவை.

    29. சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார்.

    30.ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்விசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது.

    ×