என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆண்டிப்பட்டி"
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள எஸ்.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த வெங்கடசாமி மனைவி பாப்பம்மாள் (வயது90). இவரது மகன் செல்வம் (50). குடிபழக்கத்திற்கு அடிமையானவர். குடித்து விட்டு மனைவியிடம் டார்ச்சர் செய்துள்ளார்.
இதனால் அவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். இதனால் செல்வம் தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். பாப்பம்மாள் தனது 2-வது மகன் வீட்டிற்கு சென்று அழுது புலம்பி உள்ளார்.
இதனால் செல்வத்தின் தம்பி அவரை கண்டித்தார். தன்னை பற்றி தம்பியிடம் கூறியதால் ஆத்திரம் அடைந்த செல்வம் குடிபோதையில் தனது தாயை தரக்குறைவாக திட்டி தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு சிங்க ராஜபுரத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் வேலுவை தாக்கி கீழே தள்ளிவிட்டு பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகை, ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி மீனாட்சியையும் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டனர். இது குறித்து வருசநாடு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சிங்கராஜபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் முத்துக்குமார் வேலை விஷயமாக வருசநாடு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1250 மற்றும் கடிகாரத்தை பறித்து சென்று விட்டனர். இது குறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் வருசநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை மற்றும் வழிப் பறியால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை குமணன் தொழுவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 28). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பார்த்திபனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால்குமணன் தொழுவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே அன்னை இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் மனைவி நித்யா (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த நித்யா தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் பார்த்து தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிசிச்சை பலனின்றி நித்யா உயிரிழந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி பகுதியில் வைகை ஆற்றில் மணல் திருடுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் அவ்வப்போது அவர்களை பிடித்து அபராதம் விதித்தபோதும் மணல் திட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனால் வைகையாற்று பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் நீர் ஆதாரம் குறைவதோடும், மண் வளம் சுரண்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
க.விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அமச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி (வயது24) மற்றும் மீராரு (28) மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து அவர்களையும் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா (வயது 26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
முருகேசன் அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் பிரச்சினை உருவானது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த நிவேதிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நிவேதிதாவின் சகோதரர் பாண்டித்துரை க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
கம்பம் நெல்குத்தி புளியமரம் தெருவைச் சேர்ந்தவர் பகவதி மனைவி மகாலெட்சுமி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மகாலெட்சுமி கணவனை பயமுறுத்த தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தார். இதில் படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
மதுரை அருகே பனையூரைச் சேர்ந்தவர் நிர்மல்குமார் மனைவி மகேஸ்வரி (வயது 27). இவர் தனது மாமனார் மற்றும் மாமியாருடன் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விஷேசத்துக்காக 27 பவுன் தங்க நகைகளை கைப்பையில் வைத்துக் கொண்டு பஸ்சில் வந்துள்ளார்.
மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டி சென்ற மகேஸ்வரி பஸ்நிலையத்தில் இறங்கி தனது கைப்பையை பார்த்த போது நகைகள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்த மர்ம நபர்கள் அசந்த நேரத்தில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் செய்வதறியாது நின்ற மகேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நகை மாயமானது குறித்து திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த அமுதா (30), சஞ்சனா (32) ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகளை இவர்கள் கொள்ளையடித்தனரா? இவர்களுக்கு பின்பு கொள்ளை கும்பல் எதுவும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்க வணங்காமுடி. இவர் புதிய மருத்துவ கல்வி தகுதியின்றி தனியார் ஆஸ்பத்திரியில் அலோபதி மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
இது குறித்து மாவட்ட துணை ஆட்சியர் தினேஷ் குமாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் காலாவதியான மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தொலை நிலை கல்வி மூலம் பி.ஏ.எம்.ஸ் படித்த தங்க வணங்காமுடி மருத்துவம் பார்ப்பதற்கான எவ்வித தகுதியும் இல்லாதவர்.
ஆனால் மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சை அளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் சேர்மலை (வயது56). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை பூக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவத்தன்று கடமலைக்குண்டு அருகே 2 சிறுவர்கள் சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளனர்.
அப்போது அதனை பார்த்த சேர்மலை அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தன்னுடையதுபோல தெரிந்தது. இருப்பினும் அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த நம்பர் பிளேட் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
சந்தேகத்தின்பேரில் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்களை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். இது குறித்து சேர்மலை கடமலைக்குண்டு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்தி போலீசார் பாலூத்து மற்றும் தேவராஜ் நகர் பகுதியை சேர்ந்த மாதேஸ் (வயது16), தங்கபாண்டி (16) ஆகி 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு தேவராஜன் நகரை சேர்ந்தவர் குமரேசன் மனைவி அபிராமி(வயது29). இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் அபிராமி கோவித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சம்பவத்தன்று குமரேசன் மற்றும் நாகராஜ் ஆகியோர் அபிராமியிடம் சென்று தகராறு செய்தனர். மேலும் அவரை தகாத வார்த்தையில் திட்டி தாக்கினர். இதை தடுக்கவந்த அபிராமியின் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்து குமரேசன் மற்றும் அவரது நண்பர் நாகராஜை கைது செய்தனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி தாலுகா வருஷநாடு சிங்கராஜ புரத்தைச் சேர்ந்தவர் லோகன்துரை. (வயது 44). இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் பறித்த கொட்டை முந்திரியை வீட்டில் வைத்து விட்டு வெளியூர் சென்று விட்டார்.
திரும்பி வந்து பார்த்த போது 60 கிலோ எடையுள்ள கொட்டை முந்திரி மூட்டை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கம் விசாரித்து பார்த்தும் தகவல் தெரியவில்லை.
வீட்டில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தியிருந்ததால் அதை சோதித்து பார்த்ததில் மர்ம நபர் ஒருவர் முந்திரி மூடையை திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து வருஷநாடு போலீசில் லோகன்துரை புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் முந்திரியை திருடியது அதே பகுதியைச் சேர்ந்த கோட்டைச்சாமி (37) என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கோட்டைச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே டிராக்டரில் மண் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடமலைக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையில் போலீசார் அய்யனார் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வைகை ஆற்றுப்படுகையில் சிலர் டிராக்டரில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர்.
இதையடுத்து அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சின்னமனூர் ஒத்தத் தெருவைச் சேர்ந்த பசும்பொன்பாண்டி, குட்டமுத்து, முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ், மாரியப்பன் என்பது தெரிய வந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்