search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109600"

    • கீழக்கரையில் கழிவுநீர் கலப்பதால் கடல் வளம் பாதிக்கும் அபாயம் ஏற்படும்.
    • உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் இருந்து தினந்தோறும் 15 லட்சம் லிட்டருக்கு மேற்பட்ட கழிவுநீர் நேரடியாக கடலில் கலந்து வருகிறது.

    பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்வதால் கீழக்கரை பகுதி கடலின் நிறம் இயற்கை தன்மையிலிருந்து மாறி விட்டது. அதோடு தற்போது கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும், கட்டிட கழிவுகளும் கொட்டப்படுகிறது.

    ஏற்கனவே பவள பாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இதுபோல் சாக்கடைநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலக்கிறது. இதனால் கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல்நீர் மாசடைந்து மீன்வளம் குறைந்து வருகிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் கூறியதாவது:-

    கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பது தொடர்பாக நிரந்தர தீர்வு காண தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆலோசனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை.

    கீழக்கரை நகரில் ஆண்டு கணக்கில் கழிவுநீர் கடலில் கலந்து வருகிறது. சில சமயம் குப்பைகள் கொட்டும் தளமாகவும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகள், கட்டிடக் கழிவுகள் கொட்டும் பகுதியாக கடற்கரை மாறி வருகிறது.

    இதற்கு நிரந்த தீர்வு காண கடலில் கலக்கும் சாக்கடையை சுத்திகரித்து விவசாயத்திற்கோ அல்லது மின்சாரம் தயாரிப்பதற்கோ பயன்படுத்த வேண்டும்.இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாக்கடை நீர் காவேரி நகர் பகுதியில் இருந்து கரைபுரண்டு ஓடி வருகிறது.
    • கழிவு நீர் கால்களில் படும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

     பெருமாநல்லூர் :

    ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் வழியில் ரெயில்வே பாலத்தின் அடியில் மழைக்காலங்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சாக்கடை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுசுகிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் கொடிய நோய்கள் பரவும் நிலை உள்ளது. இது குறித்து ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த சாக்கடை நீர் காவேரி நகர் பகுதியில் இருந்து கரைபுரண்டு ஓடி வருகிறது. அப்படி கரைபுரண்டு வரும் சாக்கடை கழிவு நீரை தடுப்பு கற்கள் மூலம் தடுத்து நிறுத்தியும் சிறிது சிறிதாக கரைந்து மீண்டும் பாலத்தின் அடியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் .மூக்கை பிடித்துக் கொண்டுதான் நடந்து செல்ல முடிகிறது.அது மட்டுமில்லாமல் நடந்து செல்லும் போது அந்த கழிவு நீர் கால்களில் படும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் பலமுறை ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகத்திடம் குறை சொல்லிவிட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கும் நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இது ரெயில்வே சம்பந்தப்பட்டது என்று கைவிரித்து விடுகிறார்கள்.இதனால் மக்களின் பாதுகாப்புக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆகவே இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர். 

    • மதுரையில் மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    வில்லாபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியிருப்பதை படத்தில் காணலாம்.

     மதுரை

    மதுரையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகரில் மழை நீரை வெளியேற்றுவதற்கான கட்டமைப்புகள் சரி வர அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாக்கடை அடைப்புகள் தொடர் கதையாக உள்ளன.

    மதுரை மாநகராட்சி 86-ம் வார்டான வில்லாபுரம் அம்மச்சியார் கோவில் தெருவில், கடந்த ஒரு வார காலமாக பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக மழை நீருடன் சாக்கடை கழிவுகளும் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அதுவும் தவிர கொசுத்தொல்லை உள்பட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது தொடர்பாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியிடம் புகார் கொடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.

    இதை கண்டித்தும், மழை, கழிவுநீரை அகற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, வில்லாபுரம் ஆர்ச் சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கழிவுநீர் ஆறாக ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பக்தர்கள் வெறும் காலில் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் சித்திரை வீதிகள் முழுவதும் பதிக்கப்பட்டுள்ள கருங்கற்கள் பக்தர்களின் கால்களை பதம் பார்க்கின்றன. இதனால் பக்தர்கள் காலணி அணிந்தபடி கிரிவலம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கிழக்கு சித்திரை வீதியில் உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி ஆறாக வழிந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் முகச்சுளிப்புடன் அந்தப் பகுதிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அங்குள்ள கடை வியாபாரிகள் கூறுகையில், மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் ஓராண்டாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தோம். எந்த வித நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • மழை நீருடன் சாக்கடை நீர் ரோடுகளில் கரைபுரண்டு ஓடுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி
    • மேயர் மகேஷ் அந்த பகுதி முழுவதும் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை நீருடன் சாக்கடை நீர் ரோடுகளில் கரைபுரண்டு ஓடுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அங்குள்ள ஒரு கடையின் மேற்கூரை சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அந்த கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், புகார் வந்ததால் கடையில் ஆய்வு செய்ய அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து மாநகராட்சி சுகாதார அதிகாரி ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் அந்தக் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் அந்த பகுதி முழுவதும் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கோட்டார் பகுதி மிக முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் மழை நேரங்களில் தண்ணீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதை சரி செய்யும் வகையில் கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

    தற்பொழுது சாலையில் மழை நீர் தேங்காமல் கழிவு நீர் ஓடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தற்பொழுது கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்ததும் கழிவு நீரோடையின் மேல் மூடிகள் அமைக்கப்படும். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    அகற்றப்பட்ட பிறகும் பொதுமக்கள், வியாபாரிகள் மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையில்லா மாநகராட்சியாக நாகர்கோவில் மாநகராட்சி மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணைத் தலைவர் சிவக்குமார் கவுன்சிலர்கள் பேராசிரியர் நீல பெருமாள், ஜான்சிலின் விஜிலா, அம்புளி, செலின்மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஷ் பாபு, ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு உள்ளது, நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்ய வேண்டும், குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை, ஏற்கனவே பிரேத பரிசோதனை கூடம் இருந்த நிலையில் தற்போது அது செயல்படவில்லை. டாக்டர்கள் இருப்பதில்லை. நோயாளிகள் சிகிச்சை அளிக்க சென்றால் உடனே ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று அனுப்பும் நிலை உள்ளது என்றனர்.

    அதிகாரிகள் கூறுகையில், கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு ஏற்கனவே இருந்து வந்த நிலையில் தற்போது அந்த தட்டுப்பாடு சரியாகிவிட்டது. நாய்களை கட்டுப்படுத்த பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து பிடித்து கொண்டு வந்தால் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. குழித்துறை அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனர்.

    கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயனாளிகள் ஊதியம் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், தமிழகத்தில் மக்களை பாதிப்படையை செய்யும் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குமரி மாவட்டத்தில் விவ சாயத்திற்கு பயன் படுத்தப்படும் பாசன கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நாகர்கோவில், குழித்துறை, கன்னியாகுமரி, இரணியல், ரெயில் நிலையங்களில் பிரீ பெய்டு ஆட்டோ வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் விற்பனை செய்யும் அனைத்து மின்சாதன பொருட்களிலும் தமிழ் மொழி இடம் பெற வேண்டும். தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு தமிழ் மொழியில் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • கோயமுத்தூர், பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏற வேண்டும்.
    • பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் கோயமுத்தூர், பல்லடம்,பொள்ளாச்சி, உடுமலை ,பொங்கலூர். போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் நின்றுதான் பேருந்து ஏற வேண்டும்.

    ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் எப்பொழுதும் மழைநீரும் சாக்கடை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது. மேலும் பேருந்து ஏறுவதற்கு இந்த கழிவு நீரின் வழியாகத்தான் பேருந்தில் ஏற வேண்டும். இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் மனு கொடுத்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • பழைய பேருந்து நிலையம், ஊத்துக்குளி செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்துகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி சாலை ஒற்றக்கண் பாலம் அருகில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    அதிக அளவிலான இருசக்கர வாகனங்கள் கொங்கு மெயின் ரோட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம், ஊத்துக்குளி செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்துகின்றனர். சாக்கடை கழிவு நீர் சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர் . நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 21-ந் தேதி பள்ளியிலிருந்து செல்லும் கழிவு நீர் குழாயை சீரமைக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்
    • கழிவு நீர் குழாயை உடைத்து சேதப்படுத்தியதோடு ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே உள்ள கூடைத்துக்கி படநிலத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55) இவர் அங்குள்ள தனியார் பள்ளியின் தலைவராக உள்ளார்.

    கடந்த 21-ந் தேதி பள்ளியிலிருந்து செல்லும் கழிவு நீர் குழாயை சீரமைக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ராதா கிருஷ்ணன் அந்தப் பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது மணலி விளை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38)அங்கு வந்து தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் கழிவு நீர் குழாயை உடைத்து சேதப்படுத்தியதோடு ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மணிகண்டன் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேரூராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவு
    • இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பொது இடத்தில் விடாமல் வீட்டுக்குள்ளேயே உறிஞ்சிக் குழாய் அமைத்துவிடவேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தியது.

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இருப்பினும் அதை சில குறிப்பிட்ட பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வந்தது. அந்த அடிப்படையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு முதல் 12-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் உள்ள ஒரு சில வீடுகளில் கழிவு நீர் வெளியேறும் குழாய் பேரூராட்சி சார்பில் அடைக்கப்பட்டது.

    இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதை த்தொடர்ந்து கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம், கொட்டாரம் கீழத்தெரு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஐயப்பன் மற்றும் கொட்டாரம் வடக்கு தெரு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் பிச்சமுத்து ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதன் பிறகும் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை தொடர்ந்து அடைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை அடைப்பதை கண்டித்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள். அதன்பிறகு கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம் கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 5-வது வார்டு முதல் 12-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை அடைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 5-வது வார்டு முதல் 12- வது வார்டு வரை உள்ள பகுதிகளில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியாகும் குழாயை அடைப்பதற்கு இடைக்காலதடை விதித்து உத்தரவு பிறப்பித்துஉள்ளது. இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எம்.பி.ஆர்.லேஅவுட் பகுதியில் அதிக அளவில் வீடுகள் உள்ளது.
    • வீடுகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லலை.

    அவினாசி :

    அவினாசி சூளை பகுதியில் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் சாக்கடை நீர் குட்டைபோல் தேங்குவதால் பொதுமக்கள் பாதிககப்படுகின்றனர்.இதுகுறித்து எம்.பி.ஆர்.லேஅவுட் குடியிருப்புவாசிகள் கூறியதாவது:-

    எம்.பி.ஆர்.லேஅவுட் பகுதியில் அதிக அளவில் வீடுகள் உள்ளது. இதற்கு அருகில் தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அங்கு ள்ள நூற்றுகணக்கான வீடுகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லாததால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் எங்கள் எம்.ஆர்.பி.லேஅவுட் பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு சாக்கடை நீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதில் துர் நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களை தொற்றுநோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிசை மாற்றுவாரியத்தினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மக்கள் விரோத நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    குமரி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஓடைகளில் விடாமல் வீட்டிற்குள்ளேயே உறிஞ்சி குழாய் அமைத்து விட வேண்டும் என பொது மக்களுக்கு விரோதமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேரூ ராட்சி நிர்வாகமும் இதனை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டிவருகிறது.

    இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களை உறிஞ்சி குழாய் அமைத்திட நிர்ப் பந்தப்படுத்தி வருகிறது. வீட்டில் உறிஞ்சி குழிகள் அமைத்து பராமரிக்க ரூ.1 லட்சம் செலவாகும். ஏழை மக்கள் இதற்கு எங்கு செல்வார்கள்.

    சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில் நகராட்சித்துறை அமைச்சர், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். அந்த நிதியில் இருந்து பேரூராட்சி பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வீடுகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும். பிற மாவட்டங் களில் இதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், குமரி மாவட்டத்தில் பொதுமக்களை தொடர்ந்து துன்புறுத்தி இதனை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தி வருமானால் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×